Friday 31 December 2021

இந்தியாவை ஒரம் கட்டுவதே தமிழ், சிங்கள உய்விற்கு வழி

 


தமிழர்களுக்கு உதவ இந்தியா இருக்கின்றது என்ற மூடத்தனமான அச்சம் சிங்களவர்களிடையே உண்டு. 1987 அமைதிப்படை என்னும் பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளில் இருந்து 2009இனக் கொலைவரை இந்தியா சிங்களவர்களுக்கு பல உதவிகள் செய்த பின்னரும் இந்தியா தமிழர்களுக்கு உதவும் என நம்பும் முட்டாள்கள் சிங்களவர்களிடையே இன்றும் உண்டு என்பது ஆச்சரியத்துக்கு உரியது. அப்படி நம்பும் சில தமிழ் மூடர்களும் இருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கின்றது.

தமிழர்கள் மீதான இந்திய வெறுப்பை இலங்கையர்கள் உணருங்கள்

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பல இலட்சம் இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுதான். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் அதை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் நாட்டைப் பிரித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை முதலில் சிங்களவர்கள் கைவிட வேண்டும். உலகத்திலேயே பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத இந்துக்கள் இலங்கையில் உள்ள இந்துக்களே. 1980களில் இலங்கைப் பிரச்சனையைக் கையாள வந்த இந்தியப் பிராமண அரசுறவியலாளர்களும் உளவுத்துறையினரும், ஊடகர்களும் இதை அவதானித்து இலங்கைத் தமிழர்கள் மீது கடும் சினம் கொண்டனர். தமிழர்கள் என்றாலே சூத்திரர்கள். அவர்களை அடக்க சிங்களவர்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.  அவர்களுடன் தமிழரகள் மேல் பொறாமை கொண்ட சில மலையாளிகளும் இணைந்து கொண்டனர். இந்தியாவில் 4%இலும் குறைவான பிராமணர்கள் இந்தியாவை ஆளவும் ஆட்டிப்படைக்கவும் செய்கின்றார்கள். இந்தியா பிராமணர்களால் ஆளப்படவேண்டும் அல்லது அவர்களின் ஆலோசனைப்படி நடப்பவர்களால் ஆளப்பட வேண்டும் என்பது இந்துத்துவா கும்பலின் கொள்கை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியில் பெரும்பாலோர்களின் கொள்கையுமாகும். அதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால்தான் ராகுல் என்கின்ற மொக்கை காந்தியும் தன்னை பார்ப்பான் என்கின்றார்; வங்கத்து மம்தா அக்காவும் தன்னைப் பாப்பாத்தி என்கின்றார்.

தமிழர்கள் திருந்த வேண்டும்

இந்தியாவால் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என சில ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிக அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்ற கொள்கையில் இந்தியா இருக்கும்வரை இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அவர்களின் அடிமனதில் பதிந்து போயுள்ள இந்திய நேயம் அவர்களை சரியான வழியில் சிந்திக்க விடாது. இந்தியாவின் அடுத்த பொய்மையான நிலைப்பாடு இலங்கையில் தமிழ் ஈழம் பிரிந்தால் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து விடும் என்பது. இது சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது என்ற இந்துக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட போலி அச்சம். நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறீமா-சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்ச தீவுக் கையளிப்பு, அமைதிப்படை, 13 என்னும் தீர்வுப் பொறி, ரணில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க முற்பட்ட போது நிருபாம ராவ் சீறி எழுந்து அவரது ஆட்சியைக் கலைத்து மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியமை, 2009 இனக்கொலை, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவின் செயற்பாடு ஆகியவற்றை பற்றி உணர முடியாதவர்கள் தான் இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும், இந்திய நலனும் தமிழர்கள் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் எனவும் சிந்திக்கின்றனர். இவர்களில் சிலர் கொடுத்த காசுக்கும் அதிகமாக கூவுகின்றனர். பலர் காசு கொடுக்காமலே கூவுகின்றனர். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசல்ல

ஒரு பிராந்திய வல்லரசு என்றால் அதன் ஆதிக்கத்தில் ஒரு பிராதியம் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதிக்கத்தில் ஒரு பிராந்தியமும் இல்லை. இந்தியாவின் சொந்த நிலப்பரப்பு எனச் சொல்லப்படும் பிராந்தியத்திலேயெ இந்தியாவின் கட்டுப்பாடு இல்லை. இந்தியாவின் அரசியலமைப்பு இந்தியப் பிராந்தியம் எனச் சொல்லும் இடங்களில் ஒன்றான கஷ்மீரில் ஒரு பகுதியை பாக்கிஸ்த்தானும் இன்னொரு பகுதிய சீனாவும் ஆக்கிரமித்துள்ளன. இந்திய எல்லைகளில் பல இடங்களில் சீனா அத்து மீறி பல இடங்களை கைப்பற்றி வைத்துள்ளது. இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே அமைத்துள்ளது. இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைப் பிரித்து சிக்கிம் நாட்டை இந்தியாவுடன் இணைத்து இலங்கையை அச்சுறுத்தி ஒரு பிராந்திய வல்லரசாக இந்தியாவை உருவாக்க முற்பட்ட போது அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின் வந்த ராஜிவ் அனுப்பிய இந்தியப் படையினர் இலங்கையில் இருந்து வெளியேறும் போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாகும் தகமையை இழந்தது. தொடர்ந்து இலங்கைக் குடியரசுத் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவை பதவியில் இருந்து விலக்க இந்தியா காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரூடாக முயற்ச்சித்து படு தோல்வியடைந்த பின்னர் இந்தியாவும் ஒரு மூன்றாம் தர நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தியாவின் தனிநபர் வருமானம் பங்களாதேசத்தின் தனிநபர் வருமானத்திலும் குறைந்த நிலையில் இருக்கும்போது அது பிராந்திய வல்லரசு எனச் சொல்ல முடியாது. ஆனாலும் இந்தியாவிடம் ஒரு வலிமை மிக்க படைத்துறை உண்டு. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் எந்த வெளிநாட்டு வல்லரசின் பக்கம் இந்தியா இருக்கின்றதோ அந்த வல்லரசுக்கு சார்பாக அப்பிராந்திய படைத்துறை சமநிலை மாறும். அதனால் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லரசு (Balancing Power) என அழைக்கபடுகின்றது. இந்திய வாற்பிடிகள் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று கூவுவதை தமிழர்களோ சிங்களவர்களோ கணக்கில் எடுக்கக் கூடாது.

இந்தியாவை ஓரம் கட்டவும்

ஒரு புளியமரம் தன் நிழலில் வேறு தாவரங்களை வளரவிடாது என்பது போல் இந்தியாவின் நிழலில் இலங்கை விமோசனமடையாது என்ற மறைந்த ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை உருவாக்கிய ரோஹண விஜயவீராவின் கூற்றை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். சிங்கள மக்கள் திம்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த முனையில் தான் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்று பட முடியும். இந்தியாவை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஓரம் கட்ட வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பிற்கு சீனாவின் உத்தரவாதம் தேவைப்படலாம்

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா நேரடியாக பங்கேற்றது. சீனா சிங்களவர்களுக்கு உதவியது ஆனால் பின் கதவால் பத்தாயிரம் படையினரை இனக்கொலைக்கு உதவி செய்ய அனுப்பவில்லை. சீனாவிற்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. சீனர்களை தமிழரகள் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று பட்டு சீனாவின் நட்புடன் இலங்கையின் பாதுகாப்பை மட்டுமல்ல இலங்கை பிளவு படாமலும் பார்த்துக் கொள்ளலாம். அது தமிழர்களையிட்ட சிங்களவர்களின் அச்சத்தைப் போக்கும்.

காலங்கள் மாற களம் மாறும்

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 1980களில் கடும் போட்டி இருந்தது. இன்று அவற்றிடையே ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க-சீன முரண்பாடு தீவிரமடைந்து கொண்டே போகின்றது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. இன்று சீனா மீது அமெரிக்கா கொண்டுள்ள அச்சம் போல் இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியா மீது கொள்ளும். இன்று இரு தரப்பு போட்டியாக இருப்பது அப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா என முத்தரப்பு போட்டியாக மாறும். அப்போதும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து பேரினவாத இந்தியா மாறாது. ஆனால் தமிழர்களும் சிங்களவர்களும் இந்தப் போட்டியில் கருவிகளாக இருக்காமல் இவற்றில் இருந்து விடுபடும் வழியைத் தேட வேண்டும். இருவருக்கும் எதிரியான இந்தியாவை ஓரம் கட்டி விட்டு சிங்களவர்களுக்காவது நட்பாக இருக்கும் சீனா தன்னை தமிழர்களும் நட்பான நாடாக மாற்ற வேண்டும். ஆனால் இலங்கையை போட்டிக்களமாக மாற்றக் கூடாது.

வட்டுக்கோட்டை விட்டுக் கொடுப்பு, திம்புக் கோட்பாடு ஏற்பு, இந்தியாவை ஓரம் கட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் ஒற்றுமை காணப்பட வேண்டும். மாற்றிச் சிந்திக்காமல் மாற்றமில்லை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...