Tuesday 4 August 2009

தமிழ் மீனவர் மீது தாக்குதல்: மானம் கெட்ட இந்தியா என்ன செய்யப் போகிறது?


தமிழ் மீனவர்கள் மீது மீண்டும் சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர். தமிழ் மீனவர்களைத் தாக்கிக் காயப் படுத்தி அவர்களைக் கொள்ளையடித்து நிர்வாணமாக்கி அவமானப் படுத்தியுள்ளது சிங்களக் கடற்படை. இதற்கு எதிராக இந்தியா என்ன செய்யப் போகிறது?

அண்மையில் நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதற்கு இந்தியா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியா தமிழர்களைத் தன்னாட்டுப் குடிமக்கள் என்று எண்ணுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

  • மீனவர்கள் நம்ம "ஜாதி" இல்லை அந்த ஜாதிக்காரங்க இதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று விடப் போகிறார்களா?
  • கொட்டும் மழையில் கைகோத்து நிற்கப் போகிறார்களா?
  • கொடும்பாவி கட்டி எரிக்கப் போகிறார்களா?
  • டெல்லிக்குக் கடிதம் எடுக்கப் போகிறார்களா?
  • நாலு மணித்தியால உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களா?
  • மிகச் சிறந்த பரிகாரம்: நாயிற் கேவலமான ஒரு பத்திரிகை ஆசிரியரை இது தொடர்பாக அறிக்கை விடச் செய்ய வேண்டும். அவருக்கு இதற்குப் பணம் கொடுக்கவேண்டும். அறிக்கையில் கூறப் பட வேண்டியது: இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை இந்தியக் கடற்படையிலும் பார்க்க மரியாதையாக நடாத்துகிறார்கள்.

9 comments:

Unknown said...

India not going to do anythink, becouse all fishmans are TAMILS.

Anonymous said...

யார் அந்த நாயிற் கேவலமான பத்திரிகையாளர்?

Anonymous said...

தமிழனென்று சொல்லடா தலை குனிந்து அடி வாங்கடா!!!

Vel Tharma said...

India is shivering on its boot when it thinks of Srilanka!!!

Anonymous said...

engaL puNNiya poomiyam paarathaththai maanam ketta naadu enru solla nee yaar?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

ஒரு பிரதம மந்திரியைக் கொன்றுவிட்டு அப் பழியை மீனவர்கள் மீது போடுவிடலாம்....

Anonymous said...

ஆளுபவள் ஒரு இத்தாலியாள்...
இதெல்லாம் சகஜமப்பா....

Anonymous said...

Recently I saw Miss Chennai and Chennai Man on Vijya TV being filmed in Sri Lanka. I think the timing couldnt be bad for this event. There are 4 lacks of Tamils in concentration camps without proper food or medicine. some 1000 are dying everyday according to red cross. Our chennai gals and boyz are raving that sri Lanka is amazing and romantic.. That's what mainstream media shows our folks in Delhi.

I think human values are all a piece of sh....t to those who want to make money.. and power.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...