Saturday 13 December 2008

பிரிந்தோம் சந்திக்க வில்லை

அமைதிப் படையின் அளவிலா அட்டூழியத்தால்
அம்மன் கோவிலில் அகதிகளாக இருந்த வேளை
திருமஞ்சக் கிணற்றடியில் எம் முதல் சந்திப்பு
அத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும்
தொடர்ந்தது என் தேடல் உன்முகத்தை நாடி
செல்லடியில் சிதைந்த உன் வீட்டின் மதில்கள்
உன் முகத்தை மீண்டும் காட்டித் தந்தது
ஹெலிக்குப் பயந்து ஒடும் போதும்
விமானக் குண்டுக்கு பயந்து ஒதுங்கும் போதும்
நினைவெல்லாம் நீயாக நீங்காத படமாகதேடல் தொடர்ந்தது
அரசடி வீதித் தரிப்பிடத்தில்மீண்டும்
அந்தத் திவ்விய தரிசனம் கிடைக்கும் வரை
கண்களால் பல்லாயிரம் வார்த்தைப் பரிமாற்றம்
மறக்க வொணாத மாதங்கள் கணங்களாக மறைய
அலைகிறான் மகன் அகால வேளைகளில்
இயக்கத்தில் சேர்ந்திட்டானோ சேரப்போகிறானோ
அஞ்சினாள் அம்மா அதிர்ந்தார் அப்பா
அனுப்பினர் வெளிநாட்டிற்கு.
ஊர்களே மாறியது போல் ஊரார்கள் மாறினர்
நீயும் எங்கேயோ சென்று விட்டாய்
பிரிந்தோம் சந்திக்க வில்லை

2 comments:

சினேகிதி said...

:(

thozhi said...

nam kanavukal ellam verum kaanal neerakathan poi vittathu

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...