Wednesday 2 December 2009

விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை இலங்கை கைப்பற்றியுள்ளதாம்.


விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை இலங்கை கைப்பற்றியுள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அம்மூன்று கப்பல்களும் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாம். இது விடுதலைப் புலிகளுக்கு விழுந்த மூன்றாவது பெரிய அடி என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. முதலாவது வன்னியில் புலிகளின் தலைமையை வீழ்த்தியமை(?), இரண்டாவது பத்மநாதனைக் கைப்பற்றியமை என்றும் கப்பல்களைக் கைப்பற்றியமை மூன்றாவது என்றும் தெரிவிக்கப் படுகிறது.

இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் சூடி பிடிக்கத் தொடங்க மஹிந்தவிற்கு இப்படியான செய்திகள் அவசியம் தேவை. இந்தத் தேவையை நிறைவேற்ற இப்படி ஒன்று செய்யப் பட்டதா? சரத் பொன்சேக்கா இல்லாமலே எம்மால் இவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று காட்ட இப்படிச் செய்யப் படுகிறதா? மஹிந்தவின் வெற்றி வேண்டி நிற்கும் இலங்கையின் அயல் நாடு ஒன்றும் இதில் சம்பந்தப் பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகள் இச் செய்தியின் பின்னணியில் எழுகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...