Thursday 25 March 2010

இந்திய சீனக் கள்ளக் காதல் முறிவடைந்தது.


தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் கருத்துப்படி தமிழன் ஆளப்பட வேண்டியவன் இந்தியக் கரையில் ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதுதான் முக்கியம்.
1980களில் அமெரிக்கா இலங்கையின் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கக் கடற்படைக்கான தொலைதொடர்பு வசதிகளையும் ஏற்படுத்த முயன்றபோது அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெகுண்டெழுந்தார். தமிழர்கள் முதுகில் ஏறி அதை முறியடித்தார். அவர் புதல்வன் தமிழர்கள் முதுகில் குத்தினார்.

1987இல் ராஜிவ் காந்தியின் கொலை வெறிப்படையை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப் பட்டபின் தமிழ்த் தேசியம் பலம்பெற்றெழுந்தது. அதை தன்னால் மட்டும் முறியடிக்க முடியாது என்று உணர்ந்த இந்தியா சீனாவுடன் இதற்க்காக ஒரு கள்ளக் காதலை ஏற்படுத்தியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலனையும் ஆட்சியாளர்கள் தம் குடும்ப நலனையும் மட்டும் கருத்தில் கொண்டு இந்தியாவின் பிராந்திய நலனை கோட்டைவிட்டு சீனாவுடன் இந்தக் கள்ளக் காதலை மேற்கொண்டனர். விளைவு சீனா தந்திரமாக அம்பாந்தோட்டையில் தனது தளத்தை தனது இந்தியாவிற்கு போடும் சுருக்குக் கயிறானா முத்து மாலைத் திட்டத்தில் ஒன்றாக அமைத்துக் கொண்டது. தமிழர்களின் தேசிய போராட்டத்தை ஒழிக்க இந்தியா கொடுத்த விலை இது. எதிரிக்கு சகுனம் பிழைக்க தனது முக்கை அறுத்த கதை.

இந்திய சீனக் கள்ளக் காதல் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றும் வரை தொடர்ந்தது. இப்போது சீனா கச்சதீவு வரை வந்த பின் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விழி பிதுங்குகிறார்கள். தமது கள்ளக் காதலையும் முடித்துக் கொண்டனர்.

போர் முடிந்த பின் இலங்கை மீது எந்த அழுத்தமும் பிரயோகிக்க முடியாத சூழ்நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டு விட்டது. இந்தியா இலங்கைமீது ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நிர்ப்பந்தங்களும் கொடுக்க முடியாத கையாலாகாத பரிதாப நிலையில் இருக்கிறது என்பதை இந்திய அரசின் முன்னாள் செயலர் ஆர். சுவாமிநாதன் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த 2009 ஜூலை 7-ம் திகதி நடந்த மாநாட்டில் அதை இவர் இந்தியா நிலை தொடர்பாக அவர் தெரிவித்தது:

I will be very brief in stating my views about India’s role in the present situation (in Srilanka). Politically, India can only be persuasive – not too obtrusively, but persistent in working towards the Tamils being treated as equal citizens the same as the Sinhalas, Muslims etc. On the economic front, India could be as cooperative and helpful as possible. In matters relating to relief and rehabilitation, India could easily display much more activism and involvement.

(These points were made by R.Swaminathan, former Special Secretary (DG-Security), Government of India, to form the basis of his “Chairperson’s Remarks” at a seminar jointly organized by Observer Research Foundation - Chennai Chapter and Stella Maris College, on 7 July 2009.)

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை சர்வதேச ரீதியில் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இப்போது இந்தியாவின் நிலையைப் பற்றி சுவாமிநாதன் கூறியதுடன் இந்திய அரசின் முன்னாள் மேலதிக செயலர் பி. ராமன் அவர்கள் கூறியதை ஒப்பிட்டுப் பார்ப்போம்:
In many articles in the past, I had expressed my fears that once the Srilakan security forces win against the LTTE, the SL Government would try to impose a dictated peace on the Tamils. Those fears remain. All the more reason for India to play the leadership role to ensure that these fears are belied. These fears, even if valid, should not be allowed to inhibit our initiatives in Sri Lanka.
தமிழர்கள்மீது ஒரு சமாதனத்தை சிங்களம் திணிக்காமல் இருக்க இந்தியா ஒரு தலைமைத்துவ நிலையில் நின்று செயற்பட வேண்டும். ஆனால் சுவாமிநாதனின் கூற்றுப்படி இந்தியா தலைமைத்துவ நிலையில் இருந்து செயற்படமுடியாது உள்ளது.

இந்நிலையில் தமிழர்களின் பிரச்சனைக்கு யார் தீர்வு கொடுப்பார்கள்? இதற்குரிய பதிலை கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிவிட்டார்கள்: ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தக் கள்ளக் காதல் முறிவு தமிழர்களுக்கு சாதகமாக அமையக் கூடாது என்பதிலும் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் திட்டம் தமிழர்களைச் சிங்களவர்களுக்கு மீளா அடிமைகளாக்குவதே. அதற்கான சகல முயற்சிகளையும் அவர்கள் இப்போது மேற்கொள்கிறார்கள். 2010 ஏப்ரல் 8ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் தமிழர்கள் பற்பல கூறுகளாக பிரிப்பதிலும் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதையிட்டு அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் மகிழ்ச்சி தெரிவித்தாராம். தமது சாதி நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும் இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் கருத்துப்படி தமிழன் ஆளப்பட வேண்டியவன் இந்தியக் கரையில் ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதுதான் முக்கியம்.

போருக்குப் பின்னரான இலங்கையில் இந்தியா ஓரம் கட்டுப்படுவதை இப்போது உணர்ந்து கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்குகின்றனர். அவர்கள் தமதுஅதிருப்தியை வெளிப்படுத்த இரு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையில் பான் கீ மூனின் நிபுணர்களின் ஆலோசனைச் சபைக்கு கூட்டுச் சேரா நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த போது அதில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை. மற்றது இலங்கை வந்தவுடன் நிருபாமா ராவ் அவர்கள் ஒரு அமெரிக்கப் பயணத்தையும் மேற் கொண்டார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...