கார்த்திகை மலர்கள் தேர்ந்தெடுத்து
மாலை தொடுமின்
நன்றியினை நெய்யாக்கி நினைவுத்திரியில்
நற்றீபம் வைமின்
ஈழமகளும் தமிழ்மகளும் கால மகளோடு
தியாகப் பண் பாடுமின்
வீர யாழெடுத்து தீர இசை கூட்டி
பக்க வாத்தியமிசைமின்
நெல்லியடி நாயகன் முதல்
அத்தனை தியாகிகளையும்
நினைவு கொள்மின் நினைவு கொள்மின்
புவியில் நிகரில்லாப் புண்ணியரைப்
போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
தாயகக் கனவோடு போன தனயரைப்
போற்றிப் துதித்தேற்ற வேண்டும்
எழுமின் இசைமின் ஏற்றிப் பாடுமின்
நஞ்சணி நெஞ்சினரை நாநிலம்
மறவாதிருக்க போற்றிப் போற்றிப்
பாடுமின் தொழுமின்
கோட்டையைப் பிடித்தமை பாடி
கொக்காவிலைச் சரித்தமை பாடி
கொக்கட்டிச்சோலையில்
மார்தட்டி நின்றமை பாடி
சாஹரவர்த்தனாவை மூழ்கடித்தமை பாடி
நெல்லியடியில் தவிடுபொடியாக்கியமை பாடி
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கியமை பாடி
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுத்தமை பாடி
சீக்கியைரை சிதறடித்தமை பாடி
கூர்காக்களை கூறு போட்டமை பாடி
நீழ்கடலெங்கும் நிமிர்ந்து நின்றமை பாடி
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கியமை பாடி
அம்பாந்தோட்டையில் துணிவோடு தூக்கியமை பாடி
அநுராதபுரத்தில் எல்லாளனாய் நின்றமை பாடிப் பாடிப்
போற்றித் துதிப்போமே துதிப்போமே.
கனியணி மரங்கள் ஆட ஆட
கடலலை ஓயாமல் ஆட ஆட
காற்றலை இசையோடு ஆட ஆட
தீபச் சுடர்கள் ஒளியோடு ஆட ஆட
கார்த்திகை மலர்களும் ஆட ஆட
வேங்கைகளும் வீரமாய் ஆட ஆட
எம் கைகள் உயர்தி பிடித்து
புண்ணியர் புகழ் பாடி ஆடுவோமே
படைக்கலன்கள் தோள்களில் ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர்கள் கூடி ஆர்ப்ப ஆர்ப்ப
நாட்டுக்கெனப் பிறந்தவர் ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் புகழை ஆர்ப்ப ஆர்ப்ப
கடலோடு காற்றும் ஆர்ப்ப ஆர்ப்ப
வானோடு மண்ணும் ஆர்ப்ப ஆர்ப்ப
நாளும் மறக்கக் கூடா நாயகரைப்
போற்றிப் பாடி ஆர்ப்போமே
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment