Friday 4 December 2009

திராணி இல்லாத இந்தியாவின் திருகுதாளம் மீண்டும் ஆரம்பம்.


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இந்திய "ராஜ்ய சபா"வில் ஒரு புலம்பல் செய்துள்ளார். இலங்கைப் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணவேண்டும் என்பதுதான் அந்த பிதற்றல். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாணா வேண்டுமாம். அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் முக்கால் வாசிக்கு மேற்பட்டவர்களுக்கு 13வது திருத்தம் என்றால் என்ன வென்றே தெரியாது. அமைச்சருக்கே அதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம். அவரது உதவியாளர்கள் சொன்னதைச் சொல்லியிருக்கலாம்.

பலபலி எடுத்த 13வது திருத்தம்
இலங்கைக்கு இந்தியா அமைதிப்படை என்னும் வெறி நாய்களை அனுப்பி பல கொலைகள் கற்பழிப்புகள் சொத்தழிப்புகள் செய்து இலங்கையின் அரசியல் அமைப்பில் 13வது திருத்தம்(திருகுதாளம்) செய்யப் பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யும் போதே இலங்கைக்கு இந்தியா திரைமறைவில் சொல்லிவிட்டது இதை நிறைவேற்றத் தேவையில்லை என்று. இன்றுவரை அது நிறைவேற்றப் படவில்லை. அதை நிறைவேற்ற இதுவரை இந்தியா இலங்கைக்கு எந்த வற்புறுத்தல்களும் மேற்கொள்ளவில்லை. 22வருடங்களாக அதை நிறைவேற்றத் திராணியில்லாத இந்தியா இபோது மீண்டும் அதைப் பற்றிப் பிதற்றுகிறது. அதற்கும் அப்பால் சென்று தீர்வுகாணவேண்டுமாம். கூரையில் ஏறிக் கோழி பிடிக்க திராணியில்லாத இந்தியா வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டப் போகிறதாம்.

அதிகாரப் பரவலாக்கம் என்பது கெட்டவார்த்தை
சிங்களவர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது மிகமிக கெட்டவார்த்தை. அதை பற்றிப் பேசுபவர்கள் தேசத் துரோகிகிள். 13வது திருத்தம் என்பது அதிகாரத்தில் சிறிதளவு பரவலாக்கம் செய்கிறது. ஆனால் ஒட்டு மொத்த முழு அதிகாரமும் இலங்கை குடியரசுத் தலைவரிடமும் இலங்கைக் பாராளமன்றத்திடமும் இருக்கும்.

வாக்குறுதியை மீறிய அயோக்கிய இந்தியா
இலங்கையின் வடகிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த இந்தியா வடகிழக்கை பிரித்தபோது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்தது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதக் குழுக்களை ஆயுதங்களை கையளிக்கும் படியும் இலங்கைத் தமிழர்களின் பாது காப்புக்கு தான் பொறுப்பு என்றும் 1987இல் உறுதி கூறிய இந்தியா அதன் பின் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப் படுவதற்குக் காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் உலகில் எங்கு நடந்தது?

இன்னும் ஒரு திருகுதாளம்.
இப்போது இந்தியா "13வது அரசியல் அமைப்பிற்கு அப்பால்......" என்ற பதத்தைப் பாவிப்பது இன்னும் மோசமான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய இந்திய மலையாளப் பார்பனக் கொள்கை வகுப்பாளர்கள் தயாராகுகிறார்கள் என்றே எடுக்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...