தான் பிறந்த மண்
மாசு படுவதைத்
தாங்காமல் உருகி
மீண்டும் கழுவ வருகிறது
முகில் மழையாக
XXXXXXX
இறங்காமல் தெரியாது
வாழ்க்கை ஆற்றின் ஆழம்
ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட
சிறந்த வழி இன்னொரு பிரச்சனை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயம்
பயங்களை வெல்வதே வாழ்க்கை
XXXXXXXX
வார்த்தைகள் எப்போதும்
திண்ணனார் சிவனுக்குக்
கொடுத்த இறைச்சி போலே
நாம் சுவை பார்த்து
சரி என்றபின்னர்தான்
மற்றவர்களுக்குப்
பரிமாற வேண்டும்
XXXXXXX
கண்ணில் கறையாகிய
உன் விம்பத்தை
கழுவ முடியாமல் தவிக்கும்
கண்ணீர்த் துளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...

2 comments:
கண்ணீர் துளி கவிதை மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
arumai!
Post a Comment