
இலங்கை அரசாங்கத்தின் அடிவருடிகளின் ஊடகங்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இப்போது புதிதாக ஒரு கதையக் கட்டிவிடுகிறார்கள். பிரபாகரனின் மகனான 14 வயது பாலச்சந்திரனை நிலத்தில் அடித்து இலங்கை இராணுவம் கொலை செய்ததாம்! அதற்கு ஆதாரமாக மேலுள்ள படத்தை வெளியிட்டுள்ளனர். யார் பெற்ற பிள்ளையோ? அதை கண்ணை மூடிக் கொண்டு சேற்றில் படுக்கவைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்தால் நிலத்தில் அடிக்கப் பட்டவர் போலிருக்கிறதா. ஏதாவது இரத்தக் கறை இருக்கிறதா? காயங்கள் ஏதவது இருக்கிறதா? ஒரு படத்தை வெளியிட முன்னர் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? கழுத்தடியில் ஒரு நிழல் போல் இருப்பது இலத்திரனியல் வரை கலை வேலையா?
வேலிக்கு ஓணான் சாட்சி போல யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்கம் என்ற ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவென ஆரம்பிக்கப் பட்ட அமைப்பு இதை உறுதிசெய்துள்ளதாம்!
தமது நீலிக்கண்ணீரின் ஒரு பகுதியாக இலங்கை இராணுவம் இக் கொடூரச் செயலைச் செய்ததாக மாரடித்து அழுதும் உள்ளனர்.
5 comments:
இப்படி சொல்லி சொல்லியே நீங்கள் எல்லாம் கடைசி நேரத்தில் நடந்த துரோக தனக்களை மறைப்பதற்க்கு உடந்தையாகிறிர்கள் ....
இதை சொல்லுகிறவர்களையும் துரோகி என்று பட்டம் சூட்டுகிறீர்கள்
இவர்கள் 1980களில் இருந்தே மோசமான துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள். ஆரிய சிங்களப் பேய்களின் அடிவருடிகள். இவர்களுக்கு துரோகப் பட்டம் புதிதாகச் சூட்டப் படவில்லை.
காயங்கள் படத்தில் இருக்கிறது...அடித்து கொல்லப்பட்வில்லை...சுடப்பட்ட காயங்கள்...
tharma, annoni paarungal. evvalavu kastapadukirar endu. paavam. 30000 tmail makkal mel nindu kondu veriyaadam adikirar. ithu poonda pathivukal ippothu blogs niraya. all paid well. doing their duty.
VKN
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment