பிலிப்பைன்ஸ் உலகிலேயே நான்காவது பெரிய புயலால் பாதிக்கப்பட்ட போது அதற்கு உதவுவதற்கு உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டதும் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதரத்தைக் கொண்டதுமான சீனா கஞ்சத்தனம் காட்டுகிறது. ஹையான் புயலால பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸிற்கு சீன செய்த உதவியிலும் பார்க்க சுவிடனின் ஐக்கியா என்னும் தனியார் நிறுவனம் கொடுத்த உதவி அதிகமாகும் என்கிறது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை.
ஐக்கிய அமெரிக்கா இருபது மில்லியன் டொலர்களும் ஜப்பான் பத்து மில்லியன் டொலர்களும் பிலிப்பைன்ஸிற்கு உதவ முன்வந்த போது சீனா இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை மட்டுமே செய்கிறது.
தென் சீனக் கடலில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸுடன் உள்ள எல்லைப் பிரச்சனையே சீனாவின் கஞ்சத்தனத்திற்கு காரணம் எனச் சொல்லப்படுகின்றது. சீனா தான் ஒரு பொறுப்புள்ள வல்லரசு எனக் காட்டி உலகின் நன்மதிப்பைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சீனா தொடர்பான நிபுணர் Zheng Yongnian.
சீனா தென் சீனக்கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் எல்லை தொடர்பாக பல நாடுகளுடன் முரண்படுகின்றது ஆனால் பிலிப்பைன்ஸ் மட்டும் சீனாவை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இழுத்த ஒரு நாடாகும். அத்துடன் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் அதிக நட்புறவை வளர்க்கிறது.
2012இன் முற்பகுதியில் சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் உள்ள Scarborough Shoal என்னும் பாறைத் தீவு தொடர்பாக இரு நாட்டுக் கப்பல்களும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டன.
சீனா எல்லா வல்லரசுகளிலும் பார்க்கப் பெரிதாகி உலகப் பெரு வல்லரசானால்?????
No comments:
Post a Comment