Monday 3 August 2009

சமஷ்டியும் அதிகாரப் பகிர்வும் காணாமல் போகவில்லை கேணல் ஹரிகரன் அவர்களே


இந்திய உளவுத்துறைக்காக இன்னும் பல முன்னாள் அதிகாரிகள் ஊடகங்கள் முலமான பிரச்சாரங்களால் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்பட்டு வருகிறார்கள் அவர்கள் இரண்டு வகைப்படுவர். ஒன்று சிங்களப் பேரின ஆதரவுப் பிரிவு. மற்றது தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக போகமல் இருக்க தமிழின ஆதரவாளர்கள் போல் நடிக்கும் பிரிவு.

சிங்கள பேரின ஆதரவுப் பிரிவு
இப் பிரிவினர் அப்பட்டமாக தமிழ்தேசியத்திற்கு எதிராக எழுதுபவர்கள். இவர்களின் பணி சிங்களப் பேரினவாதிகளை இந்தியாவின் பக்கம் இழுப்பது. இவர்களின் கருத்துக்கள் சிங்களப் பேரின வாதிகளுக்கு அறிவுரை சொல்வது போன்றிருக்கும். ஆனால் அவர்கள் சிங்களப் பேரின வாதிகளை தம் பக்கம் இழுக்கும் முயற்ச்சியில் இதுவரை வெற்றி காணவில்லை. சிங்களப் பேரின வாதிகள் இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இன்றும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் இலங்க்கையில் சீனத் தலையீட்டை எதிர்ப்பதில்லை மாறாக கை நீட்டி வரவேற்கிறார்கள். ஆனாலும் இந்திய உளவுத்துறை என்னும் விக்ரமன் தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராமல் சிங்களப் பேரின வாதம் எனும் உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நேக்கி நடந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களுக்கு ஆதரவு போல் நடிக்கும் பிரிவினர்.
இப்பிரிவினர் இந்தியாவின் செயல்களை அவ்வப் போது கண்டித்து எழுதுவார்கள். இலங்க அரசின் செயற்ப்பாட்டைக் கண்டிப்பார்கள். தமிழர்களின் நிலைப் பாட்டை நியாயப் படுத்துவது போலும் எழுதுவார்கள். ஆனால் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது பிரிந்து போவதுதான் ஒரே வழி என்ற உண்மையை மறைத்து விடுவார்கள். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வு, இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டை இந்தியா மதிக்கிறது என்பன இவர்களது வரட்டு வேதாந்தங்கள். இப்பிரிவின் நோக்கம் இந்தியாவில் தமிழர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் இந்தியா எமது தந்தை நாடு என்ற மாய எண்ணத்தை தமிழர்கள் மத்தியில் விதைப்பது. அதில் இவர்கள் பலத்த வெற்றி கண்டுள்ளனர். இப்பிரிவில் இருந்து இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்ட கேணல் ஹரிகரன் என்பவர் தனது திருவாயால் அண்மையில் கூறியதில் முக்கியமானவை:

சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.

சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.

இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது

கத்துக் குட்டி ராஜீவ்
ஐயா ஹரிகரன் அவர்களே சமஷ்டி என்ற வர்த்தை சிங்களவர்களின் மத்தியில் இருந்து காணமல் போகவில்லை. மாறாக அவர்கள் மத்தியில் இது தமக்கு ஆபத்தான ஒன்று என்று அவர்கள் மந்தில் மிக மிக ஆழமாகப் பதிக்கப் பட்டுவிட்டது .சமஷ்டி என்ற சொல் காணாமல் போயிருந்தால் மீண்டும் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் அது நஞ்சாக்கப் பட்டுவிட்டது.
ஹரிகரன் ஐயா அவர்களே உங்கள் கத்துக் குட்டியான முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கும் இதில் பங்குண்டு. அவர் உதிர்த்த திருவாசகம்: இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்திலும் கூடிய ஒரு தீர்வை தமிழர்களுக்கு வழங்கும் படி நான் இலங்கையை வற்புறுத்தமாட்டேன். இந்தியாவின் இந்த நிலைப் பாட்டிற்கு பிறகு இலங்கைத்தமிழர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன் வைக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

13+ இல் இருந்து 13-விற்கு மாறிய இந்தியா.
இலங்கை இன அழிப்புப் போரை நடாத்திக் கொண்டிருந்த வேளை டெல்லியில் இருந்து வெளிவந்த தகவல்களின் படி இந்தியா இலங்கை பயங்கரவாதத்தை (?) ஒழித்தபின் 13-ம் அரசியல் திருத்தத்திற்கும் அப்பாற் சென்று இன்னும் கூடிய அதிகாரங்களுடனான தீர்வை முன்வைக்கும்படி இலங்கையை வலியுறுத்தும் என்று கூறப் பட்டது. இது அப்போது இந்தியா தமிழினக் கொலையில் தனது நேரடிப் பங்களிப்பை மூடிமறக்க செய்த தந்திரம். இப்போதுஇந்தியா கொடுக்கும் சமிக்ஞை ஏதோ கொடுப்பதை கொடு.

கெடுத்ததெல்லாம் கெடுத்தாய்
யாருக்காகக் கெடுத்தாய்
ஒரு தடவையா கெடுத்தாய்.

3 comments:

Anonymous said...

India will never let Tamils to live peacefully....

Anonymous said...

How many more Tamils you want to kill?

Anonymous said...

இந்தியா என்றால் தமிழ் விரோதி..
தமிழ் விரோதி என்றால் இந்தியா...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...