Tuesday 25 January 2011

ஆய்வு: குறுந்தகவல்கள்(Text messages) பெண்களை அதிகம் கவருகிறதாம்.


சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுசெய்யப்பட்ட பெண்களில் 80% மானோர் பாரம்பரிய காதல் தெரிவிக்கும் முறையான சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு ஆகியவற்றிலும் பார்க்க குறுந்தகவல்கள் அவர்களை ஆண்களிடம் ஈர்ப்படையச் செய்கின்றனவாம்.

மனோதத்துவ நிபுணர் கலாநிதி பெலிஸா வ்ரனிச் குறுந்தகவல்கள் ஒரு நீண்டகாலமாக ஒன்றாக இருந்ததைப் போன்ற ஒரு போலியான உணர்வை ஏற்படுத்துகிறதாம். இந்தக் கவர்ச்சி பெண்களை படுக்கை வரைக்கும் இட்டுச் செல்லுமாம். நேரில் தெரிவிக்கும் கருத்துக்களிலும் பார்க்க குறுந்தகவல்களால் தெரிவிக்கப்படுபவை அதிக கவர்ச்சியையும் உணர்ச்சியையும் தூண்டுமாம்.

இது மட்டுமல்ல ஆண் பெண் உறவுகளை முறிப்பதிலும் குறுந்தகவல்கள் முன்னணி வகிக்கின்றன. 30% ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு குறுந்தகவல்கள் மூலமாக காதலை முறிக்கும் எண்ணத்தை தெரிவிக்கின்றனராம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...