பெற்ற தாய் ஈழம் பரிதவிக்கையிலே
அற்ற குளத்துப் பறவைகளாய்
நாம் பறந்தோம் வெளி நாடுகள் நோக்கி
சொந்த நலம் காக்க
தாய் ஈழம் தவிக்கையில்
வெளி நாட்டுவாழ்க்கை
வேண்டாம் எனத் துறந்து
தாயகம் சென்ற செம்மல்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
போராளிகளுக்கு அரசியல்
பாடம் கூறும் ஆசானாய்
தலைமைக்கு மதியுரைக்கும்
பேரறிவாளனாய் வாழ்ந்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
இந்திய ஆக்கிரமிப்பிலே
காட்டிலும் மேட்டிலும்
வெளிநாட்டு மனைவியுடன்
நீரின்றி உணவின்றி
நித்திரையின்றி நிம்மதிதானின்றி
நோய் வாய்ப்பட்டவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
அவர் அங்கள் பல பழுது பட
மருத்துவ வசதிதர இந்தியா மறுக்க
வேதனைகள் சுமந்து வெளிநாடுகள் சென்று
தமிழர்களுக்காய் குரல் கொடுத்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
சரித்திரமும் படைத்து நின்றார்
சரித்திர நூலும் படைத்து நின்றார்
தமிழர் தரித்திரம் துடைக்க வந்த
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
தமிழீழத் தாய் துயர் துடைத்து
அவளுக்கு விடுதலை முடிசூடி
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதே
அவர் ஆன்மாவைச் சாந்தியாக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...

No comments:
Post a Comment