Sunday 1 November 2009

புலிகளின் போர் உத்திகளை அறிய முயலும் அமெரிக்கா!


முகாமைத்துவ விற்பன்னரான Peter Drucker தனது Managing for Results என்னும் நூலில் நிறைவேற்று அதிகாரிகளும் தொடர்பாடலும் (Executives and communication) என்பதைப் பற்றி எழுதுகையில் கரந்தடி படை அமைப்பில் ஒரு கரந்தடி படை வீரன் தனது தலைமையுடன் உடனுக்குடன் தொடர்பாடல் செய்ய முடியாததால் அவன் களத்தில் சுயாமாக முடிவெடுக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொரு படை வீரனும் நிறைவேற்று அதிகாரியாவான் என்றார். இந்தச் நிலைமயை மாற்றி அமத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். எப்போதும் அதி நவீன தொடர்பாடல் கருவிகளைப் பாவித்தவர்கள். இந்திய அமைதிப்(அட்டூழிய) படை இலங்கையில் இருந்த காலத்தில் இந்தியப் படை வீரர்கள் தமது தொடர்பாடல் கருவிகளைத் தோளில் சுமந்து செல்வர் ஆனால் விடுதலைப் புலிகளின் கருவிகள் சட்டைப் பைக்குள் இருக்கும். அநுராதபுர விமானப் படைத் தாக்குதல் நடந்தவேளை நேரடியாக புலிகளின் தலைமை அதை காணொளியில் கண்டு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தது. வேறு எங்கும் இம்மாதிரியான முறை அதற்கு முன்பு கடைப் பிடிக்கப் படவில்லை.

போர் முறையில் பல புதிய உத்திகளை வகுத்தவர்கள் விடுதலை புலிகள். அவர்களிடம் இருந்து கற்கவேண்டியது நிறைய உண்டு.

அமெரிக்கா இப்போது முன்னாள் விடுதலை புலிகளைப் புனர் வாழ்வு வழங்கி சாதாரண வாழ்க்கைக்கு திரும்பச் செய்வது என்று ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா தேர்ந்தேடுத்த இடம் திருக்கோணாமலை. இத்துடன் கிழக்கு முதலமைச்சரும் சம்பந்தப் படுத்தப் பட்டுள்ளார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...