Thursday 7 November 2013

பொதுநலவாய(காமன்வெல்த்) மாநாட்டால் தமிழர்கள் நன்மை பெற முடியுமா?

தமிழர்கள் இனக்கொலையாளி எனக் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்ச இனி இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியில் இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் படைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின்படி போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைத்தமைக்கான காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரைப் பொதுநலவாய மாநட்டுக்குத் தலைவராக்கும் தவறு 2011-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவில் இழைக்கபப்ட்டது. பின்னர் இந்தத் தவறை கனடா பலதடவை சுட்டிக்காட்டியும் பயனற்றுப் போய் விட்டது. மனித உரிமை மீறியவர்களை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேற்றத் தொடங்கினால் கடைசில் ஒரு நாடும் அதில் எஞ்சமாட்டாது என்பதைப் பிரித்தானியா நன்கு அறியும்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதால் சில நன்மைகள் எமக்கு ஏற்பட்டு விட்டன.

தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் பின்னடைவாக இருந்தவை பல நாடுகளின் இலங்கை தொடர்பான அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை. முதன் முதலாக கனடா இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டது. இதை எமக்குச் சாதகமாக திருப்ப வேண்டிய பொறுப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களினுடையது.

மீண்டும் ஒரு முறை இலங்கை அரசின் போர் அத்து மீறல்கள் மீது உலகத்தின் கவனம் குவியப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது அதற்குப் பாராட்டுத் தெரிவுக்கும் முகமாக இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கு பெற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் இந்தியா தலைமையில் பல நாடுகள் ஜெனிவாவில் கூறின. இப்போது அப்படி ஒரு வாசகத்தைச் சொல்லும் துணிவு யாருக்காவது இருக்கிறதா? இப்படி நிலைமை மாறி இருப்பது எமக்கு வெற்றி எனக் கருத முடியும்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒரு அரசியல் விமர்சகர் இலங்கையில் பொதுநலவாய மாநாடுகள் நடப்பது பொதுநலவாய மாநாடுகள் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரித்தானியாவின் கேவலமான முகம் எமக்குப் புரிகிறது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது வர்த்தக நலன்களை எப்போதும் முன்னிறுத்துவார்கள் என்பது எமக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதுபற்றி இந்த இணைப்பில் பார்க்கவும்: Car imports. சில "டீல்களின்" பின்னர் ஆளும் கட்சிக்கு வர்த்தகர்கள் நன்கொடையளிப்பார்கள்.  ஜேர்மன் வர்த்தகர்கள் கூட பிரித்தானிய அரசியல் கட்சிக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ நன்கொடைகள் வழங்கலாம்.

தமிழர்களைப்  பொறுத்தவரை "மறப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்துவது எம் கடமை" என்பது அவசியம் கடைப்பிடிக்கப்ப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பது எமது மக்களுக்கு தமது கடமைகளை நினைவு படுத்த உதவும். தமிழ்நாடு மீண்டும் உணர்வு மயமாகின்றது.

இந்துப் பத்திரிகையின் திருகு தாளத்தை நாம் மீண்டும் உணர்கின்றோம். கமலேஸ் ஷர்மா, சுப்பிரமணிய சுவாமி, சோ ராமசாமி போன்ற கேடு கெட்ட பூனூல் கும்பல்களின் தமிழின விரோதத்தை மீண்டும் உணர்கின்றோம். கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதா ஒரு புறம் தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் போட்டுவிட்டு மறுபுறம் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவரது இரட்டை வேடத்தை அறிகின்றோம். 

பொதுநலவாய மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் பங்குபற்றலாம் என இந்தியக் காங்கிரசுக் கட்சியின் மையக் குழு முடிவெடுத்ததும் அதற்கு எதிராக கருணாநிதி அறிக்கை விட்டார். உடனே நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஓடி வந்து கருணாநிதியைச் ச்ந்தித்தார். அவர்கள் இப்போதும் கூட்டணியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம். ஜி. கே வாசன் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கும் நாடகம் சோனியாவின் ஆசியுடன் இனி நடக்கலாம் என்பதையும் உண்ர்ந்து கொண்டோம். காங்கிரசுத் தலைமைப் பீடத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தோற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மன்மோஹன் சிங்க் போவதால் ஒன்றும் புதிதாக இழப்பு தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை இருக்கப் போவதில்லை. எப்படியிம் தமிழ்நாட்டில் வெல்லும் கட்சிகள் அமைச்சுப் பதவிக்காக காங்கிரசு ஆட்சியமைத்தால் அதில் சேர தேடிச் செல்வார்கள். 

இந்திய மைய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்ச்சிக்காக  மாற்றப்பட முடியாது என்று இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக வாதாடப்படுகின்றது. இதனால் சில தமிழர்களாவது தமக்கென ஒரு "வெளிநாட்டுக் கொள்கை" இருந்தால் இப்படி நடக்குமா எனச் சிந்திக்கின்றார்கள்.

வட இந்தியாவில் தோற்கின்றோம்
உலகெங்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பரப்புரையில் முன்னேற்றம் கண்டுக் கொண்டிருக்கும் நாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரம் வட இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக நடப்பதைத் தடுக்க முடியாமல் இருக்கின்றோம். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா பங்கு பெறாவிடில் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் என்ற  பொய்ப்பரப்புரை வட இந்திய ஊடகங்களில் நிறையச் செய்யப்படுகின்றது.  பொதுவாக விவாதம் என்றால் வெள்த்து வாங்கும் திராவிடக் கட்சியினர் வட இந்திய ஊடகங்களில் சோபிக்கவில்லை. செய்யப்படுகின்றது. சுப்பிரமணிய சுவாமி இவர்களை பல விவாதங்களில் முட்டாளாக்கி விருகின்றார். யாருக்கும் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் இரத்தத்தால்  தமிழர்கள் அல்லர் எனச் சொல்லும் திராணி இல்லை. ஜகத் கஸ்பர் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சுப்பிர மணிய சுவாமியை பிய்த்து உதறினார். பொதுவாக தொலக்காட்சி விவாதங்களில் சுவாமியின் விவாதத்திற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் போது ஒரு வகை நையாண்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஜெகத் கஸ்பர் பதிலடி கொடுக்கும் போது திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். ஜெகத் கஸ்பர் திசைமாறிப்போனது இழப்புத்தான். சுப்பிரமணிய சுவாமிக்கு வடமாகாண முதலமைச்சர் போடும் மொக்கைகள் சிறந்த விவாதப் படைகலன்களாகின. அவற்றைப் பொய் என ஆணித்தரமாக மறுத்தார் கஸ்பர்.

No Extra Diplomatic Immunity  - மேலதிக இராச தந்திரப் பாதுகாப்பு இல்லை
மஹிந்த பொதுநலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதால் அவருக்கு ஒரு இராசததிரப் பாதுகாப்புக் கவசம் கிடைக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே ஒரு அரசுத்தலைவர் என்ற வகையில் அவருக்கு இருக்கும் இராசததிரப் பாதுகாப்புக் கவசத்தை விட மேலதிகமாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பன்னாட்டு அமைப்பின் தலைவர் என்றவகையில் இலங்கையில் அரது அரசும் படையினரும் செய்யும் அட்டூழியங்கள் அதிக கவனத்தை ஈர்க்கப் போகின்றது. அவர்து பொறுப்புக் கூறும் கடமை அதிகரிக்கப் போகின்றது. இனி வரும் காலங்களில் அவரது ஊடக மாநாடுகள் அவருக்கு மிகவும் சோதனை மிகுந்தாதாக அமையும். அவரின் நீண்ட காலக் கனவான இலண்டனில் ஒரு மாநாட்ட்டில் அல்லது கூட்டதில் உரையாற்றும் கனவை கமலேஸ் ஷர்மா மீண்டும் நிறைவேற்ற முயலலாம். ஐரோப்பியா வாழ் தமிழர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

எமது நீண்டி தூரப் பயணத்தில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பின் மாநாடும் மஹிந்த அதற்கு ஏற்கும் தலைமைப் பொறுப்பும் எமக்கு ஒரு சாதகமான நிகழ்வுகளாக எம்மால் மாற்ற முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...