இந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.
பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.
20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.
இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment