கருவில் என்னைச் சுமந்து
கன துயரங்கள் பொறுத்து
என்னைப் பாலூட்டிச்
தாலாட்டி சீராட்டி
அன்பு பாராட்டி
வளர்த்தாள் என் அன்னை
அவள் பெயர் எனக்குப் பிடிக்கும்
அவளுக்கென இதயம் துடிக்கும்
அன்புமலர் என்றொரு
முன்பள்ளி ஆசிரியை
மென் மொழி பேசி
கருணைப் பார்வை வீசி
அறிவூட்டிய தேவதை
அவர் பெயர் இன்றும்
நெஞ்சில் இனிக்கும் - நினைத்தால்
கண்கள் பனிக்கும்
தாயக விடுதலைப் போரில்
நாயகத்து அமைதிப்படையை
எதிர்த்தாள் போரில் குதித்தாள்
நிகரில்லாமல் இப்பாரில்
மாலதி என்றொருபோராளி
கோப்பாயில் வீரச்சாவடைந்தாள்
முதல் தமிழ்ப் பெண் தியாகி
அவள் பெயரை மனம் மதிக்கும்
என்றும் எண்ணித் துதிக்கும்
அன்பிற்க்கே ஒரு திரு உருவாய்
சேவையின் எண்ணக் கருவாய்
எழைகளுக்கு கரம் கொடுத்தாள்
உலக அன்னை தெரெஸா
அவள் பெயர் என்றும் நிலைக்கும்
எழைகள் நெஞ்சில் இனிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment