Tuesday 9 July 2013

கவிதை: தமிழன் கேட்டது சப்போட்டாப்பழம்

இறப்பு எல்லோர்க்கும் நிச்சயம்
வாழ்கை எல்லோர்க்கும் நிச்சயமல்ல
உடல் சுமந்து களைத்த கால்கள்
இமை சுமந்து களைத்த கண்கள்
நினைவு சுமந்து களைத்த நெஞ்சம்

வட்டம் அமைத்து வாழ்வதும் வாழ்கையல்ல
திட்டம்மிட்டு வாழ்வதும் வாழ்க்கையல்ல்
சோதிடக் கட்டத்தின்படி செல்வதும் வாழ்க்கையல்ல
ஒழுங்கத்தின் தத்துவ வட்டத்திற்குள்
 திட்டமிட்டுச் செல்வதே வாழ்க்கை.


அவசரப்படுத்தாமல் ஓடும் நேரம்
வில்லங்கப்படுத்தாத துயரங்கள்
தொல்லை கொடுக்காத சிரமங்கள்
நிம்மதியின் தலைநகரம் அது


ஒட்டுனர் யாரென்று தெரியவில்லை
போகுமிடம் எதுவென்றும் புரியவில்லை
தரிப்புக்களில் ஏறுவாரும் உண்டு
இறங்குவாரும் உண்டு
நெருங்குவார் சிலர்
நெருக்குவார் சிலர்
பாடுவார் சிலர்
பரிதவிப்பார் சிலர்

ஹைக்கூ

தமிழன் கேட்டது சப்போட்டாப்பழம்
கொடுத்தது தாழைப்பழம்
பாரத மாதா

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...