Tuesday 15 October 2013

ஒலியிலும் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய வட கொரிய ஏவுகணைகள்.


ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து கப்பல்களை நோக்கி ஏவக் கூடியவை (ground-to-ship ballistic missile). இவை அதி உயர் வேகத்தில் பாய்வதால் இவற்றை இடை மறிக்க முடியாது.

வட கொரியா உருவாக்கும் ஏவுகணைகள் இரு நூறு முதல் முன்னூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை. இந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் வட கொரியாவுடன் ஈரானும் இணைந்துள்ளது. ஏற்கனவே அணுக்குண்டு உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது.

வட கொரியா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது உண்மையானால் இது தென் கொரியாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ballistic DF-21D ஏவுகணைகள் 1500 கிலோ மீட்டர்கள் பாயக் கூடியவை. இவை அமெரிக்காவின் கடற்படைக்கு இவை பெரும் சவாலாக அமைந்துள்ளன. இத்துடன் வட கொரியா புதிதாக உருவாக்கும் ஏவுகணைகளும் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதுக் கடற்படைக்கு பெரும் ஆபத்தாக அமையும்.

வட கொரியா உருவாக்கும் அதி உயர் வேக ஏவுகணைகள் ஈரானின் கையில் கிடைக்குமாயின் அவற்றால் அது ஹோமஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கனவை நிறைவேற்றலாம். அது உலக எரி பொருள் விநியோகத்தின் 35 விழுக்காட்டை ஈரான் கட்டுப்படுத்தக் கூடிய நிலையை உருவாக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...