வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் தமது வான் படைகளை வலிமை மிக்கதாக்கிக் கொண்டிருக்கின்றன.
சிக்கனமும் படை வலிமையும்
ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படை உலகில் தனது மேலாதிக்கத்தைத் தக்க வைக்கப் பெரும் பாடு படுகின்றது. அமெரிக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியில் விமானப் படைத்துறையினர் தமது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரும் அமெரிக்கப் பாராளமன்றமும் வெள்ளை மாளிகையும் பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக நீண்ட விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் செலவில் பத்து பில்லியன்களை குறைக்கப் பட வேண்டும் என பாராளமன்றம் வலியுறுத்துகின்றது
அமெரிக்காவை வென்ற இந்தியா
2014-ம் ஆண்டு அமெரிக்க விமானப் படையின் தாக்குதல் கட்டளையகத்தின் தளபதி ஹால் எம் ஹோர்ண்பேர்க் இரசியப் போர் விமானங்கள் அமெரிக்கப் போர் விமானங்களிலும் பார்க்க மேன்மையானவை என்றார். இரசியப் படைத்துறையினரையே இந்தக் கூற்று ஆச்சரியப்படவைத்தது. அமெரிக்க விமானப் படையினரும் இந்திய விமானப் படையினரும் நடாத்திய போர் ஒத்திகையின் போதே தான் இதை உணர்ந்து கொண்டதாக ஹோர்ண்பேர்க் தெரிவித்தார். அமெரிக்காவின் F-15 C/D Eagle விமானங்களும் இந்தியாவிடமுள்ள இரசியத் தயாரிப்பு Sukhoi Su-30 MKI போர் விமானங்களும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் போர் ஒத்திகை நடாத்திய போது 90 விழுக்காடு தருணங்களில் இந்திய விமானங்கள் வெற்றியடைந்தன.
சாம் - இரசியாதான் முன்னோடி
இரசியா தனது சாம் எனப்படும் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணை முறைமைகளை மேம்படுத்தியதன் பின்னர் அமெரிக்காவின் F-22, F-15, A-10 ஆகிய போர்விமானங்கள் இரசியாவின் ஆதிக்கத்திலுள்ள கலினின்கிராட் மற்றும் கிறிமியாப் பகுதிகளை ஒட்டிப் பறக்கும் போது மிகவும் கவனத்துடன் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வியட்னாம் போரின் போது ஐக்கிய அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.
தொடரும் தலைமுறைகள்
இரசியாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலை முறை விமானமான F-35ஐ விட மேன்மையானது எனப்படுகின்றது. படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன. இரசியாவின் SU-35 என அழைக்கப்படும் Sukhoi Su-35S Flanker-E என்னும் போர்விமானங்கள் பல மேற்று நாட்டு விமானப் படையினரை கலங்க வைத்துள்ளது.
சீனாவின் விமானத் தொழில்நுட்பம்
தொன்மையான தனது விமானப் படையை கடந்த இருபது ஆண்டுகளாக புதுயவையாக்குவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சீனா இரசியாவைப்போல் விமானத் தொழில்நுடப்பத்தில் ஒரு முன்னணி நாடாக இருந்ததில்லை. ஆனால் அது ஒரு முன்னணி நாடாக தன்னை மாற்ற முயற்ச்சிக்கின்றது.
சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை - China’s People’s Liberation Army Air Force (PLAAF)
அண்மைக்காலங்களாக பல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீனா 2012-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் நடாத்திய விமானப்படை ஒத்திகை எடுத்துக் காட்டியது. பதின்நான்கு பல்வேறுபட்ட விமானப் படையணிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் சீன விமானப்படையின் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். சீன விமானப்படை வரலாற்றில் இது ஒரு பெரிய ஒத்திகையாகும். இது பதினொரு நாட்கள் நீடித்தது. 30-11-2012இல் சீனா அரங்கேற்றிய விமானப்படை ஒத்திகை பல படைத்துறை ஆய்வாளர்கள் சீன விமானப்படையின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டிருந்தனர் என்று நிரூபித்தது. நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor. சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. ராடார்களுக்கு தென்படாத stealth fighter விமானங்கள் வைத்திருக்கும் மூன்றாவது நாடாக சீனா 2010இல் இணைந்து கொண்டது. ஆப்கானிஸ்த்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்க stealth fighter விமானத்தை சீனா விலைக்கு வாங்கி stealth தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது. இக் குற்றச் சாட்டை சீனா வன்மையாக மறுக்கின்றது. சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின்கள் இரசியாவிடமிருந்தே வாங்கப்பட்டன. இது சீனா இன்னும் விமான உருவாக்கற் துறையில் பின் தங்கியே இருக்கின்றது எனக் காட்டுகின்றது என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.
சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. இவை விமானப் படைத்துறையில் நாய்ச் சண்டை என விபரிக்கப்படும் குறுதிய தூரத்தில் இருந்து கொண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரியும் பணிகளுக்கு உகந்தவை அல்ல. பின்னர் சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது.
துல்லிய வழிகாட்டி படைக்கலன்கள் - Precision-Guided Munitions (PGM)
ஐக்கிய அமெரிக்கா சிறந்த துல்லிய வழிகாட்டி ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் அவை பெருமளவில் பயன் படுத்தப்பட்டன. வானில் இருந்தும் தரையில் இருந்தும் கடற்கலன்களில் இருந்தும் வேறு வேறுவகையான துல்லிய வழிகாட்டி ஏவுகணைகள் அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்டன. இவ் ஏவுகணைகள் போரை இலகுவாக்கின. அமெரிக்கப் படைகளின் இழப்பைக் குறைத்தன. கணனியில் விளையாடுவது போல் இந்த ஏவுகணைகளை இயக்கலாம். ஈராக்கியப் படையினருக்கு இவை பலத்த இழப்புக்களை ஏற்படுத்தின. ஆனால் ஈராக்கியப் படைகளை முற்றாக ஒழித்துக் கட்டவுமில்லை அவர்களின் போராட்ட மனப்பாங்கை சிதைக்கவுமில்லை.
அடையாளத்துக்கு முந்து
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.
அடுத்த தலைமுறைக்கான திட்டம்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க விமானங்கள் எண்ணிக்கை அடைப்படையில் அதிக விமானங்களைக் கொண்ட எதிரியைச் சமாளிக்க வேண்டும். அதற்கு எதிரியிலும் பார்க்க மிக மேன்மையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விமானங்கள் அமெரிக்கப் படையினருக்கு அவசியம் என்பதை அமெரிக்காவின் பாராளமன்றமும் உணர்ந்துள்ளது. தனது விமானப் படையின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண அமெரிக்கா The Next-Generation Air Dominance program என்னும் திட்டத்தை வரைந்துள்ளது. பல உட் பிரிவுகளை இத் திட்டம் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மொத்த செலவீனத்தில் 25 விழுக்காடு வெட்டு தேவை என அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை அமெரிக்க விமானப்படைக்கு புதிய தொலைதூரத் தாக்குதல் விமானங்களை உருவாக்குவதற்கான செலவீனங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களில் தற்போது Lockheed Martin நிறுவனம் தயாரித்த F-22 Raptor போர் விமானங்களே தற்போது ஓரளவுக்கு சீனா மற்றும் இரசியப் போர் விமானங்களுடன் நின்று பிடிக்கக் கூடியவை.
ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள்
அமெரிக்காவின் வான் படையினர் 2030-ம் ஆண்டு தாம் உலக வான் பரப்பில் ஆதிக்கம் முழுமையாகச் செலுத்தக் கூடிய திட்டத்தை வரைந்துள்ளனர். இத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும். சில வையானவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக அதாவது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். பி-3 வகையறாக்கள் ஒலியிலும் குறைவான கதியில் பறக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உன்னத தகவல் பரிமாற்றமும் இருக்கும். சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாக இயங்காது. சீனாவின் J-20 ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கும் ஆனால் திடீரெனத் திருப்ப முடியாத்து. திரும்ப முன்னர் 300மைல்கள் பறக்க வேண்டும். இதனால் அமெரிக்கா தனது ஆறம் தலைமுறைப் போர் விமானங்களை வானில் இருந்து வேறு விமானங்களுடன் சண்டை செய்யக் கூடிய வகையில் இலகுவாகவும் துரிதமாகவும் திரும்பிப் பறக்கக் கூடிய வகையில வடிவமைக்கின்றது. அமெரிக்கா உருவாக்க விருக்கு பி-3 போர் விமானங்கள் பி-2 விமானங்களிலும் பார்க்கக் குறைந்த அளவு எடையுள்ள படைக்கலன்களையே தாங்கிச் செல்லும். ஆனால் தொடர்ந்து 5000 மைல்கள் பறக்கக் கூடியவை. இதனால் பல அமெரிக்கத் தளங்களில் இருந்து இரசியாவையோ அல்லது சீனாவையோ ஒரே பறப்பில் சென்றடையும்.
பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்கும் முகமாக அமெரிக்காவின் கடற்படையும் விமானப் படையும் இணைந்து ஆறாம் தலைமுறை விமானங்களை உருவாக்கவிருக்கின்றன.
இரசியாவின் எதிர்வினை எப்படி?
2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது. விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமான ஆதிக்கப் போட்டி தீவிரமடையும் போது சீனா ஒன்றில் பின் தங்க வேண்டும் அல்லது இரசியாவுடன் இணைந்தும் சார்ந்தும் செயற்பட வேண்டும். மூன்றாவது தெரிவு இணைய வெளியூடாக 6-ம் தலைமுறை விமானங்களின் தொழில்நுட்பங்களைத் திருட வேண்டும். இருந்தும் 2015 டிசம்பரில் சீனா ஆறாவது தலைமுறைப் போர்விமானங்களைத் தானும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது.
Tuesday, 29 September 2015
Saturday, 26 September 2015
சீனாவில் இருந்து வெளியேறும் மூலதனங்கள்
சீனாவில் இருந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனங்கள் வெளியேறின. பின்னர் 2015 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 141.66 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனம் சீனாவில் இருந்து வெளியேறியது. நான்கு ரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 3.6 ஆகக் குறைந்து விட்டது. நாட்டை விட்டு மூலதனங்கள் வெளியேறுவதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறையைத் தவிர்க்க சீன மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 2014 நவம்பரில் இருந்து எட்டு மாதங்களில் ஐந்து தடவைகள் குறைத்துள்ளது.
சீனாவின் சொத்துக் கரைகின்றது
சீனாவின் பெரும் சொத்தாக இருக்கும் அதன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு தொடர்பான தகவல்களும் நம்பகத் தகுந்ததாக இல்லை. அத்துடன் அதில் பெரும் பகுதி திரவத்தன்மை குறைந்த நீண்டகால முதலீடுகளில் முதலிடப்பட்டுளது. இதனால் சீனப் பொருளாதாரக் கப்பலில் ஓட்டை விழும் போது உடனடியாக அதை அடைக்கக் கூடிய நிலையில் சீனா இல்லை. 3.6 ரில்லியன் டொலர்களில் 667 பில்லியன்கள் மட்டுமே தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. ஏற்றுமதியை ஒட்டி வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதி பெருமளவு வீழ்ச்சியைக் கண்டது. இதனால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியை நிரப்ப சீன அரசு பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பிக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியற்பொருளாதாரப் பேராசிரியர் கிறிஸ்டபர் பொல்டிங்கின் கருத்துப்படி சீனாவின் முதலீட்டுக் கூட்டுறவு வங்கி தனது மூலதனத்தை சீன மைய வங்கியிடமிருந்து அமெரிக்கக் கடன் முறிகளாகவே கடன் பெற்றது. இதனால் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது முதல் இருபத்தைந்து வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்கின்றார் அப்பேராசிரியர். ஆனால் உள்ளூரில் செய்யப்பட்ட பல முதலீடுகள் இலாபத் திறன் குறைந்தவனவாகவே இருந்தன. சீனாவில் வெற்றுக் கட்டிடங்கள் மைல்கணக்கில் நீண்டு இருக்கின்றன. அது போலவே பயன்படுத்தப்படாத பல புதிய விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் பல இருக்கின்றன.
தனது பெருமளவு ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாயங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது.
சீனாவால் உலத்தில் காசுத் தட்டுப்பாடு ஏற்படுமா?
சீனாவின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து கொண்டு போவது உலக அரங்கில் ஒரு நாணயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைக் கூட உருவாக்கியுள்ளது. Quantitative Easing எனப்படும் நாணயங்களுக்கான அளவுசார் தளர்ச்சி இனி quantitative tightening என்னும் அளவுசார் இறுக்கம் என ஆகிவிடுமா என எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த ஓராண்டு காலமாகச் சீனப் பொருளாதரத்தின் நகர்வுகள் இப்படி இருந்தன:
சீனப் பங்குகள் 12 மாதத்தில் 150விழுக்காடு விலை அதிகரிப்படைந்தன. பின்னர் 30 விழுக்காடு வீழ்ச்சியைக்கண்டன. சீனா தனது நாட்டின் 97 விழுக்காடான பங்குகளின் விற்பனையைத் தடை செய்தது. சீனா 1.2 ரில்லியன் டொலர்களை பெரிய பங்குகளின் விலைகள் சரியாமல் இருக்கச் செலவிட்டது. சீனா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக அறிவித்தது. சீன நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியைத் தக்க வைக்க பெருமளவு செலவு செய்தது. இந்தக் காட்சித் தொடர் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் காட்டியது. ஏற்கனவே சீனாவின் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சீனாவில் இருந்து மூலதனம் பெருமளவில் வெளியேறுவதற்கான காரணங்கள்:
1. நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
சீன அரசு அதனது நாணயத்தின் பெறுமதியையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விற்று விட்டு சீனாவில் இருந்து வெளியேறுகின்றன. தென் கொரியா உட்படப் பல ஆசிய நாடுகள் தமது பங்குச் சந்தை விலையை நிலைப்படுத்த என நிதியங்களை உருவாக்கியுள்ளன. பங்குச் சந்தை விலைச் சரிவைச் சந்திக்கும் போது அந்த நிதியங்கள் பங்குகளை வாங்கும். விலை ஏறும் போது விற்கும். இப்படி ஒரு நிதியம் சீனாவில் இல்லாதது சீனாவில் முதலீடு செய்பவர்களைத் தயங்க வைக்கின்றது.
2. சீன நாணயம் மேலும் மதிப்பிழக்கலாம் என்ற அச்சம்.
றென்மின்பி என்றும் யூவான் என்றும் அழைக்கப்படும் சீன நாணயத்திண் பெறுமதியை முன்னர் அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயித்து வந்தது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. இந்த முடிவால் சீன நாணயத்தின் பெறுமதி குறையலாம் என்ற அச்சம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் சீனாவில் தாம் செய்த முதலீடுகளை சீன நாணயத்தின் பெறுமதி மேலும் வீச்சியடையும் முன்னர் அதை விற்றுக் கொண்டு அமெரிக்க டொலர்களாக மாற்ற முயல்கின்றனர்.
3 ஏறு முகமாக நிற்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அங்கு வேலையற்றோர் தொகை வீழ்ச்சியடையும் அதேவேளை ஊதியம் உயர்வடையாமல் இருக்கின்றது. இது போன்ற காரணிகளால் அமெரிக்க டொலரின் மதிப்பு இனி ஏற்றத்தையே அடைந்து கொண்டிருக்கும் எனப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனால் அவர்கள் சீனாவில் முதலிடுவதிலும் பார்க்க அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள்.
4. வளர்ச்சி வேகம் குறையும் சீனப் பொருளாதாரம்.
சீன 2015-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.5விழுக்காட்டில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. 2015 ஓகஸ்ட் மாதத்திற்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும்(10.9%) தொழிற்சாலைகளின் உற்பத்தியும்(6.4%) ஏதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே அமைந்திருந்தன. சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchasing Managers’ Index) ஜுலை மாதம் 50ஆக இருந்து ஓகஸ்ட் மாதம் 49.7 ஏழாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிவந்த பின்னர் 2015 செப்டம்பர் மாதம் 14-ம் திகதி சீனப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியைக் கண்டது. சீன உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் குறைக்கின்றார்கள். இதனால் சீனாவில் இலாபத் திறன் குறைகின்றது. பொருளாதாரத்தில் இலாபத் திறன் குறையும் போது முதலீடுகளுக்கான கவர்ச்சி குறைகின்றது. பொருளாதாரப் புள்ளி விபரங்கள் மோசமாக இருப்பதால் சீன அரசு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்ட எடுத்த முயற்ச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஏற்கனவே சீனாவின் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்ற கருத்துப் பரவலாக நிலவுகின்றது.
5. சீனாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்
சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனாவில் இருந்து ஒருவரி ஐம்பதியானையிரம் டொலர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 200-ம் ஆண்டிற்கும் 2014-ம் ஆண்டிற்கும் இடையில் சீனாவில் இருந்து 3.7 ரில்லியன் டொலர்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி சீனாவைப் பெருமளவு பாதித்த 2011-ம் ஆண்டு மட்டும் 600பில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதியிலும் உள்ளூர் முதலீட்டிலும் தனது பொருளாதாரத்தை வளர்த்து வந்த சீனா இப்போது உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கின்றது. தனிநபர் வருமானம் குறைவாக உள்ளதும் இப்போதும் ஒரு வளர்முக நாடாகவும் இருக்கும் சீனாவில் இது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து மூலதனம் வெளியேறும் போது நாணயத்தின் பெறுமதி மேலும் மோசமகக் குறைவடையும்.
சீனாவின் சொத்துக் கரைகின்றது
சீனாவின் பெரும் சொத்தாக இருக்கும் அதன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு தொடர்பான தகவல்களும் நம்பகத் தகுந்ததாக இல்லை. அத்துடன் அதில் பெரும் பகுதி திரவத்தன்மை குறைந்த நீண்டகால முதலீடுகளில் முதலிடப்பட்டுளது. இதனால் சீனப் பொருளாதாரக் கப்பலில் ஓட்டை விழும் போது உடனடியாக அதை அடைக்கக் கூடிய நிலையில் சீனா இல்லை. 3.6 ரில்லியன் டொலர்களில் 667 பில்லியன்கள் மட்டுமே தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. ஏற்றுமதியை ஒட்டி வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதி பெருமளவு வீழ்ச்சியைக் கண்டது. இதனால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியை நிரப்ப சீன அரசு பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பிக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியற்பொருளாதாரப் பேராசிரியர் கிறிஸ்டபர் பொல்டிங்கின் கருத்துப்படி சீனாவின் முதலீட்டுக் கூட்டுறவு வங்கி தனது மூலதனத்தை சீன மைய வங்கியிடமிருந்து அமெரிக்கக் கடன் முறிகளாகவே கடன் பெற்றது. இதனால் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது முதல் இருபத்தைந்து வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்கின்றார் அப்பேராசிரியர். ஆனால் உள்ளூரில் செய்யப்பட்ட பல முதலீடுகள் இலாபத் திறன் குறைந்தவனவாகவே இருந்தன. சீனாவில் வெற்றுக் கட்டிடங்கள் மைல்கணக்கில் நீண்டு இருக்கின்றன. அது போலவே பயன்படுத்தப்படாத பல புதிய விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் பல இருக்கின்றன.
தனது பெருமளவு ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாயங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது.
சீனாவால் உலத்தில் காசுத் தட்டுப்பாடு ஏற்படுமா?
சீனாவின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து கொண்டு போவது உலக அரங்கில் ஒரு நாணயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைக் கூட உருவாக்கியுள்ளது. Quantitative Easing எனப்படும் நாணயங்களுக்கான அளவுசார் தளர்ச்சி இனி quantitative tightening என்னும் அளவுசார் இறுக்கம் என ஆகிவிடுமா என எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த ஓராண்டு காலமாகச் சீனப் பொருளாதரத்தின் நகர்வுகள் இப்படி இருந்தன:
சீனப் பங்குகள் 12 மாதத்தில் 150விழுக்காடு விலை அதிகரிப்படைந்தன. பின்னர் 30 விழுக்காடு வீழ்ச்சியைக்கண்டன. சீனா தனது நாட்டின் 97 விழுக்காடான பங்குகளின் விற்பனையைத் தடை செய்தது. சீனா 1.2 ரில்லியன் டொலர்களை பெரிய பங்குகளின் விலைகள் சரியாமல் இருக்கச் செலவிட்டது. சீனா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக அறிவித்தது. சீன நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியைத் தக்க வைக்க பெருமளவு செலவு செய்தது. இந்தக் காட்சித் தொடர் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் காட்டியது. ஏற்கனவே சீனாவின் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சீனாவில் இருந்து மூலதனம் பெருமளவில் வெளியேறுவதற்கான காரணங்கள்:
1. நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
சீன அரசு அதனது நாணயத்தின் பெறுமதியையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விற்று விட்டு சீனாவில் இருந்து வெளியேறுகின்றன. தென் கொரியா உட்படப் பல ஆசிய நாடுகள் தமது பங்குச் சந்தை விலையை நிலைப்படுத்த என நிதியங்களை உருவாக்கியுள்ளன. பங்குச் சந்தை விலைச் சரிவைச் சந்திக்கும் போது அந்த நிதியங்கள் பங்குகளை வாங்கும். விலை ஏறும் போது விற்கும். இப்படி ஒரு நிதியம் சீனாவில் இல்லாதது சீனாவில் முதலீடு செய்பவர்களைத் தயங்க வைக்கின்றது.
2. சீன நாணயம் மேலும் மதிப்பிழக்கலாம் என்ற அச்சம்.
றென்மின்பி என்றும் யூவான் என்றும் அழைக்கப்படும் சீன நாணயத்திண் பெறுமதியை முன்னர் அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயித்து வந்தது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. இந்த முடிவால் சீன நாணயத்தின் பெறுமதி குறையலாம் என்ற அச்சம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் சீனாவில் தாம் செய்த முதலீடுகளை சீன நாணயத்தின் பெறுமதி மேலும் வீச்சியடையும் முன்னர் அதை விற்றுக் கொண்டு அமெரிக்க டொலர்களாக மாற்ற முயல்கின்றனர்.
3 ஏறு முகமாக நிற்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அங்கு வேலையற்றோர் தொகை வீழ்ச்சியடையும் அதேவேளை ஊதியம் உயர்வடையாமல் இருக்கின்றது. இது போன்ற காரணிகளால் அமெரிக்க டொலரின் மதிப்பு இனி ஏற்றத்தையே அடைந்து கொண்டிருக்கும் எனப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனால் அவர்கள் சீனாவில் முதலிடுவதிலும் பார்க்க அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள்.
4. வளர்ச்சி வேகம் குறையும் சீனப் பொருளாதாரம்.
சீன 2015-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.5விழுக்காட்டில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. 2015 ஓகஸ்ட் மாதத்திற்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும்(10.9%) தொழிற்சாலைகளின் உற்பத்தியும்(6.4%) ஏதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே அமைந்திருந்தன. சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchasing Managers’ Index) ஜுலை மாதம் 50ஆக இருந்து ஓகஸ்ட் மாதம் 49.7 ஏழாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிவந்த பின்னர் 2015 செப்டம்பர் மாதம் 14-ம் திகதி சீனப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியைக் கண்டது. சீன உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் குறைக்கின்றார்கள். இதனால் சீனாவில் இலாபத் திறன் குறைகின்றது. பொருளாதாரத்தில் இலாபத் திறன் குறையும் போது முதலீடுகளுக்கான கவர்ச்சி குறைகின்றது. பொருளாதாரப் புள்ளி விபரங்கள் மோசமாக இருப்பதால் சீன அரசு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்ட எடுத்த முயற்ச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஏற்கனவே சீனாவின் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்ற கருத்துப் பரவலாக நிலவுகின்றது.
5. சீனாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்
சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனாவில் இருந்து ஒருவரி ஐம்பதியானையிரம் டொலர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 200-ம் ஆண்டிற்கும் 2014-ம் ஆண்டிற்கும் இடையில் சீனாவில் இருந்து 3.7 ரில்லியன் டொலர்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி சீனாவைப் பெருமளவு பாதித்த 2011-ம் ஆண்டு மட்டும் 600பில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதியிலும் உள்ளூர் முதலீட்டிலும் தனது பொருளாதாரத்தை வளர்த்து வந்த சீனா இப்போது உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கின்றது. தனிநபர் வருமானம் குறைவாக உள்ளதும் இப்போதும் ஒரு வளர்முக நாடாகவும் இருக்கும் சீனாவில் இது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து மூலதனம் வெளியேறும் போது நாணயத்தின் பெறுமதி மேலும் மோசமகக் குறைவடையும்.
Friday, 25 September 2015
புட்டீனின் இரண்டாவது பொறிக்குள்ளும் ஒபாமா அகப்பட்டுக் கொண்டாரா?
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முதலாவது பொறியை உக்ரேனில் வைத்தார். இப்போது சிரியாவில் அடுத்த பொறியை வைத்துள்ளார். இரண்டிலும் பராக் ஒபாமா ஏதும் செய்ய முடியாதபடியான சிக்கலை அமெரிக்கா எதிர் கொள்கின்றதா? 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த உலக "ஒழுங்கை" இரசியா இன்னும் தனக்குச் சாதகமாக்காவிடினும் அது ஒரு குழப்பத்தை உருவாக்கிவிட்டது.
முன்னை வைத்த ஆப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணையவிருந்தது உக்ரேன். ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இணைந்து உக்ரேனில் இரசிய சார்பு உக்ரேயின் ஆட்சியாளர் விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து உக்ரேனில் உள்ள புதிய நாஜீக்களின் உதவியுடன் விரட்டி உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முயன்றன. பதிலடியாக உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனின் மேற்கு நாட்டு ஆதரவு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தார் விளடிமீர் புட்டீன். விளைவாக உக்ரேனில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. உக்ரேனில் தனது காய் நகர்த்தல்களை வல்லமை மிக்க அமெரிக்க உளவுத் துறைக்கு தெரியாமல் புட்டீன் செய்து முடித்தார். தற்போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாத அளவிற்கு மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது. உக்ரேனை மீட்க முடியாத நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் இருக்கின்றன. சில அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் அரசுறவியலாளர்களும் முழு உக்ரேனையும் இரசியா ஆக்கிரமித்து தனதாக்கினலும் பெலரஸைத் தன்னுடன் இணைத்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ பெரிய இடையூறுகளை ஏற்படுத்தப் போவதில்லை என்கின்றனர். ஆனால் இது இரசிய விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் என்பது உண்மை அது காலப் போக்கில் இரசியாவை வலுவடையச் செய்து ஐரோப்பாவை மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற்றலாம்.
பராக் ஒபாமாவிற்கு விளடிமீர் புட்டீன் வைத்த இரண்டாவது பொறியாக சிரியா அமைந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து பராக் ஒபாமாவின் சிரியா தொடர்பான கொள்கைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாவது சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்தால் அது சிவப்புக் கோட்டைத் தாண்டியது போலாகும். அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்கும். இரண்டாவது பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பஷார் அல் அசாத் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப் பட்ட போது ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு படை நடவடிக்கையும் எடுக்காதபடி புட்டீன் தடுத்து விட்டார். அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடாத்தினால் இரசியப் படைகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடாத்துவதாக மிரட்டியதாகச் சொல்லப் பட்டது. அத்துடன் அரசுறவியல் நகர்வாக இரசியா சிரியாவில் உள்ள வேதியியல் படைக்கலன்களை அழிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டது. ஒபாமாவின் செங்கோட்டைத் தாண்டிய அசாத்தை ஒபாமாவால் ஏதும் செய்ய முடியாத நிலையை புட்டீன் உருவாக்கினார்.
அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்வதற்கான படை நடவடிகை முனைந்தமை இரசிய அதிபர் புட்டீனைப் பதில் நடவடிக்கைக்குத் தூண்டியது. உக்ரேனில் செய்தது போல் அமெரிக்க உளவுத் துறைகளுக்குத் தெரியாமல் விமானங்கள் மூலமாகவும் கடற்கப்பல்கள் மூலமாகவும் பெருமளவு படைக்கலன்களையும் பாரப் படைக்கல ஊர்திகளையும் துருப்பிக் காவிகளையும் சிரியாவில் கொண்டு போய் புட்டீன் இறக்கினார். இவையாவும் சிரியப் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அனுப்பப்படும் படைத்துறை நிபுணர்களை அனுப்புதல் என்னும் போர்வையில் செய்யப்பட்டது. எல்லாவற்றிலும் மேலாக விமானத்தில் இருந்து விமானங்களைத் தாக்கும் விமானங்களும் படைக்கலன்களும் தரையில் இருந்து விமானங்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளும் சிரியாவில் இரசியாவால் கொண்டு போய் இறக்கப் பட்டுள்ளன. இது இனி எந்த ஒரு கட்டத்திலும் அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் விமானத்த் தாக்குதல் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் இன்க்குழுமத்தினர் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானத்தளத்தில் இரசியப் படையினருக்கு என தற்காலிக முகாம்கள் அமைக்கப் படுகின்றன. 2015 செப்டம்பர் 17-ம் திகதியில் இருந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத அளவும் தீவிரமான விமானத் தாக்குதல்களும் உலங்கு வானூர்தித் தாக்குதல்களும் செய்யப்படுகின்றன.
இரசியா தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப் போவதாகச் சொல்கின்றது. அமெரிக்காவும் துருக்கியும் அதையே செய்யப் போவதாகச் சொல்கின்றன. இதனால் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அமெரிக்கப் படைகள் தனது படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார் விளடிமீர் புட்டீன். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நேட்டோப் படைகள் போர் புரியும் போது ஒரு நாட்டுப் படைகள் தவறுதலாக மற்ற நட்பு நாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் பல உண்டு. ஒரே கட்டளைப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட படைகளின் நடவடிக்கைகளே அப்படி இருக்கும் போது. சிரியாவில் நிலைமை மிக மோசமாக அமையலாம் என அமெரிக்காவும் உணர்ந்து கொண்டது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சேர்கீ ஷொய்குவுடன பேச்சு வார்த்தை நடாத்தினார்.
புட்டீனின் நகர்வால் அமெரிக்கா பின்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றது இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபைனாச்ஷியல் ரைம்ஸ். இரசியா தற்போது சிரியாவை நோக்கிச் செய்துள்ள படை நகர்வு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் செய்த பெரிய படைநகர்வாகக் கருதப்படுகின்றது. சில கணிப்பீடுகள் 24 இரசியப் போர் விமானங்கள் சிரியாவில் இறக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ஐ எஸ் அமைப்பினரும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பினரும் சிரிய அரச படைகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றார்கள். இவர்களை இரசியா ஒழித்துக் கட்டிவிட்டால் அசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத நிலை உருவாகும். இதை சவுதி அரேபியா, காட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சுனி முஸ்லிம் நாடுகள் விரும்பாது. அமெரிக்கா சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராக படை நடவடிக்கை எடுக்காமல் இதுவரை இருந்தது இந்த நாடுகளுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சிரியாவில் பசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத ஒரு நிலையை இரசியா ஏற்படுத்த முயல்கின்றது.
அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் சுதந்திர சிரியப் படையும் அதன் இணை அமைப்பினரும் தீரமாகப் போராட முடியாதவர்களாகவே இருக்கினறர். அமெரிக்கா ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவழித்துச் செய்த பயிற்ச்சியும் படைக்கலனும் திட்டம் இதுவரை எதிர்பார்த்த அளவு பயனைக் கொடுக்கவில்லை. சிரியாவின் அரச படைகள் நன்கு பயிற்றப் பட்டவையும் அசாத்திற்கு விசுவாசம் மிக்கவையுமாகும். இதனால் தற்போது சிரியாவில் இரசியாவின் கைகளே ஓங்கியுள்ளன. பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் பராக் ஒபாமாவின் இரண்டாவது நோக்கத்திற்கும் புட்டீன் ஆப்பு வைத்து விட்டார்.
இலண்டனில் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி குறுகிய கால அடிப்படையில் பஷார் அல அசாத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தையைச் செய்யலாம் என்றும் நீண்ட கால அடிப்படையில் அசாத் இல்லாத ஒரு பேச்சு வார்த்தை மட்டுமே நடை பெறும் என்றார். ஆனால் அசாத் தன் பதவி விலகுவது என்பது பேச்சு வார்த்தை மேசையில் முன்வைக்கப்பட முடியாத ஒன்று என்கின்றார்.
ஏற்கனவே மேற்கு நாடுகள் இரகசியமாக ஐ எஸ் அமைப்பின்ருக்கு அசாத்திற்கு எதிராகப் போர் புரிய உதவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இனி அந்த உதவிகள் இரசியாவிற்குப் பிரச்சனை கொடுக்கும் வகையில் மேலும் அதிகரிக்கப் படலாம்.
ஈரானை அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் பொருளாதாரத் தடையை அவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு புட்டீன் தந்திரமாக நீக்கிவிட்டார். இப்போது ஈரான் இரசியாவுடன் இணைந்து அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கின்றது. சிரியாவில் அசாத்தின் ஆட்சியும் ஈரானும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகியவை இரசியாவுடன் இணையும் போது மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் மீள் நிலை நிறுத்தப்படும்.
முன்னை வைத்த ஆப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணையவிருந்தது உக்ரேன். ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இணைந்து உக்ரேனில் இரசிய சார்பு உக்ரேயின் ஆட்சியாளர் விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து உக்ரேனில் உள்ள புதிய நாஜீக்களின் உதவியுடன் விரட்டி உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முயன்றன. பதிலடியாக உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனின் மேற்கு நாட்டு ஆதரவு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தார் விளடிமீர் புட்டீன். விளைவாக உக்ரேனில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. உக்ரேனில் தனது காய் நகர்த்தல்களை வல்லமை மிக்க அமெரிக்க உளவுத் துறைக்கு தெரியாமல் புட்டீன் செய்து முடித்தார். தற்போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாத அளவிற்கு மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது. உக்ரேனை மீட்க முடியாத நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் இருக்கின்றன. சில அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் அரசுறவியலாளர்களும் முழு உக்ரேனையும் இரசியா ஆக்கிரமித்து தனதாக்கினலும் பெலரஸைத் தன்னுடன் இணைத்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ பெரிய இடையூறுகளை ஏற்படுத்தப் போவதில்லை என்கின்றனர். ஆனால் இது இரசிய விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் என்பது உண்மை அது காலப் போக்கில் இரசியாவை வலுவடையச் செய்து ஐரோப்பாவை மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற்றலாம்.
பராக் ஒபாமாவிற்கு விளடிமீர் புட்டீன் வைத்த இரண்டாவது பொறியாக சிரியா அமைந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து பராக் ஒபாமாவின் சிரியா தொடர்பான கொள்கைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாவது சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்தால் அது சிவப்புக் கோட்டைத் தாண்டியது போலாகும். அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்கும். இரண்டாவது பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பஷார் அல் அசாத் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப் பட்ட போது ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு படை நடவடிக்கையும் எடுக்காதபடி புட்டீன் தடுத்து விட்டார். அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடாத்தினால் இரசியப் படைகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடாத்துவதாக மிரட்டியதாகச் சொல்லப் பட்டது. அத்துடன் அரசுறவியல் நகர்வாக இரசியா சிரியாவில் உள்ள வேதியியல் படைக்கலன்களை அழிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டது. ஒபாமாவின் செங்கோட்டைத் தாண்டிய அசாத்தை ஒபாமாவால் ஏதும் செய்ய முடியாத நிலையை புட்டீன் உருவாக்கினார்.
அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்வதற்கான படை நடவடிகை முனைந்தமை இரசிய அதிபர் புட்டீனைப் பதில் நடவடிக்கைக்குத் தூண்டியது. உக்ரேனில் செய்தது போல் அமெரிக்க உளவுத் துறைகளுக்குத் தெரியாமல் விமானங்கள் மூலமாகவும் கடற்கப்பல்கள் மூலமாகவும் பெருமளவு படைக்கலன்களையும் பாரப் படைக்கல ஊர்திகளையும் துருப்பிக் காவிகளையும் சிரியாவில் கொண்டு போய் புட்டீன் இறக்கினார். இவையாவும் சிரியப் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அனுப்பப்படும் படைத்துறை நிபுணர்களை அனுப்புதல் என்னும் போர்வையில் செய்யப்பட்டது. எல்லாவற்றிலும் மேலாக விமானத்தில் இருந்து விமானங்களைத் தாக்கும் விமானங்களும் படைக்கலன்களும் தரையில் இருந்து விமானங்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளும் சிரியாவில் இரசியாவால் கொண்டு போய் இறக்கப் பட்டுள்ளன. இது இனி எந்த ஒரு கட்டத்திலும் அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் விமானத்த் தாக்குதல் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் இன்க்குழுமத்தினர் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானத்தளத்தில் இரசியப் படையினருக்கு என தற்காலிக முகாம்கள் அமைக்கப் படுகின்றன. 2015 செப்டம்பர் 17-ம் திகதியில் இருந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத அளவும் தீவிரமான விமானத் தாக்குதல்களும் உலங்கு வானூர்தித் தாக்குதல்களும் செய்யப்படுகின்றன.
இரசியா தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப் போவதாகச் சொல்கின்றது. அமெரிக்காவும் துருக்கியும் அதையே செய்யப் போவதாகச் சொல்கின்றன. இதனால் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அமெரிக்கப் படைகள் தனது படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார் விளடிமீர் புட்டீன். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நேட்டோப் படைகள் போர் புரியும் போது ஒரு நாட்டுப் படைகள் தவறுதலாக மற்ற நட்பு நாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் பல உண்டு. ஒரே கட்டளைப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட படைகளின் நடவடிக்கைகளே அப்படி இருக்கும் போது. சிரியாவில் நிலைமை மிக மோசமாக அமையலாம் என அமெரிக்காவும் உணர்ந்து கொண்டது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சேர்கீ ஷொய்குவுடன பேச்சு வார்த்தை நடாத்தினார்.
புட்டீனின் நகர்வால் அமெரிக்கா பின்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றது இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபைனாச்ஷியல் ரைம்ஸ். இரசியா தற்போது சிரியாவை நோக்கிச் செய்துள்ள படை நகர்வு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் செய்த பெரிய படைநகர்வாகக் கருதப்படுகின்றது. சில கணிப்பீடுகள் 24 இரசியப் போர் விமானங்கள் சிரியாவில் இறக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ஐ எஸ் அமைப்பினரும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பினரும் சிரிய அரச படைகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றார்கள். இவர்களை இரசியா ஒழித்துக் கட்டிவிட்டால் அசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத நிலை உருவாகும். இதை சவுதி அரேபியா, காட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சுனி முஸ்லிம் நாடுகள் விரும்பாது. அமெரிக்கா சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராக படை நடவடிக்கை எடுக்காமல் இதுவரை இருந்தது இந்த நாடுகளுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சிரியாவில் பசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத ஒரு நிலையை இரசியா ஏற்படுத்த முயல்கின்றது.
அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் சுதந்திர சிரியப் படையும் அதன் இணை அமைப்பினரும் தீரமாகப் போராட முடியாதவர்களாகவே இருக்கினறர். அமெரிக்கா ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவழித்துச் செய்த பயிற்ச்சியும் படைக்கலனும் திட்டம் இதுவரை எதிர்பார்த்த அளவு பயனைக் கொடுக்கவில்லை. சிரியாவின் அரச படைகள் நன்கு பயிற்றப் பட்டவையும் அசாத்திற்கு விசுவாசம் மிக்கவையுமாகும். இதனால் தற்போது சிரியாவில் இரசியாவின் கைகளே ஓங்கியுள்ளன. பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் பராக் ஒபாமாவின் இரண்டாவது நோக்கத்திற்கும் புட்டீன் ஆப்பு வைத்து விட்டார்.
இலண்டனில் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி குறுகிய கால அடிப்படையில் பஷார் அல அசாத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தையைச் செய்யலாம் என்றும் நீண்ட கால அடிப்படையில் அசாத் இல்லாத ஒரு பேச்சு வார்த்தை மட்டுமே நடை பெறும் என்றார். ஆனால் அசாத் தன் பதவி விலகுவது என்பது பேச்சு வார்த்தை மேசையில் முன்வைக்கப்பட முடியாத ஒன்று என்கின்றார்.
ஏற்கனவே மேற்கு நாடுகள் இரகசியமாக ஐ எஸ் அமைப்பின்ருக்கு அசாத்திற்கு எதிராகப் போர் புரிய உதவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இனி அந்த உதவிகள் இரசியாவிற்குப் பிரச்சனை கொடுக்கும் வகையில் மேலும் அதிகரிக்கப் படலாம்.
ஈரானை அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் பொருளாதாரத் தடையை அவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு புட்டீன் தந்திரமாக நீக்கிவிட்டார். இப்போது ஈரான் இரசியாவுடன் இணைந்து அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கின்றது. சிரியாவில் அசாத்தின் ஆட்சியும் ஈரானும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகியவை இரசியாவுடன் இணையும் போது மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் மீள் நிலை நிறுத்தப்படும்.
Friday, 18 September 2015
அமெரிக்கா ஏன் வட்டி விழுக்காட்டைக் கூட்டவில்லை?
அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தின் பின்னர் வட்டி விழுக்காட்டை உயர்த்துவதில்லை என 2015 செப்டம்பர் 17-ம் திகதி முடிவெடுத்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட இந்த முடிவு உலகெங்கும் உள்ள நிதி நிறுவனங்களையும் பல வளர்முக நாடுகளின் மைய வங்கிகளையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்காவின் செயற்படு வட்டி விழுக்காடு (effective interest rate) சுழியத்திற்கும் 0.25 இற்கும் இடையில் தொடர்ந்து பேணப்படும்.
சீன நிலைமைகள்
2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்காமல் இருக்கின்றது. அமெரிக்காவின் அடுத்த நகர்வு வட்டி விழுக்காடு அதிகரிப்பே என எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் பலர். வட்டி விழுக்காடு அதிகரிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பே இருந்தது. சீனாவில் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்குச் சந்தையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டதுடன் சீனாவின் நாணயும் தனது மதிப்பை இழந்தது. அதற்கு முன்னர் அமெரிக்கா 2015 செப்டம்பரில் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஓகஸ்ட்டில் சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பின்னர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏற்பட்டது.
அமெரிக்க மைய வங்கியின் முடிவு சீன உட்படப் பல உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
அமெரிக்கா செய்த அள்வுசார் தளர்ச்சியால் (QE) அமெரிக்க வங்களிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு உள்ளது. அவற்றைக்கடனாக நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும். அதற்கு குறைந்த நிலையில் இருக்கும் வட்டி விழுக்காடு ஓர் உந்து வலுவாக அமையும். வட்டி விழுக்காடு குறையும் போது மக்களினதும் நிறுவனங்களினதும் கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் கைக்களில் அதிக பணம் புழக்கம் ஏற்படும். இதனால் நாட்டில் கொள்வனவும் முதலீடும் அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருதாளர வளர்ச்சி எதிர்பார்ப்பை அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve 1.9%இல் இருந்து 2.1%ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் அது ஒரு சீரான வளர்ச்சிப்பாதையாக இல்லை.
வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டு மிகையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது சில பாதகமன விளைவுகள் ஏற்படும் அதில் ஒன்று விலைவாசி அதிகரிப்பு அல்லது பணவீக்கம். அதை தவிர்க்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும். அமெரிக்காவின் பணவிக்கம் பிரச்சனைக்கு உரிவ வகையில் குறைவானதாக இருக்கின்றது. இது முதலீட்டுக்கு உகந்தது அல்ல.
2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஏற்றுமதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் போது அதன் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். இது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு உகந்தது அல்ல.
வட்டி விழுக்காட்டைக் கூட்டினால் வளர்ச்சிப் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒரு வேகத் தடை போட்டது போலாகும்.
பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கும் போது மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைப்பதுண்டு. அமெரிக்காவின் பங்குச் சந்தைச் சுட்டி
2012-ம் ஆண்டில் இருந்து ஒரு சீரான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. ஆனாலும் 2015 ஓகஸ்ட் மாதம் சீனாவில் ஏற்பட்ட பங்குச் சந்தை விலை வீழ்ச்சி அமெரிக்க மைய வங்கியை வட்டி விழுக்காடு அதிகரிப்பை தாமதிக்க வைத்துள்ளது. வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டவுடன் உலகப் பொருளாதாரம் பற்றிய அச்சம் எல்லா முதலீட்டாளர்களின் மனதையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. அதனால் உலகெங்கும் பங்கு விலைகள் சரிவடைந்தன
அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.
ஆனால் இந்த வேலை செய்வோர் தொகை அதிகரிப்பு அமெரிக்காவில் சம்பள உயர்வைக் கொண்டு வரவில்லை. அமெரிக்காவில் இன்னும் வேலையில்லாதவர்களின் தொகையை குறைக்க வேண்டும் என அமெரிக்க மைய வங்கி நினைக்கின்றது.
அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படமாட்டாது என்ற முடிவால் டொலாரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. சேமிப்புக்களின் நிதிவைப்பு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2015-ம் ஆண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என ஒரு புறம் எதிர்பார்க்கப் படுகின்றது மறுபுறம் அது 2017வரை நடக்காது எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
சீன நிலைமைகள்
2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்காமல் இருக்கின்றது. அமெரிக்காவின் அடுத்த நகர்வு வட்டி விழுக்காடு அதிகரிப்பே என எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் பலர். வட்டி விழுக்காடு அதிகரிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பே இருந்தது. சீனாவில் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்குச் சந்தையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டதுடன் சீனாவின் நாணயும் தனது மதிப்பை இழந்தது. அதற்கு முன்னர் அமெரிக்கா 2015 செப்டம்பரில் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஓகஸ்ட்டில் சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பின்னர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏற்பட்டது.
அமெரிக்க மைய வங்கியின் முடிவு சீன உட்படப் பல உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
அமெரிக்கா செய்த அள்வுசார் தளர்ச்சியால் (QE) அமெரிக்க வங்களிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு உள்ளது. அவற்றைக்கடனாக நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும். அதற்கு குறைந்த நிலையில் இருக்கும் வட்டி விழுக்காடு ஓர் உந்து வலுவாக அமையும். வட்டி விழுக்காடு குறையும் போது மக்களினதும் நிறுவனங்களினதும் கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் கைக்களில் அதிக பணம் புழக்கம் ஏற்படும். இதனால் நாட்டில் கொள்வனவும் முதலீடும் அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருதாளர வளர்ச்சி எதிர்பார்ப்பை அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve 1.9%இல் இருந்து 2.1%ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் அது ஒரு சீரான வளர்ச்சிப்பாதையாக இல்லை.
வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டு மிகையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது சில பாதகமன விளைவுகள் ஏற்படும் அதில் ஒன்று விலைவாசி அதிகரிப்பு அல்லது பணவீக்கம். அதை தவிர்க்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும். அமெரிக்காவின் பணவிக்கம் பிரச்சனைக்கு உரிவ வகையில் குறைவானதாக இருக்கின்றது. இது முதலீட்டுக்கு உகந்தது அல்ல.
2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஏற்றுமதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் போது அதன் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். இது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு உகந்தது அல்ல.
வட்டி விழுக்காட்டைக் கூட்டினால் வளர்ச்சிப் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒரு வேகத் தடை போட்டது போலாகும்.
பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கும் போது மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைப்பதுண்டு. அமெரிக்காவின் பங்குச் சந்தைச் சுட்டி
2012-ம் ஆண்டில் இருந்து ஒரு சீரான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. ஆனாலும் 2015 ஓகஸ்ட் மாதம் சீனாவில் ஏற்பட்ட பங்குச் சந்தை விலை வீழ்ச்சி அமெரிக்க மைய வங்கியை வட்டி விழுக்காடு அதிகரிப்பை தாமதிக்க வைத்துள்ளது. வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டவுடன் உலகப் பொருளாதாரம் பற்றிய அச்சம் எல்லா முதலீட்டாளர்களின் மனதையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. அதனால் உலகெங்கும் பங்கு விலைகள் சரிவடைந்தன
அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.
| US Unemployment |
அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படமாட்டாது என்ற முடிவால் டொலாரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. சேமிப்புக்களின் நிதிவைப்பு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2015-ம் ஆண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என ஒரு புறம் எதிர்பார்க்கப் படுகின்றது மறுபுறம் அது 2017வரை நடக்காது எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
Monday, 14 September 2015
சிரியாவின் இரசியப் படைகள் அமெரிக்காவுடன் முறுகல் நிலையா?
மூன்று இலட்சம் பேர்கள் கொல்லப்பட்ட மனிதப் பேரவலம் ஒரு புறம், கலாச்சாரச் சின்னங்களின் அழிவு மறுபுறம் பிராந்திய அமைதியின்மை இன்னொரு புறம் என நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிரிய உள்நாட்டுப் போர் இழுபடுகின்றது. 2011இன் ஆரம்பத்தில் தோன்றிய அரபு வசந்தம் துனிசியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. லிபியாவில் ஆட்சியாளர் இருக்கின்றார்களா என்ற கேள்வியை உருவாக்கியது. எகிப்தில் முன்பிருந்த நிலையிலும் மோசமான நிலையை உருவாக்கியது. அரபு வசந்த எழுச்சி உருவான போது மேற்கு நாடுகள் 1979இல் கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை அரசுகள் கவிழ்ந்தது போல் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் தனியாள் ஆட்சிகள் கவிழ்ந்து தமக்கு உகந்த "மக்களாட்சிகள்" உருவாகும் எனக் காத்திருந்தன.
பேர்லின் சுவர் விழுந்த பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு திசையில் இயங்கின. இரசிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மேற்கு ஐரோப்பிய பாணியில் அரசுகளை உருவாக்கின. ஆனால் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இப்போது வேறு வேறு திசைகளிலும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. துனிசியாவில் எல்லாம் கெடப் போகின்றது என நினைத்திருந்தவர்கள் ஏமாறினர். எகிப்தில் எல்லாம் கெடப்போகின்றது என எண்ணியவர்களும் எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்பினவர்களும் ஏமாற்றப்பட்டனர். லிபியாவில் இன்றும் என்ன நடக்கப்போகின்றது எனப் பலரும் அஞ்சுகின்றனர். மும்மர் கடாபியைக் கொன்ற பின்னர் ஒரு பன்னாட்டுப் படையை சிரியாவில் நிறுத்தியிருந்திருக்க வேண்டும் என பல அரசியல் மற்றும் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக்குழுமத்தினர் சிரியாவில் ஆட்சியில் இருக்கின்றனர். 74 விழுக்காடு சுனி முஸ்லிம்களைக் கொண்ட சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து விடும் என 2011-ம் ஆண்டு எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அசாத்துக்கு விசுவாசமிக்க படையினரும் மதவாதப் போராளிகள் மதசார்பற்ற போராளிகள் எனப் பல்வேறு தரப்பட்ட குழுக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப்ப் போராடுவதிலும் பார்க்க தமக்குள் அதிகம் மோதிக் கொண்டனர். இதனால் இன்றுவரை அசாத்தின் ஆட்சி தொடர்கின்றது. அசாத்தின் ஆட்சிக்கு ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் பக்கவலுவாக இருக்கின்றன. அசாத்தின் ஆட்சிக்கு பொருளாதாரரீதியிலும், படைத்துறை ரீதியிலும் அரசுறவியல் ரீதியிலும் இரசியா ஆதரவு வழங்குகின்றது.
ஈராக்கையும் சிரியாவையும் இணைத்த ஐ எஸ் அமைப்பினர்
ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது இஸ்லாமிய அரசை நிறுவிய ஐ எஸ் போராளி அமைப்பினர் இரு நாடுகளிலும் பிரச்சனைகளைச் சிக்கலாக்கியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஒழிப்பதிலும் பார்க்கவும் ஈராக்கில் மக்களாட்சியை ஏற்படுத்துவதிலும் பார்க்கவும் அதிக கவனம் ஐ எஸ் மதவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் செலுத்தப் படுகின்றது. மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகள் ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இரு நாடுகளிலும் மக்களின் பேரவலங்களை அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை. குளிர்காலம் தொடங்க முன்னர் ஏதிலி முகாம்களில் இருந்த் வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஈராக், சிரியா, ஜோர்தான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள ஏதிலி முகாம்களில் இருந்து வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்ந்தனர். இவர்களின் பாதைகள் பல வழிகளிலும் அடைக்கப் பட்டதால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை சிறு படகுகள் மூலம் இவர்கள் மேற்கொண்டர். பலர் கடலில் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்தனர். அதில் அயிலன் குர்தி என்னும் இரண்டு வயதுச் சிறுவனின் இறந்த உடல் கடற்கரையில் ஒதுங்கிய படம் உலகை உலுப்பியது. மேற்கத்தைய ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இது மேற்கு நாடுகள் சிரியாவில் தேவை ஏற்படின் எடுக்கப் போகும் படை நடவடிக்கைகளுக்கு தமது நாட்டு மக்களிடம் ஆதரவு தேடும் தந்திரமாகும்.
காட்டிக் கொடுத்த ஷெல்பிகள்
கடந்த இரண்டு மாதங்களாக பல இரசியப் படையினர் சிரியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதை இரசியா மறுத்த போதிலும் இரசியப் படையினர் தம்மைத் தாமே எடுத்த படங்களையும் (Selfies) காணொளித் துண்டுகளையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியாவில் தயாரித்த BTR-82A கவச வண்டிகள் சிரியாவில் நடமாடுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இரசியப் படைத்துறை நிபுணர்கள் சிரியப் படையினருக்கு ஆலோசனைகள் வழங்க அனுப்பப்பட்டுள்ளன என்றார். ஏற்கனவே இரசியாவில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிரியாவிற்குச் சென்று ஐ எஸ் போராளிகளுடன் இணைவதற்கு இரசிய உளவுத் துறையானFSB உதவி செய்தாகச் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டதுண்டு.
இரசியா சிரியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்:
1. Tartus துறைமுகத்தில் படைத்தளம்
இரசியா சோவியத் ஒன்றியம் என்றிருக்கும் போது எகிப்தில் இரு கடற்படைத் தளங்களையும் சிரியாவில் ஒரு கடற்படைத்தளத்தையும் அமைத்தது. பின்னர் எகிப்தில் இருந்த தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்தவை சிரியாவிற்கு நகர்த்தப்பட்டன. மத்திர தரைக்கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு சிரியா. இரசியாவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு இரசியக் கடற்படைத்தளம் சிரியாவின் Tartus துறைமுகத்தில் இருக்கிறது. நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கக் கூடிய ஆழ்கடல் துறைமுகமான டார்டஸை இரசியா இழக்க விரும்பாது. தற்போது உள்ள சிரிய மக்களின் பெரும்பான்மையானவர்களின் மனப்பாங்கின்படி சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் டார்ட்டஸ் துறைமுகத்தில் இருந்து இரசியா வெளியேற்றப்படும். சிரிய உள்நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு தொடங்கிய பின்னர் பல இரசியப் படைகளும் படைக்கலன்களும் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. பின்னர் இப்போது மீண்டும் அங்கு நகர்த்தப்படுகின்றன.
2. படைக்கலன்கள் விற்பனை
லிபியாவிலும் ஈராக்கிலும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள் இரசியாவின் படைக்கலன்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010இல் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை இரசியா செய்திருந்தது. இரசியாவின் 7வது பெரிய படைக்கலன் கொள்வனவாளராக சிரியா இருக்கிறது. சிரியாவிற்கான விற்பனையை இரசியா இழக்க விரும்பவில்லை.
3. பெரும் முதலீடு
சிரியாவை நட்பு நாடாக வைத்திருக்க இரசியா தனது சிரியாவிற்கன கடனில் 9.4பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுத்தது. 2009இல் சிரியாவில் இரசியா 19.4பில்லியன்கள் டாலர்கள் முதலிட்டிருந்தது.
4. நீண்ட கால நட்பு
மத்திய கிழக்கில் மிக நீண்டகால நட்பை சிரியாவும் இரசியாவும் கொண்டிருக்கின்றன. இந்த நட்பு பஷார் அல் அசாத்தின் தகப்பனார் காலத்தில் இருந்த சோவியத்-சிரிய நட்பில் இருந்து தொடர்கின்றது.
5. சிரியாவை இழந்தால் ஈரானையும் இரசிய இழக்க வேண்டிவரும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரானில் இருக்கும் ஆட்சியாளர்களும் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டி வரும். தனது அடுத்த நட்பு நாடும் படைக்கலன் கொள்வனவு நாடுமான ஈரானையும் இரசியா இழக்க விரும்பவில்லை.
இரசியா சிரிய ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் தடைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த இரு தீர்மானங்களை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்தது. லிபியாவில் செய்தது போல் விமானங்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் குண்டுகளை வீச மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்தன. துருக்கி மீது சிரியப்படைகள் குண்டுகள் வீசியதாக ஒரு நாடகமாடி சிரியாமீதான குண்டுத் தாக்குதலுக்கு அவை வழிவகுக்கலாம் என உணர்ந்த இரசியா சிரியாவிற்கு தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அதை இயக்கும் நிபுணர்களையும் அனுப்பியது. இதனால் மேற்கு நாடுகளால் ஒரு நேரடித் தலையீட்டை சிரியாவில் செய்ய முடியவில்லை. இதனால் லிபியாவில் செய்தது போன்ற ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் உருவாக்க முடியவில்லை. துருக்கி ஒரு விமானப் பறப்பற்ற பாதுகாப்புப் பிராந்தியம் சிரியாவில் உருவாக்கப் பட்டு அங்கு அப்பாவிகள் தஞ்சமடைய வைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது.
சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்திற்கு இரசியாவில் இருந்து விமானங்கள் மூலம் பல படைக்கலன்கள் பல்கேரியாவூடாக ஏடுத்துச் செல்லப்பட்டன. இதை உணர்ந்த அமெரிக்கா இரசிய சரக்கு விமானங்களை பல்கேரியாவூடாகப் பறப்பதைத் தடுக்கும் படி விடுத்த வேண்டு கோளை பல்கேரியா ஏற்றுக் கொண்டது. இதே வேண்டு கோள் கிரேக்கத்திற்கும் விடுக்கப் பட்டது. இன்னும் கிரேக்கத்திடம் இருந்து பதில் அமெரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. தற்போது தெற்கு இரசியாவில் இருந்து ஈரான், ஈராக் ஊடாக படைக்கலன்கள் சிரியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. லதக்கியா விமனத் தளத்தில் இரசியா ஒரு தற்காலிக விமானக் கட்டுப்பாட்டு நிலையத்தையும் திறந்துள்ளது.
உக்ரேனில் ஒரு அசைய முடியாத நிலையில் உள்ள புட்டீன் சிரியாவில் மேற்கு நாடுகளுக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றதுஅதே வேளை உக்ரேனில் மேற்கு நாடுகளுக்கு போதிய பிரச்சனை கொடுத்த புட்டீன் சிரியாவிலும் பிரச்சனை கொடுக்க முனைகின்றாரா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
சிரியாவில் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்காவும் இரசியாவும் உடன்பட்டாலும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது தொடர்பாக கடுமையாக முரண்படுகின்றன.
சிரயாவில் அதிபர் அல் அசாத்திற்கு எதிராகப் போர் புரியும் குழுக்களில் அல் கெய்தாவின் துணை அமைப்பான அல் நஸ்ரா தலைமையில் பல போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள விமானப் படைத்தளத்தை இரண்டு ஆண்டுகள் செய்த தொடர் தாக்குதலின் பின்னர் 2015 செப்டம்பர் 9-ம் திகதி கைப்பற்றின. 2015 மே மாதத்தில் இருந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் இத்லிப் மாகாணம் உட்படப் பல பகுதிகளை அல் நஸ்ரா அமைப்பினார் கைப்பற்றுகின்றனர்.
அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் ஒஸ்ரேலியா சிரியாவிலும் ஈராக்கிலும் தனது விமானத் தாக்குதல்களை அதிகரிப்பதுடன் ஏதிலிகளுக்கான தனது உதவியையும் அதிகரிக்கவிருக்கின்றது. லெபனானிலும் ஜோர்தானிலும் துருக்கியிலும் இருக்கும் 24,000 ஏதிலிகளைப் பராமரிக்க ஒஸ்ரேலியா மேலதிகமாக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளது. ஒஸ்ரேலிய விமானப் படையின் F/A-18 Super Horne போர் விமானங்கள் துபாயில் நிலை கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றன.
ஈரானும் ஐக்கிய அமெரிக்காவும் யூரேனியப் பதப் படுத்தல் தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்த பின்னர் சிரியா தொடர்பாகவும் அப்படி ஒரு உடன்பாடு ஏற்படலாம் அது அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையலம் என்ற அச்சத்திலேயே இரசியா முன்கூட்டியே அங்கு தனது படையினரை அனுப்பியுள்ளது. ஆனால் ஈரானுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கான வழங்கற்பாதைக்கு சிரியாவில் அதற்க்கு ஆதரவானவர்கள் ஆட்சியில் இருப்பது அவசியம். சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மட்டுமல்ல இஸ்ரேல் கூட சிரியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. ஆச்சரியமளிக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து சிரியாவிற்கு இரசியா மூன்று பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் அமெரிக்கா 7.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் விற்றுள்ளது.
பேர்லின் சுவர் விழுந்த பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு திசையில் இயங்கின. இரசிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மேற்கு ஐரோப்பிய பாணியில் அரசுகளை உருவாக்கின. ஆனால் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இப்போது வேறு வேறு திசைகளிலும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. துனிசியாவில் எல்லாம் கெடப் போகின்றது என நினைத்திருந்தவர்கள் ஏமாறினர். எகிப்தில் எல்லாம் கெடப்போகின்றது என எண்ணியவர்களும் எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்பினவர்களும் ஏமாற்றப்பட்டனர். லிபியாவில் இன்றும் என்ன நடக்கப்போகின்றது எனப் பலரும் அஞ்சுகின்றனர். மும்மர் கடாபியைக் கொன்ற பின்னர் ஒரு பன்னாட்டுப் படையை சிரியாவில் நிறுத்தியிருந்திருக்க வேண்டும் என பல அரசியல் மற்றும் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக்குழுமத்தினர் சிரியாவில் ஆட்சியில் இருக்கின்றனர். 74 விழுக்காடு சுனி முஸ்லிம்களைக் கொண்ட சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து விடும் என 2011-ம் ஆண்டு எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அசாத்துக்கு விசுவாசமிக்க படையினரும் மதவாதப் போராளிகள் மதசார்பற்ற போராளிகள் எனப் பல்வேறு தரப்பட்ட குழுக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப்ப் போராடுவதிலும் பார்க்க தமக்குள் அதிகம் மோதிக் கொண்டனர். இதனால் இன்றுவரை அசாத்தின் ஆட்சி தொடர்கின்றது. அசாத்தின் ஆட்சிக்கு ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் பக்கவலுவாக இருக்கின்றன. அசாத்தின் ஆட்சிக்கு பொருளாதாரரீதியிலும், படைத்துறை ரீதியிலும் அரசுறவியல் ரீதியிலும் இரசியா ஆதரவு வழங்குகின்றது.
ஈராக்கையும் சிரியாவையும் இணைத்த ஐ எஸ் அமைப்பினர்
ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது இஸ்லாமிய அரசை நிறுவிய ஐ எஸ் போராளி அமைப்பினர் இரு நாடுகளிலும் பிரச்சனைகளைச் சிக்கலாக்கியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஒழிப்பதிலும் பார்க்கவும் ஈராக்கில் மக்களாட்சியை ஏற்படுத்துவதிலும் பார்க்கவும் அதிக கவனம் ஐ எஸ் மதவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் செலுத்தப் படுகின்றது. மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகள் ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இரு நாடுகளிலும் மக்களின் பேரவலங்களை அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை. குளிர்காலம் தொடங்க முன்னர் ஏதிலி முகாம்களில் இருந்த் வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஈராக், சிரியா, ஜோர்தான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள ஏதிலி முகாம்களில் இருந்து வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்ந்தனர். இவர்களின் பாதைகள் பல வழிகளிலும் அடைக்கப் பட்டதால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை சிறு படகுகள் மூலம் இவர்கள் மேற்கொண்டர். பலர் கடலில் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்தனர். அதில் அயிலன் குர்தி என்னும் இரண்டு வயதுச் சிறுவனின் இறந்த உடல் கடற்கரையில் ஒதுங்கிய படம் உலகை உலுப்பியது. மேற்கத்தைய ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இது மேற்கு நாடுகள் சிரியாவில் தேவை ஏற்படின் எடுக்கப் போகும் படை நடவடிக்கைகளுக்கு தமது நாட்டு மக்களிடம் ஆதரவு தேடும் தந்திரமாகும்.
காட்டிக் கொடுத்த ஷெல்பிகள்
கடந்த இரண்டு மாதங்களாக பல இரசியப் படையினர் சிரியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதை இரசியா மறுத்த போதிலும் இரசியப் படையினர் தம்மைத் தாமே எடுத்த படங்களையும் (Selfies) காணொளித் துண்டுகளையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியாவில் தயாரித்த BTR-82A கவச வண்டிகள் சிரியாவில் நடமாடுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இரசியப் படைத்துறை நிபுணர்கள் சிரியப் படையினருக்கு ஆலோசனைகள் வழங்க அனுப்பப்பட்டுள்ளன என்றார். ஏற்கனவே இரசியாவில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிரியாவிற்குச் சென்று ஐ எஸ் போராளிகளுடன் இணைவதற்கு இரசிய உளவுத் துறையானFSB உதவி செய்தாகச் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டதுண்டு.
இரசியா சிரியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்:
1. Tartus துறைமுகத்தில் படைத்தளம்
இரசியா சோவியத் ஒன்றியம் என்றிருக்கும் போது எகிப்தில் இரு கடற்படைத் தளங்களையும் சிரியாவில் ஒரு கடற்படைத்தளத்தையும் அமைத்தது. பின்னர் எகிப்தில் இருந்த தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்தவை சிரியாவிற்கு நகர்த்தப்பட்டன. மத்திர தரைக்கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு சிரியா. இரசியாவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு இரசியக் கடற்படைத்தளம் சிரியாவின் Tartus துறைமுகத்தில் இருக்கிறது. நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கக் கூடிய ஆழ்கடல் துறைமுகமான டார்டஸை இரசியா இழக்க விரும்பாது. தற்போது உள்ள சிரிய மக்களின் பெரும்பான்மையானவர்களின் மனப்பாங்கின்படி சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் டார்ட்டஸ் துறைமுகத்தில் இருந்து இரசியா வெளியேற்றப்படும். சிரிய உள்நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு தொடங்கிய பின்னர் பல இரசியப் படைகளும் படைக்கலன்களும் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. பின்னர் இப்போது மீண்டும் அங்கு நகர்த்தப்படுகின்றன.
2. படைக்கலன்கள் விற்பனை
லிபியாவிலும் ஈராக்கிலும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள் இரசியாவின் படைக்கலன்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010இல் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை இரசியா செய்திருந்தது. இரசியாவின் 7வது பெரிய படைக்கலன் கொள்வனவாளராக சிரியா இருக்கிறது. சிரியாவிற்கான விற்பனையை இரசியா இழக்க விரும்பவில்லை.
3. பெரும் முதலீடு
சிரியாவை நட்பு நாடாக வைத்திருக்க இரசியா தனது சிரியாவிற்கன கடனில் 9.4பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுத்தது. 2009இல் சிரியாவில் இரசியா 19.4பில்லியன்கள் டாலர்கள் முதலிட்டிருந்தது.
4. நீண்ட கால நட்பு
மத்திய கிழக்கில் மிக நீண்டகால நட்பை சிரியாவும் இரசியாவும் கொண்டிருக்கின்றன. இந்த நட்பு பஷார் அல் அசாத்தின் தகப்பனார் காலத்தில் இருந்த சோவியத்-சிரிய நட்பில் இருந்து தொடர்கின்றது.
5. சிரியாவை இழந்தால் ஈரானையும் இரசிய இழக்க வேண்டிவரும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரானில் இருக்கும் ஆட்சியாளர்களும் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டி வரும். தனது அடுத்த நட்பு நாடும் படைக்கலன் கொள்வனவு நாடுமான ஈரானையும் இரசியா இழக்க விரும்பவில்லை.
இரசியா சிரிய ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் தடைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த இரு தீர்மானங்களை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்தது. லிபியாவில் செய்தது போல் விமானங்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் குண்டுகளை வீச மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்தன. துருக்கி மீது சிரியப்படைகள் குண்டுகள் வீசியதாக ஒரு நாடகமாடி சிரியாமீதான குண்டுத் தாக்குதலுக்கு அவை வழிவகுக்கலாம் என உணர்ந்த இரசியா சிரியாவிற்கு தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அதை இயக்கும் நிபுணர்களையும் அனுப்பியது. இதனால் மேற்கு நாடுகளால் ஒரு நேரடித் தலையீட்டை சிரியாவில் செய்ய முடியவில்லை. இதனால் லிபியாவில் செய்தது போன்ற ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் உருவாக்க முடியவில்லை. துருக்கி ஒரு விமானப் பறப்பற்ற பாதுகாப்புப் பிராந்தியம் சிரியாவில் உருவாக்கப் பட்டு அங்கு அப்பாவிகள் தஞ்சமடைய வைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது.
சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்திற்கு இரசியாவில் இருந்து விமானங்கள் மூலம் பல படைக்கலன்கள் பல்கேரியாவூடாக ஏடுத்துச் செல்லப்பட்டன. இதை உணர்ந்த அமெரிக்கா இரசிய சரக்கு விமானங்களை பல்கேரியாவூடாகப் பறப்பதைத் தடுக்கும் படி விடுத்த வேண்டு கோளை பல்கேரியா ஏற்றுக் கொண்டது. இதே வேண்டு கோள் கிரேக்கத்திற்கும் விடுக்கப் பட்டது. இன்னும் கிரேக்கத்திடம் இருந்து பதில் அமெரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. தற்போது தெற்கு இரசியாவில் இருந்து ஈரான், ஈராக் ஊடாக படைக்கலன்கள் சிரியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. லதக்கியா விமனத் தளத்தில் இரசியா ஒரு தற்காலிக விமானக் கட்டுப்பாட்டு நிலையத்தையும் திறந்துள்ளது.
உக்ரேனில் ஒரு அசைய முடியாத நிலையில் உள்ள புட்டீன் சிரியாவில் மேற்கு நாடுகளுக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றதுஅதே வேளை உக்ரேனில் மேற்கு நாடுகளுக்கு போதிய பிரச்சனை கொடுத்த புட்டீன் சிரியாவிலும் பிரச்சனை கொடுக்க முனைகின்றாரா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
சிரியாவில் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்காவும் இரசியாவும் உடன்பட்டாலும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது தொடர்பாக கடுமையாக முரண்படுகின்றன.
சிரயாவில் அதிபர் அல் அசாத்திற்கு எதிராகப் போர் புரியும் குழுக்களில் அல் கெய்தாவின் துணை அமைப்பான அல் நஸ்ரா தலைமையில் பல போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள விமானப் படைத்தளத்தை இரண்டு ஆண்டுகள் செய்த தொடர் தாக்குதலின் பின்னர் 2015 செப்டம்பர் 9-ம் திகதி கைப்பற்றின. 2015 மே மாதத்தில் இருந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் இத்லிப் மாகாணம் உட்படப் பல பகுதிகளை அல் நஸ்ரா அமைப்பினார் கைப்பற்றுகின்றனர்.
அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் ஒஸ்ரேலியா சிரியாவிலும் ஈராக்கிலும் தனது விமானத் தாக்குதல்களை அதிகரிப்பதுடன் ஏதிலிகளுக்கான தனது உதவியையும் அதிகரிக்கவிருக்கின்றது. லெபனானிலும் ஜோர்தானிலும் துருக்கியிலும் இருக்கும் 24,000 ஏதிலிகளைப் பராமரிக்க ஒஸ்ரேலியா மேலதிகமாக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளது. ஒஸ்ரேலிய விமானப் படையின் F/A-18 Super Horne போர் விமானங்கள் துபாயில் நிலை கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றன.
ஈரானும் ஐக்கிய அமெரிக்காவும் யூரேனியப் பதப் படுத்தல் தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்த பின்னர் சிரியா தொடர்பாகவும் அப்படி ஒரு உடன்பாடு ஏற்படலாம் அது அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையலம் என்ற அச்சத்திலேயே இரசியா முன்கூட்டியே அங்கு தனது படையினரை அனுப்பியுள்ளது. ஆனால் ஈரானுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கான வழங்கற்பாதைக்கு சிரியாவில் அதற்க்கு ஆதரவானவர்கள் ஆட்சியில் இருப்பது அவசியம். சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மட்டுமல்ல இஸ்ரேல் கூட சிரியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. ஆச்சரியமளிக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து சிரியாவிற்கு இரசியா மூன்று பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் அமெரிக்கா 7.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் விற்றுள்ளது.
Friday, 11 September 2015
சீனாவின் இணையவெளித் திருட்டுக்கு அமெரிக்காவின் பதிலடி.
அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களைத் திருடிய சீன நிறுவனங்களுக்கும் தனியார்களுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்பு எப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைப் பொதி ஒன்றை உருவாக்குகின்றது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றது.
இணையவெளிப் பொருளாதாரத் திருட்டுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் அணுவலு இரகசியங்களில் இருந்து வலையங்களின் தேடுபொறிவரை பல வர்த்தக இரகசியங்களை அமெரிக்காவில் இருந்து சீனர்களால் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
சீனப் அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் தறுவாயில் இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது பிரச்சனைக்கு உரியதாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகின்றது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் அத்து மீறல்கள் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து தொடர்ச்சியாக இணைய வெளியூடாக அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா திருடுவதாக உறுதியாக நம்பும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது எனபதை சீன அதிபரின் பயணத்தின் முன்னர் செய்யபடவிருக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணையவெளித் திருட்டுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கும் தனது நிறைவேற்று ஆணையைப் பிறப்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் வழங்கும் நிறைவேற்று ஆணை ஒரு சட்டமாகும்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலர், சட்டமா அதிபருடனும் வெளியுறவுத் துறைச் செயலருடனும் கலந்து ஆலோசித்து பொருளாதாரத் தடைகளைச் செய்யலாம் என நிறைவேற்று ஆணை குறிப்பிடுகின்றது.
இந்த நிறைவேற்று ஆணையின் முதல் தண்டனையாக சீனாவின் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான பொருளாதாரத் தடையாக அமையப் போகின்றது என எதிர் பார்க்கப் படுகின்றது. அவர்களது சொத்துக்களை முடக்குதல் வியாபார நடவடிக்கைகளை இரத்துச் செய்தல், போன்றவை தண்டனைகளாக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இணைய வெளியூடாக அமெரிக்க இரகசியங்களைத் திருடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத தடை விதிப்பதுடன் அரசுறவியல் நடவடிக்கைகள், வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்றவையும் செய்யப்படலாம். அமெரிக்காவின் பெறுமதி மிக்க இரகசியங்களைத் திருடியவர்கள் தேச எல்லைகள் என்னும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து நின்று தப்ப முடியாது என்றார் பராக் ஒபாமா. மேலும் அவர் எமது தேசத்தின் சொத்துக்களை இணைய வெளியூடாகத் திருடுவுபவர்களுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றார்.
அமெரிக்க உளவுத் துறையினரின் கருத்துப்படி சீனா மட்டுமல்ல அமெரிக்க இரகசியங்களைத் திருடுவது. ஆனால் பெரும்பாலான திருட்டுக்கள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமெரிக்கா சீனப் படைத்துறை அதிகாரிகளின் மீது இணையவெளித் திருட்டுக்காக நிதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவின் Tianjin University இன் மூன்று பேராசிரியர்கள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு சீனாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பது பற்றியும் அமெரிக்காவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது தகவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக எட்வேர்ட் ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.
உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும்
சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது
நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், தரை, கடல், விண்வெளி ஆகியவற்றில் மட்டுமல்ல இணைய வெளியிலும் நடக்க விருக்கின்றது.
இணையவெளிப் பொருளாதாரத் திருட்டுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் அணுவலு இரகசியங்களில் இருந்து வலையங்களின் தேடுபொறிவரை பல வர்த்தக இரகசியங்களை அமெரிக்காவில் இருந்து சீனர்களால் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
சீனப் அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் தறுவாயில் இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது பிரச்சனைக்கு உரியதாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகின்றது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் அத்து மீறல்கள் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து தொடர்ச்சியாக இணைய வெளியூடாக அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா திருடுவதாக உறுதியாக நம்பும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது எனபதை சீன அதிபரின் பயணத்தின் முன்னர் செய்யபடவிருக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணையவெளித் திருட்டுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கும் தனது நிறைவேற்று ஆணையைப் பிறப்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் வழங்கும் நிறைவேற்று ஆணை ஒரு சட்டமாகும்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலர், சட்டமா அதிபருடனும் வெளியுறவுத் துறைச் செயலருடனும் கலந்து ஆலோசித்து பொருளாதாரத் தடைகளைச் செய்யலாம் என நிறைவேற்று ஆணை குறிப்பிடுகின்றது.
இந்த நிறைவேற்று ஆணையின் முதல் தண்டனையாக சீனாவின் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான பொருளாதாரத் தடையாக அமையப் போகின்றது என எதிர் பார்க்கப் படுகின்றது. அவர்களது சொத்துக்களை முடக்குதல் வியாபார நடவடிக்கைகளை இரத்துச் செய்தல், போன்றவை தண்டனைகளாக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இணைய வெளியூடாக அமெரிக்க இரகசியங்களைத் திருடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத தடை விதிப்பதுடன் அரசுறவியல் நடவடிக்கைகள், வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்றவையும் செய்யப்படலாம். அமெரிக்காவின் பெறுமதி மிக்க இரகசியங்களைத் திருடியவர்கள் தேச எல்லைகள் என்னும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து நின்று தப்ப முடியாது என்றார் பராக் ஒபாமா. மேலும் அவர் எமது தேசத்தின் சொத்துக்களை இணைய வெளியூடாகத் திருடுவுபவர்களுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றார்.
அமெரிக்க உளவுத் துறையினரின் கருத்துப்படி சீனா மட்டுமல்ல அமெரிக்க இரகசியங்களைத் திருடுவது. ஆனால் பெரும்பாலான திருட்டுக்கள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமெரிக்கா சீனப் படைத்துறை அதிகாரிகளின் மீது இணையவெளித் திருட்டுக்காக நிதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவின் Tianjin University இன் மூன்று பேராசிரியர்கள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு சீனாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பது பற்றியும் அமெரிக்காவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது தகவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக எட்வேர்ட் ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.
உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும்
சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது
நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், தரை, கடல், விண்வெளி ஆகியவற்றில் மட்டுமல்ல இணைய வெளியிலும் நடக்க விருக்கின்றது.
Monday, 7 September 2015
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா?
சீனாவின் பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அதன் நாணயத்தின் மதிப்பிழப்பும் சீனாவில் வேதியியல் பொருட்களின் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் சீனா உலகின் முதல் தர நாடாக உருவெடுக்குமா என்ற ஐயத்தை உருவாக்கியது. அத்துடன் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அடக்கப் பட முடியாத ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சீனா சோவியத் ஒன்றியம் போல் சரியப் போவதுமில்லை, ஜப்பானைப் போல் தொடர் பொருளாதார மந்த நிலையில் அமிழ்ந்திருக்கப் போவதுமில்லை. ஆனாலும் சீனாவின் புள்ளி விபரங்கள் மீதான நம்பகத் தன்மையின்மை அதன் பொருளாதாரத்தின் மீதும் படை வலு மீதும் நம்பகத் தன்மையின்மையை ஏற்படுத்துகின்றது.
பலர் ஏறிச் சறுக்கி விழுந்தனர்
1950களில் சோவியத் ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை மிஞ்சுவதுடன் அதை அடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சோவிய ஒன்றியம் இன்று இல்லை. அமெரிக்கா இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1980களில் ஜப்பான் அமெரிக்காவை வாங்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானியப் பொருளாதாரம் இன்று மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. 1990களில் யூரோ நாணயம் அமெரிக்க டொலரை ஓரம் கட்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று யூரோ நாணயம் பெரும் சிக்கலில் இருக்கின்றது. 2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது. இப்போது சீனா தவிக்கின்றது.
அமெரிக்காவிற்கு பொருளாதாரச் சவால்
அமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால் ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன. மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. அவை அமெரிக்காவை பகையாளி ஆக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கவே விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலாந்து சிறப்பான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அதற்கு அமெரிக்காவின் நட்பு அவசியம். பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன.
இரசியா:- கழுதை தொடர்ந்து தேய்கின்றது
இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறு அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 410 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை இரசியா அடைக்க வேண்டியுள்ளது. கடந்த மே மாதத்தின் பின்னர் இரசிய நாணயம் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன் பளு இரசிய நாணயமான ரூபிளில் பெரிதளவு அதிகரித்துள்ளது. இரசியாவை புட்டீன் தனது சோவியத் கால நண்பர்களை முன்னணிப் பதவியில் அமர்த்தி தனது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். இவர்கள் ஒரு மாஃபியாக் கும்பல் போல் செயற்படுகின்றார்கள். புட்டீனின் இந்த நட்பு வட்டத்தைக் குறிவைத்து அமேரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரமாக்கியுள்ளன. இரசியாவின் பல பிராந்தியங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான இரசியா துண்டாடப்படும் அபாயம் உண்டு.
செல்வந்தராக முன்னர் வயோதிபரான சீனா
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழை உழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளர வேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது.
இந்தியா:- மக்களைப் பெற்ற மகராசிக்கு வழிகாட்ட ஆளில்லை
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பல தாம் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறமுடியாத நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப் பட்ட வங்கிகளுக்கு உதவி செய்ய இந்திய மைய அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது. இந்திய வங்கிகள் தமது கடன்களில் 4.3 விழுக்காட்டை அறவிட முடியாமல் இருக்கின்றது இந்த அறவிட முடியாக் கடன் விழுக்காடு சீனாவில் 1.1ஆகவும் அமெரிக்காவில் இரண்டாகவும் இருக்கின்றது. வங்கிகள் கடன் வழங்க தயங்குவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.
சீனாவின் படைத்துறைச் சவால்
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
கடலாளும் அமெரிக்கா
அமெரிக்கக் கடற்படையினர் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை. 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது எனச் சொல்லலாம். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலை முறைகள் முன்னேறியவையாக இருக்கின்றன.
நிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனது கேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.
வலுவுள்ள எதிரியில்லை
1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபாவூடன் அமெரிக்கா தனது உறவைச் சீராக்கி வருகின்றது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை. இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.
பலர் ஏறிச் சறுக்கி விழுந்தனர்
1950களில் சோவியத் ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை மிஞ்சுவதுடன் அதை அடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சோவிய ஒன்றியம் இன்று இல்லை. அமெரிக்கா இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1980களில் ஜப்பான் அமெரிக்காவை வாங்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானியப் பொருளாதாரம் இன்று மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. 1990களில் யூரோ நாணயம் அமெரிக்க டொலரை ஓரம் கட்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று யூரோ நாணயம் பெரும் சிக்கலில் இருக்கின்றது. 2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது. இப்போது சீனா தவிக்கின்றது.
அமெரிக்காவிற்கு பொருளாதாரச் சவால்
அமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால் ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன. மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. அவை அமெரிக்காவை பகையாளி ஆக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கவே விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலாந்து சிறப்பான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அதற்கு அமெரிக்காவின் நட்பு அவசியம். பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன.
இரசியா:- கழுதை தொடர்ந்து தேய்கின்றது
இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறு அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 410 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை இரசியா அடைக்க வேண்டியுள்ளது. கடந்த மே மாதத்தின் பின்னர் இரசிய நாணயம் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன் பளு இரசிய நாணயமான ரூபிளில் பெரிதளவு அதிகரித்துள்ளது. இரசியாவை புட்டீன் தனது சோவியத் கால நண்பர்களை முன்னணிப் பதவியில் அமர்த்தி தனது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். இவர்கள் ஒரு மாஃபியாக் கும்பல் போல் செயற்படுகின்றார்கள். புட்டீனின் இந்த நட்பு வட்டத்தைக் குறிவைத்து அமேரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரமாக்கியுள்ளன. இரசியாவின் பல பிராந்தியங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான இரசியா துண்டாடப்படும் அபாயம் உண்டு.
செல்வந்தராக முன்னர் வயோதிபரான சீனா
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழை உழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளர வேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது.
இந்தியா:- மக்களைப் பெற்ற மகராசிக்கு வழிகாட்ட ஆளில்லை
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பல தாம் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறமுடியாத நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப் பட்ட வங்கிகளுக்கு உதவி செய்ய இந்திய மைய அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது. இந்திய வங்கிகள் தமது கடன்களில் 4.3 விழுக்காட்டை அறவிட முடியாமல் இருக்கின்றது இந்த அறவிட முடியாக் கடன் விழுக்காடு சீனாவில் 1.1ஆகவும் அமெரிக்காவில் இரண்டாகவும் இருக்கின்றது. வங்கிகள் கடன் வழங்க தயங்குவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.
சீனாவின் படைத்துறைச் சவால்
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
கடலாளும் அமெரிக்கா
அமெரிக்கக் கடற்படையினர் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை. 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது எனச் சொல்லலாம். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலை முறைகள் முன்னேறியவையாக இருக்கின்றன.
நிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனது கேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.
வலுவுள்ள எதிரியில்லை
1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபாவூடன் அமெரிக்கா தனது உறவைச் சீராக்கி வருகின்றது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை. இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...






