Friday 20 November 2009

வீடு தேடி அலையும் சரத் பொன்சேக்கா


தன் வினை இப்போது தன்னைச் சுடுகிறது. கூடித் தமிழினக் கொலை செய்த சகோதரர்களும் படைத் தளபதியும் இப்போது எதிர் எதிர் அணியில். கொள்ளை அடித்தவர்களிடை கொள்ளையைப் பங்கிடுவதில் மோதல். மனித உரிமைகளை மீறிப் போரில் வென்றவர்கள்(?) வெற்றிக்கான புகழின் பயனை அடைவதில் மோதிக் கொள்கின்றனர்.

சரத் பொன்சேக்கா தன்னால்தான் போரில் வெற்றி கிடைத்ததாக நினைக்கிறார். அதை மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லை. எம்மால்தான் வெற்றியடைந்தீர்கள் என்று வெளியில் சொல்லி வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் இருக்கும் டில்லிக் கும்பல் தனக்குள் சிரித்துக் கொள்கிறது இப்போட்டியைப் பார்த்து. கோபாலபுரத்தில் இருந்து ஒரு முதலை கண்ணீர் வடிக்கிறேன் என்று அறிக்கை விட்டுப் புகழ் தேட முயல்கிறது.

சரத் பொன்சேக்காவை இந்த ஞாயிற்ற்குக் கிழமைக்குள் அவரது அரசால் வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும் படி இலங்கை அரசு பணித்துள்ளது. அவர் ஒரு வீடு தேடி அலைகிறார். அவருக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத் தரப்பில் இருந்து விடுக்கப் பட்ட மிரட்டலால் அவருக்கு யாரும் வீடு கொடுக்கிறார்கள் இல்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே!

1 comment:

Unknown said...

the one who destroyed thousands of house is looking for a house. the one who killed thousands of people will look for some thing soonser.

the one who make the others to kill will face the same.

the one enjoyed others suffering (sadist) will also enojoy his family members sufferings.

Time will come. LTTE members who cheated rthe leader and work for mahintha will stab him back soon

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...