Wednesday, 15 August 2012

சிரிய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றதா?

விமானப்படை வலு போரை வெல்லும் என்பதை அலேப்பே பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் மீளக் கொண்டுவந்ததன் மூலம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் நிரூபித்துள்ளன. ஆனால் சிரியாவில் இருந்து தப்பி ஓடிய சிரிய முன்னாள் பிரதமர் ஹிஜாப் ரியாத் சிரியாவின் 30% நிலப்பரப்பை மட்டுமே பஷார் அல் அசாத்தின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன  என்கிறார். ஆனால் சில ஊடகவியலாளர்கள் ஹிஜாப் ரியாத் சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றார் என்கின்றனர். அரபு இஸ்ரேலிய மோதலிலும் பார்க்க சியா முசுலிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இது அரபு நாடுகளிடை ஒரு பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். துனிசியப் புரட்சியுடன் தொடங்கிய அரபு வசந்தம் 2011 மார்ச் 15-ம் திகதி சிரியாவிற்கும் பரவியது.

சிறுபான்மை ஆட்சி

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்க்குழுமம் கிரித்தவர்களும் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலக அனுமதிதால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. இதனால் பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நல்ல மக்களாட்சி சிரியாவில் நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழும்பிஉள்ளது.

பாவியான கோஃபி அனன்
பதினேழாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் சிரியாவில் சமாதானத்தைக் கொண்டுவர என ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான அதன் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனன் தனது ஆறு அம்சத் திட்டத்தை சிரிய ஆட்சியாளர்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளாததால் பதவி விலகினார். அவர் ஈரான் சென்று பேச்சு வார்தை நடாத்தியது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பியாவையும் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. பல தரப்பில் இருந்தும் கோஃபி அனன் மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. ஐநா பாதுகாப்புச் சபைமீது காட்டமாகக் குற்றம் சுமத்திவிட்டு கோஃபி அனன் பதவி விலகினார். பின்னர் ஐநாவின் பொதுச்சபை கூட்டப்பட்டு அதில் பாதுகாப்புச் சபை சிரியப் பிரச்சனையில் எதுவும் செய்யாமையைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.  இது பாதுகாப்புச் சபையில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களையும் தமது இரத்து அதிகாரம்(வீட்டோ) மூலம் தடை செய்த இரசியாவையும் சீனாவையும் ஆத்திரப்படுத்தியது. தற்போது சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. அரபு லீக்கிற்கும் ஐநாவிற்குமான சிரியப் பிரச்சனையை கையாளும் புதிய தூதுவரை நியமிப்பதில் இழுபறி நிலவுகிறது. சிரியா அல்ஜீரிய இராசதந்திரி லக்தர் பிரஹிமியை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயங்கிய மேற்கு தவிக்கிறது

சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கத் தயங்கி மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை மட்டும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வழங்கி வந்தன. பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நிலையான அரசு அமையுமா? சிறுபான்மை கிருத்தவர்களின் பாதுகாப்பு அசாத்திற்கு பிறகு எப்படி இருக்கும்? அசாத்தின் பின்னர் இசுலாமிய அடிப்படைவாதிகள் சிரியாவைக் கைப்பற்றுவார்களா? நாம் வழங்கும் படைக்கலன்கள் புனிதப் போர்வாதிகளின் கையில் போய்ச் சேருமா? இப்படியான சந்தேகங்கள் ஈராக், எகிப்து ஆகியவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பெற்ற பட்டறிவில் இருந்து எழுந்தமையே அவர்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு வழங்கக் காரணங்களாய் அமைந்தன. ஆனால் இப்போது சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி மற்றும் படைக்கல ஆதரவு புனிதப் போர்வாதிகள் கைகளில் போய்ச் சேருகின்றன என்பதை உணர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பதற்றம் அடைந்துள்ளன. அத்துடன் அலெப்பே பிராந்தியத்தை அசாத்தின் படைகள் மீளக் கைப்பற்றியதும் அவர்களை தமது தந்திரோபாயத்தை மீள் பரிசீலனை செய்ய வைத்துள்ளன.

பிராந்திய ஆதிக்கப் போட்டி

சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சி கவிழ்ந்தால் அது ஈரானின் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆபத்தாக அமையும் அரபு நாடுகளின் படைப்பலச் சமநிலை மேற்கு நாடுகளுக்குப் பெரும் சாதகமான நிலையை உருவாக்கும் என்று சீனாவும் இரசியாவும் அஞ்சுகின்றன.  ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை அடுத்து இரசியா சிரியாவிற்கு மூன்று கடற்படைக் கலன்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன ஆனால் இச்செய்தியை இரசியா மறுத்துள்ளது. சில ஆய்வாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை சாதுரியமாக சுனி-அலவைற் இனக்குழும மோதலாக மாற்றிவிட்டார் என்கின்றனர். அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் சிரியக் கிளர்ச்சியாளர்களும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இருக்க் அதற்கு ஆதரவாக சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருக்க அசாத்தை பதவியில் இருந்து அகற்ற விடுவதில்லை என்ற உறுதியில் இரசியாவும் சீனாவும் ஈரானின் துணையுடன் இருக்க சிரியாவில் இரத்தக்களரி மோசமடைவது நிச்சயம். தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து சிரியா தொடர்பான தீர்க்கமான முடிவையோ அல்லது பிரச்சனைக்கு உரிய படை நடவடிக்கைகள் எதையும் இப்போது அமெரிக்கவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, மோதலைத் துருக்கிக்கும் பரவவிட்டு பஷார் அல் அசாத்தை தொலைக்கும் தந்திரத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையாளலாம்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

மற்றத் தீவிரவாத அமைப்புக்கள் ஆட்கடத்தல் செய்தால் அதை பயங்கரவாத நடவடிக்கை எனக் கண்டிக்கும் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஈரானியர்களைக் கடத்தி வைத்திருப்பதை கண்டிக்கவில்லை. இக்கடத்தல்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துள்ளன என்று சில பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் சியா முசுலிம்களைக் கண்டபடி வெட்டிக் கொல்கின்றனர் என்கிறது.  மேலும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சவுதி அரேபிய மதகுரு முகமட் அல் அரிஃபி சிரியக் கிளர்ச்சிக்காரர்களை அவர்களது கொடுஞ்செயல்கள் அடங்கிய படங்கள் காணொளிப்பதிவுகள் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார் என்கிறது. ஈரான் தனது நாட்டிலிருந்து சமய யாத்திரை மேற் கொண்டவர்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கைது செய்து வைத்திருக்கிறார்கள் என்கிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைது செய்து வைத்திருக்கும் ஈரானியர்கள் அல் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிபவர்கள் என்கின்றனர்.

சிரியக் கிளர்ச்சி துருக்கிக்குப் பரவுமா?

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். சிரியாவில் நடப்பது ஒரு சுனி-அலவைற் இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்களாகவே கருதப்படுகிறது, துருக்கியில் பெரும்பான்மை இனத்தவர் சுனி முஸ்லிம்கள். அண்மைக் காலங்களாக அவர்கள் தமது நாட்டை சுனி முஸ்லிம் இனக்குழுமங்கள் மயப்படுத்தி வருகின்றனர். ஆனால் துருக்கியில் இருபது மில்லியன் அலவைற் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பி ஓடிய சுனி முஸ்லிம்கள் அங்குள்ள அலவைற் இனத்தவர்கள் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள். இது சிரிய உள்நாட்டுப் போர் துருக்கிக்கும் பரவுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சிரியர்களை ஈரான அரசு கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போர் புரிவதற்கு பயிற்ச்சி அளித்துத் தயாராக்கி வருகிறது என்பதை அறிந்த ஐக்கிய அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையினர் கலவரமடைந்துள்ளனர்.

விமானப் பறப்பற்ற பிராந்தியம்

லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கைகளை ஓங்க வைத்தது நேட்டோப் படையினர் பொதுமக்களைப் பாதுகாப்பது எனற போர்வையில் லிபியாவை விமானப் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம் செய்ததும் அதற்காக கடாஃபியின் படை நிலைகள் மீது நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடாத்தியமையுமே. அமெரிக்கா ஏற்கனவே தனது நட்பு நாடான துருக்கியுடன் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசித்து உள்ளது. துருக்கிப் படையினர் சிரிய எல்லையில் பல படை ஒத்திகைக்களை நடாத்தி வருகிறது.  லிபியாவில் செய்தது போல் ஒரு ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் மூலம் விமானப்பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் ஏற்படுத்த சீனாவோ இரசியாவோ அனுமதிக்கப் போவதில்லை. துருக்கியிலும் ஜோர்தானிலும் ஏற்பட்டுள்ள சிரிய அகதிப் பிரச்சனையைச் சாட்டாக வைத்து ஒரு ஒரு தலைப்பட்சமான விமானப் பறப்பற்ற பிரதேசதை சிரியாவில் பிரகடனப்படுத்தலாம்.

தப்பி ஓடுவோரும் தருணம் பார்த்துக் காத்திருப்போரும்

சிரிய அதிபர் அல் அசாத்தின் அணியில் இருந்து தப்பி ஓடுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் தப்பி ஓடாமல் உள்ளேயே உளவாளிகளாகவும் sleeper cells தருணம் பார்த்துக் காத்திருக்கும் படையினராகவும் இருக்கின்றனர். இது  அசாத்தின் படைகளுக்கு பெரும் சவாலாக அமையலாம். லிபியத் தலைநகர் திரிப்போலி விரைவாக வீழ்ச்சியடைந்தமைக்கு sleeper cells பெரும் பங்காற்றின.

எண்ணப்படும் அசாத்தின் நாட்கள்
ஐக்கிய அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் சிலர் சிரியாவில் தமது நாடு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தால் அவர்கள் போரைத் தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வர். அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனும் துருக்கிக்கு ஒரு திடீர்ப்பயணத்தை மேற் கொண்டார். பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சு உடனடியாக சிரியாவில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒரு நிகராளிப் போரை(Proxy war) தனது ஆதரவு நாடுகள் மூலம் செய்து அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றலாம். அல்லது தேர்தலின் பின்னர் ஒரு நேரடித் தலையீட்டை மேற் கொள்ளலாம்.

Tuesday, 14 August 2012

டெசோ: தீர்மானங்கள் பாவங்களைக் கழுவுமா?

மத்தியில் இத்தாலியாளும் மாநிலத்தில் கன்னடத்தியும் பல முட்டுக் கட்டைகள் போட்ட போதும் கல்லக்குடி கொண்ட முத்தமிழ்காவலர் , தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த செம்மல், கலைஞர் கருணாநிதி, அவரைப் பொறுத்தவரை, வெற்றீகரமான ஒரு டெசோ மாநாட்டை நடாத்திவிட்டார்.

 கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன
டெசோ மாநாட்டில் முக்கியமான அம்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் சிறந்த சிங்கள இடதுசாரி அரசியல்வாதியும் சிங்களப் பேரினவாதிகளால் பிரபாகரனின் சித்தப்பா என விமர்சிக்கப்படுபவருமான நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரடன கலந்து கொண்டதே.  டெசோ மாநாட்டில் அவரது உரையை இடையில் நிறுத்திவிட்டார்கள். அவர் அங்கு கூறிய முக்கிய கருத்துக்கள்:
  • ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்
  • உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
  • இலங்கைப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்.
  • இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13 வது திருத்தச் சட்டத்தில் நம்பிக்கை இல்லை.
  • இறுதிப் போர் என்ற போர்வையில் ஒரு இனக்கொலை நடந்தது அதில் இந்திய அரசும் சம்பந்தப்பட்டிருந்தது.
 இவரின் பேச்சு இடை நிறுத்தப்பட்டது ஏன்? இலங்கை இனக்கொலையில் இந்தியாவின் திருகுதாளங்களை இவர் அம்பலப் படுத்தப் போகிறார் என்பதாலா? இலங்கை இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்கிருக்கின்றது என்கிறார் கலாநிதி கருணாரட்ன. இந்தியாவின் உதவியுடனேயே போரில் வென்றோம் என அடிக்கடி கூறிகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள். இலங்கையில் நடந்த போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றி இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாகக் மாற்றியது இந்தியா. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த அநியாயங்கள் யாவற்றிற்கும் இந்தியா ஆளும் கூட்டணியில் ஒரு கட்சி என்பதால் கருணாநிதிக்கும் பங்குண்டு. இவை நடக்கும் போது அவர் தனது கட்சியினரைன் மந்திரிப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் இணைந்து போராடியிருந்திருக்க வேண்டும் அது செய்யவில்லை.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
- இன்றைய இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம் தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும்
- தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. அவை வலியுறுத்த வேண்டும்
- அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்
- இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்
- அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்
- ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர் பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்
- தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்
- தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
- தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஆமைக்க வெண்டும்.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
- டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்
- டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியுமா?
இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாயின் இந்திய அரசின் வெற்யுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவேண்டும். இந்திய வெறியுறவுத் துறை தனது கொள்கை இந்திய தேசிய நலனை அடிப்படையானதாகவே இருக்கும். இந்தியாவின் ஒரு பிராந்தியத்தின் மக்களின் உணர்ச்சிகளை கருத்தில் கொண்டதாக இருக்க மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கச் செய்வதில் அங்குள்ள பார்ப்பன சக்திகள் வெற்றி கண்டுள்ளன. இந்த பார்ப்பன சக்திகளை முறியடித்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற கருணாநிதியாலும் முடியாது ஏன் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலும் முடியாது. இலங்கையில் ஒரு தனிநாடு தமிழர்களுக்கு என்று அமைவதோ அல்லது ஒரு சுயாட்சியுடன் கூடிய அதிகார அலகு அமைவதோ இந்தியப் பாதுகாப்பிற்கு எந்த இடையூற்றையும் கொடுக்காது. பங்களாதேசப் போரின்போது இலங்கை பாக்கிஸ்தானுக்க்கு உதவுவது தொடர்ப்பாக இந்தியப் பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்தியாவால் இலங்கையை ஒன்பது நிமிடங்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெகஜீவன் ராம். மேலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவால் ஒரு தமிழ் ஈழ தேசம் தனக்கு பாதகமாகப் போகவிடாமல் தடுக்க முடியும். இருந்தும் தமிழர்களுக்கான தனிநாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் பரப்பியுள்ளனர் பார்ப்பன சக்திகள். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்வதாயின் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாவிடில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவில் வாழும் தமிழர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை தமிழ்நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் இந்திய மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்காமல் மாநாடு கூடுவதும் தீர்மானங்கள் போடுவதும் எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை. மாநாடுகளும் தீர்மானங்களும் கழகக் கண்மணிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும்.

தீராத பாவம் சுமக்கின்றோம்
இப்போது உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும்  தாம் வாழ்ந்த காலத்தில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத குற்றம் புரிந்துள்ளனர். மன்னன் டங்கனைக் கொன்ற மக்பெத்தின் கைகளில் உள்ள இரத்தத்தைக் கழுவும் படி மக்பெத்தின் மனைவி கூறிய போது பெருங்கடல் நீராலும் என் கையில் உள்ள கறையைப் போக்க முடியாது என்றான் மக்பெத். அது போல நாம் எத்தனை மாநாடு கூடினாலும் எத்தனை தீர்மானங்கள் போட்டாலும் நாம் ஈழத்தில் மூன்று இலட்சம மக்கள் கொல்லப்பட்ட போது கையாலாகதவர்களாக குற்றத்திற்கு மன்னிப்பு இல்லை.

Monday, 13 August 2012

இலண்டன் ஒலிம்பிக் மீதான உலகப் பார்வை.

சிரியக் கிளர்ச்சியையும் உலகப் பொருளாதார நெருக்கடியையும் சூடு பிடிக்கும் அமெரிக்கத் தேர்தலையும் ஒரு புறம் தள்ளிவிட்டு உலகம் இரு வாரங்களாக இலண்டனை அவதானித்துக் கொண்டிருந்தது. அழுகுணி கரு மேகங்கங்கள் சூழ்ந்த நகரம் என்று அமெரிக்கர்கள் இலண்டன் நகரத்தைக் கிண்டலடிப்பார்கள். அவர்களே இலண்டன் புது மணப் பெண்போல் காட்சியளித்தது என்றனர்.

இயற்கை அன்னைக்குத் தங்கப் பதக்கம்.
பாக்கிஸ்த்தான் பத்திரிகையின் மூடத்தனமான கருத்துப்படம்
இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அதை மழை கண்ட நேரத்தில் பெய்து குழப்பும் என்பதுதான் முதலில் வெளிவந்த கருத்து. ஒலிம்பிக் நடக்கும் வேளையில் இலண்டன் காலநிலை சீராக இருந்தது. இதுதான் இலண்டன் ஒலிம்பிக்கின் பெரும் வெற்றி. இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அங்கு பெரும் குண்டுத்தாக்குதல் நடந்தது. இலண்டன் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதன் முதலாக ஒலிம்பிக் திடலில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இலண்டன் ஒலிம்பில் ஒரு படைத்துறை மயமாக்கப்பட்ட ஒலிம்பிக்காக இருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டது. போதாக் குறைக்கு காவலாளிகள் பற்றாக் குறையால் படைத்துறையினர் தொண்டர் சேவை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் பணிவு கலந்த சேவையாலும் சாதாரண உடையில் செயற்பட்டதாலும் அக்குற்றச் சாட்டு தவிடு பொடியானது. இலண்டன் தெருக்களில் வாகன ஓட்டிக்கள் ஒவ்வோரு சதுர அங்குலத்திற்கும் போட்டி போடுவார்கள். அந்த அளவு வாகன நெருக்கடி நிறைந்த நகரம் அது. அங்கு விளையாட்டு வீரர்களின் போக்கு வரத்து சிரம்மானதாக அமையும் என்று கருதப்பட்டது. சரியான திட்டமிடலாலும் கிழக்கு இலண்டன் பகுதியில் பல போக்கு வரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டதாலும் தொடரூந்துச் சேவைகள் விரிவாக்கப்பட்டதாலும் ஒலிம்பிக்கின் போது போக்குவரத்து சீராக நடைபெற்றது.


உற்று நோக்கிய நாடுகள்
கடந்த ஒலிம்பிக்கை நடாத்திய நாடு என்ற வகையில் சீனாவும் அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசிலும் 2012 ஒலிம்பிக் நடத்த பிரித்தானியாவுடன் கடும் போட்டியிட்ட நாடு என்ற வகையில் பிரான்சும் தாம்தான் உலைன் பெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாடு என்ற வகையில் அமெரிக்காவும் இலண்டன் ஒலிம்பிக்கை உன்னிப்பாகக் கவனித்தன. சீன  பீஜிங் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இல்லாத ஒன்று  இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இருந்தது என்கின்றனர் சீனர்கள். இலண்டன் ஒலிம்பிக் விழாவிற்கு ஓர் ஆத்மா சேர்க்கப்பட்டிருந்தது என்றனர் சீனர்கள். பிரெசில் நாட்டுப் பத்திரிகைகள் இலண்டன் ஒலிம்பிக்கை பூரணத்துவத்தை அண்டியது (near perfect) என்று சொல்லி இலண்டன் தமக்கு பெரும் சவால் விடுத்து விட்டது என்கின்றன. பிரெஞ்சு ஊடகங்கள் இலண்டனில் மக்களின் நட்புத்தன்னமையைப் பாராட்டின. ஒரு ஊடகவியளாளர் தான் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தின் போது இலண்டனில் வாழ விரும்புகிறேன் என்றார். ஆனாலும் பிரேஞ்சுப் பத்திரிகைகள் சில தமது மிதிவண்டிப் போட்டியாளர்கள் பிரித்தானியப் போட்டியாளர்களிடம் தோற்றதை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. இலண்டன் தில்லு முல்லு செய்து விட்டது என்கின்றனர். அமெரிக்கப் பத்திரிகைகள் பல இலண்டனைப் புகழோ புகழ் என்று புகழ்கின்றன.

பிரித்தானிய அரச குடும்பம்
ஒஸ்ரேலியர்களுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியவும் கேம்பிரிட்ஜ் இளவரசி கேற்றும் பிரித்தானிய வீரர்களை ஊக்கப்படுத்தியதையும் அவர்கள் வெற்றியடைந்த போது ஆராவரித்து மகிழ்ந்ததையும் கண்டிக்கின்றன. இவர்கள் எமது நாட்டுக்கும் சேர்த்துத்தான் இளவரச இளவரசியாகச் செயற்படுகிறாரகள். எமது நாட்டினதும் வருங்கால அரச அரசியர். அவர்கள் ஏன தமது நாட்டு வீரர்களை ஊக்குவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரித்தானியப் பத்திரிகைகள் அவர்களை மிகச்சிறந்த இரசிகர்கள் என்று புகழ்கின்றன.

செலவீனம்
இலண்டன் ஒலிம்பிக் ஒரு சிக்கனமான ஒலிம்பிக் என்று கூறலாம். பல்லாயிரக்கணக்கானோர் தொண்டர் சேவை அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இலண்டன் ஒலிம்பிக்கிற்கான நிதி பல்வேறு வழிகளில் பெறப்பட்டது. 2006-ம் ஆண்டிலிருந்து நகராட்சிச் சபை வரிகளை இருபது பவுண்களால் அதிகரிக்கச் செய்ததன் மூலம் 625 மில்லியன் பவுண்கள் சேகரிக்கப்பட்டது. இலண்டன் அபிவிருத்தி முகவரகத்திடம் இருந்து இருநூற்றைம்பது மில்லியன் பவுண்கள் பெறப்பட்டது. ஒன்றரை பில்லியன் பவுண்கள் லொத்தர் மூலம் பெறப்பட்டது. மொத்தச் செலவீனம் ஒன்பது பில்லியன்கள். வர்த்தக நிறுவங்களின் விளம்பர்ங்கள் மூலமும் பெருந்தொகைப் பணம் பெறப்படும்.

உன்னதமான முகாமைத்துவம்
பாரிய நிகழ்வுகளைச் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் பிரித்தானியர்களிடம் உண்டு. அத்துடன் நேரம் தவறாமை அவர்களது அடுத்த சிறப்பு அம்சம். மூன்றாவதாக பாதிட்டுக்குள் செலவை கட்டுப்படுத்தும் திறனும் அவர்களிடம் உண்டு. ஒலிம்பிக் ஏற்பாட்டில் பிரித்தானியர்களின் இந்தத் திறமை நன்கு பயன்படுத்தப்பட்டது. நன்கு வெளிப்படுத்தப்பட்டது. பல விளையாட்டுத் துறை விமர்சகர்களும் ஒலிம்பிக் அவதானிகளும் பிரித்தானியா ஒலிம்பிக் போட்டியை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்ததைப் பாராட்டுகிறார்கள். பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் இலண்டன் கடந்த இரு வாரங்களாக விளையாட்டை பல அம்சங்களில் புத்துணர்வூட்டியது( refreshed the game in many aspects) இலண்டன் 2012 ஒரு உன்னதமான ஒலிம்பிக் என்றார்.

வெற்றிடமான கதிரைகள்
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தில் பல இடங்களில் கதிரைகள் வெற்றிடமாக இருந்ததும் பலர் வெளியில் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் தவித்ததும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் பல தனியார் நிறுவங்கள் அந்த கதிரைகளுக்கு உரிய நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் அந்த நிறுவங்களிடமிருந்து பரிசாகப் பெற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக அங்கு வராமல் போனதும் கண்டறியப்பட்டது.

தோல்வி வேண்டியதால் வெளியேற்றப்பட்ட வீரர்கள்
எட்டு பெண் பட்மின்ரன் வீராங்கனைகள் தோல்வியடைவதற்காக விளையாடிமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்படனர். அல்ஜீரிய ஓட்டக்காரர் தான் 1500மீட்டர் ஓட்டப்போட்டியில் வெல்வதற்கு சக்தி வேணும் என்பதற்காக 800மீட்டர் ஓட்டப்போட்டியில் விரைவாக ஓடுவதைத் தவிர்த்தார். இதற்காக அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல் நிலை அன்று சரி இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியமையால் மீண்டும் சேர்க்கப்பட்டார். தென் கொரிய வீரரைத் தாக்கு தனது டுவிட்டரில் எழுதியமைக்காக சுவிஸ் கால்பந்து வீரர் மைக்கேல் மொர்கனெல்லவை அவரது நாட்டு ஒலிம்பிக் குழுவே போட்டியில் இருந்து நீக்கியது. கிரேக்க நீளப்பாய்சல் வீராங்கனையும் இனக் குரோத வாசங்கள் டுவிட் செய்ததால் விலக்கப்பட்டார்.

கண்டனத்துக்கு உள்ளான பிபிசி
இலண்டனைப் புகழும் பல ஊடகங்கள் பிபிசி தொலைக்காட்சிச் சேவை பிரித்தானிய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமையைக் கண்டித்தன. ஒஸ்ரேலியாவில் ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது அந்த நாட்டுத் தேசியத் தொலைக்காட்சிகள் உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் அமைப்பு ரீதியாக எழுந்துள்ளது. பிபிசியின் இணையத் தளத்தில் ஒலிம்பிக்கில் போட்டியிடும் நாடுகளின் பூகோளப்படங்கள் இணைக்கப்பட்டபோது இஸ்ரேலின் தலைநகர் போடாமல் போனதை இஸ்ரேலியப் பத்திர்கைக்கள் கடுமையாகச் சாடின. பல இசுலாமிய இணையத் தளங்களும் பிபிசியின் பாராபட்சத்தைக் கண்டித்திருந்தன.வெள்ளையர் அல்லாதவர்களைப் பிரித்தானிய வீரர்கள் தோற்கடிக்கும் போது பிபிசி அதிக மகிழ்ச்சியடைந்தது என்கின்றன சில இணையத் தளங்கள். அமெரிக்க ஊடகங்கள் பிபிசி பாராபட்சமாக நடக்கவில்லை என்கின்றன.

பொருளாதாரம்
ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு 13பில்லியன் பவுண் பெறுமதியான மதிப்பு உயர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒலிம்பிக்கின் போது இலண்டன் நகரத்தில் பெரும் வாகன நெருக்கடி ஏற்படும் என்ற செய்தி பலமாக அடிபட்டதால் பலரும் இலண்டன் செல்வதைத் தவிர்த்தனர். உல்லாசப் பிரயாணிகளும் இலண்டர் செல்வதைத் தவிர்த்தனர். இதனால் இலண்டன் நகர வர்த்தகர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மேற்கு முனை இலண்டன் நகரில் சில நாடக இசை அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

களத்திலும் சாதித்த பிரித்தானியர்கள்
ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும் போது அந்த நாட்டு வீரர்கள் வழமையிலும் அதிக வெற்றி பெறுவது வழக்கம். பிரித்தானியாவும் அதற்கு விதி விலக்கல்ல. டெனிஸில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. பிரித்தானியர்களுக்குப் பிடித்தமான கால்பந்தாட்டப் போட்டியில் தண்ட உதையில் இங்கிலாந்து தோல்வியடையும் வழமை ஒலிம்பிக்கிலும் தொடர்ந்தது. அதுவும் ஒரு ஆசிய நாடான தென் கொரியாவிடம் பிரித்தானிய அணி தோல்வியைக் கண்டது. இரசிய விளையாட்டுத் துறை அமைச்சர் பிரித்தானியர்களும் சீனர்களைப் போலவே மோசமானவர்கள் என்றார். பிரித்தானிய இரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு மட்டும் ஆர்பரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது அவரது குற்றச் சாட்டு.

பொய்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கள்
இலண்டன் ஒலிம்பிக் தொடங்க முன்னர் பல முனைகளிலும் இருந்தும் பல எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் முகாமை, காலநிலை, பாதுக்காப்பு, போக்குவரத்துத் தொடர்பாக எழுந்தன. அவையாவும் பொய்பிக்கப்பட்டுவிட்டன. பிரித்தானியர்கள் இப்போது தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தம்மைப் பற்றிய தமது மற்றவர்களினதும் கருத்துக்களுக்கு இலண்டன் ஒலிம்பிக் ஒரு திரும்பு முனையாக அமைந்து விட்டதாக பிரித்தானியர்கள் இப்போது கருதுகின்றனர். இந்த வெற்றி மனப்பானம பரவி மற்றத் துறைகளிலும் பிரித்தானியா வெற்றி பெறுமா?

ஒலிம்பிக் தொடர்பான முந்தைய பதிவு:

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

Saturday, 11 August 2012

கலைஞர் ஐயா நடந்துங்கள் டெசோ மாநாட்டை

கலைஞர் ஐய்யா உங்கள் டெசோவில் ஈழம் என்ற வார்த்தை பாவிக்கக் கூடாது என்று நீங்கள் சொக்கத் தங்கம் என்று வர்ணித்த சோனியாவின் அரசு கூறிவிட்டது. ஈழத்தை எடுத்து விட்டு உங்கள் மாநாட்டை நடந்துங்கள். இனி உங்கள் மாநாட்டை டசோ மாநாடு என்று அழைப்போம்.

உங்கள் ஊது குழல் சுப வீர்பாண்டியன் டெசோ மாநாடு மன்னிக்கவும் டசோ மாநாடு தொடங்கும் என்று அறிவித்ததிலிருந்து எல்லோரும் ஈழத்தைப் பற்றிப் பேசாமல் கலைஞரைப் பற்றிப் பேசுகிறார்கள். கலைஞரைப்பற்றிப் பேசாமல் ஈழத்தைப் பற்றிப் பேசவும் என்றார். அப்போ கலைஞரைப்பற்றிப் பேச முடியாது....ஈழத்தைப் பற்றிப் பேச முடியாது....நாற்பது ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகள் சுருட்டுவது எப்படி என்பதைப் பற்றி ஆராய டசோ மாநாட்டை நடத்துங்கள்.

மருத்துவத் தேவைகளுக்காக இந்தியா வர விரும்பிய ஒரு வயது முதிந்த மூதாட்டியை இந்தியாவிற்குள் வரலாம் என்ற நுழைவு அனுமதியைக் கொடுத்து விட்டு அவர் சென்னை வந்து இறங்கியதும் அவரை நாற்காலியில் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து விட்டு உங்கள் மாநில ஆட்சியும் மத்திய ஆட்சியுமாமக இணைந்து செய்த சதி போல் உங்கள் டசோ மாநாட்டிற்கு வருபவர்களையும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்து விட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.

பார்ப்பாரப் பயல் சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபகசவிற்கு இந்தியா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டுமென்கிறான். இன்னொரு பார்ப்பாரப் பயல் சோ மஹிந்த ராஜபக்சவைப் பாராட்ட வேண்டுமென்கிறான். இந்த மிருக்கக் கூட்டம் வாழும் நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. அதனால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவேண்டும் என்று தீர்மானம் போட உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.

இப்போதைய நிலையில் ஈழம் பற்றிப் பேசத்தேவையில்லை ஈழத்தில் அல்லல்...... ஐயோ ஐயோ தப்பு தப்பு கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.... இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தைத் துடைக்கவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் என்ன செய்வது என்பதைப் பற்றி ஆராய மாநாடு என்றீர்கள். இது தொடர்பாக எத்தனை நிபுணர்களை நீங்கள் அழைத்துள்ளீர்கள் என்பதைத் தெரிவித்து விட்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.

இலங்கையில் இறுதிப் போரின் போது உங்களை சிவ சங்கரமேனனும் எம் கே நாராயணசாமியும் சந்தித்து விட்டுக் கொழும்பு செல்வார்கள். அவர்கள் கொழும்பு சென்றவுடன் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமடையும். இந்த இரு மலையாளிகலூம் என்னவெல்லாம் சொல்லி உங்களை மிரட்டினார்கள் என்பதை ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.

தியாகி முத்துக்குமரன் தற்கொடை செய்து இறந்து தனது உடலத்தை வைத்து ஈழப்பிரச்சனையை தமிழ்நாடு எங்கும் பரப்புரை செய்யும் படி எழுதி வைத்தான். அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற நீங்கள் போட்ட தடைகள் யாவற்றிற்கும் மன்னிப்புக் கேட்க டசோ மாநாட்டை நடத்துங்கள்.

இலங்கை இறுதிப் போரின் போது நீங்கள் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தி விட்டதாகச் சொன்னீர்கள். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் உங்ககளைச் சந்தித்து  தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடக்கிறது என்றார்கள். அதற்கு நீங்கள் மழை விட்டு விட்டது இப்போது தூவானம் அடிக்கிறது என்றீர்கள். சென்ற சட்ட சபைத் தேர்தலில் உங்களுக்கு கிடைத்த படு தோல்வி தூவானம் மட்டுமே. மழை அடுத்த 2014 பாராளமன்றத் தேர்தலில்தான் பொழிய இருக்கிறது என்பத உணர்ந்து கொண்டு உங்கள் மாநாட்டை நடந்த்துங்கள்.

நீங்கள் டெசோ மாநாடு தொடங்க அதில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என்கின்றது. இந்திய மத்திய அரசு. அந்த அளவிற்கு உங்கள் மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி வெளிநாடுகளில் வாழும் இந்தியக் கைக்கூலிகள் பலர் இந்திய ஒரு பிராந்திய வல்லரசு அதை ஈழத் தமிழ் மக்கள் அனுசரித்துப் போகவேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள். உங்கள் மத்திய அரசின் முக மூடியை கிழிக்க இந்த டசோ மநாடு எங்களுக்கு உதவியது என்பதால் உங்களுக்கு நாங்கள் சொல்லும் நன்றியைப் பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.

டசோ மாநாட்டை இத்தாலியாளின் அரசு மட்டுமல்ல கன்னடத்தியின் அரசும் எதிர்க்கிறது. கன்னடத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராளவளே என்று எமக்கு உங்கள் மாநாடு உணர்த்தியது என்ப்தால் நாம் உங்களுக்கு சொல்லும் நன்றியை பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.

இலங்கையில் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் உங்கள் டசோ மாநாட்டிற்கு வர மாட்டோம் என்று சொல்லிவிட்டனர். வைரமுத்து வருவாக..............சுப வீரபாண்டியன் வருவாக.....குஷ்பு வருவாக........கலா அக்கா வந்து சும்மா கிழி கிழி கிழி கிழி கிழி என்று கிழிப்பாகா......நமீதா வருவாக........மற்றும் உங்கள் மாநாட மயிலாட ஆட்டக் காரர்கள் அனைவரும் வருவாக.........இவர்களை வைத்துக் கொண்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.

நீங்கள் உண்மையான தமிழ்த் தலைவர் என்றால் உங்கள் தலைவர் அண்ணாத்துரை ஒத்தி வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையை உங்கள் கழக் கொள்கையாக மாற்ற ஒரு மாநாடு நடாத்துங்கள். அல்லது நீங்கள் ஒரு தெலுங்கர் தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவன். இப்போது ஆளுகின்றீர்கள் என்ற உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்.

Friday, 10 August 2012

ஒலிம்பிக் பெண்களின் மார்புகளைப்பற்றி எழுதியதால் பெரும் சர்ச்சை

துருக்கியைச் சேர்ந்த Yuksel Aytug என்ற பிரபல பத்தி எழுத்தாளர் ஒலிம்பிக் போட்டிகளால் பெண்மை இறக்கிறது என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்மையினதும் தாய்மையினதும் முக்கிய அம்சமான மார்பு ஒலிம்பிக்கில் போட்டியிடும் பெண்களுக்கு சிறியதாக இருக்கிறது என்று எழுதியமை பல பெண்ணியவாதிகளை ஆத்திரப்படுத்தியுள்ளது. அவர் பெண்களின் உடலைப் பார்க்க வேண்டுமானால் உள்ளாடைகளுக்கான fashion showவை போய்ப் பார்க்கட்டும். ஒலிம்பிக் பார்க்க வேண்டாம் என்கிறார் ஒரு பெண்ணியவாதி
எல்லாம் அழகுதான்...

விளையாட்டு வீராங்கனைகள் தொடர்ச்சியான உடற்பயிற்ச்சியாலும் தசைகளைப் பலப்படுத்தும் உணவுகளாலும் தமது உடலில் தசைகளை வளர்த்துப் பலப்படுத்துகின்றனர். Yuksel Aytug தட்டையான மார்பும் அகன்ற தோள்களும் பெண்மையின் அடையாளங்கள் அல்ல என்கிறார். ஒலிம்பிக் போட்டிகள் பெண்களை இப்படித் தோற்றமளிக்க நிர்ப்பந்திக்கின்றன என்கிறார் அவர்.  பெண்களின் மார்பு வேகத்துக்கு தடையாக ஒலிம்பிக்கில் கருதப்படுகிறது ; ஒலிம்பிக்கில் போட்டியிடும் பல பெண்களின் தோற்றங்கள் பரிதாபகரமானவையாக இருக்கின்றன. பெண்களின் அமைப்புக்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கிறார் Yuksel Aytug.
சிக்ஸ் பக் பெண்மை
Yuksel Aytug இன் கருத்துக்கு பெண்ணியவாதிகளிடமிருந்தும் ஒலிம்பிக்கில் போட்டியிடும் வீராங்கனைகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பெண்களை அவர்களின் மார்பை மட்டும் வைத்துப் பார்க்க வேண்டாம் என்கின்றனர் அவர்கள். பெண்களை தசைகளின் தொகுப்பாக சில ஆணாதிக்கவாதிகள் பார்க்கின்றனர் என்று கண்டனம் செய்கின்றனர் பெண்ணியவாதிகள்.
"தாரளமான பெண்மை!"
Zoe Smith: அளவான பெண்மைதான் அழகான பெண்மை
தனது எடையிலும் பார்க்க இருமடங்கு எடையைத் தூக்கிச் சாதனை புரிந்த பிரித்தானிய வீராங்கனை Zoe Smith ஆண்கள் தம்மிலும் பார்க்க பெண்கள் பலமாக இருப்பதை விரும்புவதில்லை அந்தப் பொறாமையில் பிதற்றுகிறார்கள்; சில பன்றித்தலையர்களின் கூச்சல இது என்கிறார். அவர் காரசாரமாகக் கூறியது:
The obvious choice of slander when talking about female weightlifting is “how unfeminine, girls shouldn’t be strong or have muscles, this is wrong”. And maybe they’re right… in the Victorian era… This may sound like a sweeping generalization, but most of the people that do think like this seem to be chauvinistic, pigheaded blokes who feel emasculated by the fact that we, three small, fairly feminine girls, are stronger than them. Simple as that. I confronted one guy that said “we’re probably all lesbians and look like blokes”, purely to explain the fact that his opinion is invalid cause he’s a moron. And wrong. He came up with the original comeback that I should get back in the kitchen. I laughed.

திரைப்பட நடிகைக்களின் தோற்றம் வேறு fashion show இல் நடந்துசெல்லும் பெண்களின் தோற்றம் வேறு விளையாட்டு வீராங்கனைக்களின் தோற்றம் வேறு. விளையாட்டு வீராங்கனைகளிடையிலும் வேறு வேறு விளையாட்டுக்களில் ஈடுபடும் பெண்களிடையே தோற்றங்களும் வேறுபடுகின்றனர்.
முன்ன்ள் இந்திய ஒலிம்பிக் தாரகை உஷா
உஷாவின் கணவர் சீனிவாசன் காணத பெண்மையை இயக்குனர் சுந்தர் சீ கண்டிருப்பாரா?
எவன் சொல்வான் இது பெண்மை இல்லை என?

Wednesday, 8 August 2012

கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி

என் இதயத்தை ஆக்கிரமித்ததால்
கண்களால் கைது செய்ததால்
நினைவில் சித்திரவதை செய்வதால்
பெண்ணே நீயும் கொடும் படை போலடி

உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்த்தால்
உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால்
இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால்
கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி

எட்டா விலையில் இருப்பதால்
தடவலால் ஊக்கம் பெறுவதால்
தகவல் பரிமாற்றம் செய்வதால்
பலான பெண்ணே நீயும் ஐ-பாட் போலடி

வன்பொருளும் மென்பொருளுமிருப்பதால்
என்பொருள் முடிவடையச் செய்வதால்
என் நேரத்தை என்றும் இழுத்தடிப்பதால்
பெண்ணே நீயும் கணனி போலடி

Monday, 6 August 2012

சிரியப் போர் விரிவடையுமா? ஆட்சி சரிவடையுமா?

 பிந்திக் கிடைத்த செய்தி:
சிரியப் பிரதமர் ரியாக் ஹிஜாப்பும் மூன்று மந்திரிகளும் கிளர்ச்சிக்கரர்களின் உதவியுடன் தப்பி ஜோர்தானுக்கு ஓடிவிட்டார்கள். சிரிய அரசு இனக்கொலை புரிகிறது என்கிறார் பிரதமர் ரியாக் ஹிஜாப். தப்பி ஓட முனைந்த இன்னும் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டர். மேலும் ஒருபிரிகேடியர் ஜெனரல் தப்பி ஓடி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்தார்.


சிரியக் கிளர்ச்சியின் மூலம்
அரபு நாடுகளில் 2011இன் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. 2011 மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சி பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரல் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர். 2011 ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைக்கின்றன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். 2011 செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. 2011 ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  2011 ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2011 ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லீக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

சிரியக்கிளர்ச்சியின் மூலம்
சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.

சிரியக் கிளர்ச்சியாளர்களிடை பற்பல கூறுகள்
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை.  உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர். அமெரிக்க, சவுதி அரேபிய, துருக்கி உளவுத் துறையினர் இப்பிரிவுகளை ஒன்றாக்குவதற்கு பெரும் முயற்ச்சி செய்கின்றனர்.

அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படை!
சுதந்திர சிரியப் படையினர் சிரிய ஆதரவுக் குழு ஒன்றை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைத்து அங்கு தமக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகச் செயற்படவேண்டும் என்று வேண்டி வருகின்றனர். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அண்மைக்காலங்களாக சுதந்திர சிரியப் படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிரிய அரச படையில் இருந்து தப்பி ஓடும் வீரர்களில் பலர் இந்த சுதந்திர சிரியப் படையினருடன் இணைந்து வருகின்றனர். இந்த சுதந்திர சிரியப் படையினருடன் அமெரிக்க அரச அதிகாரிகள் அதிக கவனத்துடனும் சந்தேகத்துடனுமே தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அல் கெய்தா போன்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் ஊடுருவிகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிகா மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே நேரடியாக வழங்குகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் சிரியக் கிளர்ச்சியாளரகளுக்கு படைக்கலன் மற்றும் பயிற்ச்சி உதவிகளை வழங்கி வருகின்றன.

தோல்வியில் முடிந்த சமாதான முயற்ச்சி
சிரியக் கிளர்ச்சியைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையும் அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன் மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். அதன் அம்சங்கள்:

  1. சிரிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிரிய மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுத்தல்
  2. மோதல்களை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் படைக்கலன்கள் ஏந்தாத 300கண்காணிப்பாளர்களைச் சிரியாவிற்குள் அனுமதித்து மோதல் நிறுத்தத்தை உறுதி செய்தல்.
  3. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல். மோதல் நடக்கும் இடங்களில் நாளொன்றிற்கு இரு மணித்தியாலங்கள் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல்.
  4. காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பவர்களை உடன் விடுதலை செய்தல்.
  5. நாடு முழுவதும் ஊடகவியலாளர்களை தடையின்றி பயணங்கள் செல்ல அனுமதித்தல்
  6. சட்ட பூர்வமான அமைதியான ஆர்ப்பாடங்களை அனுமதித்தல்.
கோஃபி அனன் ஜூலை 10-ம் திகதி ஈரானிய உயர்மட்டத்தினருடன் சிரியப் பிரச்சனை தொடர்ப்பாகக் கலந்துரையாடினார்.  2014 இல் சிரியாவில் நடக்கவிருப்பதாகக் கூறப்படும் தேர்தல் சிரியப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் அழுத்தமாகத் தெரிவித்தார்கள். அத்தேர்தல் மூலம் சிரிய மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை மக்களாட்சி முறைப்படி தெரிவு செய்யலாம் என்று ஈரான் கருதுகிறது. சிரியப் பிரச்சனையில் ஈரானையும் ஒரு பங்காளியாக இணைத்து கோஃபி அனன் ஈரானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தியதை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன.  சிரிய அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஈரான் உதவி செய்வதால் சிரியப் பிரச்சனைக்கு ஈரானும் பங்களிப்புச் செய்கிறது என்பது மேற்கு நாடுகளின் கருத்து. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்கின்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது. மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்கிறது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்கிறது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்கிறது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்கிறது. சிரியாவில் தனது முயற்ச்சி தோல்வியடைந்ததால் கோஃபி அனன் தனது சமாதானத் தூதுவர் பதவியில் இருந்து விலகினார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் கண்டனத் தீர்மானம்

கோஃபி அனனின் சமாதான முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால் உள்ளூர மகிழ்வடைந்த வட அமெரிக்க மேற்கு ஐரோப்பிய நாடுகள் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் உதவியுடன் ஐநா பொதுச் சபையில் சிரியா தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதைக் கண்டிக்கும் தீர்மானமானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றின. இத்தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தமது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தால் சிரியா தொடர்பான மூன்று தீர்மானங்களை நிறைவேற்றப்படாமல் தடுத்த சீனாவையும் இரசியாவையும் கண்டிப்பதாகவே கருதப்படுகிறது. சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சி கவிழ்ந்தால் அது ஈரானின் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆபத்தாக அமையும் அரபு நாடுகளின் படைப்பலச் சமநிலை மேற்கு நாடுகளுக்குப் பெரும் சாதகமான நிலையை உருவாக்கும் என்று சீனாவும் இரசியாவும் அஞ்சுகின்றன.  ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை அடுத்து இரசியா சிரியாவிற்கு மூன்று கடற்படைக் கலன்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன ஆனால் இச்செய்தியை இரசியா மறுத்துள்ளது.

சிரியக் கிளர்ச்சி துருக்கிக்குப் பரவுமா?

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். சிரியாவில் நடப்பது ஒரு சுனி-அலவைற் இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்களாகவே கருதப்படுகிறது, துருக்கியில் பெரும்பான்மை இனத்தவர் சுனி முஸ்லிம்கள். அண்மைக் காலங்களாக அவர்கள் தமது நாட்டை சுனி முஸ்லிம் இனக்குழுமங்கள் மயப்படுத்தி வருகின்றனர். ஆனால் துருக்கியில் இருபது மில்லியன் அலவைற் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பி ஓடிய சுனி முஸ்லிம்கள் அங்குள்ள அலவைற் இனத்தவர்கள் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள். இது சிரிய உள்நாட்டுப் போர் துருக்கிக்கும் பரவுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சில ஆய்வாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை சாதுரியமாக சுனி-அலவைற் இனக்குழும மோதலாக மாற்றிவிட்டார் என்கின்றனர். அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் சிரியக் கிளர்ச்சியாளர்களும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இருக்க் அதற்கு ஆதரவாக சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருக்க அசாத்தை பதவியில் இருந்து அகற்ற விடுவதில்லை என்ற உறுதியில் இரசியாவும் சீனாவும் ஈரானின் துணையுடன் இருக்க சிரியாவில் இரத்தக்களரி மோசமடைவது நிச்சயம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் இருக்க சிரியா தொடர்பான தீர்க்கமான முடிவையோ அல்லது பிரச்சனைக்கு உரிய படை நடவடிக்கைகள் எதையும் இப்போது அமெரிக்கவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, மோதலைத் துருக்கிக்கும் பரவவிட்டு பஷார் அல் அசாத்தை தொலைக்கும் தந்திரத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையாளலாம்.

அசாத்தின் சரிவுக்குத் தயாராகும் அமெரிக்கா

சில படைத்துறை ஆய்வாளர்கள் பஷார் அல் அசாத்தின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என்று கருதுகின்றனர். சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்னர் அடுத்த ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிடத் தொடங்கிவிட்டது. ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் தலைமையினால சிறுபான்மை சுனி முஸ்லிம்களின் தனியதிகார ஆட்சியை அமெரிக்கா கலைத்து சிறுபான்மை சியாட் முஸ்லிம்களின் மக்களாட்சி அரசை அமைத்தது. அங்குள்ள பலமிக்க ஒரு படத்துறைக் கட்டமைப்பை நிர்மூலம் செய்த போது பொதுமக்களுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டு அங்கு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு தீவிரவாதம் உருவானது. அத்துடன் குர்திய இன மக்களுக்கு ஒரு பாதி-தன்னாட்சியை வழங்கியது. ஈராக்கில் நேரடியாகப் படையை அனுப்பி அதன் படைத்துறையை நிர்மூலம் செய்ததால் ஏற்பட்ட விளைகளில் இருந்து பெற்றபட்டறிவை வைத்துக் கொண்டு நேரடியாக தனது படையினரை லிபியாவிற்கு அனுப்பாமல் remote control மூலம் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்தது. இரண்டு இடத்திலும் பெற்ற பட்டறிவை ஆப்கானிஸ்தானில் பெற்றுக் கொண்டிருக்கும் பட்டறிவுடன் இணைத்து அமெரிக்கா சிரியாவில் பாவிக்க நினைக்கிறது. அதேவேளை தன்னை சிரியக் கிளர்ச்சியுடன் சம்பந்தமில்லாதது போல் பாசாங்கும் செய்கிறது. சிரிய மக்கள் தாங்களாகவே தமக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேதம் ஓதுகிறது. சிலர் அமெரிக்க நிர்வாகம் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு செய்யும் உதவி போதாது குறைசொல்கின்றனர். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சிரியா தொடர்பாக நெருக்கடி நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

போரலைகள் மோதும் அலெப்போ
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரும் வர்த்தக முக்கியத்துவம் மிக்கதுமான அலேப்போவில் இப்போது சிரிய அரச படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் பெரும்  மோதல் நடக்கிறது.  கரந்தடி படையினருக்கு எதிரான போர்ப்பயிற்ச்சியோ அனுபவமோ இல்லாத சிரியப் படையினர் அலேப்போ நகரின் பாதியைக் கைப்பற்றிய சிரியக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். கடுமையான எறிகணைத் தாக்குதல்களோ விமானக் குண்டு வீச்சோ அங்கு செய்தால் அதில் ஆளும் இனக் குழுமமான அலவைற் முஸ்லிம்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். ஆனால் அலேப்போ நகர் வீழ்ச்சியடைந்தால் தலைநகர் டமஸ்கஸ் நகரின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிவிடும். அலேப்போ நகரைக் கைப்பற்றியவர்கள் சுதந்திர சிரியப்படையினரே. இவர்கள் அமெரிக்காவின் ஆதரவு உடையவர்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லியோன் பார்னெற்றா அலேப்போ நகரின் வீழ்ச்சி அசாத் ஆட்சிக்கு அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்கிறார்.  டமஸ்கஸ் நகரில் கிளர்ச்சிக் காரர்கள் ஊடுருவி சிரிய அரசு ஆதரவுத் தொலைக்காட்சி நிலையத்தின் மீது நடாத்திய தாக்குதல் அரச படையினர் கரந்தடித்தாக்குதல்களுக்கு எதிராகச் சரையகச் செயற்படவில்லை என்பதையே காட்டுகிறது. சிரிய அலவைற் இனக்குழுமத்திர்னரைப் பொறுத்தவரை அவர்கள் இப்போது கிளர்ச்சிக்காரர்களைக் கொல்ல வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள். இதனால் அரச படையினர் மூர்க்கத் தனமாகப் போர் புரிகின்றனர். சிர்யக் கிளர்ச்சிக் காரர்களுக்கு உதவிய் செய்யும் நாடுகள் அவர்களுக்கு புதிய ரக படைக்கலன்களை வழங்குவதில்லை. சிரியக் கிளர்ச்சியாளர்கள் இன்னும் ஒரு படைத்துறைக்குத் தேவையான போதிய கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. இப்போதும் காயமடையும் கிளர்ச்சிக்காரர்கள் சிகிச்சைக்காக துருக்கிக்கே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது, காயமடைந்தவர்களை 50மைல்கள் கடந்து கொண்டு செல்ல பல மணித்தியாலங்கள் எடுக்கின்றனர். இன்னும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்படாத சிரியக் கிளர்ச்சியாளர்கள் முழு நாட்டையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை மிக அண்மையில் இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...