Tuesday, 15 October 2013
ஒலியிலும் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய வட கொரிய ஏவுகணைகள்.
ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து கப்பல்களை நோக்கி ஏவக் கூடியவை (ground-to-ship ballistic missile). இவை அதி உயர் வேகத்தில் பாய்வதால் இவற்றை இடை மறிக்க முடியாது.
வட கொரியா உருவாக்கும் ஏவுகணைகள் இரு நூறு முதல் முன்னூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை. இந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் வட கொரியாவுடன் ஈரானும் இணைந்துள்ளது. ஏற்கனவே அணுக்குண்டு உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது.
வட கொரியா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது உண்மையானால் இது தென் கொரியாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.
சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ballistic DF-21D ஏவுகணைகள் 1500 கிலோ மீட்டர்கள் பாயக் கூடியவை. இவை அமெரிக்காவின் கடற்படைக்கு இவை பெரும் சவாலாக அமைந்துள்ளன. இத்துடன் வட கொரியா புதிதாக உருவாக்கும் ஏவுகணைகளும் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதுக் கடற்படைக்கு பெரும் ஆபத்தாக அமையும்.
வட கொரியா உருவாக்கும் அதி உயர் வேக ஏவுகணைகள் ஈரானின் கையில் கிடைக்குமாயின் அவற்றால் அது ஹோமஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கனவை நிறைவேற்றலாம். அது உலக எரி பொருள் விநியோகத்தின் 35 விழுக்காட்டை ஈரான் கட்டுப்படுத்தக் கூடிய நிலையை உருவாக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment