
இலங்கை அரசின் தமிழ் விரோதப் போக்கையும் அட்டூழியங்களையும் உலகநாடுகள் இப்போது உணரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு அரசியல்வாதிகள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.
இலங்கை அரசு இடைத் தங்கல் முகாம்கள் என்ற போர்வையில் வதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அனர்த்தம் காரணமாக ஒரு நாட்டில் வீடிழந்தவர்களுக்கு அரசு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்களை முட்கம்பிகளுக்குள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவேண்டும். இதைத்தான் சகல மனிதாபிமானமுடையோரும் மனிதாபிமான அமைப்புக்களும் நாகரிக வளர்ச்சியடைந்தவர்களும் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருக்கிறது: சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.
இப்ப்டிச் சொல்பவர் ஒரு சாதாரண ஆள் இல்லை பாராளமன்ற உறுப்பினர். வன்னியிலுள்ள பலமுகாம்களில் மெனிக்பாம் முகாமில் மட்டும் ஒருசில மணித்தியாலங்கள் செலவழித்து விட்டு இக்கருத்தை சொல்லியுள்ளார்.
ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்ற உத்தரவின்றி தடுத்து வைத்திருப்பது ஒரு குற்றச் செயலாகும். இலங்கையின் பிரதம நீதியரசரே வன்னி முகாம் பற்றிக் குறிப்பிடுகையில் இதைத் தெரிவித்தார். இப்படி இருக்கையில் இந்தியாவின் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படிக் கூறுவது இந்தியா இன்னும் நாகரீக வளர்ச்சியடைய வில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.
1 comment:
avan oru soniya adimai avanidam veruedhai edirparka mudiyum
Post a Comment