Friday 12 March 2021

ஸ்டாலின் - பழனிச்சாமி ஓர் ஒப்பீடு

  


மு. க. ஸ்டாலின் (1953) எடப்பாடி பழனிச்சாமியிலும் (1954) ஒரு வயது மூத்தவர். ஸ்டாலின் 14 வயதில் கட்சிப் பரப்புரை ஆரம்பித்து விட்டார். 1967 தேர்தலில் 14 வயதுச் சிறுவனாக பரப்புரையில் ஈடுபட்டவர். அப்போது மோடியோ அமித் ஷாவோ அல்லது எடப்பாடியாரோ அரசியலுக்கு வரவில்லை. அன்றில் இருந்தே ஸ்டாலின் தீவிர அரசியலில் இருப்பவர். எடப்பாடியாரை யாரும் தமிழரல்லர் எனச் சொல்வதில்லை. ஆனால் ஸ்டாலினைச் சொல்வதுண்டு.

ஸ்டாலின் தன் தந்தையின் வாரிசாக அரசியலுக்கு வந்தார். எடப்பாடியார் அப்படியல்ல. ஸ்டாலினை சுற்றிவர அவரது சகோதரி கனிமொழி மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் திமுகவில் முக்கிய பதவிகளை வகிப்பதாலும் ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர் தயாநிதி மாறன் நாடாளமன்ற உறுப்பினராக இருப்பதாலும் திமுக ஒரு குடும்பக் கட்சி என்ற குற்றச்சாட்டை எதிர் கொள்கின்றார். கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கை வைத்து எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. வி கே சசிகலா சுட்டிக்காடிய படியால் தான் அவர் முதல்வரானார் என்ற குற்றச் சாட்டு உண்டு

ஸ்டாலின் 1983இல் திமுக பொதுக்குழுவில் இடம்பெற்றார். 2001 சென்னை நகர பிதா. 2006-ம் ஆண்டு மீண்டும் நகர பிதா. ஜெ ஆட்சியில் வளர்ச்சித்துறை அமைச்சர். 2009இல் துணை முதலமைச்சர் பதவி. 2016இல் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை வகித்தார். அரச முகாமைத்துவத்தில் ஸ்டாலினின் அனுபவம் எடப்பாடியாரின் அனுபவத்திலும் சிறந்தது. நகர பிதாவாகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது என அரசால் சட்டம் இயற்றப்பட்ட போது நகர பிதா பதவியை ஸ்டாலின் துறந்தார். ஆனால் அவர் சட்டப்படி பதவியில் இருந்திருக்கலாம் எனதீர்ப்பு வந்தது.

ஸ்டாலின் தன் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு செல்வந்தர். எடப்பாடியார் அந்த அளவு செல்வந்தரல்லர். எடப்பாடி சொத்து எட்டுக்கோடிக்கு மேல் இருக்கலாம். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை வீடு 50 கோடி பெறுமதியானது. அவரது கார்களின் பெறுமதி 10கோடி. திமுகவின் முரசொலி அறக்கட்டளையிடம் இருக்கும் சொத்து பல நூறு கோடி. முரசொலி அறக்கட்டளை மு க ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மகளின் கணவர் சபரீசன் ஆகியோரின் பெயரில் உள்ளன.

அபிராமி…..அபிராமி....

இவரது இளவயதில் முதல்வரின் மகனாக பல அடாவாடித்தனங்களில் ஈடுபட்டதா குற்றம் சாட்டப்படுவதுண்டு. அவர் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையின் தலைமைக் காவலாளியின் மருமகள் ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர். அவர் ஸ்டாலினை சித்திரவதை செய்தார். அவர் ஸ்டாலினைத் தாக்கும் போது குறுக்கே பாய்ந்து தடுத்த சிட்டிபாபு என்ற இன்னும் ஒரு கழக உறுப்பினர் கொல்லப்பட்டார். ஸ்டாலின் தப்பித்துக் கொண்டார். சிறையிலேயே தனது பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதினார்.

கணக்கு விடும் ஸ்டாலின்

தனித்தமிழில் சமஸ்கிருத எழுத்துக்களைத் தவிர்த்து எழுத வேண்டும் என்ற அடிப்படையில் அவரது பெயர் சுடாலின் என்று எழுதப்பட்டது. அதை அவரது எதிரிகள் திரித்து சுடலை என அழைக்கின்றார்கள். மீம்ஸ்களில் அவரை சுடலை என குறிப்பிடுவார்கள்.

தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி உடையலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தொடர் பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்பட்டது ஸ்டாலின் வெற்றி.

இதே மாதிரியான வெற்றியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பெற்றுள்ளார். உட்கட்சிப் பூசல், அமித்-மோடி அழுத்தம் ஆகிய இரண்டும் எடப்பாடியாருக்கு கடுமையான சவால். அவர் அதை சமாளித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இருவரும் நாவன்மை மிக்கவர்களல்லர். இருவரும் எழுத்தாளர்களுமல்லர். இருவரும் மேடைகளில் எழுதி வாசிக்கும் போதே தடுமாறுபவர்கள்.

எடப்பாடியார் 1974இல் அரசியலுக்கு வந்தவர். அது ஸ்டாலின் வந்து 7 ஆண்டுகளின் பின்னர் நடந்தது.

எடபாடியார் தனது விஞ்ஞானப் பட்டப்படிப்பில் தேறவில்லை. ஸ்டாலின் சிறையில் இருக்கும் போது தனது அரசியில் இளங்கலைமானி பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதி சித்தியடைந்தார்.

1984இல் ஸ்டாலின் தனதுமுதல் தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.

1989 சட்ட சபைத் தேர்தல் ஸ்டாலினுக்கு இரண்டாவது தேர்தலாகவும் எடப்பாடியாருக்கு முதல் தேர்தலாகவும் அமைந்தது.

திருச்செங்கோடு தொகுதியில் எடப்பாடியார் வெற்றி ச்பெற்றார். அதே தேர்தலில் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2011இல் அமைச்சர் பதவி: நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள்.

ஸ்டாலின் இரண்டு திரைப்படங்களிலும் இரண்டு தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின் போட்டியிட்ட சட்ட மன்றத் தேர்தல்களில் ஆறில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளார்.

1984இலும் 1991இலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டர். 1996இல் இருந்து கொளத்தூர் தொகுதியில் தொடச்சியாக வெற்றி பெற்று வருகின்றார். தந்தையைப் போலவே இவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டுவதில் எடப்பாடியார் ஸ்டாலினிலும் பார்க்க அதிக சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஈழத்தமிழர்கள் இத்தாலிச் சனியன் என அழைக்க விரும்பும் சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணி தொடருவதை விரும்புகின்றார். அமித் ஷா எப்படி கூட்டணி அமைத்துக் கழுத்தறுப்பது என்பதை மனதில் வைத்தே செயற்படுகின்றார். திமுகவை அழிக்கும் நோக்கமோ வலிமையோ காங்கிரசிடம் இல்லை.

ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியால் ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்து எடப்பாடியார் எதிர் கொள்ளவிருக்கும் பிரச்சனை அண்ணா திமுக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் தேர்வு ஆகும். பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்கள் அதிகம் போட்டியிடுவதை விரும்புவார். எடப்பாடியார் அந்தப் பிரச்சனையை தவிர்க்க சென்ற ஆண்டு போட்டியிட்ட வேட்பாளர்களையே அதிமுக சார்பில் களமிறக்க முனைகின்றார்.

திமுகவில் தற்போது உள்ள பழம் பெரும் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைக்க அதிக முனைப்பு காட்டுகின்றார்கள். அதைச் சமாளிக்க தனது மகன் உதயநிதியை தேர்தலில் போட்டியிடாமல் நிற்பாட்ட ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எடப்பாடியாரும் ஸ்டாலினும் தங்கள் கட்சிகளின் சார்பில் 170இற்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்கள். அறுதிப் பெரும்பான்மையிலும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் அல்லது யார் வெற்றி பெற்றாலும் அவர்களது ஆட்சியை அமித் ஷா முழுங்கி விடுவார் என்ற அச்சம் இருவருக்கும் உண்டு. அமித் ஷா திமுக பெருவெற்றியடையாமல் தடுப்பதற்காகவே அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அமித் ஷா சம்மதித்தார்.

இருவருக்கும் ஈழத்தமிழர் பற்றி அக்கறை இல்லை.

இந்தியாவை ஒரு சிலமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு Oligarchy ஆக மாற்ற நடந்து கொண்டிருக்கும் முயற்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும அறிவு இல்லை. 

தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் திமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் பாஜவிற்கு கட்சி தாவச் செய்து பாஜக் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமனை முதல்வர் பதவியில் அமர்த்துவார் அமித் ஷா என்ற அச்சம் ஸ்டாலினையும் எடப்பாடியாரையும் நிச்சயம் ஆட்டிப்படைக்கும்.


1 comment:

chak said...

Good Analysis

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...