சிந்தையில் சிலோன் நண்டுக்கறியையும்
சிவத்த அரிசிமாப் பிட்டையும் வைத்துக் கொண்டு
சிவசிவா என்பதுபோல்
கேபி எனும் கட்சி தாவி
ஓட்டைவாய பக்சராஜனின் காலடியில் இருந்து
விட்டெறிந்த பணத்தில் சிலர் கூடி
சுரம் இல்லாமல் கரம் தட்டி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றனர்
இல்லாத நாட்டின் செல்லாத அரசின்
இல்லாத நாற்காலியில்
எனிந்தப் பொல்லாத ஆசை
போரில் இறந்தவன் பெயரைப் பொய்யாகச் சொல்லி
ஊரில் இருந்து வந்த போராளி நானென்றவனுக்கு
ஒன்றாக எழுந்து நின்று நன்றாகக் கைதட்டி
மரியாதை செய்யும் மானம் கெட்ட கும்பல்
நாடாளும் சபையென நாடுதான் ஏற்குமோ
ஔவ்வையவள் அன்று சொன்ன வாக்குப்படி
வேதாளம் சேரும் வெள்ளெருக்குப் பூக்கும்
பாதாள மூலியும் தடையின்றிப் படரும்
பாம்பும் வாடகையின்றிக் குடியிருக்கும் உம்மனைகளில்
செல்லாத ஆட்சியின் இல்லாத கதிரைக்கு
பொல்லாத ஆசைப்பட்டால்
கல்லாத கயவனும் கைகொட்டிச் சிரிப்பான்
பளபளக்க சிவப்பிலும் மஞ்சளிலும்
சீருடை எனச்சொல்லி பேருடை அணிந்து நின்றாலும்
பாராளும் மன்றம் எனப் பல கதை சொன்னாலும்
நம் மனம் ஆளும் மாவீரர் புகழை
நீர் உரைத்தல் முறையோ முறையோ
சிங்களத்தின் சில்லறைக் கைக்கூலிக் கும்பல்கள்
நாட்டை மீட்க வந்தவர் நாமென்று
நாக்கூசாமல் சொல்லுதல் தகுமோ தகுமோ
அமைச்சரவையென்றும் மூதவை என்றும்
முறைகள் பல சொன்னாலும்
படையுமில்லைக் கூழுமில்லை
குடியுமில்லை மதியுடை அமைச்சுமில்லை
நல்லோர் நட்புமில்லை ஆங்கொரு அரணுமில்லை
வள்ளுவனின் வரைவிலக்கணத்துக்குள்
நில்லாத அரசின் இல்லாத நாற்காலியில்
ஏனிந்தப் பொல்லாத ஆசை
முயற்கொம்பில் நீர் ஏறி ஆகாயக் கோட்டை
கட்ட வேண்டாம் காட்டவும் வேண்டாம்
சங்கரென்றும் மில்லரென்றும் மாலதியென்றும்
பாரிஸ் நகரத்து பரிதியென்றும்
பல்லாயிரம் மாவீரர் காட்டிய வழி நமக்குண்டு
அவர் வழியில் நாடொன்று நாம் காண்போம்
அதற்கென ஒரு இளவேனிற் காலம் வரும்
இன்று நாம் இருப்பது இனக் கொலை எதிர்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
1 comment:
உண்மை தான்....மிக சரியாக சொன்னிங்க....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment