Saturday, 13 December 2008

பரிமாற்றம்.


அன்பினிலே வருகிறது ஒரு கடிதம் இதயம்தான் தபால்காரன்
ஆசையோடு வருகிறது ஒரு கடிதம் கண்கள்தான் தபால்காரன்
நினைவிலே எழுகிறது ஒரு கடிதம் காற்றுத்தான் தபால்காரன்
கனவினிலே கனிகிறது ஒரு கடிதம் யார்தான் தபால்காரன்
.......
அன்பினில் வழிந்தது ஒரு கவிதை உன் இதயம் சேர
உணர்வில் உதித்தது ஒரு கவிதை உன் உடல் நாடி
நினைவில் உதிர்ந்தது ஒரு கவிதை உன் உளம் தேடி
கனவனில் கரைந்தது ஒரு கவிதை என் உயிர் வாடி.

நோயும் நீ மருந்தும் நீ


ஒளி மிளிர் விழி வழி வரு மொழி
என் உயிரழி கொடு வாளி.
.....................
இதழ் கடை வழி அமுதம்
மீள் தரு மொரு வாழ்வு.
..................
நினைவினில் நிதம் நடம் புரியெழில்
துயிலழி ஊழித்தீ.
.................
ஐங்கணை தொடுமவன் தருவலி
போக்கினை என எனையணை.
.......................
நிமலனை நிதம் நினை அடியவர்க்கிணை
யென் மனம் பொடிப்படும் முன்னகையால்.
.................
நின் மலர்க் கரம்பட உரம் பெறும்
என் உடலொடு ஆவி.
.................
மெல்லுடல் பட வரும் கவின்
தரும் ஒரு கவி கோடி
..............
கனவெது நிஜமெது
துயிலெது விழிப்பெது
மயங்குது என் மனம்.

Chat in Facebook

மலேசிய மதுரா மனம் மகிழ உரைப்பாள்
இயல்பான கதைகளால் மனம் கரைப்பாள்
மைலாப்பூர் கணனிக் கன்னி மைதிலி மாமி
மையல் கொடுத்து மறைவாள் ஐயோ சாமி
.........
கொழும்பில் ஓரு குண்டுக் கன்னி நிருபா
கொழுப்போடு என்றும் இங்கு இருப்பா
திமிரோடுதான் தினம் தோறும் கதைப்பா
வாரத்தைகளால் எனைத் தினம் உதைப்பா

..........
வலிய வந்து ஒரு வதனா வம்பளப்பாள்
நெடிய நேரங்கள் கதைகள் அளப்பாள்
படுக்கைக்கு போகிறேன் என்றுரைப்பாள்
உடன் வரவா என்றால் கொதிப்பாள்
......
மாமா என மாலதி எனை அழைப்பாள்
தன் வயதை இப்படித்தான் குறைப்பாள்
கவிதை வரிகளை அள்ளி இறைப்பாள்
அதிலும் அன்பாய்த்தான் கதைப்பாள்
......
அண்ணா என்பாள் அந்தக் கனடியக் கனகா
பண்பாய்த்தான் வார்த்தைகள் மெல்லத் தருவா
காத்திருக்க வேண்டும் அவள் அன்பிற்காக
வாழ்க அவள் என்றும் நன்றாக
........
பத்து நிமிடம் செல்லும் சாந்தி பதிலுக்கு
பலபேரோடு ஒன்றாய் சல்லாபம் அடிப்பாள்
பாலியலை வார்த்தைகளில் அவள் வடிப்பாள்
ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடிப்பாள்
.......
திருவல்லிக்கேணியில் அழகாய் ஒரு திவ்வியா
திட்டித் தீர்பபாள் செருப்பு பிஞ்சிடும் என்பாள் நிஜமா
ஆனாலும் அவள் சொன்னது ஏதோ சரிதான்
பொட்டச்சியளோ சற்றடிப்பது என் பொழப்பு

நினைக்க நேரமில்லை

நெட்ட நெடுந் தெருவில் வற்றாத ஆறு போலோடும்
வாகனத் தொடரிடை சிக்கித் தவிக்கையில்
கடன் அட்டையில் வளரும் நிலுவைதனை
எண்ணி மனம் ஏங்கித் தவிக்கையில் - ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
.......
பிரிட்னியின் அடுத்து வரும் அல்பம் என்னாகும்
கேர்ல்ஸ் அலவுட் அவுட்டாகித்தான் போயிடுவினமா
தொடர் நாடகங்களின் திருப்பங்கள் என்னாகும்.
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
..........
தமிழத் திரைப்படங்கள் நாளும் பல பார்க்க வேண்டும்
பிரியமான கோழிப் பிரியாணி பிரியாமணியுடன் உண்பது போல் - யாரும்
தெரியாமல் பகல் கனவு பலவும் கண்டு மனம் மகிழவேண்டும்
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
.........
பெக்கம் முடிந்தானா மான்யூ அந்தளவும் தானா
ஆசனல் அடிக்குமா நீலச் செல்சி சிதறுமா
லிவப்பூல் இம்முறையாவது கொஞ்சம் தோறுமா
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்

ஓயாத கொலைகள்.




சிறையில் கொன்றனர் வகுப்பறையில் கொன்றனர்
வேலையில் கொன்றனர் நெடுஞ் சாலையில் கொன்றனர்
காலையில் கொன்றனர் அந்தி மாலையில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
.........
கோயிலில் கொன்றனர் வைத்தியசாலையில் நோயினில் கொன்றனர்
பாயினில் கொன்றனர் இளம் சேயினில் கொன்றனர்
வாலிபத்தில் கொன்றனர் வாடும் வயோதிபத்தில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
........
நிலத்தினில் கொன்றனர் நடுக் கடல் நீரில் கொன்றனர்
விண்ணினில் கொன்றனர் கொடுந் தீயினில் கொன்றனர் - கன்னியை
கெடுத்துக் கொன்றனர் கழுத்தை நெரித்துக் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
.......
அமெரிக்க ஆலோசனையுடன் கொன்றனர் இந்திய ஆசியுடன் கொன்றனர்
பாக்கிஸ்த்தான் ஆயுதத்தால் கொன்றனர் சீனப் பணத்தால் கொன்றனர்
இஸ்ரேலிய உளவால் கொன்றனர் ஐரோப்பிய ஆதராவல் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்

அநுமனைத் தேடிய சீதை


பொருத்தமென்றோர் பெருங்கடல்
குடும்பமென்றோர் ஆழ்கடல்
சீதனமென்றோர் கொடுங்கடல்
இக்கடலெல்லாம் தாண்டி
ராமனொடு சேர்த்து வைக்க
அனுமனைத் தேடுகிறாள் சீதை

மேலும் ஒரு பலி

பம்பலப்பிட்டியில் கணக்கியல் கற்கை நெறி வகுப்பில்
என் மேல் மெல்ல விழுந்தது அந்த முதற் பார்வை
என் உடலைத் துளைத்து உயிரை உலுக்கிய பார்வை
என்னுள் ஏதோ ஒன்றைக் கொழுத்தி விட்ட பார்வை
முன்பின் அறியாத புதுமுகம் அதுவானாலும்
முற்பிறப்பிலிருந்து தொடர்ந்து வந்த உறவு போலிருந்தது
தமிழா சிங்களமா அல்லது முஸ்லிமா
எனத் தடுமாற வைக்கும் தோற்றம்
மொழியை மதத்தை இனத்தை நினைக்கவில்லை
எல்லாம் துறந்த நிலை எல்லாம் மறந்த நிலை
பார்வைகளோடு பல வாரங்கள் பறந்து சென்றன
இன்றோடு உலகம் அழியப் போகுது போலோடும்
மனிதரிடைபொறுப்போடு நிதானித்து நின்றது நம் நல் உறவு
முண்டியடித்து பேருந்தில் பாயந்து ஏறும் போது
உனக்கு விட்டுக் கொடுத்ததில் நன்றியாய் வந்த முதற் புன்னகை
புன்னகைகளோடு நாட்கள் பல நகர்ந்து சென்றன
இனப்பகையில் வெடித்திடும் குண்டுகள் சிதறிடும் உடல்கள்
நாள்தோறும் வரும் பல மரணச்செய்திகள்
மீண்டும் வருமா ஒரு இனக் கலவரம் அதுதான் பலர் கேள்வி
இந்த முறை ஒருத்தரையும் உயிரோடு விடாங்களாம்
கப்பல் ஏறிப் போக ஏலாதாம் அகதி முகாமே தேவையில்லையாம்
யார் எது சொன்னாலும் என் காதில் ஏறாது
இந்த உறவைத் தொடர்வதெப்படி வளர்ப்பதெப்படி
அதுவே சிந்தனை அதுவே கனவு அதற்கே வாழ்வு
வகுப்பு அன்றிலை என்றோர் அறிவிப்பு
நான் வெளியே வருகிறேன் நீ உள்ளே வருகிறாய்
நான் உனக்கு கூறிய செய்தியே முதல் வார்த்தைப் பரிமாற்றம்
வார்த்தைப் பரிமாற்றத்தில் வளர்ந்தது நம் உறவு
தாழையடியில் கடற்கரையில் பதுங்கியதுமில்லை
மழைச்சாரலில் ஒரு குடையின் கீழ் நெருங்கியதுமில்லை
சினிமாக் கொட்டகையில் பின்வரிசையில் ஒதுங்கியதுமில்லை
எமக்கு முன்னே எம் நட்பு வட்டத்திற்கு தெரிந்து விட்டது
நாமிருவரும் காதலரென்று கதைகள் பல பரவின
கேட்கும் போதெல்லாம் மகிழ்வை மறைக்கும் கோபம்
நீ உணவு சமைத்து பொட்டலமாகத் தருவாய் நான் உண்ண
என்னை மறந்து நான் வாழ்ந்த அந்த நாட்களில் ஒருநாள்
ஒரு ஐயர் வந்து என் காலில் விழுந்தார்
கண்ணீருடன்நீ தன் மகளென்றார் மானம் காத்திடென்றார்
பிரதமருக்கு ஜாதக தோஷம் நிக்க பூசை செய்பவரென்றார்தான் குடும்பத்தோடு சாவேனென்றார் சாத்திரங்கள் பல சொன்னார்
கால்களில் விழுவதை;த திரைப்படங்களில் மட்டும் பார்த்ததுண்டு
அன்றோடு முடிந்தது நம் உறவு கலைந்தது காதல் கனவு
சாதிய சாத்திரங்களுக்கு இன்னும் ஒரு பலி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...