Monday, 15 December 2008
பகவான் பார்த்துக்குவார்.
காலையில் சுப்ரபாதம் பாடுவேள்
கேட்க நன்னாத்தான் இருக்கும்
சந்தியா வந்தனம் பண்ணுவேள்
சாந்திரப்படி நன்னதுங்கோ
காயத்திரி ஜெபம் சொல்லுவேள்
பாவத்தினை தீர்த்திடுமுங்காணும்
கணபதி ஹோமம் செய்வேள்
விக்னங்கள் போயிடும் பாரும்
லக்ஷ்மி பூஜை பண்ணுவேள்
சகல செளபாக்கியம் கிட்டும்
குபேர பூசை செய்வேள்
சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்
அகத்திக் கீரை சாப்பிடுவேள்
ஷேமமாய் இருப்பீள் அம்பி
துளசித் தீர்த்தம் பருகிடுவீள்
குடலுக்கு நல்லது கேளும்
ஈழத் தமிழனுக்கு அள்ளி வைக்கிறேளே
நீங்க நன்னா இருப்பேளா?
நாசமாய்த்தான் போயிடுவீர்!!
வயிறெரிஞ்சு சொல்றேன்னா
பகவான் பார்த்துக்குவார்!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...

No comments:
Post a Comment