Saturday, 29 January 2011

செயற்கை பெற்றோல் பிரித்தானியாவில் உருவாக்கம்


தற்போதைய எரி பொருள் விலை அதிகரிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகள் அரபு நாடுகள் மீது பொறாமை கொள்ளவும் எரி பொருட்கள் காரணமாக அமைந்தன. இந்தபிரச்சனை ஒரு மாற்று எரிபொருளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அவசியம் கண்டுபிடிப்பின் தந்தை என்பது ஆங்கிலப் பழமொழி. அதை இப்போது உண்மையாக்கியுள்ளனர் பிரித்தானிய விஞ்ஞானிகள்.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்ரிபன் வொலர் ஐதரசனில் ( hydrogen) இருந்து செயற்க்கை பெற்றோலை உருவாக்கியுள்ளார்.

ஐதரசனில் ( hydrogen) இருந்து உருவாக்கப் படும் பெற்றோல் மலிவானதாகவும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாகவும் இருக்கும்.

ஐதரசனில் ( hydrogen) இருந்து பெற்றோல் உருவாக்க ஒரு கலன் $1.50 மட்டுமே செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐதரசனில் ( hydrogen) இருந்து பெற்றோல் தற்போது உள்ள வாகனக்களிலும் பயன்படுத்த முடியும்.
இப்போது உள்ள பெற்றோல் கரியை (carbon)கருப்பொருளாக கொண்டது ஐதரசனில் ( hydrogen) இருந்து ஐதரசனைக் கருப்பொருளாகக் கொண்டதால் சூழலுக்கு இதனால் சூழலுக்கான பாதிப்புக் குறைவு.

இப்போது ஐதரோகாபனில் ஓடும் வண்டிகளான மகிழூர்திகள் விமானங்கள் போன்றவை இந்தச் செயற்க்கைப்பெற்றோலால் ஓட முடியும்.

Oxford University யில் ஐதரசன் மூலக்கூறுகளைக் நெருக்கி ஒன்றிணைக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கினர்.

இந்த செயற்கைப் பெற்றோல் பொது மக்கள் பாவனைக்கு வர இன்னும் மூன்று வருடங்கள் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

Vinoth Pakkangal said...

அந்த விஞ்ஞானிகளை, நம்ம கார்ப்பரேட் முதலைகள் போட்டுத்தள்ளாம இருக்கணும் சாமி...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...