எதை நான் இழந்தாலும்
எதிரிக்கு அடங்காத வரை
நான் தோற்காதவனே
எரிகுண்டில் கருகிய கருவறையால்
தீயும் அங்கே களங்கமானது
அவலக் குரல்களில் அலையியக்கங்களால்
காற்றும் அங்கு மாசுபட்டது
சிதறிய உடல்கள் அழுகிப் புதைந்து
நிலமும் அங்கே அழுக்கானது
அலுமினியப் பறவைகளின் கொலைவெறியால்
வானும் அங்கு கறை பட்டது
சிந்திய இரத்தங்கள் கலந்து
நீரும் தூய்மை கெட்டது
மாநிலமும் மாசுபட்டது
மாநிடமும் மாசுபட்டது
நான் ஒரு போராளியின் மனைவி
கணவன் புனர்வாழ்வு முகாமில்
அதனால் வாழ்விழந்தவன்
தேடி அலைவான் படைவீரன்
வார்த்தைகளால் வம்பு செய்வான்
தொண்டர் அமைப்பினன்
தினமும் கதறும் தாய்
விடை சொல்ல முடியாக் கேள்விகள்
தினம் கேட்கும் மகன்
வெறுமை இங்கே கண்ணீரால்
நிரம்பி வழிகிறது
சிரியாவில் குண்டுமழைக்குள் கவிபாடும் சிறுமி
போர் முனையில் போராளியின் கவி வரிகள்
கவி வரிகள் - நான் சிரியாவில் பிறந்தவன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment