Saturday 6 February 2010

பாக்குநீரிணை முள்ளி வாய்க்காலாகுமா


என்வீட்டில் ஒரு நாய் உண்டு
வளமான என் வீட்டைக் காக்க
ஒருவருக்கும் தீங்கு செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

முன் வீட்டுக் கோழி வந்து
என் முற்றத்தை அசிங்கப்படுத்தும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

பின் வீட்டில் இருந்து ஒரு மாடு வந்து
என் தோட்டத்தை நாசமாக்கும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்

பக்கத்து வீட்டில் வாழும் என் தம்பி
தன் நாயோடு என் வீடு வந்தால்
எகிறிப்பாயும் என் நாய்
என் வீடு போர்க்களமாகும்

2010இல் செங்கல்பட்டு
1983இன் வெலிகடையாகிறது
நாளை பாக்குநீரிணை
முள்ளி வாய்க்காலாகுமா

3 comments:

சவுக்கு said...

உங்கள் வலியை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

மலர் said...

ஆஹா அருமை அருமை உங்கள் எழுத்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...

மலர் said...
This comment has been removed by the author.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...