Tuesday, 24 February 2009

எம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.


எண்பத்தெட்டில் அமைதிப்படை நாட்களில்
தெரு முனையில் ஒரு கண்ணி வெடி
சிக்கியது ஒரு சீக்கியப் படையணி
கண்டபடி சுட்டனர் கண்டவரையும் கொன்றனர்

தப்பித்து நான் தலை தெறிக்க
ஓடி சரண் புகுந்தது உன் வீடு
நின் முக தரிசனம் முதல் தரிசனம்
சரளி வரிசையாய் ஆரம்பித்தது எம் காதல்

உள்ளஙகள் இணைந்தன ஒன்றோடு ஒன்றாயின
இரு மன இணைப்பு ஜண்டை வரிசைகளாயின
உன்வீட்டின் முன் தெருவில் அங்கும் இங்கும்
தாண்டி வருவேன் நான் தாட்டு வரிசைகளாக.

உன் அழகு முகத்து ஒளியும் உதட்டுச் சிரிப்பும்
என்னை இட்டுச் செல்லும் மேல் ஸ்தாயி வரிசைக்கு
என் முகம் என் பார்வைக்கே அழகானது
எல்லாம் எனக்கு அலங்கார வரிசையானது
உன்னுள் நானாக என்னுள் நீயாக இனிய உறவாக
எனக்குள் இசைக்கத் தொடங்கியது ஓர் இனிய கீதம்.
இதயங்கள் ஒன்றாக இதமாக இளமை இனியதாக
ஸ்வரம் நீயாக ஜதி நானாக ஸ்வரஜதியானோம்


இரவுகள் நீண்டிருக்க எண்ணங்கள் எங்கோ இருக்க
கனவுகளில் கலந்திருக்க நினைவுகள் வர்ணங்களானது
பார்வைகள் பல்லவியாக சிரிப்புக்கள் அனுபல்லவியாக
நெருக்கங்கள் சரணங்களாக எம் உறவு கீர்த்தனமானது

பிறவிகள் பல தோறும் தொடரும் பிணைப்பாக
திருமண மேடையில் அரங்கேறியது எம் சங்கீதம்.

செந்நீர் பாய்ச்சி உயிர்பல உரமிட்டு வளர்த்த பயிர்.

கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்.

செந்நீர் பாய்ச்சிஉயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்துஇடர்பல பட்டு
நாம் வளர்த்தவிடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டுசுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்குபுரியாமல் போனதென்ன.

(அ)தர்ம கர்த்தாக்கள்

பொத்தடா வாயை என்றான் ஒருத்தன்
பல்லை உடைப்போன் என்றான் இன்னொருத்தன்
காறி உமிழ்ந்தாள் பெண் ஒருத்தி
......மகனே என்றான் ஒரு இளைஞன்
இது நடந்தது எங்கே? எப்போது?
கோயம்பேடு சந்தையிலா?
அல்லது கொத்வால் சாவடியிலா
இல்லை இல்லை இல்லவே இல்லை
இலண்டனில் ஒரு ஆலயத்தின்
தர்ம கர்த்தாக்கள் சபைக் கூட்டத்தில்
கேட்ட வாசங்கள்தான் இவை

Monday, 23 February 2009

இந்தியா=பகடைக்காய்+கூலிப்படை

பன்னாட்டு அரசியலில்
சிங்களவனின் பகடைக்காய்
ஈழ விடுதலைப் போரினிலே
சிங்களவனின் கூலிப்படை
தமிழின ஒழிப்பினிலே
பாக்கிஸ்தானின் கூட்டாளி
இன ஒழிப்பு நாட்டியத்தில்
பக்சேயின் காற்சலங்கை

மானம் கெட்ட காங்கிரசிலிருந்து வெளியேறுங்கள் தன்மானத் தமிழர்களே



ஈழத்தமிழர்க்ளை கொல்லும்
படுபாவிச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்.
மானத் தமிழர்களே

தன் மானமுள்ள
தமிழ்நாட்டுத் தமிழர்களே
மானங் கெட்ட
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்

சாதி வெறியன்
சத்திய மூர்த்தியின்
பெயரின் கட்டிடத்தில்
இயங்கும் பேய்க்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்
மானத் தமிழர்களே

இத்தாலிச் சனியாளின்
கேவலமான பாவாடைக்குள்
அடக்கப் பட்டிருக்கும்
காங்கிரசிலிருந்து
தன்மானத் தமிழர்களே
வெளியேறுங்கள்

Sunday, 22 February 2009

மானம் கெட்ட இந்தியா - ஐநா முன் முழக்கம்

ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on play sign.

50 அடி உயரக் கதிரையில் பறந்த ஈழக்கொடி


ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன் கண்ணிவெடிகளால்உள்ள பாதிப்புக்களை விளக்கு முகமாக காலுடைந்த பாரிய நாற்க்காலியொன்று அமைக்கப் பட்டுள்ளது. 20-02-2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐரோப்பியத் தமிழ் இளைஞர் அமைப்பு நடாத்திய பேரணியின்போது ஒரு இளைஞன் இதில் ஏறி தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றினான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...