
இலங்கையில் இரு ஆயுதக் கிடங்குகள் அடுத்து அடுத்து வெடித்துச் சிதறின. பாவனைக்கு உதவாத தோட்டாக்கள்தான் தற்செயலாக வெடித்துச் சிதறியதாக இலங்கை அரசு அறிவித்தது. முதலாவது யாழ்ப்பாணக்கரையோர மின்பிடிக்கிராமமான மயிலிட்டியில் சென்ற சனிக்கிழமை(06/06/2009) அன்று நடை பெற்றது. அடுத்தது சென்ற செவ்வாய்க்கிழமை 09/06/2006 இலன்று வவுனியா இராணுவத் தலமையகம் அமைந்துள்ள ஈரற்பெரிய குளத்தில் இடம் பெற்றது. இரண்டாவது ஆயுதக் கிடங்கு இலங்கைப் படையினரின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்காகும்.
தற்செயலாக அடுத்தடுத்து இரு ஆயுதக்கிடங்குகள் இலங்கையில் மட்டும்தான் வெடித்துச் சிதறும். இந்த ஆயுதக் கிடங்குகளைத் தாமே அழித்ததாக விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளதாக ஒரு இணையத் தளம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நடந்து கொண்டிருந்த மோதலில் வெளிநாட்டு ஆயுத விற்பனையாளர்களும் உள்ளூர் ஆயுதக் கொள்வனவாளர்களும் பெரும் பணமீட்டினர் என்பது பரவலாகப் பேசப்பட்டது.
இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு
பணம் இறைக்கும் இந்தியாவும் சீனாவும்.
இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைக்க இருக்கின்றன. இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஏதிலிகளாகத் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவி என்ற போர்வையில் பல நாடுகளும் இலங்கைக்கு பணம் உதவவக் காத்திருக்கின்றன.
இலங்கையின் அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்பதற்கு மேற்படி நிதி உட் பாய்ச்சல்கள் பெரிதும் உதவும். அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்ந்த நிலையில் இன்னொரு ஆயுதக் கொள்வனவு மூலம் பெரும் பணமீட்டும் சந்தர்ப்பத்தை யார்தான் நழுவ விடுவார்கள்? இத்துடன்தான் ஆயுதக் கிடங்குளின் அடுத்தடுத்த வெடிப்பை தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்!!!!
No comments:
Post a Comment