Thursday 14 November 2013

இந்தியாவின் புதிய "துருவ்" ஹெலிக்கொப்டர்கள்

பன்முக நோக்கங்களும் செயற்பாடுகளும் கொண்ட முப்படைகளும் பாவிக்கக் கூடிய துருவ் ஹெலிகாபடர்களை இந்தியா தனது கடற்படையில் முதன் முதலாக சேவையில் அறிமுகப் படுத்தியுள்ளது. 13-11-2013-ம் திகதி கொச்சி துறைமுகத்தில் இந்த ஹெலிகாப்டர் சம்பிர்தாய பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. துருவ் Advanced Light Helicopter (ALH) என்னும் வகையைச் சேர்தவையாகும்.

துருவ் ஹெலிக்கொப்டர்களின் அணி  Indian Naval Air Squadron (INAS) 322 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹெலிக்கொப்டர்கள் இரவிலும் பகலிலும் பயன்படுத்தக் கூடிவை. தாக்குதலிலும் ஈடுபடுத்தலாம் மற்ற தேடி மீட்பு சேவைகளிலும் ஈடுபடுத்தலாம். இவற்றில் கதுவி (ரடார்), ஏவுகணை உணர்கருவி (missile detector), அலைவரிசை குழப்பி (infrared jammer) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தானாகவே செலுத்தப்படும் (self-propelled) டொர்பீடோ ஏவுகணைகள் இரண்டையோ அல்லது நான்கு கப்பல் எதிர் ஏவுகணைகளையோ தாங்கிச் செல்லக் கூடியவை இந்த துருவ் ஹெலிகொப்டர்கள். மணித்தியாலத்திற்கு 265கிலோ மீட்டர் வேகத்தில் இவற்றால் பறக்க முடியும். ஆகக் கூடியது நான்கு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும் இவற்றால் தொடர்ந்து பறக்க முடியும். பறப்புத் தூரம் 700கிலே மீட்டர்களாகும்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...