1996-ம் ஆண்டு ஒசாமா பின் லாடன் அமெரிக்காவிற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்த போது அது அமெரிக்காவில் நகைப்பிற்கு இடமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் மண்குடிசைகளுக்குள் வாழும் ஒரு கும்பல் ஒரு பெரும் வல்லரசின் மீது எப்படித் தாக்குதல் நடத்த முடியும் என்ற கேள்வி இருந்தது. பின்னர் நியூயோர்க், இலண்டன், நைரோபி, பாலி, மாலி, ரியாத், பெங்காசி எனப் பல இடங்களில் மேற்கு நாடுகளை இலக்கு வைத்து பல மோசமான தாக்குதல்களை அல் கெய்தா செய்தது. பல பில்லியன்கள் செலவழித்தும் அல் கெய்தாவை அழிக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் பல அல் கெய்தா மற்றும் தலிபான் போராளிகளைக் கொன்று வருகின்றது. அமெரிக்காவில் இருந்து செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகமும் இலண்டனில் இருந்து செயற்படும் பன்னாட்டு மன்னிப்புச் சபையும் அமெரிக்கா நீதிக்குப் புறம்பான முறையில் தனது ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் அப்பாவிகளைக் கொல்கின்றது என்று குற்றம் சாட்டியுள்ளன. இக்குற்றச் சாட்டை மறுத்த அமெரிக்க வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்னி தமது ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் இலக்குத் தப்பாதவை என்றும் சட்ட பூர்வமானவை என்றும் தெரிவித்தார்.
அல் கெய்தாப் போராளிகளின் மாலியில் உள்ள தளம் ஒன்றைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படையினர் அவர்களின் பத்திரங்களில் இருந்து போராளிகள் ஆளில்லாப் போர்விமானங்களில் இருந்து எப்படித் தப்புகிறார்கள் என்ற தகவல்கள் அறியப்பட்டுள்ளது. அவை:
1. “sky grabber” என்னும் இரசியாவில் உற்பத்தி செய்த கருவி மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் வருகையை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
2. இரசியாவில் உற்பத்தி செய்த “Racal” என்னும் கருவி மூலம் ஆளில்லாப் போர்விமானங்களின் அலை வரிசைகளைக் குழப்பலாம்.
3. போராளிகள் பயணிக்கும் வண்டிகள் தங்கியிருக்கும் வீடுகளின் கூரைகளில் கண்ணாடிகளைப் பொருத்துவதன் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து தப்பலாம்.
4. தாழப்பறக்கும் ஆளில்லாப் போர் விமானங்களை மறைந்திருது தாக்கலாம்.
5. சிறிய டைனமோக்களையும் முப்பது மீட்டர் செப்புத் தகட்டையும் பாவித்து ஆளில்லாப் போர் விமானங்களில் தேடிக் கண்டு பிடிக்கும் செயற்பாட்டைக்குழப்பலாம்.
6. மைக்குரோவேவ் போன்றவற்றை தொடர்ந்து நாள் முழுக்க செயற்படுத்துவதன் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் உணரிகளைக் குழப்பலாம்.
7. இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளல்
8. சரியான கண்காணிப்புக்கள் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் நடமாட்டங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ளல்
9. நடமாட்டங்களை முகில் கூட்டங்கள் அதிகம் உள்ள நாட்களில் மேற் கொள்ளல்.
10. உயர்ந்த மரங்கள் உள்ள இடங்களில் ஒளிந்து கொள்ளல்.
11. உயர் கட்டிடங்களின் நிழல்களில் இருத்தல்
12. எல்லா தொலை தொடர்புக் கருவிகளையும் நிறுத்தி வைத்தல்.
13. ஆளில்லாப் போர் விமானங்கள் வரும்போது வண்டிகளில் இருந்து வெளியேறி திசைக்கு ஒருவராகத் தப்பிச் செல்லல்.
14. பல உள்செல்லும் வழிகளும் வெளிச்செல்லும் வழிகளும் உள்ள கட்டிடங்களுள் ஒளித்தல்.
15. நிலத்திற்கு கீழ் உள்ள பதுங்கு குழிகளுக்குள் ஒளித்தல்.
16. முற்றாக இருட்டடிப்புச் செய்தல்
17. காட்டிக் கொடுப்போரையும் போட்டுக் கொடுப்போரையும் இனம் காணுதல்.
18. உருவப் பொம்மைகளைக் கொண்ட கூட்டத்தை அமைத்தல்.
19. குகைகளுக்குள் ஒளித்தல்
20. கார் டயர் போன்றவற்றை எரித்து புகை மண்டலத்தை உருவாக்குதல்
21. தொடர்பாடல்களைத் துண்டித்தல்
22. திறந்த வெளிகளில் கூடுவதைத் தவிர்த்தல்
Wednesday, 13 November 2013
Tuesday, 12 November 2013
எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறது!
1978-ம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் செய்மதி நாடாக இருந்த எகிப்து காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் பின்னர் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக மாறியது. 1978இல் இருந்து எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது.
2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார். அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை.
எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. அமெரிக்கா வழங்கும் நிதியுதவியில் பெரும்பகுதியை எகிப்து அமெரிக்காவில் இருந்து படைக்கலங்களை இறக்குமதி செய்யவே பயன்படுத்தி வந்தது. எகிப்தின் கல்வித்துறை, மருத்துவத்துறை, பயங்கரவாத ஒழிப்பு, படைகலன்களுக்கான உதிரிப்பாகங்கள், எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என அமெரிக்கா சொல்கிறது.
சவுதி அரேபியாவின் ஏற்பாடு
இஸ்ரேலிய அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் இரசிய கடற்படையின் சீர்வேக ஏவுகண தாங்கிக் கப்பலான வாரியக் எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தை 11-11-2013-ம் திகதி சென்றடைந்தது. அந்தக் கப்பல் எல்லாவித கடற்படை மரியாதையுடனும் வரவேற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசிய வெளிநாட்டமைச்சர் செர்கெவ் லாவ்ரோவும் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி சொய்குவும் (Foreign Minister Sergey Lavrov and Defense Minister Sergey Shoigu) 13-11-2013-ம் திகதி எகிப்திற்குப் பயணம் செய்கின்றனர். எகிப்து நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைக்கலங்களை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முயல்கிறது. எகிப்தின் அஸ்வான் அணைக்கட்டை மேம்படுத்தவும் மின் பிறப்பாக்கிகளை நிறுவவும் இரசியா உதவி செய்யும் பதிலாக எகிப்த்தின் மத்தியதரைக் கடல் துறைமுகம் ஒன்றை இரசியா பயன்படுத்த எகிப்து அனுமதி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் யாவற்றையும் செய்தது சவுதி அரேபியாவின் உளவுத் துறையின் இயக்குனரான இளவரசர் பந்தர் பின் சுல்தான் என்பதுதான் ஆத்திரமளிக்கும் விவகாரமாகும். இளவரசர் பந்தர் பின் சுல்தான் 2013 ஜூலை மாதம் இரசியாவிற்குப் பயணம் செய்த போது விளாடிமீர் புட்டீனுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாம்.
ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை இனி வரும் காலங்களில் எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடும். அதற்கு மத்திய கிழக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறதா அல்லது அமெரிக்கா, சவுதி அரேபியா, இரசியா ஆகியவை இணைந்து சீனாவை மத்தியகிழக்கில் ஓரம் கட்ட சதி செய்கின்றனவா?
2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார். அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை.
எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. அமெரிக்கா வழங்கும் நிதியுதவியில் பெரும்பகுதியை எகிப்து அமெரிக்காவில் இருந்து படைக்கலங்களை இறக்குமதி செய்யவே பயன்படுத்தி வந்தது. எகிப்தின் கல்வித்துறை, மருத்துவத்துறை, பயங்கரவாத ஒழிப்பு, படைகலன்களுக்கான உதிரிப்பாகங்கள், எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என அமெரிக்கா சொல்கிறது.
சவுதி அரேபியாவின் ஏற்பாடு
இஸ்ரேலிய அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் இரசிய கடற்படையின் சீர்வேக ஏவுகண தாங்கிக் கப்பலான வாரியக் எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தை 11-11-2013-ம் திகதி சென்றடைந்தது. அந்தக் கப்பல் எல்லாவித கடற்படை மரியாதையுடனும் வரவேற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசிய வெளிநாட்டமைச்சர் செர்கெவ் லாவ்ரோவும் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி சொய்குவும் (Foreign Minister Sergey Lavrov and Defense Minister Sergey Shoigu) 13-11-2013-ம் திகதி எகிப்திற்குப் பயணம் செய்கின்றனர். எகிப்து நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைக்கலங்களை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முயல்கிறது. எகிப்தின் அஸ்வான் அணைக்கட்டை மேம்படுத்தவும் மின் பிறப்பாக்கிகளை நிறுவவும் இரசியா உதவி செய்யும் பதிலாக எகிப்த்தின் மத்தியதரைக் கடல் துறைமுகம் ஒன்றை இரசியா பயன்படுத்த எகிப்து அனுமதி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் யாவற்றையும் செய்தது சவுதி அரேபியாவின் உளவுத் துறையின் இயக்குனரான இளவரசர் பந்தர் பின் சுல்தான் என்பதுதான் ஆத்திரமளிக்கும் விவகாரமாகும். இளவரசர் பந்தர் பின் சுல்தான் 2013 ஜூலை மாதம் இரசியாவிற்குப் பயணம் செய்த போது விளாடிமீர் புட்டீனுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாம்.
ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை இனி வரும் காலங்களில் எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடும். அதற்கு மத்திய கிழக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறதா அல்லது அமெரிக்கா, சவுதி அரேபியா, இரசியா ஆகியவை இணைந்து சீனாவை மத்தியகிழக்கில் ஓரம் கட்ட சதி செய்கின்றனவா?
Monday, 11 November 2013
மாறும் சீனப் பொருளாதாரம் தேறுமா?
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறவில்லை. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது.
ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization), பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
1979-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தத்தால் சீனப் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி கண்டு அறுபது கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் தனது வேகத்தை இழக்கும் என பல மேற்கத்தையப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல் இல்லாத படியால் சீனா இதில் உண்மை இருக்கிறது என உணர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தடையின்றித் தொடரச் செய்ய சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் அவசியம் என சீனப் பொதுவுடமைக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2013-11-09-ம் திகதி ஆரம்பமான சீனப் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்திருத்தப்படுவது இந்தக் கூட்டத் தொடரில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்படும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு ஆண்டு தோறும் கூட்டம் நடத்தும். இதில் மூன்றாம் ஆண்டு நடத்தப்படும் கூட்டத்தில் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப் படும். 1978-ம் ஆண்டில் நடந்த 11வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரிலேயே சீனப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனை அதிகரிப்பதற்கும் மேற்கு நாடுகளுடன் போட்டியிடுவதற்கும் சீனாவின் பொருளாதாரம் மேற்கத்தைய பொருளாதாரப் பாணியை நோக்கி மேலும் தாராண்மைப் படுத்தப் படவேண்டும் என்ற கருத்து இருநூற்று ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் முன்றாவது கூட்டத்தொடரின் முக்கிய அமசமாக இருக்கிறது. திறனற்ற பொருளாதாரம், வருமான சமபங்கீட்டின்மை, ஊழல், நில உடமைப் பிரச்சனை, மோசமான உள்ளூராட்சி நிர்வாகம் ஆகியவை சீனப் பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனையாகும். அத்துடன் ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரத்துக்குரிய வங்கி முறைமை, முதலீட்டுச் சந்தை ஆகியவை சீனாவில் இல்லை. இந்தப் பிரச்சனைகள் சீன ஆட்சியாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
சீனா இனிவரும் காலங்களில் செய்யவிருக்கும் மாறுதல்களும் செய்ய வேண்டிய மாறுதல்களும்:
அரசுடமையில் இருந்து தனியுடைமைக்கு மாறுதல்
சீனாவின் உற்பத்தித் துறையில் பெரும்பான்மையானவை தற்போதும் அரச கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அரசுடைமை நிறுவனங்களின் செயற்படு திறன் குறைந்தவையாக இருப்பதால் சீன வளங்களை பயன்படுத்தும் திறன் பல வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவாகவே இருக்கின்றன. இந்த இடைவெளியை சீர் செய்ய சீனா தனது பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவிருக்கிறது. பல அரசுடைமை நிறுவனங்கள் சீன பொதுவுடைமைக் கட்சியில் முக்கிய தலைவர்களின் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களின் எதிர்ப்பை சமாளித்தே தனியார் மயமாக்கலைச் செய்ய வேண்டிய நிலையில் சீனப் பொதுவுடமைக்கட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கின்றனர். சீனா பல வர்த்தக மற்றும் உற்பத்தித் துறையில் தனியார் முதலீட்டை 90விழுக்காடாக அதிகரிக்கும் திட்டத்துடன் இருக்கிறது. பல சேவைத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவிருக்கிறது.
கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல்
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
ஊழல் ஒழிப்பு
சீனாவில் ஊழல் பல நிலையிலும் பல தரப்பிலும் பரந்து காணப்படுகின்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் சீனாவில் ஊழலை ஒழிக்கும் திட்டத்தை ஏற்கனவே செயற்படுத்தத் தொடங்கிவிட்டார்.
வங்கித் துறைச் சீர்திருத்தம்
சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனுக்கு தடையாக இருப்பவற்றில் மோசமானது அதன் அரச வங்கிகளாகும். அரச வங்கிகள் அரச நிறுவங்களிற்கு மட்டும் கடன் வழங்குவது அவற்றிற்கு ஒரு பாதுகாப்பான நடவடிக்கைகளாகும். மேற்கு நாடுகள் போல் போட்டி அடிப்படையில் சிறந்த இலாபமீட்டும் உற்பத்தித் துறைக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தினால் சீனாவின் வளங்கள் சிறந்த முறையில் பயங்படுத்தப் படும். சீனாவின் வங்கி வட்டி வீதத்தையும் சீன நாணய மாற்று வீதத்தையும் சுதந்திரமாக தீர்மானிக்க சீன அரசு அனுமதிக்கும் திட்டமும் உள்ளது.
உலக நாணயமாக சீனாவின் நாணயம்
சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் போது அமெரிக்கப் பொருளாதாரத்திலோ அதன் நாணயமான டொலரிலோ ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க சீனா தனது நாணயமான யுவானை உலக நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு பத்தாண்டுத் திட்டம் சீனாவிடம் இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சீன வங்கித் துறையும் சீன நிதிச்சந்தையும் பெரும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உள்ளாக வேண்டும். இதுவரை காலமும் சீனா தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைந்து வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டு இருக்கின்றது. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாயின் அதன் பெறுமதியை உலக நாணயச் சந்தையில் சீன நாணயத்தை வாங்குவதற்கான விரும்பமும் விற்பதற்கான விருப்பமுமே தீர்மானிக்க வேண்டும். இதனால் சீன நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் சீனாவின் ஏற்றுமதிச் சந்தையை இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் கைப்பற்றலாம். இது சீனாவின் உற்பத்தித் துறையை பெரிதும் பாதிக்கலாம்.
திட்டமிடலால் திண்டாடும் மக்கள்
சீனாவில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. கிராமப் புறமக்கள் அங்கு கொண்டு சென்று குடியமர்த்தப்படுவார்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில் இவர்கள் தெருத் துப்பரவாக்கும் வேலைகள் நகரப் பூங்கா பராமரிப்புச் செய்யும் வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகுவதுண்டு. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய நகரங்களுக்கு சென்று விரும்பிய வேலை செய்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டிய நிலைமையும் சீனாவில் உண்டு. ஹுக்கௌ என்னும் பதிவு முறைமை மூலம் சீனா இந்த மக்கள் நகர்வுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதை மாற்றக்கூடிய திட்டம் சீனாவிற்கு அவசியம். சீன அரசு மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளின் காணிகளை கட்டாயப்படுத்தி வாங்கி வேறு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றமையும் சீனாவில் பரவலாக நடந்ததுண்டு.
மக்களின் கொள்வனவு வலு
சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏற்றுமதியிலும் உள் நாட்டில் பெருந்தெருக்கள், விமான நிலையங்கள் போன்ற கட்டுமான அபிவிருத்தியிலும் தங்கி இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் அதன் மக்களின் கொள்வனவு வலுவில்தான் பெரிதும் தங்கியிருக்கும். சீன மக்களின் வருமானம் அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை சீனா எடுக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நிலையில் சீனா தனது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்யும் முடிவை எடுக்கிறது. சீனப் பொதுவுடமைக் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி ஒக்டோபர் மாதம் முடிவடைந்த ஆண்டில் 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிகமாகும்.
சீனா வெறுமனவே பொருளாதாரத் சீர் திருத்தத்தை மட்டும் அறிமுகம் செய்து அதன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது அது அரசியல் சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டும் என சில மேற்கதைய அரசியல் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சீனாவின் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரில் அப்படி ஒரு திட்டம் முனவைக்கப்படவில்லை. இந்த மாற்றம் இன்றி தனது பொருளாதாரத்தை தேற்ற சீனாவால் முடியுமா?
ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization), பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
1979-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தத்தால் சீனப் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி கண்டு அறுபது கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் தனது வேகத்தை இழக்கும் என பல மேற்கத்தையப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல் இல்லாத படியால் சீனா இதில் உண்மை இருக்கிறது என உணர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தடையின்றித் தொடரச் செய்ய சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் அவசியம் என சீனப் பொதுவுடமைக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2013-11-09-ம் திகதி ஆரம்பமான சீனப் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்திருத்தப்படுவது இந்தக் கூட்டத் தொடரில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்படும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு ஆண்டு தோறும் கூட்டம் நடத்தும். இதில் மூன்றாம் ஆண்டு நடத்தப்படும் கூட்டத்தில் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப் படும். 1978-ம் ஆண்டில் நடந்த 11வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரிலேயே சீனப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனை அதிகரிப்பதற்கும் மேற்கு நாடுகளுடன் போட்டியிடுவதற்கும் சீனாவின் பொருளாதாரம் மேற்கத்தைய பொருளாதாரப் பாணியை நோக்கி மேலும் தாராண்மைப் படுத்தப் படவேண்டும் என்ற கருத்து இருநூற்று ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் முன்றாவது கூட்டத்தொடரின் முக்கிய அமசமாக இருக்கிறது. திறனற்ற பொருளாதாரம், வருமான சமபங்கீட்டின்மை, ஊழல், நில உடமைப் பிரச்சனை, மோசமான உள்ளூராட்சி நிர்வாகம் ஆகியவை சீனப் பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனையாகும். அத்துடன் ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரத்துக்குரிய வங்கி முறைமை, முதலீட்டுச் சந்தை ஆகியவை சீனாவில் இல்லை. இந்தப் பிரச்சனைகள் சீன ஆட்சியாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
சீனா இனிவரும் காலங்களில் செய்யவிருக்கும் மாறுதல்களும் செய்ய வேண்டிய மாறுதல்களும்:
அரசுடமையில் இருந்து தனியுடைமைக்கு மாறுதல்
சீனாவின் உற்பத்தித் துறையில் பெரும்பான்மையானவை தற்போதும் அரச கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அரசுடைமை நிறுவனங்களின் செயற்படு திறன் குறைந்தவையாக இருப்பதால் சீன வளங்களை பயன்படுத்தும் திறன் பல வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவாகவே இருக்கின்றன. இந்த இடைவெளியை சீர் செய்ய சீனா தனது பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவிருக்கிறது. பல அரசுடைமை நிறுவனங்கள் சீன பொதுவுடைமைக் கட்சியில் முக்கிய தலைவர்களின் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களின் எதிர்ப்பை சமாளித்தே தனியார் மயமாக்கலைச் செய்ய வேண்டிய நிலையில் சீனப் பொதுவுடமைக்கட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கின்றனர். சீனா பல வர்த்தக மற்றும் உற்பத்தித் துறையில் தனியார் முதலீட்டை 90விழுக்காடாக அதிகரிக்கும் திட்டத்துடன் இருக்கிறது. பல சேவைத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவிருக்கிறது.
கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல்
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
ஊழல் ஒழிப்பு
சீனாவில் ஊழல் பல நிலையிலும் பல தரப்பிலும் பரந்து காணப்படுகின்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் சீனாவில் ஊழலை ஒழிக்கும் திட்டத்தை ஏற்கனவே செயற்படுத்தத் தொடங்கிவிட்டார்.
வங்கித் துறைச் சீர்திருத்தம்
சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனுக்கு தடையாக இருப்பவற்றில் மோசமானது அதன் அரச வங்கிகளாகும். அரச வங்கிகள் அரச நிறுவங்களிற்கு மட்டும் கடன் வழங்குவது அவற்றிற்கு ஒரு பாதுகாப்பான நடவடிக்கைகளாகும். மேற்கு நாடுகள் போல் போட்டி அடிப்படையில் சிறந்த இலாபமீட்டும் உற்பத்தித் துறைக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தினால் சீனாவின் வளங்கள் சிறந்த முறையில் பயங்படுத்தப் படும். சீனாவின் வங்கி வட்டி வீதத்தையும் சீன நாணய மாற்று வீதத்தையும் சுதந்திரமாக தீர்மானிக்க சீன அரசு அனுமதிக்கும் திட்டமும் உள்ளது.
உலக நாணயமாக சீனாவின் நாணயம்
சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் போது அமெரிக்கப் பொருளாதாரத்திலோ அதன் நாணயமான டொலரிலோ ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க சீனா தனது நாணயமான யுவானை உலக நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு பத்தாண்டுத் திட்டம் சீனாவிடம் இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சீன வங்கித் துறையும் சீன நிதிச்சந்தையும் பெரும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உள்ளாக வேண்டும். இதுவரை காலமும் சீனா தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைந்து வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டு இருக்கின்றது. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாயின் அதன் பெறுமதியை உலக நாணயச் சந்தையில் சீன நாணயத்தை வாங்குவதற்கான விரும்பமும் விற்பதற்கான விருப்பமுமே தீர்மானிக்க வேண்டும். இதனால் சீன நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் சீனாவின் ஏற்றுமதிச் சந்தையை இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் கைப்பற்றலாம். இது சீனாவின் உற்பத்தித் துறையை பெரிதும் பாதிக்கலாம்.
திட்டமிடலால் திண்டாடும் மக்கள்
சீனாவில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. கிராமப் புறமக்கள் அங்கு கொண்டு சென்று குடியமர்த்தப்படுவார்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில் இவர்கள் தெருத் துப்பரவாக்கும் வேலைகள் நகரப் பூங்கா பராமரிப்புச் செய்யும் வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகுவதுண்டு. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய நகரங்களுக்கு சென்று விரும்பிய வேலை செய்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டிய நிலைமையும் சீனாவில் உண்டு. ஹுக்கௌ என்னும் பதிவு முறைமை மூலம் சீனா இந்த மக்கள் நகர்வுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதை மாற்றக்கூடிய திட்டம் சீனாவிற்கு அவசியம். சீன அரசு மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளின் காணிகளை கட்டாயப்படுத்தி வாங்கி வேறு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றமையும் சீனாவில் பரவலாக நடந்ததுண்டு.
மக்களின் கொள்வனவு வலு
சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏற்றுமதியிலும் உள் நாட்டில் பெருந்தெருக்கள், விமான நிலையங்கள் போன்ற கட்டுமான அபிவிருத்தியிலும் தங்கி இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் அதன் மக்களின் கொள்வனவு வலுவில்தான் பெரிதும் தங்கியிருக்கும். சீன மக்களின் வருமானம் அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை சீனா எடுக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நிலையில் சீனா தனது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்யும் முடிவை எடுக்கிறது. சீனப் பொதுவுடமைக் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி ஒக்டோபர் மாதம் முடிவடைந்த ஆண்டில் 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிகமாகும்.
சீனா வெறுமனவே பொருளாதாரத் சீர் திருத்தத்தை மட்டும் அறிமுகம் செய்து அதன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது அது அரசியல் சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டும் என சில மேற்கதைய அரசியல் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சீனாவின் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரில் அப்படி ஒரு திட்டம் முனவைக்கப்படவில்லை. இந்த மாற்றம் இன்றி தனது பொருளாதாரத்தை தேற்ற சீனாவால் முடியுமா?
Saturday, 9 November 2013
லிபியத் தலைநகர் திரிப்போலியில் கடும் சண்டை
நவம்பர் 7-ம் திகதி இரவு லிபியத் தலைநகர் திரிப்போலியில் இரு படைக்கலன் ஏந்திய குழுக்களுக்கிடையில் பெரும் மோதல் வெடித்தது. மும்மர் கடாஃபிக்குப் பின்ன்ர் லிபியாவில் பல படைக்கலன் ஏந்திய ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் செயற்படுகின்றன. லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை சென்ற மாதம் அல் கெய்தா ஆதரவுக் குழு ஒன்று இலகுவாகக் கடத்திச் சென்றமை லிபியாவின் திடமற்ற நிலையை எடுத்துக் காட்டியது.அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தலைமை அமைச்சர்கள் லிபியாவில் பதவியில் இருந்தனர்.
நவம்பர் 7-ம் திகதி இரவு மிஸ்ரட்டா பிராந்தியத்தில் செயற்படும் குழு ஒன்று திரிப்போலிக்குள் புகுந்து அங்கு செயற்படும் குழு மீது தாக்குதல் நடாத்தியது.
தமது தளபதி நூரி ஃபிரிவான் கொன்றமைக்குப் பழி தீர்ப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் வலிமைமிக்க படைக்கலன்கள் பாவிக்கப்பட்டன. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
லிபிய அரசு ஒரு தேசிய படையமைப்பை கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறது. லிபியாவின் எரி பொருள் வளம் நிறைந்த கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் லிபியாவில் Federal system என்னும் இணைப்பாட்சி முறைமையில் கீழ் தமக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமது பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யப் படுவதையும் அவர்கள் தடுத்துள்ளனர்.
லிபிய மக்கள் சிலர் திரிப்பொலியில் இந்த மோதலுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். “Tripoli without weaponry” படைக்கலன்களில்லா திரிப்போலி என்ற சுலோக அட்டையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மோதும் குழுக்களுக்கு மூன்று நாள் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்தனர். படைக்கலன்கள் ஏந்திய சிறு குழுக்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதை லிபிய மக்கள் பெரிதும் வெறுக்கின்றனர்.
கடாஃபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு லிபிய அரசு சம்பளம் வழங்கி வருகின்றது. இக்குழுக்கள் தமக்கென பிராந்தியங்க்களை வைத்துக் கொண்டு ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இவர்களை படைக்கலன்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு அரச படையில் இணையுமாறு லிபிய அரசு கேட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கான சம்பளங்கள் நிறுத்தப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.
கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
லிபியா ஒரு கட்டுபாட்டில் இல்லாத நாடாகிவிட்டது என்றார் இத்தாலிய வெளிநாட்டமைச்சர் எமா பொனினோ. ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் லிபியாவிற்கான தூதுவர்கள் மோதலை நிறுத்தும் படி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நாடுகள் லிபியாவில் அல் கெய்தாவின் கை ஓங்குமா என அஞ்சுகின்றன.
நவம்பர் 7-ம் திகதி இரவு மிஸ்ரட்டா பிராந்தியத்தில் செயற்படும் குழு ஒன்று திரிப்போலிக்குள் புகுந்து அங்கு செயற்படும் குழு மீது தாக்குதல் நடாத்தியது.
தமது தளபதி நூரி ஃபிரிவான் கொன்றமைக்குப் பழி தீர்ப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் வலிமைமிக்க படைக்கலன்கள் பாவிக்கப்பட்டன. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
லிபிய அரசு ஒரு தேசிய படையமைப்பை கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறது. லிபியாவின் எரி பொருள் வளம் நிறைந்த கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் லிபியாவில் Federal system என்னும் இணைப்பாட்சி முறைமையில் கீழ் தமக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமது பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யப் படுவதையும் அவர்கள் தடுத்துள்ளனர்.
லிபிய மக்கள் சிலர் திரிப்பொலியில் இந்த மோதலுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். “Tripoli without weaponry” படைக்கலன்களில்லா திரிப்போலி என்ற சுலோக அட்டையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மோதும் குழுக்களுக்கு மூன்று நாள் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்தனர். படைக்கலன்கள் ஏந்திய சிறு குழுக்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதை லிபிய மக்கள் பெரிதும் வெறுக்கின்றனர்.
கடாஃபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு லிபிய அரசு சம்பளம் வழங்கி வருகின்றது. இக்குழுக்கள் தமக்கென பிராந்தியங்க்களை வைத்துக் கொண்டு ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இவர்களை படைக்கலன்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு அரச படையில் இணையுமாறு லிபிய அரசு கேட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கான சம்பளங்கள் நிறுத்தப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.
கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
லிபியா ஒரு கட்டுபாட்டில் இல்லாத நாடாகிவிட்டது என்றார் இத்தாலிய வெளிநாட்டமைச்சர் எமா பொனினோ. ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் லிபியாவிற்கான தூதுவர்கள் மோதலை நிறுத்தும் படி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நாடுகள் லிபியாவில் அல் கெய்தாவின் கை ஓங்குமா என அஞ்சுகின்றன.
Friday, 8 November 2013
ஈரான் பேச்சு வார்த்தையும் கேள்விக் குறியாகிய இந்தியாவின் வல்லரசுக் கனவும்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த வரை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையுடனும் வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்துடனும் வல்லரசு நாடுகளாக இருக்கின்றன. ஐநாவை சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இதில் மேலும் ஒரு நாட்டை அல்லது ஒரு சில நாடுகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் பரவலான கருத்துக்களும் இருக்கின்றன.
இந்தியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் தாமும் வல்லரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றன. இவற்றில் மக்கள் தொகை அடிப்படையிலும் படைவலு அடிப்படையிலும் இந்தியா முன்னுரிமை பெறுகின்றது. ஐநாவிற்கான நிதிப் பங்களிப்பு அடிப்படையிலும் பொருளாதார வலு அடிப்படையிலும் ஜப்பானும் ஜேர்மனியும் முன்னுரிமை பெறுகின்றன. பிராந்திய அடிப்படையில் வட அமெரிக்க நாடான ஐக்கிய அமெரிக்காவும், கிழக்கு ஐரோப்பிய நாடான இரசியாவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஐக்கிய இராச்சியமும், பிரான்ஸும், ஆசிய நாடான சீனாவும் தற்போது வல்லரசாக இருப்பதால் ஆபிரிக்க நாடான தென் ஆபிரிக்கா முன்னுரிமை பெறுகின்றது. மைய அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் தான் பிரதிநிதுத்துவப் படுத்துவதாக பிரேசில் சொல்கின்றது.
ஜப்பானும் ஜேர்மனியும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றன. பன்னாட்டு மட்டத்தில் இவை ஒத்த கருத்துக்களுடன் செயற்படுகின்றன. நேட்டோ நாடுகள் பிரேசில் வல்லரசாவதற்கு தம்முடன் பிரேசில் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டன. முக்கியமாக ஆபிரிக்கக் கண்டத்தில் பிரேசிலின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்கின்றன. அதற்கு இணங்க பிரேசில் பல ஆபிரிக்க நாடுகளுக்கு தான் வழங்கிய கடன்களை தனக்கு மீளச் செலுத்தத் தேவையில்லை என சொல்லி விட்டது.
இந்தியா இரசியாவுடன் நெருங்கிய நட்புடன் செயற்படுகின்றது. தனக்கு வேண்டிய நேரத்தில் இரசியா மூலம் ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா மூலம் தனக்கு வேண்டப்படாத தீர்மானங்கள் வரும்போது அதை இரத்துச் செய்யலாம் என்பதால் இந்தியா இந்த நட்பைப் பேணுகின்றது. இந்த மாதிரி ஒரு நிபந்தனையற்ற ஏற்பாட்டை இந்தியாவால் ஐக்கிய அமெரிக்காவுடனோ, பிரித்தானியாவுடனோ அல்லது பிரான்ஸுடனோ செய்து கொள்ள முடியாது. இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று வல்லரசாக சீனாவின் அனுமதி அவசியம். இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் தீர்மானத்தை சீனாவால் இரத்துச் செய்ய முடியும்.
தற்போது ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாகவும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் P5+1 என்னும் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐநா நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளும் அத்துடன் ஜேர்மனியும் இருக்கின்றன.
ஈரானுடனான பேச்சு வார்த்தைகளில் ஏன் இந்தியா ஈடுபடுத்தப்படவில்லை? நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்த்தான், ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பது போன்றவற்றில் இந்தியாவின் பங்களிப்பை வேண்டின. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு அவை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆப்கானிஸ்த்தானில் சில பிரதேசங்களில் கனிம வளங்களைச் சுரண்டும் உரிமை சீனாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவைச் சுற்ற வர உள்ள நாடுகளில் இந்தியாவின் ஆதிக்கம் படு மோசமாகி விட்டது.
தற்போது உலக அரங்கில் காத்திரமான பங்கு வகிக்கக் கூடியவையாக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையே இருக்கின்றன. இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியா போகாவிட்டால் அது இந்தியாவின் பாது காப்புக்கு அச்சம் என்ற கருத்து இந்தியப் பாதுகாப்புத் துறையிடம் இருக்கின்றது. இந்தியா என்ன வல்லரசா அல்லது சந்தானம் சொல்லியது போல் "டல்" அரசா? வல்லரசாவதற்கு தீயாக வேலை செய்யணும் இந்தியாவே!
Thursday, 7 November 2013
பொதுநலவாய(காமன்வெல்த்) மாநாட்டால் தமிழர்கள் நன்மை பெற முடியுமா?
தமிழர்கள் இனக்கொலையாளி எனக் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்ச இனி இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியில் இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் படைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின்படி போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைத்தமைக்கான காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரைப் பொதுநலவாய மாநட்டுக்குத் தலைவராக்கும் தவறு 2011-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவில் இழைக்கபப்ட்டது. பின்னர் இந்தத் தவறை கனடா பலதடவை சுட்டிக்காட்டியும் பயனற்றுப் போய் விட்டது. மனித உரிமை மீறியவர்களை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேற்றத் தொடங்கினால் கடைசில் ஒரு நாடும் அதில் எஞ்சமாட்டாது என்பதைப் பிரித்தானியா நன்கு அறியும்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதால் சில நன்மைகள் எமக்கு ஏற்பட்டு விட்டன.
தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் பின்னடைவாக இருந்தவை பல நாடுகளின் இலங்கை தொடர்பான அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை. முதன் முதலாக கனடா இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டது. இதை எமக்குச் சாதகமாக திருப்ப வேண்டிய பொறுப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களினுடையது.
மீண்டும் ஒரு முறை இலங்கை அரசின் போர் அத்து மீறல்கள் மீது உலகத்தின் கவனம் குவியப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது அதற்குப் பாராட்டுத் தெரிவுக்கும் முகமாக இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கு பெற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் இந்தியா தலைமையில் பல நாடுகள் ஜெனிவாவில் கூறின. இப்போது அப்படி ஒரு வாசகத்தைச் சொல்லும் துணிவு யாருக்காவது இருக்கிறதா? இப்படி நிலைமை மாறி இருப்பது எமக்கு வெற்றி எனக் கருத முடியும்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒரு அரசியல் விமர்சகர் இலங்கையில் பொதுநலவாய மாநாடுகள் நடப்பது பொதுநலவாய மாநாடுகள் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பிரித்தானியாவின் கேவலமான முகம் எமக்குப் புரிகிறது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது வர்த்தக நலன்களை எப்போதும் முன்னிறுத்துவார்கள் என்பது எமக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதுபற்றி இந்த இணைப்பில் பார்க்கவும்: Car imports. சில "டீல்களின்" பின்னர் ஆளும் கட்சிக்கு வர்த்தகர்கள் நன்கொடையளிப்பார்கள். ஜேர்மன் வர்த்தகர்கள் கூட பிரித்தானிய அரசியல் கட்சிக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ நன்கொடைகள் வழங்கலாம்.
தமிழர்களைப் பொறுத்தவரை "மறப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்துவது எம் கடமை" என்பது அவசியம் கடைப்பிடிக்கப்ப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பது எமது மக்களுக்கு தமது கடமைகளை நினைவு படுத்த உதவும். தமிழ்நாடு மீண்டும் உணர்வு மயமாகின்றது.
இந்துப் பத்திரிகையின் திருகு தாளத்தை நாம் மீண்டும் உணர்கின்றோம். கமலேஸ் ஷர்மா, சுப்பிரமணிய சுவாமி, சோ ராமசாமி போன்ற கேடு கெட்ட பூனூல் கும்பல்களின் தமிழின விரோதத்தை மீண்டும் உணர்கின்றோம். கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதா ஒரு புறம் தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் போட்டுவிட்டு மறுபுறம் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவரது இரட்டை வேடத்தை அறிகின்றோம்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் பங்குபற்றலாம் என இந்தியக் காங்கிரசுக் கட்சியின் மையக் குழு முடிவெடுத்ததும் அதற்கு எதிராக கருணாநிதி அறிக்கை விட்டார். உடனே நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஓடி வந்து கருணாநிதியைச் ச்ந்தித்தார். அவர்கள் இப்போதும் கூட்டணியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம். ஜி. கே வாசன் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கும் நாடகம் சோனியாவின் ஆசியுடன் இனி நடக்கலாம் என்பதையும் உண்ர்ந்து கொண்டோம். காங்கிரசுத் தலைமைப் பீடத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தோற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மன்மோஹன் சிங்க் போவதால் ஒன்றும் புதிதாக இழப்பு தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை இருக்கப் போவதில்லை. எப்படியிம் தமிழ்நாட்டில் வெல்லும் கட்சிகள் அமைச்சுப் பதவிக்காக காங்கிரசு ஆட்சியமைத்தால் அதில் சேர தேடிச் செல்வார்கள்.
இந்திய மைய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்ச்சிக்காக மாற்றப்பட முடியாது என்று இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக வாதாடப்படுகின்றது. இதனால் சில தமிழர்களாவது தமக்கென ஒரு "வெளிநாட்டுக் கொள்கை" இருந்தால் இப்படி நடக்குமா எனச் சிந்திக்கின்றார்கள்.
வட இந்தியாவில் தோற்கின்றோம்
உலகெங்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பரப்புரையில் முன்னேற்றம் கண்டுக் கொண்டிருக்கும் நாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரம் வட இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக நடப்பதைத் தடுக்க முடியாமல் இருக்கின்றோம். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா பங்கு பெறாவிடில் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் என்ற பொய்ப்பரப்புரை வட இந்திய ஊடகங்களில் நிறையச் செய்யப்படுகின்றது. பொதுவாக விவாதம் என்றால் வெள்த்து வாங்கும் திராவிடக் கட்சியினர் வட இந்திய ஊடகங்களில் சோபிக்கவில்லை. செய்யப்படுகின்றது. சுப்பிரமணிய சுவாமி இவர்களை பல விவாதங்களில் முட்டாளாக்கி விருகின்றார். யாருக்கும் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் இரத்தத்தால் தமிழர்கள் அல்லர் எனச் சொல்லும் திராணி இல்லை. ஜகத் கஸ்பர் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சுப்பிர மணிய சுவாமியை பிய்த்து உதறினார். பொதுவாக தொலக்காட்சி விவாதங்களில் சுவாமியின் விவாதத்திற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் போது ஒரு வகை நையாண்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஜெகத் கஸ்பர் பதிலடி கொடுக்கும் போது திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். ஜெகத் கஸ்பர் திசைமாறிப்போனது இழப்புத்தான். சுப்பிரமணிய சுவாமிக்கு வடமாகாண முதலமைச்சர் போடும் மொக்கைகள் சிறந்த விவாதப் படைகலன்களாகின. அவற்றைப் பொய் என ஆணித்தரமாக மறுத்தார் கஸ்பர்.
No Extra Diplomatic Immunity - மேலதிக இராச தந்திரப் பாதுகாப்பு இல்லை
மஹிந்த பொதுநலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதால் அவருக்கு ஒரு இராசததிரப் பாதுகாப்புக் கவசம் கிடைக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே ஒரு அரசுத்தலைவர் என்ற வகையில் அவருக்கு இருக்கும் இராசததிரப் பாதுகாப்புக் கவசத்தை விட மேலதிகமாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பன்னாட்டு அமைப்பின் தலைவர் என்றவகையில் இலங்கையில் அரது அரசும் படையினரும் செய்யும் அட்டூழியங்கள் அதிக கவனத்தை ஈர்க்கப் போகின்றது. அவர்து பொறுப்புக் கூறும் கடமை அதிகரிக்கப் போகின்றது. இனி வரும் காலங்களில் அவரது ஊடக மாநாடுகள் அவருக்கு மிகவும் சோதனை மிகுந்தாதாக அமையும். அவரின் நீண்ட காலக் கனவான இலண்டனில் ஒரு மாநாட்ட்டில் அல்லது கூட்டதில் உரையாற்றும் கனவை கமலேஸ் ஷர்மா மீண்டும் நிறைவேற்ற முயலலாம். ஐரோப்பியா வாழ் தமிழர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
எமது நீண்டி தூரப் பயணத்தில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பின் மாநாடும் மஹிந்த அதற்கு ஏற்கும் தலைமைப் பொறுப்பும் எமக்கு ஒரு சாதகமான நிகழ்வுகளாக எம்மால் மாற்ற முடியும்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதால் சில நன்மைகள் எமக்கு ஏற்பட்டு விட்டன.
தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் பின்னடைவாக இருந்தவை பல நாடுகளின் இலங்கை தொடர்பான அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை. முதன் முதலாக கனடா இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டது. இதை எமக்குச் சாதகமாக திருப்ப வேண்டிய பொறுப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களினுடையது.
மீண்டும் ஒரு முறை இலங்கை அரசின் போர் அத்து மீறல்கள் மீது உலகத்தின் கவனம் குவியப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது அதற்குப் பாராட்டுத் தெரிவுக்கும் முகமாக இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கு பெற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் இந்தியா தலைமையில் பல நாடுகள் ஜெனிவாவில் கூறின. இப்போது அப்படி ஒரு வாசகத்தைச் சொல்லும் துணிவு யாருக்காவது இருக்கிறதா? இப்படி நிலைமை மாறி இருப்பது எமக்கு வெற்றி எனக் கருத முடியும்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒரு அரசியல் விமர்சகர் இலங்கையில் பொதுநலவாய மாநாடுகள் நடப்பது பொதுநலவாய மாநாடுகள் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பிரித்தானியாவின் கேவலமான முகம் எமக்குப் புரிகிறது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது வர்த்தக நலன்களை எப்போதும் முன்னிறுத்துவார்கள் என்பது எமக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதுபற்றி இந்த இணைப்பில் பார்க்கவும்: Car imports. சில "டீல்களின்" பின்னர் ஆளும் கட்சிக்கு வர்த்தகர்கள் நன்கொடையளிப்பார்கள். ஜேர்மன் வர்த்தகர்கள் கூட பிரித்தானிய அரசியல் கட்சிக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ நன்கொடைகள் வழங்கலாம்.
தமிழர்களைப் பொறுத்தவரை "மறப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்துவது எம் கடமை" என்பது அவசியம் கடைப்பிடிக்கப்ப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பது எமது மக்களுக்கு தமது கடமைகளை நினைவு படுத்த உதவும். தமிழ்நாடு மீண்டும் உணர்வு மயமாகின்றது.
இந்துப் பத்திரிகையின் திருகு தாளத்தை நாம் மீண்டும் உணர்கின்றோம். கமலேஸ் ஷர்மா, சுப்பிரமணிய சுவாமி, சோ ராமசாமி போன்ற கேடு கெட்ட பூனூல் கும்பல்களின் தமிழின விரோதத்தை மீண்டும் உணர்கின்றோம். கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதா ஒரு புறம் தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் போட்டுவிட்டு மறுபுறம் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவரது இரட்டை வேடத்தை அறிகின்றோம்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் பங்குபற்றலாம் என இந்தியக் காங்கிரசுக் கட்சியின் மையக் குழு முடிவெடுத்ததும் அதற்கு எதிராக கருணாநிதி அறிக்கை விட்டார். உடனே நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஓடி வந்து கருணாநிதியைச் ச்ந்தித்தார். அவர்கள் இப்போதும் கூட்டணியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம். ஜி. கே வாசன் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கும் நாடகம் சோனியாவின் ஆசியுடன் இனி நடக்கலாம் என்பதையும் உண்ர்ந்து கொண்டோம். காங்கிரசுத் தலைமைப் பீடத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தோற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மன்மோஹன் சிங்க் போவதால் ஒன்றும் புதிதாக இழப்பு தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை இருக்கப் போவதில்லை. எப்படியிம் தமிழ்நாட்டில் வெல்லும் கட்சிகள் அமைச்சுப் பதவிக்காக காங்கிரசு ஆட்சியமைத்தால் அதில் சேர தேடிச் செல்வார்கள்.
இந்திய மைய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்ச்சிக்காக மாற்றப்பட முடியாது என்று இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக வாதாடப்படுகின்றது. இதனால் சில தமிழர்களாவது தமக்கென ஒரு "வெளிநாட்டுக் கொள்கை" இருந்தால் இப்படி நடக்குமா எனச் சிந்திக்கின்றார்கள்.
வட இந்தியாவில் தோற்கின்றோம்
உலகெங்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பரப்புரையில் முன்னேற்றம் கண்டுக் கொண்டிருக்கும் நாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரம் வட இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக நடப்பதைத் தடுக்க முடியாமல் இருக்கின்றோம். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா பங்கு பெறாவிடில் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் என்ற பொய்ப்பரப்புரை வட இந்திய ஊடகங்களில் நிறையச் செய்யப்படுகின்றது. பொதுவாக விவாதம் என்றால் வெள்த்து வாங்கும் திராவிடக் கட்சியினர் வட இந்திய ஊடகங்களில் சோபிக்கவில்லை. செய்யப்படுகின்றது. சுப்பிரமணிய சுவாமி இவர்களை பல விவாதங்களில் முட்டாளாக்கி விருகின்றார். யாருக்கும் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் இரத்தத்தால் தமிழர்கள் அல்லர் எனச் சொல்லும் திராணி இல்லை. ஜகத் கஸ்பர் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சுப்பிர மணிய சுவாமியை பிய்த்து உதறினார். பொதுவாக தொலக்காட்சி விவாதங்களில் சுவாமியின் விவாதத்திற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் போது ஒரு வகை நையாண்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஜெகத் கஸ்பர் பதிலடி கொடுக்கும் போது திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். ஜெகத் கஸ்பர் திசைமாறிப்போனது இழப்புத்தான். சுப்பிரமணிய சுவாமிக்கு வடமாகாண முதலமைச்சர் போடும் மொக்கைகள் சிறந்த விவாதப் படைகலன்களாகின. அவற்றைப் பொய் என ஆணித்தரமாக மறுத்தார் கஸ்பர்.
No Extra Diplomatic Immunity - மேலதிக இராச தந்திரப் பாதுகாப்பு இல்லை
மஹிந்த பொதுநலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதால் அவருக்கு ஒரு இராசததிரப் பாதுகாப்புக் கவசம் கிடைக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே ஒரு அரசுத்தலைவர் என்ற வகையில் அவருக்கு இருக்கும் இராசததிரப் பாதுகாப்புக் கவசத்தை விட மேலதிகமாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பன்னாட்டு அமைப்பின் தலைவர் என்றவகையில் இலங்கையில் அரது அரசும் படையினரும் செய்யும் அட்டூழியங்கள் அதிக கவனத்தை ஈர்க்கப் போகின்றது. அவர்து பொறுப்புக் கூறும் கடமை அதிகரிக்கப் போகின்றது. இனி வரும் காலங்களில் அவரது ஊடக மாநாடுகள் அவருக்கு மிகவும் சோதனை மிகுந்தாதாக அமையும். அவரின் நீண்ட காலக் கனவான இலண்டனில் ஒரு மாநாட்ட்டில் அல்லது கூட்டதில் உரையாற்றும் கனவை கமலேஸ் ஷர்மா மீண்டும் நிறைவேற்ற முயலலாம். ஐரோப்பியா வாழ் தமிழர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
எமது நீண்டி தூரப் பயணத்தில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பின் மாநாடும் மஹிந்த அதற்கு ஏற்கும் தலைமைப் பொறுப்பும் எமக்கு ஒரு சாதகமான நிகழ்வுகளாக எம்மால் மாற்ற முடியும்.
Tuesday, 5 November 2013
எகிப்திய நீதிமன்றில் மொஹமட் மேர்சி
எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமட் மேர்சியும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த 14பேரும் எகிப்தின் தற்போதைய படைத்துறை ஆட்சியாளர்களால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நீதி மன்றத்திற்கு வந்த மேர்சி தானே எகிப்தின் சட்டபூர்வ அதிபர் என்றார்.
எகிப்திய நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். ஆனால் மேர்சி அப்படிச் செய்ய மறுத்து நீல நிற சூட்டில் நிதிமன்றத்திற்கு வந்தார். காவற்துறையினர் மேர்சியைக் குற்றவாளிகளுக்குரிய வெள்ளை ஆடை அணிய வேண்டும் என்றார்.
நீதிபதி மேர்சியை அவரை அறிமுகப்படுத்தும் படி கேட்டபோது "நான் கலாநிதி மொஹமட் மேரி எகிப்தியக் குடியரசின் அதிபர். என்னை விசாரிக்க உங்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை." என்றார். பின்னர் நீதிபதியைப் பேச விடாமல் மேர்சி தானே எகிப்தின் அதிபர் என உரத்துக் கூறிக் கொண்டிருந்தார். நீதிமன்றம் இடைவேளை விட்டுப் பின்னர் கூடியது.மேர்சியுடன் இணைந்து மற்றப் 14 பேரும் நீதிமன்றத்தில் உரக்கச் சத்தமிட்டனர். இதனால் நிதிபதி விசாரணையை 2014 ஜனவரி 8-ம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது மேர்சியை தூக்கிலிட வேண்டும் என ஒரு பெண் ஊடகவியலாளர் உரத்துக் கத்தியதால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. மேர்சியின் ஆதரவாளரகளும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்தினர். மேர்சியின் ஆட்சியின்போது அவர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களும் மேர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எகிப்தியப் படைத்துறையினர் ஆட்சியின் கீழ் மேர்சிக்கு ஆயுள் தண்டனையோ அல்லது இறப்புத் தண்டனையோ வழங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
நான்கு மாதங்களாக சிறையில் இருக்கும் மேர்சி அவரது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டு தடவை மட்டும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டார்.
எகிப்திய நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். ஆனால் மேர்சி அப்படிச் செய்ய மறுத்து நீல நிற சூட்டில் நிதிமன்றத்திற்கு வந்தார். காவற்துறையினர் மேர்சியைக் குற்றவாளிகளுக்குரிய வெள்ளை ஆடை அணிய வேண்டும் என்றார்.
நீதிபதி மேர்சியை அவரை அறிமுகப்படுத்தும் படி கேட்டபோது "நான் கலாநிதி மொஹமட் மேரி எகிப்தியக் குடியரசின் அதிபர். என்னை விசாரிக்க உங்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை." என்றார். பின்னர் நீதிபதியைப் பேச விடாமல் மேர்சி தானே எகிப்தின் அதிபர் என உரத்துக் கூறிக் கொண்டிருந்தார். நீதிமன்றம் இடைவேளை விட்டுப் பின்னர் கூடியது.மேர்சியுடன் இணைந்து மற்றப் 14 பேரும் நீதிமன்றத்தில் உரக்கச் சத்தமிட்டனர். இதனால் நிதிபதி விசாரணையை 2014 ஜனவரி 8-ம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது மேர்சியை தூக்கிலிட வேண்டும் என ஒரு பெண் ஊடகவியலாளர் உரத்துக் கத்தியதால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. மேர்சியின் ஆதரவாளரகளும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்தினர். மேர்சியின் ஆட்சியின்போது அவர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களும் மேர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எகிப்தியப் படைத்துறையினர் ஆட்சியின் கீழ் மேர்சிக்கு ஆயுள் தண்டனையோ அல்லது இறப்புத் தண்டனையோ வழங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
நான்கு மாதங்களாக சிறையில் இருக்கும் மேர்சி அவரது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டு தடவை மட்டும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டார்.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...





