Wednesday 19 August 2009

கனவான் ஒப்பந்தத்தை மீறிய அயோக்கிய ஆரிய பூமி


தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை இராணுவம் நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று.

இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா? என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து.

ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தப் படி தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படக்க வேண்டும். போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். அதைத்தீர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் அபோதைய இலங்கை குடியரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனேயும் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும். இதில் தமிழர்களின் பங்கு என்ன? தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் படி இந்தியா பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கியது,

தமிழர்களுக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதிகள்.
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இவை இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். இவை எழுத்தில் கொடுக்கப்படாத கனவான் ஒப்பந்தம். ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா 1987இல் ஆரம்பித்தது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து அன்றிலிருந்து அரும் பாடுபட்டு 2009இல் புலிகளை அழிக்கும் பணியை முடித்தது. இப்போது சர்வ தேச ரீதியில் விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு ஈடு பட்டுள்ளது.

தமிழர்களுக்கு கிடைத்தவை எவை?

வடக்கும் கிழக்கும் பிரிக்கப் பட்டது.
13-ம் அரசியல் திருத்தம் அமூல் செய்யப் படவில்லை.
தமிழர்கள் நிராயுத பாணியாக்கப் பட்டனர்.
தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப் பட்டனர்.

கனவான் ஒப்பந்தத்தை மீறியவர்கள் அயோக்கியர்களே.
இந்தியா ஒரு அயோக்கிய நாடு என்று அழைக்கப் படாமல் இருக்க:
இப்போது வன்னி முகாம்களில் வதை படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப் பட்டு அவர்கள் மீள் குடியேற்றப் படவேண்டும். இந்த வருட முடிவுக்குள் தமிழர்களது பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இவை நடக்காவிடில்:

தமிழர்களின் முதல் எதிரி இந்தியா.
தமிழர்களின் பிரதான எதிரி இந்தியா.
தமிழர்களுக்கு என்றும் எதிரி இந்தியா.

என்ற முடிவை மட்டும் தான் தமிழர்கள் எடுக்க முடியும்.

1 comment:

வனம் said...

வணக்கம்

\\கனவான் ஒப்பந்தத்தை மீறியவர்கள் அயோக்கியர்களே.\\

ஒரு இந்தியனாய் இதை நான் ஒப்புக்கொள்கின்றேன்

இராஜராஜன்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...