
நாற்பது மணமக்களுக்கு ஒரே மேடையில் திருமணம். நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பால் வந்தது தொல்லை ஒரு மணமகனுக்கு. அம் மணமகன் தன் மனைவியாகப் போகிறவரிடம் கொஞ்சிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பின்புறமாக வந்த சில குண்டுப் பெண்டுகளால் தாக்கப் பட்டார். அவர் என்ன நடக்கிறது என்று உணர முன்னரே தற தறவென அக்குண்டுப் பெண்கள அவரை தாக்கியபடி இழுத்துச் சென்றனர். அவர் செய்தது ஒரு சிறு தவறுதான். ஏற்கனவே திருமணமானதுதான் அத் தவறு. இவர் திருமணம் செய்ய விருப்பதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது மாமியார் தனது சகோதரிகள் சகிதம் அங்கு விரைந்து கைவரிசையைக் காட்டினார். இது நடந்தது பெரு(Peru) நாட்டில்.
அத்துடன் அந்த மாமியார்கள் விடவில்லை. மருமகன்மீது தன் குடும்பத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாக வழக்கும் பதிவு செய்தார்.
எல்லா மாமியார்களும் இப்படி இருந்தால் பெண்கள் ஏமாற்றப் படுவார்களா?
இதன் காணொளியைக் காண கிழே உள்ள முக்கோணத்தில் சொடுக்கவும்.
அல்லது இந்த இணைப்பிற்கு செல்லவும்: மணமகன்.
1 comment:
ஏமாறுவது என்றாலே பெண்தானா? ஏமாற்றுவது என்றாலே ஆண்தானா? எந்த காலத்தில இருக்கீங்க பாஸ்!
Post a Comment