
இலங்கையில் தமிழர்கள் 62 ஆண்டுகளாக ஒரு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வருகின்றனர். இதற்கு எதிராக எழுபதுகளில் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடக்கினர். 1983இல் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை சிங்களப் பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டனர். அதை அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் ஒரு இனப்படுகொலை என்றார். பின்னர் இந்தியா தமிழர்கள் மீது கரிசனை உள்ளது போல் காட்டிக் கொண்டது. ராஜீவ் காந்தி தனது கொலை வெறிப்படையை இலங்கைக்கு அனுப்பி அங்கு தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். அதை முன்மாதிரியாகக் கொண்டு சிங்களவர்கள் தமது தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரித்தனர். பின்னர் இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்புப் போரை நடாத்தினர். விளைவாக பல இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் இழைக்கப் பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு நெருக்கடிச் சபை, பன்னாட்டு மன்னிப்புச் சபை Human Rights Watch, International Crisis Group, Amnesty International ஆகிய முக்கிய அமைப்புக்கள் கருதுகின்றன. அதற்குரிய ஆதாரங்களையும் அவை முன்வைக்கின்றன.
போர்குற்ற ஆதாரங்கள் தொடர்ந்து வருவதை இனியும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தனக்கு இது தொடர்பாக ஒரு ஆலோசனைச் சபையை அமைத்துள்ளார்.
போர் குற்றம் தொடர்பாக இலங்கை அரசிற்கு எதிராக நெருக்கடிகள் உருவாவத உணர்ந்த இலங்கை அரசு தான் அது தொடர்பாக ஒரு போலி விசாரணைச் சபையை உருவாக்கியது. மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு நெருக்கடிச் சபை, பன்னாட்டு மன்னிப்புச் சபை Human Rights Watch, International Crisis Group, Amnesty International ஆகிய முக்கிய அமைப்புக்கள் இலங்கையின் கடந்தகால விசாரணைக் குழுக்களை ஆதாரம் காட்டி இலங்கை அமைத்த விசாரணைக் குழுவில் தமது அவ நம்பிக்கையை வெளிவிட்டன. ஆனால் இறுதிக்கட்ட போர் தொடர்பில், சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றும் என அமெரிக்க அரசாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் நம்பிக்கை வெளியிட்டார். இது தமிழர் தரப்பினால் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான். இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக அமெரிக்காவிடம் நிறைய செய்மதிப் படங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து இலங்கை பாவித்த தடை செய்யப் பட்ட ஆயுதங்கள், இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டமை ஆகியவற்றை உறுதி செய்ய முடியும். ஆனாலும் அமெரிக்கா இது தொடர்பாக மௌனமாகவே இருக்கிறது.
இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் இஸ்ரேலின் மனித உரிமைமீறல் தொடர்பான ஐநாவின் விசாரணைக்குழுவிற்கு தலைவராக ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியை நியமித்தமை. இலங்கையின் பல மனித உரிமை மீறல்களுக்கு இஸ்ரேல் உதவி செய்தமை நாம் எல்லோரும் அறிவோம். இது எந்தவித திரைமறைவு உடன்படிக்கையின் பேரில் நடந்தது என்பது பெரிய கேள்வி.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு சுதந்திர விசாரணை தேவை என்று அமெரிக்க அரசு பல தடவை அறிவித்திருந்தது. அந்த சுதந்திர விசாரணை ஒரு பன்னாட்டு மட்டத்தில் மேற்கொள்ளப் படவேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் நடந்த போர்குற்றங்களையோ மனித உரிமை மீறல்களையோ விசாரிக்கும் அதிகாரம் அற்றது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதி நிதி பிலிப் அல்ஸ்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். அப்படியானால் இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவைப்பற்றியோ அதன் அதிகாரங்களைப் பற்றியோ அறிந்து கொள்ளாமல் அது நியமிக்கப்பட்டமைக்கு ஹிலரி கிளிண்டன் பாராட்டுத் தெரிவித்தாரா?
ஹிலரி கிளிண்டன் இலங்கை அரசால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுவில் நம்பிக்கை வெளியிட்டிருக்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்ரிபன் ரப் அவர்கள் இலங்கை அரசின் விசாரணைக் குழு சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாக காணப்படவில்லை என்கிறார். அமெரிக்க கொள்கையில் ஏன் இந்த முரண்பாடு?
2 comments:
அமெரிக்கா மிகபெரிய திருடன்
tamilan nai tamilnal kappatra mudiyavilli yan pathu than megavum varutham tharum visayam......
Post a Comment