நாய் விடு தூது சோனியா காந்திக்கு
நாயே நாயே நாலுகால் நாயே
நெடுகம்பங் காணில் காலது
தூக்கி சிறுநீர்கழி நாயே
நீயும் நின் பெட்டையும்
கீழ்த்திசை சென்று
புது டில்லி நகரேகி
ஜன்பத் தெருவில்
பத்தாம் இலக்கம்
மோப்பம் பிடித்துச் சென்று
சோனியா காந்தி என்றொரு
தமிழின விரோதி கண்டு
விரைந்து வரும்
பொதுத் தேர்ந்தலில்
அவளது கட்சி
கடும் தோல்வியுற்று
ஊழ்வினையால்
ஊழல் வழக்கு பல கண்டு
பெற்ற பேமானி மகனுடன்
நாடுவிட்டோடுவீர் என்றுரைப்பீரே
நரிவிடு தூது - கருணாநிதி
நரியே நரியே
நெஞ்சகம் நிறை
வஞ்சக நரியே
நீயும் நின் காதலியும்
கோபாலபுரமோ
சிஐடி காலனியோ
நானறியேன்
உண்மையாய் நானறியேன்
விசாரித்தறிந்து
நின்னிலும் அதிக
வஞ்சனை நெஞ்டுடை
கருணாநிதியைப் பார்த்து
கறங்கு போல் கிளர்ந்தெழுந்த
மாணவர் எழுச்சியில்
அவர்தம் அரசியல் வாழ்வு
முடிகின்றதென்றுரைப்பீர்
பேய் விடுதூது - ராஜபக்சே
பேயே பேயே
நிலமதில் கால் படாப் பேயே
நீயும் நின் குழாமும்
கொழும்பு நகரேகி
அலரி மாளிகை தேடிப் பிடித்து
ஆங்கே வசிக்கும்
நின்னிலும் கேவலமாய் ஒருத்தன்
மஹிந்த ராஜபக்ச என்போனை
தேடிப் பிடித்து சேதி ஒன்று சொல்லாய்
அவனுக்கு ஆப்பு தயாரகின்றது
பன்னாட்டுச் சட்டத்தின் முன்
அவன் தண்டனை பெறும் நாள்
விரைவில் வருமென்றுரைப்பீர்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

1 comment:
ஆஹா அருமையான கவிதைகள். சத்திமுத்தப்புலவர் வியந்திருப்பார்.
Post a Comment