Friday 21 December 2012

உலகம் அழியப் போகிறதென்று தலைவர்கள் விட்ட அறிக்கைகள்

 பராக் ஒபாமா: உலகம் அழிய முன்னர் அமெரிக்கா அரச நிதிப் படுகுழியில் (Fiscal Cliff)விழுந்து அழிந்து விடும்.

மஹிந்த ரஜபக்ச: நான் உயிருடன் இருக்கும் வரை நான் தான் இலங்கைக் குடியரசுச் தலைவர். இந்த உலகம் இருக்கும் வரை நான் தான் இலங்கைக் குடியரசுத் தலைவர்.

இரா சம்பந்தன்: உலக அழிவைப்பற்றி என்ன சொல்வது என்பது பற்றி இந்திய வெளிவிகாரத் துறைப் பணிமனையில் கிளார்க்கிடமிருந்து எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை.

ஜெயலலிதா: அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான் தண்டிக்கப்படுவது கடவுளுக்குப் பொறுக்கவில்லை

கருணாநிதி: சகோதர யுத்தத்தால் விடுதலைப்புலிகள் அழிந்தார்கள். அதே சகோதர யுத்தத்தால் உலகமும் அழியப் போகிறது. சகோதர யுத்தத்தால் வரவிருக்கும் பிரச்சனை பற்றி ஸ்டாலினும் அழகிரியும் கனிமொழியும் புரிந்து கொள்ள வேண்டும்.

சோனியா காந்தி: இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ராகுல் பிரதமராகமுன்னர் உலகம் அழிகிறது.

நரேந்திர மோடி: இந்தியாவை நான் அழிக்க முன்னர் உலகம் அழிகிறது.

சோ: லோகத்தில் பிராமணன் கஷ்டப்படுகிறான். பிராமணப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக இருக்கிறார்கள். விபரீத புத்தி விநாச காலே என்று பகவான் சொன்னார். பிராமணன் மேலவனாக இல்லாததால் உலகம் அழிகிறது. மாயன் என்பது கிருஷ்ண பரமாத்மாதான். பாரததில் மாயவனாக வந்தவர் மத்திய அமெரிக்காவில் மாயன் குலத்தை உருவாக்கினார்.

இந்து ராம்: ஈழம் உருவாக முன்னர் உலகம் அழிவது பெரும் நிம்மதியாக இருக்கிறது.

விஜயகாந்த்: மேற்குலகை ஆர்னல்ட் ஸுவர்ஸ்நேகரும் கிழக்குலகை நானும் அழியாமல் பாதுகாப்போம்.

பிரித்தானியப் பிரதமர் டேவி கமரூன்: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிநாடாக உருவெடுக்க முன்னர் உலகம் உலகம் அழிய வேண்டும்.

ஜேர்மன் அதிபர் அஞ்சலா மார்க்கின்: ஐரோப்பா முழுவதையும் ஜேர்மனியர்கள் ஆளமுன்னர் உலகம் அழியாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...