
அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடன் அங்கு நள்ளிரவில் திருடச் சென்றான். தான் கொண்டு சென்ற பைக்குள் முதற் பொருளை எடுத்து வைக்க முயன்றபோது "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. முதலில் அதிர்ச்சியடைந்த திருடன் பின்னர் தன் மனப் பிரமையாக இருக்கலாம் என்று எண்ணி தனது வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. இப்போது திருடன் சற்று யோசித்துவிட்டு இருளில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் அதே குரல். "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" அவன் காதில் விழுந்தது. இப்போது திருடன் மின்விளக்கை தட்டிவிட்டான். அந்தக் குரல் வந்த இடத்தில் ஒரு கிளி இருந்ததைப் பார்த்து ஆறுதல் அடைந்தான். அந்தக் கிளியை அன்போடு தடவி உன் பெயர் என்ன என்று வினவினான். கிளி அங்கயற்கண்ணி என்றது. ஒரு கிளிக்கு அங்கயற்கண்ணி என்று பெயரா என்று கிளியிடம் ஆச்சரியத்துடன் திருடன் வினவினான். எனக்கு அங்கயற்கண்ணி என்று பெயர் என்று ஆச்சரியப் படாதே. அங்கு பார். உன் குரல் வளையைக் கடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நாய்க்குப் பெயர் சிவபெருமான் என்றது கிளி.
4 comments:
அருமையான நகைச்சுவை...
சில வரிகளே கொண்ட இச்சிருகதை பெரிய அர்த்தத்தோடு...கெஸ்பண்ண முடியாத அளவிற்க்கு...அருமை..அருமை
சுவையான கதை வேல்தர்மா பாராட்டுக்கள்
அருமையான கதை
Post a Comment