Saturday 11 September 2021

இறந்தும் அமெரிக்காவைத் தோற்கடித்த பின் லாடன்


 9/11 நியூ யோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவையும் உலகையும் அதிர வைத்தது. பின் லாடனின் அல் கெய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று கடன் அட்டை மூலம் விமான ஓட்டுனர் பயிற்ச்சி பெற்று மூன்று விமானங்களைக் கடத்தி இரண்டால் இரட்டைக் கோபுர்த்தைதாக்கினர். அமெரிக்கப் பாதுகப்புத் துறை இருக்கும் பெண்டகனைத் தாக்கச் சென்ற மூன்றாவது விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு தீவிரவாதிகள் விமானங்களை கடத்துகின்றார்கள் என்ற சேதியை அவரது மனைவி அனுப்பினார். அவர் மற்றப் பயணிகளுடன் சேர்ந்து விமானியைத் தாக்க விமானம் இடையில் விழுந்து நொருங்கியது. 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு வழி செய்த அல் கெய்தா தலைவர் பின் லாடனைப் பிடிக்க அமெரிக்கா மூன்று ரில்லியன் டொலர்களைச் செலவு செய்தது. 

பின்லாடனை எப்படிக் கண்டு பிடித்தனர் என்ற விபரம் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்(Click):

பின் லாடன் இருப்பிடம் அறிந்த விபரம்  : https://www.veltharma.com/2011/05/blog-post_04.html

அமெரிக்காவை அழித்த பின்னர்தான் இஸ்லாமிய அரசை நிறுவ முடியும் என்ற கொள்கையுடைய பின் லாடன் செய்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புக் கெடுபிடிகளால் அமெரிக்காவின் வருமானம் குறைந்தது. அமெரிக்காவின் கடன் பளு அதிகரித்தது. இரண்டு தடவை அமெரிக்கா கடன் நெருக்கடியில் சிக்கியது. 

அமெரிக்கா சந்தித்த நிதி நெருக்கடி பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்: http://www.veltharma.com/2013/01/blog-post_3.html

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்கா எட்டு ரில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு அதுவே காரணமாக அமைந்தது.

பொருளாதாரத் தாக்குதல்

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து போராடிய பின்  லாடன் அறிந்து கொண்ட உண்மை எதிரியைத் தோற்கடிக்க அவன் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்பதே. ஆப்கானை ஆக்கிரமித்ததால் அதிகரித்த பாதுகாப்புச் செலவு சோவியத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கி சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க நிதிச் சந்தையின் இருதயமாக இருந்த இரட்டைக் கோபுரத்தை பின் லாடன் தெரிவு செய்தது ஒரு பொருளாதாரத் தாக்குதலுக்குத்தான். தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு 16% இழப்பு ஏற்பட்டதை பின் லாடன் தன் அமைப்பினருக்கு சுட்டிக்காட்டினார். அந்த இழப்பின் பெறுமதி 640பில்லியன் டொலர்கள் என்றும் அதைத் தொடர்ந்து வந்த இழ்ப்புக்களையும் கூட்டினால் அமெரிக்காவின் மொத்த இழப்பு ஒரு ரில்லியன் டொலர் என்றார் பின் லாடன். அல் கெய்தா செலவழிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என தன் அமைப்பினருக்கு பின் லாடன் போதித்தார். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் எதிரொலியாக உலகெங்கும் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. அதனால் உலகெங்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடப்படவில்லை. தாக்குதலின் பின்னர் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்தன.

பலஸ்த்தீனியர்களின் விடுதலை

1998-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தி 224பேரைக் கொன்று 4,000பேரைக் கொன்றனர். அமெரிக்காவை அழித்த பின்னர்தான் பல்ஸ்த்தீனியர்களின் விடுதலை பெற முடியும் என்பதிலிலும் பின் லாடன் உறுதியாக இருந்தார். இந்த இரண்டு தூதுவரகங்களிலும் தாக்குதல் நடத்திய பின்னர் பில் லாடன் விடுத்த அறிக்கையில் பலஸ்த்தீனியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நிலையை உறுதி செய்யும் வரை அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

Investopedia என்னும் அமெரிக்க ஊடகத்தில்:

When America was attacked by terrorists on September 11, 2001, the entire business community felt the blow. Stock markets immediately nosedived, and almost every sector of the economy was damaged economically. The U.S. economy was already suffering through a moderate recession following the dotcom bubble, and the terrorist attacks added further injury to the struggling business community.வ்

எரிபொருள் என்னும் நலிவுப் புள்ளி (weakest point)

எரிபொருள் விலயேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என தன் அமைப்பினருக்கு போதித்த பின் லாடன் தனது தாய் நாடாகிய சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்களைத் தாக்கும் படி உத்தரவிட்டார். அதற்காக அரபிய குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் ஒரு கிளை அமைப்பையும் உருவாக்கி பல எண்ணிக்கையிலான சிறு தாக்குதல்களை செய்ய தன் ஆதரவாளர்களைப் பணித்தார். அவரது அந்த உபாயத்தை Strategy of Thousand Cuts என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் விபரித்தனர். 

ச்

அமெரிக்காவிற்கு அல் கெய்தாவால் ஏற்பட்ட அச்சுறுத்தலாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவாலும் அமெரிக்காவில் இனக்குரோதமும் வலது சாரிக் கொள்கையும் வளர்ச்சியடைந்தது. அல் கெய்தாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிக அளவு அமெரிக்கர்கள் வலதுசாரிகளால் கொல்லப்பட்டனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அது மேலும் அதிகரித்தது. அதன் விளைவாக மக்களாட்சியில் நம்பிக்கையற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களின் வன்முறை அமெரிக்க மக்களாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. 

பின் லாடனைப் பின்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்த்தானுக்கு வெளியே தாக்குதல் செய்வதைத் தவிர்த்து வந்த தலிபான்கள் போரைத் தாம் இழுத்தடித்தால் அமெரிக்காவில் பொருளாதார்ப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நம்பி போராடினார்கள். ஹக்கானி போன்ற அமைப்புக்களை போரில் பங்கு பெறச் செய்து தமது ஆளணி இழப்புக்களைக் குறைத்தார்கள். தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்களிடம் அவர்கள் சொல்வது "கடிகாரம் உங்கள் கையில் ஆனால் நேரம் எங்கள் கையில்" அதாவது உங்களிடம் தொழில்நுட்பம் இருக்கின்றது அதனால் நேரத்தை வாங்க முடியாது போர் அதிக காலம் இழுபடும் போது நீங்கள் விலகிக் கொள்வீர்கள். தலிபான்கள் நினைத்தது நடந்தது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லா எம்பக்கம் இருக்கின்றார். அவர் மீது நம்பிக்கையற்றவர்களை எம்மால் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். 2066-ம் ஆண்டு உலகில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையான மக்களாக இருப்பார்கள். 

கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் அப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை107 பேர் மட்டுமே. பாதுகாப்புச் செலவையும் உளவுத்துறைச் செலவையும் அதிகரித்தே இப்படி உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 9/11 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகளை ஆளில்லாவிமானங்கள் மூலக் கொல்லும் திறனை அமெரிக்கா பெருமளவு வளர்த்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பாடலை உலகெங்கும் ஒட்டுக் கேட்கும் திறனையும் பல நாடுகள் வளர்த்துள்ளன. 

அல் கெய்தா உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆப்கானிஸ்த்தானில் அழிக்கப்பட்டாலும் அதில் இருந்து உருவாகிய ஐ எஸ், அல் ஷபாப், பொக்கோ ஹரம், அல் நஸ்ரா போன்ற பல அமைப்புக்கள் இன்னும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடையவுமில்லை. அமெரிக்காவில் அமைதி வரவுமில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...