தான் பிறந்த மண்
மாசு படுவதைத்
தாங்காமல் உருகி
மீண்டும் கழுவ வருகிறது
முகில் மழையாக
XXXXXXX
இறங்காமல் தெரியாது
வாழ்க்கை ஆற்றின் ஆழம்
ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட
சிறந்த வழி இன்னொரு பிரச்சனை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயம்
பயங்களை வெல்வதே வாழ்க்கை
XXXXXXXX
வார்த்தைகள் எப்போதும்
திண்ணனார் சிவனுக்குக்
கொடுத்த இறைச்சி போலே
நாம் சுவை பார்த்து
சரி என்றபின்னர்தான்
மற்றவர்களுக்குப்
பரிமாற வேண்டும்
XXXXXXX
கண்ணில் கறையாகிய
உன் விம்பத்தை
கழுவ முடியாமல் தவிக்கும்
கண்ணீர்த் துளிகள்

2 comments:
கண்ணீர் துளி கவிதை மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
arumai!
Post a Comment