Tuesday 25 January 2011

நகைச்சுவை: டெல்லி மந்திர சபையில் மின்குமிழ்(bulb) மாற்றம்.


இந்திய மத்திய அரசின் மந்திரசபை அங்கு ஒரு மின்குமிழ் (bulb) பழுதடைந்துவிட்டது. அதை மாற்ற எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? என்ன அமளிதுமளி நடக்கும்.

மந்திர சபையில் உள்ள பலருக்கு மின்குமிழ் மாற்றத் தெரியாது.

ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் மாற்றத் தேவையில்லை என்று.
ஒரு மந்திரி சொன்னார்
மின்குமிழை மாற்றுபவர் தேசத் துரோகி என்று.
ஒரு மந்திரி சொன்னார்
மின்குமிழ் பழுதடைந்ததிற்கு பாக்கிஸ்த்தான் காரணம் என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு காவிப் பயங்கர வாதிகள்தான் காரணம் என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு சீனாதான் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு நக்சலைட்கள் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு இசுலாமியத் தீவிரவாதிகள் காரண்ம என்றுஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு விடுதலைப்புலிகளின் ஊருடுவல் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் நாட்டையே இருட்டில் தானே வைத்திருக்கிறோம் இது என்ன பெரிய வேலை என்று.
ஒரு மந்திரி சொன்னார் மீண்டும் ஒளி வர 1.72இலட்சம் கோடிக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவேண்டும் என்று.

பிரதம மந்திரி மட்டும் தொலை பேசியில்
மின்குமிழ் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் பெண்டகனுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
சென்னையில் கலைஞர் கருணாநிதி மின்னொளி அற்ற நாட்டில் பொன்னொளி ஏற்றிய எம் கூட்டணி ஆட்சி என்று முரசொலியில் கவிதை எழுதினார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...