
இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை என்ன செய்வது என்பது இலங்கை இந்திய அரசுகளுக்கு பெரும் தலையிடி கொடுக்கும் ஒன்றாக அமைந்து விட்டது. அகப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொல்லப் பட்டமைக்கான புகைப்பட காணொளி ஆதாரங்கள் பல வெளிவந்த வண்ணமுள்ளன. எஞ்சி உள்ளவர்கள் பலர் முடமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் ஆயுதங்கள் தூக்காமல் இருக்க இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்ற போர்வையில் இவர்களைத் திசை திருப்புவது இந்த அரசாங்கங்களிம் முக்கிய நோக்கம். அத்துடன் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தம்மை கொடியவர்களாகக் காட்டாமல் மனிதாபிமானம் உள்ளவர்களாகக் காட்ட வேண்டிய கட்டாயமும் உண்டு.
புனர்வாழ்வு வழங்குவதில் முதலில் இளவயதினருக்கும் திருமணமானவர்களுக்கும் முன்னிடம் கொடுக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து சில காதலர்கள் தம்மை திருமணமானவர்களாகக் காட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சிலர் தம்மைக் காதலர்களாகவும் இலங்கை அரசிடம் காட்டிக் கொண்டனர். சிலர் வேண்டுமென்றே தம்மைக் காதலர்களாகவும் காட்டிக் கொண்டனர். ஒரு அகப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை சந்திக்கச் சென்ற தாய்க்கு மகனுக்கு திருமணம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். ஏனென்றால அவருக்கு வெளியில் ஒர் உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலி இருக்கின்றார். தாய் அறிந்து கொண்ட விடயம் "இது ஒரு நாடகம்"
இலங்கை அரசிற்கு திருமணமாகாதவர்கள் திருமணம் செய்தோம் என்று சொன்னதும் காதலரல்லாதோர் கதலர்கள் என்று சொன்னதும் தெரியும். பொய் சொன்னவர்களுக்குத் தண்டனையாகவும் தனக்கு விளம்பரமாகவும் விவேக் ஒபரோயிடமிருந்து பணம் பிடுங்கவும் செய்யப் பட்ட நடவடிக்கையா?
3 comments:
மீண்டும் ஆயுதப் போராட்டம் தலைதூக்காமல் பார்பதுதான் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் ஒரே எண்ணம்...
All for money...
தமிழர்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பிற்கு எதிராக ஆயுதம் தூக்குவதை யாரும் தடுக்க முடியாது...
Post a Comment