அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களைத் திருடிய சீன நிறுவனங்களுக்கும் தனியார்களுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்பு எப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைப் பொதி ஒன்றை உருவாக்குகின்றது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றது.
இணையவெளிப் பொருளாதாரத் திருட்டுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் அணுவலு இரகசியங்களில் இருந்து வலையங்களின் தேடுபொறிவரை பல வர்த்தக இரகசியங்களை அமெரிக்காவில் இருந்து சீனர்களால் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
சீனப் அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் தறுவாயில் இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது பிரச்சனைக்கு உரியதாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகின்றது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் அத்து மீறல்கள் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து தொடர்ச்சியாக இணைய வெளியூடாக அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா திருடுவதாக உறுதியாக நம்பும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது எனபதை சீன அதிபரின் பயணத்தின் முன்னர் செய்யபடவிருக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணையவெளித் திருட்டுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கும் தனது நிறைவேற்று ஆணையைப் பிறப்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் வழங்கும் நிறைவேற்று ஆணை ஒரு சட்டமாகும்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலர், சட்டமா அதிபருடனும் வெளியுறவுத் துறைச் செயலருடனும் கலந்து ஆலோசித்து பொருளாதாரத் தடைகளைச் செய்யலாம் என நிறைவேற்று ஆணை குறிப்பிடுகின்றது.
இந்த நிறைவேற்று ஆணையின் முதல் தண்டனையாக சீனாவின் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான பொருளாதாரத் தடையாக அமையப் போகின்றது என எதிர் பார்க்கப் படுகின்றது. அவர்களது சொத்துக்களை முடக்குதல் வியாபார நடவடிக்கைகளை இரத்துச் செய்தல், போன்றவை தண்டனைகளாக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இணைய வெளியூடாக அமெரிக்க இரகசியங்களைத் திருடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத தடை விதிப்பதுடன் அரசுறவியல் நடவடிக்கைகள், வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்றவையும் செய்யப்படலாம். அமெரிக்காவின் பெறுமதி மிக்க இரகசியங்களைத் திருடியவர்கள் தேச எல்லைகள் என்னும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து நின்று தப்ப முடியாது என்றார் பராக் ஒபாமா. மேலும் அவர் எமது தேசத்தின் சொத்துக்களை இணைய வெளியூடாகத் திருடுவுபவர்களுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றார்.
அமெரிக்க உளவுத் துறையினரின் கருத்துப்படி சீனா மட்டுமல்ல அமெரிக்க இரகசியங்களைத் திருடுவது. ஆனால் பெரும்பாலான திருட்டுக்கள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமெரிக்கா சீனப் படைத்துறை அதிகாரிகளின் மீது இணையவெளித் திருட்டுக்காக நிதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவின் Tianjin University இன் மூன்று பேராசிரியர்கள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு சீனாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பது பற்றியும் அமெரிக்காவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது தகவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக எட்வேர்ட் ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.
உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும்
சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது
நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், தரை, கடல், விண்வெளி ஆகியவற்றில் மட்டுமல்ல இணைய வெளியிலும் நடக்க விருக்கின்றது.
Friday, 11 September 2015
Monday, 7 September 2015
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா?
சீனாவின் பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அதன் நாணயத்தின் மதிப்பிழப்பும் சீனாவில் வேதியியல் பொருட்களின் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் சீனா உலகின் முதல் தர நாடாக உருவெடுக்குமா என்ற ஐயத்தை உருவாக்கியது. அத்துடன் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அடக்கப் பட முடியாத ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சீனா சோவியத் ஒன்றியம் போல் சரியப் போவதுமில்லை, ஜப்பானைப் போல் தொடர் பொருளாதார மந்த நிலையில் அமிழ்ந்திருக்கப் போவதுமில்லை. ஆனாலும் சீனாவின் புள்ளி விபரங்கள் மீதான நம்பகத் தன்மையின்மை அதன் பொருளாதாரத்தின் மீதும் படை வலு மீதும் நம்பகத் தன்மையின்மையை ஏற்படுத்துகின்றது.
பலர் ஏறிச் சறுக்கி விழுந்தனர்
1950களில் சோவியத் ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை மிஞ்சுவதுடன் அதை அடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சோவிய ஒன்றியம் இன்று இல்லை. அமெரிக்கா இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1980களில் ஜப்பான் அமெரிக்காவை வாங்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானியப் பொருளாதாரம் இன்று மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. 1990களில் யூரோ நாணயம் அமெரிக்க டொலரை ஓரம் கட்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று யூரோ நாணயம் பெரும் சிக்கலில் இருக்கின்றது. 2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது. இப்போது சீனா தவிக்கின்றது.
அமெரிக்காவிற்கு பொருளாதாரச் சவால்
அமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால் ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன. மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. அவை அமெரிக்காவை பகையாளி ஆக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கவே விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலாந்து சிறப்பான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அதற்கு அமெரிக்காவின் நட்பு அவசியம். பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன.
இரசியா:- கழுதை தொடர்ந்து தேய்கின்றது
இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறு அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 410 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை இரசியா அடைக்க வேண்டியுள்ளது. கடந்த மே மாதத்தின் பின்னர் இரசிய நாணயம் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன் பளு இரசிய நாணயமான ரூபிளில் பெரிதளவு அதிகரித்துள்ளது. இரசியாவை புட்டீன் தனது சோவியத் கால நண்பர்களை முன்னணிப் பதவியில் அமர்த்தி தனது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். இவர்கள் ஒரு மாஃபியாக் கும்பல் போல் செயற்படுகின்றார்கள். புட்டீனின் இந்த நட்பு வட்டத்தைக் குறிவைத்து அமேரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரமாக்கியுள்ளன. இரசியாவின் பல பிராந்தியங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான இரசியா துண்டாடப்படும் அபாயம் உண்டு.
செல்வந்தராக முன்னர் வயோதிபரான சீனா
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழை உழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளர வேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது.
இந்தியா:- மக்களைப் பெற்ற மகராசிக்கு வழிகாட்ட ஆளில்லை
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பல தாம் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறமுடியாத நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப் பட்ட வங்கிகளுக்கு உதவி செய்ய இந்திய மைய அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது. இந்திய வங்கிகள் தமது கடன்களில் 4.3 விழுக்காட்டை அறவிட முடியாமல் இருக்கின்றது இந்த அறவிட முடியாக் கடன் விழுக்காடு சீனாவில் 1.1ஆகவும் அமெரிக்காவில் இரண்டாகவும் இருக்கின்றது. வங்கிகள் கடன் வழங்க தயங்குவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.
சீனாவின் படைத்துறைச் சவால்
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
கடலாளும் அமெரிக்கா
அமெரிக்கக் கடற்படையினர் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை. 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது எனச் சொல்லலாம். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலை முறைகள் முன்னேறியவையாக இருக்கின்றன.
நிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனது கேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.
வலுவுள்ள எதிரியில்லை
1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபாவூடன் அமெரிக்கா தனது உறவைச் சீராக்கி வருகின்றது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை. இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.
பலர் ஏறிச் சறுக்கி விழுந்தனர்
1950களில் சோவியத் ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை மிஞ்சுவதுடன் அதை அடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சோவிய ஒன்றியம் இன்று இல்லை. அமெரிக்கா இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1980களில் ஜப்பான் அமெரிக்காவை வாங்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானியப் பொருளாதாரம் இன்று மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. 1990களில் யூரோ நாணயம் அமெரிக்க டொலரை ஓரம் கட்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று யூரோ நாணயம் பெரும் சிக்கலில் இருக்கின்றது. 2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது. இப்போது சீனா தவிக்கின்றது.
அமெரிக்காவிற்கு பொருளாதாரச் சவால்
அமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால் ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன. மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. அவை அமெரிக்காவை பகையாளி ஆக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கவே விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலாந்து சிறப்பான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அதற்கு அமெரிக்காவின் நட்பு அவசியம். பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன.
இரசியா:- கழுதை தொடர்ந்து தேய்கின்றது
இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறு அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 410 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை இரசியா அடைக்க வேண்டியுள்ளது. கடந்த மே மாதத்தின் பின்னர் இரசிய நாணயம் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன் பளு இரசிய நாணயமான ரூபிளில் பெரிதளவு அதிகரித்துள்ளது. இரசியாவை புட்டீன் தனது சோவியத் கால நண்பர்களை முன்னணிப் பதவியில் அமர்த்தி தனது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். இவர்கள் ஒரு மாஃபியாக் கும்பல் போல் செயற்படுகின்றார்கள். புட்டீனின் இந்த நட்பு வட்டத்தைக் குறிவைத்து அமேரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரமாக்கியுள்ளன. இரசியாவின் பல பிராந்தியங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான இரசியா துண்டாடப்படும் அபாயம் உண்டு.
செல்வந்தராக முன்னர் வயோதிபரான சீனா
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழை உழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளர வேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது.
இந்தியா:- மக்களைப் பெற்ற மகராசிக்கு வழிகாட்ட ஆளில்லை
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பல தாம் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறமுடியாத நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப் பட்ட வங்கிகளுக்கு உதவி செய்ய இந்திய மைய அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது. இந்திய வங்கிகள் தமது கடன்களில் 4.3 விழுக்காட்டை அறவிட முடியாமல் இருக்கின்றது இந்த அறவிட முடியாக் கடன் விழுக்காடு சீனாவில் 1.1ஆகவும் அமெரிக்காவில் இரண்டாகவும் இருக்கின்றது. வங்கிகள் கடன் வழங்க தயங்குவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.
சீனாவின் படைத்துறைச் சவால்
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
கடலாளும் அமெரிக்கா
அமெரிக்கக் கடற்படையினர் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை. 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது எனச் சொல்லலாம். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலை முறைகள் முன்னேறியவையாக இருக்கின்றன.
நிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனது கேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.
வலுவுள்ள எதிரியில்லை
1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபாவூடன் அமெரிக்கா தனது உறவைச் சீராக்கி வருகின்றது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை. இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.
Saturday, 29 August 2015
வட துருவத்தில் ஓர் ஆதிக்கப் பனிப்போர்
பூமியின் வட பகுதியில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகை வரையுள்ள
வட்டப் பகுதியானது ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படுகிறது. ஆர்க்டிக்
வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன்
சதுரமைல் பிரதேசம் ஆர்க்டிக் கண்டம் எனப்படும். உதவாத பனிப்பாறைகளைக் கொண்ட
பிராந்தியம் எனகப் பல ஆண்டுகளாக கருதப்பட்டு வந்த ஆர்க்டிக் கண்டம்
தற்போது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாகக்
கருதப்படுகின்றது.
முன்னை நட்ட கொடி
1909-ம் ஆண்டு ஆர்க்டிக் கண்டத்துக்கு முதலில் சென்ற அமெரிக்கரான ரொபேர்ட் பியரி வடதுருவம் எனப்படும் பூமியின் வட முனையில் அமெரிக்கக் கொடியை நாட்டி இந்தப் பிராந்தியம் அமெரிக்காவினுடையது எனப் பிரகடனப் படுத்தினார். தற்போது நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன.
1909-ம் ஆண்டு ஆர்க்டிக் கண்டத்துக்கு முதலில் சென்ற அமெரிக்கரான ரொபேர்ட் பியரி வடதுருவம் எனப்படும் பூமியின் வட முனையில் அமெரிக்கக் கொடியை நாட்டி இந்தப் பிராந்தியம் அமெரிக்காவினுடையது எனப் பிரகடனப் படுத்தினார். தற்போது நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன.
ஆடாத ஆர்க்டிக் சபை
பூமியின் தென் துருவத்தை ஒட்டிய அண்டார்டிக்கா கண்டத்தை ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் சில நாடுகள் ஆய்வுகளை அங்கு மேற்கொள்கின்றன. ஆர்ஜெண்டீனா, ஒஸ்ரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அண்டார்டிக் கண்டத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட விஞ்ஞான ஆய்வு மையங்களை நிறுவி ஆராய்ச்சிகள் செய்கின்றன. ஆனால் ஆர்க்டிக் கண்டம் தொடர்பாக ஒரு காத்திரமான உடன்படிக்கை ஏதும் செய்யப்படவில்லை. கனடா, டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, இரசியாசுவீடன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூடி ஆர்க்டிக் சபை என ஒன்றை நிறுவியுள்ளன. இவை ஆர்க்டிக்கின் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் அங்கு சிக்குப்பட்டவர்களை மீட்பது தொடர்பாகவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சபை ஒரு அதிகாரமற்ற சபையாகும். ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமைக்கு என ஒரு பன்னாட்டுச் சட்டமோ அல்லது உடன்படிக்கையோ இல்லை. இந்த ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஆர்க்டிக் சபை அமெரிக்காவின் தலைமையில் கீழ் இயங்கவிருக்கின்றது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து ஆர்க்டிக் சபையின் மற்ற நாடுகள் இரசியாவுடன் கடுமையாக முரண்படுகின்றன.
பூமியின் தென் துருவத்தை ஒட்டிய அண்டார்டிக்கா கண்டத்தை ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் சில நாடுகள் ஆய்வுகளை அங்கு மேற்கொள்கின்றன. ஆர்ஜெண்டீனா, ஒஸ்ரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அண்டார்டிக் கண்டத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட விஞ்ஞான ஆய்வு மையங்களை நிறுவி ஆராய்ச்சிகள் செய்கின்றன. ஆனால் ஆர்க்டிக் கண்டம் தொடர்பாக ஒரு காத்திரமான உடன்படிக்கை ஏதும் செய்யப்படவில்லை. கனடா, டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, இரசியாசுவீடன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூடி ஆர்க்டிக் சபை என ஒன்றை நிறுவியுள்ளன. இவை ஆர்க்டிக்கின் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் அங்கு சிக்குப்பட்டவர்களை மீட்பது தொடர்பாகவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சபை ஒரு அதிகாரமற்ற சபையாகும். ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமைக்கு என ஒரு பன்னாட்டுச் சட்டமோ அல்லது உடன்படிக்கையோ இல்லை. இந்த ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஆர்க்டிக் சபை அமெரிக்காவின் தலைமையில் கீழ் இயங்கவிருக்கின்றது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து ஆர்க்டிக் சபையின் மற்ற நாடுகள் இரசியாவுடன் கடுமையாக முரண்படுகின்றன.
இரசிய அமெரிக்கப் போட்டி
ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி ஆர்க்டிக் பிராந்தியம் யாருக்கும் உரித்தானது அல்ல. ஆனால் ஆர்க்டிக் கண்டத்துடன் எல்லையைக் கொண்டுள்ள நாடுகளுக்கு 200 கடல்மைல்கள் தூரம் வரை பொருளாதார உரிமம் உண்டு. கடற்படுக்கைக்கும் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது. அது ஐக்கிய நாடுகளின் கடற்படுக்கைச் சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி உலக மக்களுக்கு சொந்தமானது. இதனால் ஆர்க்டிக் கண்டத்தின் கடற்படுக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுக்கை அதிகாரசபைக்கு சொந்தமானதாகின்றது. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி ஆர்க்டிக்கா 2007 என்னும் பெயரில் இரசியா ஆர்க்டிக் கடற்படுக்கைகு சிறு நீர்மூழ்கிக்கப்பல்களை அனுப்பி அதன் இயந்திரக் கரங்கள் மூலம் கடற்படுக்கையில் தனது கொடியை நாட்டி அங்கிருந்து மணலையும் நீரையும் ஆய்வுகளுக்காக அள்ளிக் கொண்டது. ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர் ஆதர் சிலிங்கரோவ் ஆர்க்டிக் கண்டம் என்றும் இரசியாவிற்குச் சொந்தமானது என்றார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது Coast Guard icebreaker, the USCGC Healy என்னும் கப்பலை ஆர்க்டிக் கண்டத்திற்கு அனுப்பியது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி ஆர்க்டிக் பிராந்தியம் யாருக்கும் உரித்தானது அல்ல. ஆனால் ஆர்க்டிக் கண்டத்துடன் எல்லையைக் கொண்டுள்ள நாடுகளுக்கு 200 கடல்மைல்கள் தூரம் வரை பொருளாதார உரிமம் உண்டு. கடற்படுக்கைக்கும் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது. அது ஐக்கிய நாடுகளின் கடற்படுக்கைச் சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி உலக மக்களுக்கு சொந்தமானது. இதனால் ஆர்க்டிக் கண்டத்தின் கடற்படுக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுக்கை அதிகாரசபைக்கு சொந்தமானதாகின்றது. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி ஆர்க்டிக்கா 2007 என்னும் பெயரில் இரசியா ஆர்க்டிக் கடற்படுக்கைகு சிறு நீர்மூழ்கிக்கப்பல்களை அனுப்பி அதன் இயந்திரக் கரங்கள் மூலம் கடற்படுக்கையில் தனது கொடியை நாட்டி அங்கிருந்து மணலையும் நீரையும் ஆய்வுகளுக்காக அள்ளிக் கொண்டது. ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர் ஆதர் சிலிங்கரோவ் ஆர்க்டிக் கண்டம் என்றும் இரசியாவிற்குச் சொந்தமானது என்றார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது Coast Guard icebreaker, the USCGC Healy என்னும் கப்பலை ஆர்க்டிக் கண்டத்திற்கு அனுப்பியது.
எல்லாமே எண்ணெய்க்குத்தான்.
ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்து பல நாடுகளும் முயல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அங்கு இருக்கும் பெருமளவு எரிபொருள் வளம். இரண்டாவது அங்கு பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருப்பதால் அதனூடாக கப்பற் போக்கு வரத்துச் செய்ய வாய்ப்புண்டு. இதனால் வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடையான வர்த்தகம் இலகுவாகவும் மலிவாகவும் நடக்க வாய்ப்புண்டு. ஆர்க்டிக் கண்டத்தினூடாக ஐந்து வேறு வேறு கடற்ப்பாதைகள் இனம் காணப்பட்டுள்ளன. உலகின் கைத்தொழில் உற்பத்தியில் 80 விழுக்காடு உலகின் வட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஆர்க்டிக்கில் பெரும் கடலுணவுகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. ஆனால் ஆர்க்டிக்கில் எண்ணெய் அகழ்வு செய்வது செலவு மிகுந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலையில் அங்கு எண்ணெய் அகழ்வது இலாபகரமானது அல்ல. ஆனால் காலப்போக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அங்குள்ள எரிபொருள் மிகவும் தேவையானதாக மாறும். அத்துடன் சூழல் வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருக எரிபொருள் அகழ்வது மலிவானதாக மாறலாம். உலகின் பாவனைக்கு உட்படுத்தப்படாத எண்ணெய் வள இருப்பின் 13 விழுக்காடும், எரிவாயு இருப்பின் 30 விழுக்காடும் ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது. யூரேனியம், இரும்பு, செப்பு, நிக்கல் ஆகிய உலோகங்களும் ஆர்க்டிக்கில் இருக்கின்றன. நெதர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி எரிபொருள் நிறுவனமான றோஜல் டச் ஷெல் ஆர்க்டிக் கண்டத்தில் எண்ணெய் அகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்து பல நாடுகளும் முயல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அங்கு இருக்கும் பெருமளவு எரிபொருள் வளம். இரண்டாவது அங்கு பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருப்பதால் அதனூடாக கப்பற் போக்கு வரத்துச் செய்ய வாய்ப்புண்டு. இதனால் வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடையான வர்த்தகம் இலகுவாகவும் மலிவாகவும் நடக்க வாய்ப்புண்டு. ஆர்க்டிக் கண்டத்தினூடாக ஐந்து வேறு வேறு கடற்ப்பாதைகள் இனம் காணப்பட்டுள்ளன. உலகின் கைத்தொழில் உற்பத்தியில் 80 விழுக்காடு உலகின் வட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஆர்க்டிக்கில் பெரும் கடலுணவுகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. ஆனால் ஆர்க்டிக்கில் எண்ணெய் அகழ்வு செய்வது செலவு மிகுந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலையில் அங்கு எண்ணெய் அகழ்வது இலாபகரமானது அல்ல. ஆனால் காலப்போக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அங்குள்ள எரிபொருள் மிகவும் தேவையானதாக மாறும். அத்துடன் சூழல் வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருக எரிபொருள் அகழ்வது மலிவானதாக மாறலாம். உலகின் பாவனைக்கு உட்படுத்தப்படாத எண்ணெய் வள இருப்பின் 13 விழுக்காடும், எரிவாயு இருப்பின் 30 விழுக்காடும் ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது. யூரேனியம், இரும்பு, செப்பு, நிக்கல் ஆகிய உலோகங்களும் ஆர்க்டிக்கில் இருக்கின்றன. நெதர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி எரிபொருள் நிறுவனமான றோஜல் டச் ஷெல் ஆர்க்டிக் கண்டத்தில் எண்ணெய் அகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆளில்லாக் கண்டத்தில் ஆளில்லாப் போர்விமானங்கள்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசியா 80,000படையினரையும், 220 போர் விமானங்களையும் 41 கப்பல்களையும் 15 நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டு ஒரு பாரிய போர் ஒத்திகையை ஆர்க்டிக் பிராந்தியத்தில் செய்தது. 2018-ம் ஆண்டளவில் ஆர்க்டிக் கண்டத்தில் ஒரு தன்னிறைவான படைத்தளம் ஒன்றை அமைக்கும் திட்டம் இரசியாவிடம் உண்டு. நோர்வேயும் "Operation Cold Response"என்னும் குறியீட்டுப் பெயருடன் பல படைத்துறைப் பயிற்ச்சிகளில் நேட்டோப் படைகளுடன் இணைந்து செய்து வருகின்றது. இரசியாவை ஒட்டிய ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள எரிபொருள் வளங்களை பெறுவதற்கு அது ஆண்டு தோறும் 100பில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்ய வேண்டும். அமெரிக்காவின் செய்மதிப்படங்களில் இருந்து இரசியா தனது ஓர்லன் - 10 என்னும் உத்திசார் ஆளில்லாப் போர்விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் நிறுத்தியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கனடாவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் பறப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-52 போர்விமானங்கள் 2015 ஏப்ரல் முற்பகுதியில் ஆர்க்டிக் கண்டத்தில் பறக்க வைத்தது. இது பயிற்ச்சி நோக்கங்களுக்காக என வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இரசியாவிற்கு சவால் விடுவதாகும். இந்தப் பயிற்ச்சி நடவடிக்கைக்கு அமெரிக்கா துருவ உறுமல் எனப் பெயரிட்டிருந்தது. ஆர்க்டிக் பிராந்தியத்தை ஒட்டிய தனது நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது. ஆர்க்டிக் கண்டத்திற்குப் போட்டி போடும் எட்டு நாடுகளில் இரசியாவைத் தவிர மற்றவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசியா 80,000படையினரையும், 220 போர் விமானங்களையும் 41 கப்பல்களையும் 15 நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டு ஒரு பாரிய போர் ஒத்திகையை ஆர்க்டிக் பிராந்தியத்தில் செய்தது. 2018-ம் ஆண்டளவில் ஆர்க்டிக் கண்டத்தில் ஒரு தன்னிறைவான படைத்தளம் ஒன்றை அமைக்கும் திட்டம் இரசியாவிடம் உண்டு. நோர்வேயும் "Operation Cold Response"என்னும் குறியீட்டுப் பெயருடன் பல படைத்துறைப் பயிற்ச்சிகளில் நேட்டோப் படைகளுடன் இணைந்து செய்து வருகின்றது. இரசியாவை ஒட்டிய ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள எரிபொருள் வளங்களை பெறுவதற்கு அது ஆண்டு தோறும் 100பில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்ய வேண்டும். அமெரிக்காவின் செய்மதிப்படங்களில் இருந்து இரசியா தனது ஓர்லன் - 10 என்னும் உத்திசார் ஆளில்லாப் போர்விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் நிறுத்தியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கனடாவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் பறப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-52 போர்விமானங்கள் 2015 ஏப்ரல் முற்பகுதியில் ஆர்க்டிக் கண்டத்தில் பறக்க வைத்தது. இது பயிற்ச்சி நோக்கங்களுக்காக என வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இரசியாவிற்கு சவால் விடுவதாகும். இந்தப் பயிற்ச்சி நடவடிக்கைக்கு அமெரிக்கா துருவ உறுமல் எனப் பெயரிட்டிருந்தது. ஆர்க்டிக் பிராந்தியத்தை ஒட்டிய தனது நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது. ஆர்க்டிக் கண்டத்திற்குப் போட்டி போடும் எட்டு நாடுகளில் இரசியாவைத் தவிர மற்றவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும்.
அடிமாட்டு விலைக்குப் போன அலாஸ்க்கா
ஐக்கிய அமெரிக்காவின் ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமை கோரல் அதற்குச் சொந்தமான அலாஸ்க்கா நிலப்பரப்பில் இருந்து உருவானது. இரசியாவிற்குச் சொந்தமாக இருந்த அலாஸ்க்கா என்னும் வடதுருவப் பிரதேசத்தை அமெரிக்கா ஐம்பது ஏக்கர் ஒரு டொலர் என்ற விலைப்படி 1867-ம் ஆண்டு வாங்கியது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலாஸ்க்காவைப் பிரித்தானியப் பேரரசு ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் இரசியா அமெரிக்காவிற்கு மொத்தம் 7.2 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்தது. ஆனால் அலாஸ்க்கா அமெரிக்காவிற்கு ஒரு பொருளாதார ரீதியில் இலாபமளிக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இருந்ததில்லை. ஆனால் அலாஸ்க்காவிலும் எரிபொருள் வளம் உண்டு. இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான். கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள் பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின் மிக் - 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமை கோரல் அதற்குச் சொந்தமான அலாஸ்க்கா நிலப்பரப்பில் இருந்து உருவானது. இரசியாவிற்குச் சொந்தமாக இருந்த அலாஸ்க்கா என்னும் வடதுருவப் பிரதேசத்தை அமெரிக்கா ஐம்பது ஏக்கர் ஒரு டொலர் என்ற விலைப்படி 1867-ம் ஆண்டு வாங்கியது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலாஸ்க்காவைப் பிரித்தானியப் பேரரசு ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் இரசியா அமெரிக்காவிற்கு மொத்தம் 7.2 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்தது. ஆனால் அலாஸ்க்கா அமெரிக்காவிற்கு ஒரு பொருளாதார ரீதியில் இலாபமளிக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இருந்ததில்லை. ஆனால் அலாஸ்க்காவிலும் எரிபொருள் வளம் உண்டு. இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான். கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள் பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின் மிக் - 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.
சீனாவா கொக்கா
சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும்.
சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும்.
இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளும் கூட
ஆர்க்டிக் கண்டத்தில் அகழ்வு செய்வதற்கும் கடற்பயண உரிமத்திலும் அக்கறை
காட்டுகின்றன. ஆனால் இரசியா மற்ற நாடுகளிலும் பார்க்க ஆர்க்டிக் கண்டத்தில்
முன்னணியில் இருக்கின்றது. அது அங்கு ஏற்கனவே எரிபொருள் அகழ்வைத்
தொடங்கிவிட்டது.
Tuesday, 25 August 2015
அரபு நாடுகளின் பெருமையும் சவுதி அரேபியாவின் தலைமையும்
பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது அரசுகளை உலக வல்லரசுகளாக நிலை நிறுத்தினர். எகிப்த்தின் வரலாற்றுப் பெருமை நிகரில்லாதது. முகம்மது நபி இஸ்லாமிய மார்க்கத்தை உருவாக்கிய பின்னர் கிபி 661ம் ஆண்டு டமஸ்கஸில் நிறுவப்பட்ட உமய்யிட் வம்ச அரசு கிபி 750ம் ஆண்டு வரை பல நாடுகளை ஆளும் பேரரசாக இருந்தது. அதைத் தொடர்ந்து பாக்தாத்தில் உருவான அப்பாஸிட் வம்ச அரசு ஐநூறு ஆண்டுகள் ஒரு பேரரசாக ஆட்சி புரிந்தது. இந்த ஆட்சிக்காலம் அரபுக் கலாச்சாரத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. ஆனால் இன்று சிரியாவும் ஈராக்கும் நாடுகள் என்ற தகுதியை இழக்கும் அளவிற்கு அங்கு உள்நாட்டுப் போர் நடக்கின்றது. எகிப்து தனது பெருமையை இஸ்ரேலுடனான போர்களில் தோல்வியடைந்து தனது பெருமைகளை இழந்து நிற்கின்றது.
அரபுலகம் பின்தங்குமா?
இன்று ஐரோப்பிய நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாகவும், ஆசிய நாடுகள் எல்லாத் துறையிலும் முன்னேறும் நாடுகளாகவும் மற்ற ஆபிரிக்க நாடுகள் வேகமாக அறிவிலும் பொருளாதாரத்திலும் வளரும் வேளையில் பெருமை மிக்க அரபு நாடுகள் பின் தங்கிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் மோசமான உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியா சிதறுபடுமா என்ற அச்சமும் இருக்கின்றது. ஆசியாவில் மக்களாட்சி முறைமை மேம்பட்டுக் கொண்டிருக்கையில் மற்ற ஆபிரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமையில் ஆட்சியை சிறப்பாக நடத்தும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அரபு நாடுகளில் மக்களாட்சி வரும் நிலை அண்மையில் இல்லை. துனிசியா மட்டும் மக்களாட்சியை மிகவும் சிரமப் பட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மொரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, சாட், லெபனான், எகிப்து, சூடான், ஜோர்தான், சிரியா, ஈராக், குவைத், பாஹ்ரேய்ன், கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், யேமன் ஆகிய 19 நாடுகள் அரபு நாடுகளாகும். ஈரான், துருக்கி, கிழக்கு ஆபிரிக்கா தென் அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் அரபுக்கள் வசிக்கின்றனர். அரபுக்களில் 93 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகும். அரபு மொழிபேசும் யூத மதத்தினரை அரபுக்கள் என ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்த்த மத்தைத்தழுவிய அரபுக்கள் இப்போதும் அரபுக்களாகவே கருதப்படுகின்றனர்.
ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு
அரபு நாடுகளிடையே ஒரு ஒற்றுமை என்றும் இருந்ததில்லை. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் அரபு நாடுகளை ஒன்று படுத்த முயன்றார். முதற்கட்டமாக அவர் சிரியாவையும் எகிப்தையும் இணைத்தார். ஆனால் அந்த இணைப்பு நீடிக்கவில்லை. அப்போது அரபு நாடுகளில் சிலவற்றில் மன்னர் ஆட்சியும் சிலவற்றில் மன்னர்களைப் பதவியில் இருந்து விலக்கிய படைத் தளபதிகளின் ஆட்சியும் நிலவின. இந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர். அப்போது எகிப்தின் கமால் நாசர், சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத். லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியவர்கள் உலக அரங்கில் தம்மை இஸ்லாமியர்களாக முன்னிறுத்தாமல் அரபுக்களாக முன்னிறுத்தினர். தமது நாடுகளிலும் மத சார்பற்ற ஆட்சியை நடாத்தினர்.
முரண்பாடுகள்
அரபுக்களின் இரு பெரும் புனித நகரங்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய உலகத்திற்கே தலைமை தாங்க வேண்டிய ஒரு நாடு. ஆனால் அது தன்னை அரபு சுனி இஸ்லாமிய நாடாக முன்னிறுத்துவதால் பல பிரச்சனைகளை உருவாக்கும் நாடாக இருக்கின்றது. அரபுக்களைக் கொண்டிராத துருக்கியுடன் அது இன ரீதியில் முரண்படுகின்றது. சியா முஸ்லிம்களைக் கொண்ட ஈரானுடன் அது இனரீதியாகவும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டு ரீதியாகவும் முரண்படுகின்றது. இஸ்லாமிய அரசு என்பதைப் பிரகடனப் படுத்தியுள்ள ஐ எஸ் அமைப்பு தனது இஸ்லாமிய அரசில் ஈராக், சிரியா, லெபனான், பலஸ்த்தீனம், ஜோர்தான், துருக்கியின் ஒரு பகுதி போன்றவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்றது. அத்துடன் தாம் முழு உலகையும் கைப்பற்றுவோம் என்றும் பாரிஸ், இலண்டன், நியூயோர் நகரங்களின் வீதிகளில் நாம் படுகொலை புரிவோம் என்கின்றது.
இடைவெளியை சவுதி நிரப்புமா?
மற்ற அரபு நாடுகள் பொருளாதாரப் பிரச்சனையாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மோசமான நிலையில் இருக்கையில் வலுவான நிலையில் இருக்கும் சவுதி அரேபியாவால் அரபு நாடுகளுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியுமா? ஐக்கிய அமெரிக்காவும் அரபு நாட்டு உறுதி நிலையைப் பேண சவுதி அரேபியாவும் தோள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. அதன் முதற்படியாக யேமனின் உள்நாட்டுக் குழப்பத்தைத் தீர்க்கும் (தீர்த்துக் கட்டும்) பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டது. ஐக்கிய அரபுக் குடியரசும் சவுதி அரேபியாவிற்குக் கை கொடுக்கின்றது. ஐ எஸ் அமைப்பு சவுதி அரேபியாவிற்கு எதிராகவும் தாக்குதல்கள் செய்கின்றது. ஐ எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 431பேர் சவுதியில் கைசெய்யப்பட்டுள்ளனர். சுனி முஸ்லிம்களைக் கொண்ட பல அரபு நாடுகள் தமக்கு இஸ்ரேலிலும் பார்க்க சியா ஈரானாலும் ஹிஸ்புல்லா அமைப்பினாலும் அதிக ஆபத்து எனக் கருதுகின்றன. அந்த ஆபத்தில் இருந்து சவுதிதான் தம்மைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவை ஈரானை அடக்குவதற்கு இஸ்ரேலுடன் இப்போது பகிரங்கமாக ஒத்துழைக்கின்றன. தற்போது அரபு நாடுகளில் நிலவும் மோசமான சூழ்நிலை ஒரு புவிசார் அரசியல் மீளமைப்பை வேண்டி நிற்கின்றது. ஆனால் அமெரிக்காவின் ஓத்துழைப்பு சவுதி தலைமை தாங்குவதற்கு அவசியமாகும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவது மட்டுமல்ல ஈரானுடனும் தனது உறவை மேம்படுத்த விரும்புகின்றது.
பணத்தில் படைவலிமை
சவுதி அரேபியா ஒரு வலிமை மிக்க படைத்துறையைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவிடமிருந்த்து பல புதிய தர படைக்கலன்களை வாங்கிக் குவித்துள்ளது. ஆனால் சவுதியின் படையினருக்கு போர்க்கள அனுபவம் மிகக் குறைவானதே. இந்த அனுபவமின்மை யேமனில் தற்போது வெளிப்படுகின்றது. அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள், பிரித்தானியாவின் Paveway IV எனப்படும் துல்லியமாகத் தாக்கக் கூடிய வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற படைக்கலன்கள் சவுதி அரேபியப் படைகளின் முக்கிய படைக்கலன்களாகும் 2020-ம் ஆண்டு உலகின் படைத்துறைச் செலவீனப் பட்டியலில் சவுதி ஐந்தாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சவுதியின் பொருளாதாரம் எதிரிக்குச் சகுனப்பிழை
சவுதி அரேபியா பல நாடுகளுடன் நல்லுறவைப் பேணுகின்றது. அதன் அரசுறவு(இராசதந்திரம்) காசோலை அரசுறவு என விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா தனது பணத்தின் மூலம் பன்னாட்டரங்கில் நட்பை வாங்குகின்றது என்பதற்காக இப்படி விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் பொறுப்பைக் கூட எடுக்க முயற்ச்சித்தது. எகிப்து, பாக்கிஸ்த்தான், ஜோர்தான், பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளின் நட்பு சவுதியின் பணத்தால் பெற்ற நட்புக்களே. சவுதியின் பணத்திற்கு ஐக்கிய அமெரிக்காவின் அரசுறவியலாளர்களே விலை போவதுண்டு.
சவுதியின் பொருளாதாரம்
சவுதி அரேபிய மன்னர் குடும்பம் வெறுக்கும் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனத்தைச் சேர்ந்தவரான பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற சவுதி பெரிதும் விரும்புகின்றது. அதற்கு இரசியா தடையாக இருக்கின்றது. இதனால் இரசியாவிற்குப் பாடம் போதிக்க சவுதி முயல்கின்றது. சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையை விழச் செய்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியப் பொருளாதாரம் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது சவுதியின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதியின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு இன்னும் ஒரு நோக்கத்தைக் கொண்டது. எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதால் புதிய எரிபொருள் அகழ்வு முயற்ச்சிகள் பல இடை நிறுத்தப்படுகின்றன. எரிபொருள் வீழ்ச்சி சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதி இப்போது 27பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. சவுதி நீண்ட கால எரிபொருள் விலை ஆகக்க் குறைந்தது 85 டொலர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றது ஆனால் தற்போது 50 டொலர்களுக்கும் குறைவாக இருக்கின்றது. இது சவுதியின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. ஈரான் தனது நிதி நிலைமையைச் சமாளிக்க எரிபொருள் விலை 130 டொலர்களுக்கு மேலும் இரசியாவிற்கு 105 டொலர்களுக்கு மேலும் இருக்க வேண்டும்.
உறுதியான மன்னர் ஆட்சி தொடருமா
சவுதி அரேபியாவின் மன்னராக தற்போது இருக்கும் சல்மன் பின் அப்துலஸீஸ் அல் சவுத் அவர்களுக்குப் பின்னர் ஓர் வாரிசுப் போட்டி உருவாகலாம். முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயீஃபிற்கும் துணை இளவரசர் மொஹமட் பின் சல்மனுக்கும் இடையில் வாரிசுப் போட்டி உருவாக வாய்ப்புண்டு என அரசியல் நோக்குனர்கள் கருதுகின்றனர். மன்னர் ஓய்வு பெறும் போது அவருக்குப் பிடித்தவரும் அவரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் துணை இளவரசரை அரசராக முடி சூட்டலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒரு வழமைக்கு மாறான செயலாகும். இதனால் சவுதியில் ஒரு வாரிசுப் போட்டியும் உள்நாட்டுக் குழப்பமும் உருவாகலாம்.
அரபு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் போல் ஆசியான் போல் தமக்குள்ளே வலுவான ஒரு நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். வளைகுடா ஒத்துழைப்பு ஒன்றியம் தற்போது உள்ளதிலும் பார்க்க சிறந்த ஓர் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே இது பற்றிய முன்மொழிவுகள் மற்ற நாடுகளால் முன்வைக்கப்பட்ட போது சவுதி அரேபியா அதை எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போல் ஒரே மாதிரியான மனித உரிமை நிலைப்பாடு, எல்லைப் பிரச்சனை இன்மை, ஒருவருக்கு ஒருவர் பொருளாதாரக் கைகொடுப்பு , பொதுவான கலாச்சாரம் ஆகியவற்றை அரபு நாட்டில் உருவாக்க முடியும்.
அரபுலகம் பின்தங்குமா?
இன்று ஐரோப்பிய நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாகவும், ஆசிய நாடுகள் எல்லாத் துறையிலும் முன்னேறும் நாடுகளாகவும் மற்ற ஆபிரிக்க நாடுகள் வேகமாக அறிவிலும் பொருளாதாரத்திலும் வளரும் வேளையில் பெருமை மிக்க அரபு நாடுகள் பின் தங்கிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் மோசமான உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியா சிதறுபடுமா என்ற அச்சமும் இருக்கின்றது. ஆசியாவில் மக்களாட்சி முறைமை மேம்பட்டுக் கொண்டிருக்கையில் மற்ற ஆபிரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமையில் ஆட்சியை சிறப்பாக நடத்தும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அரபு நாடுகளில் மக்களாட்சி வரும் நிலை அண்மையில் இல்லை. துனிசியா மட்டும் மக்களாட்சியை மிகவும் சிரமப் பட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மொரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, சாட், லெபனான், எகிப்து, சூடான், ஜோர்தான், சிரியா, ஈராக், குவைத், பாஹ்ரேய்ன், கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், யேமன் ஆகிய 19 நாடுகள் அரபு நாடுகளாகும். ஈரான், துருக்கி, கிழக்கு ஆபிரிக்கா தென் அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் அரபுக்கள் வசிக்கின்றனர். அரபுக்களில் 93 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகும். அரபு மொழிபேசும் யூத மதத்தினரை அரபுக்கள் என ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்த்த மத்தைத்தழுவிய அரபுக்கள் இப்போதும் அரபுக்களாகவே கருதப்படுகின்றனர்.
ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு
அரபு நாடுகளிடையே ஒரு ஒற்றுமை என்றும் இருந்ததில்லை. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் அரபு நாடுகளை ஒன்று படுத்த முயன்றார். முதற்கட்டமாக அவர் சிரியாவையும் எகிப்தையும் இணைத்தார். ஆனால் அந்த இணைப்பு நீடிக்கவில்லை. அப்போது அரபு நாடுகளில் சிலவற்றில் மன்னர் ஆட்சியும் சிலவற்றில் மன்னர்களைப் பதவியில் இருந்து விலக்கிய படைத் தளபதிகளின் ஆட்சியும் நிலவின. இந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர். அப்போது எகிப்தின் கமால் நாசர், சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத். லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியவர்கள் உலக அரங்கில் தம்மை இஸ்லாமியர்களாக முன்னிறுத்தாமல் அரபுக்களாக முன்னிறுத்தினர். தமது நாடுகளிலும் மத சார்பற்ற ஆட்சியை நடாத்தினர்.
முரண்பாடுகள்
அரபுக்களின் இரு பெரும் புனித நகரங்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய உலகத்திற்கே தலைமை தாங்க வேண்டிய ஒரு நாடு. ஆனால் அது தன்னை அரபு சுனி இஸ்லாமிய நாடாக முன்னிறுத்துவதால் பல பிரச்சனைகளை உருவாக்கும் நாடாக இருக்கின்றது. அரபுக்களைக் கொண்டிராத துருக்கியுடன் அது இன ரீதியில் முரண்படுகின்றது. சியா முஸ்லிம்களைக் கொண்ட ஈரானுடன் அது இனரீதியாகவும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டு ரீதியாகவும் முரண்படுகின்றது. இஸ்லாமிய அரசு என்பதைப் பிரகடனப் படுத்தியுள்ள ஐ எஸ் அமைப்பு தனது இஸ்லாமிய அரசில் ஈராக், சிரியா, லெபனான், பலஸ்த்தீனம், ஜோர்தான், துருக்கியின் ஒரு பகுதி போன்றவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்றது. அத்துடன் தாம் முழு உலகையும் கைப்பற்றுவோம் என்றும் பாரிஸ், இலண்டன், நியூயோர் நகரங்களின் வீதிகளில் நாம் படுகொலை புரிவோம் என்கின்றது.
இடைவெளியை சவுதி நிரப்புமா?
மற்ற அரபு நாடுகள் பொருளாதாரப் பிரச்சனையாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மோசமான நிலையில் இருக்கையில் வலுவான நிலையில் இருக்கும் சவுதி அரேபியாவால் அரபு நாடுகளுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியுமா? ஐக்கிய அமெரிக்காவும் அரபு நாட்டு உறுதி நிலையைப் பேண சவுதி அரேபியாவும் தோள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. அதன் முதற்படியாக யேமனின் உள்நாட்டுக் குழப்பத்தைத் தீர்க்கும் (தீர்த்துக் கட்டும்) பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டது. ஐக்கிய அரபுக் குடியரசும் சவுதி அரேபியாவிற்குக் கை கொடுக்கின்றது. ஐ எஸ் அமைப்பு சவுதி அரேபியாவிற்கு எதிராகவும் தாக்குதல்கள் செய்கின்றது. ஐ எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 431பேர் சவுதியில் கைசெய்யப்பட்டுள்ளனர். சுனி முஸ்லிம்களைக் கொண்ட பல அரபு நாடுகள் தமக்கு இஸ்ரேலிலும் பார்க்க சியா ஈரானாலும் ஹிஸ்புல்லா அமைப்பினாலும் அதிக ஆபத்து எனக் கருதுகின்றன. அந்த ஆபத்தில் இருந்து சவுதிதான் தம்மைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவை ஈரானை அடக்குவதற்கு இஸ்ரேலுடன் இப்போது பகிரங்கமாக ஒத்துழைக்கின்றன. தற்போது அரபு நாடுகளில் நிலவும் மோசமான சூழ்நிலை ஒரு புவிசார் அரசியல் மீளமைப்பை வேண்டி நிற்கின்றது. ஆனால் அமெரிக்காவின் ஓத்துழைப்பு சவுதி தலைமை தாங்குவதற்கு அவசியமாகும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவது மட்டுமல்ல ஈரானுடனும் தனது உறவை மேம்படுத்த விரும்புகின்றது.
பணத்தில் படைவலிமை
சவுதி அரேபியா ஒரு வலிமை மிக்க படைத்துறையைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவிடமிருந்த்து பல புதிய தர படைக்கலன்களை வாங்கிக் குவித்துள்ளது. ஆனால் சவுதியின் படையினருக்கு போர்க்கள அனுபவம் மிகக் குறைவானதே. இந்த அனுபவமின்மை யேமனில் தற்போது வெளிப்படுகின்றது. அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள், பிரித்தானியாவின் Paveway IV எனப்படும் துல்லியமாகத் தாக்கக் கூடிய வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற படைக்கலன்கள் சவுதி அரேபியப் படைகளின் முக்கிய படைக்கலன்களாகும் 2020-ம் ஆண்டு உலகின் படைத்துறைச் செலவீனப் பட்டியலில் சவுதி ஐந்தாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சவுதியின் பொருளாதாரம் எதிரிக்குச் சகுனப்பிழை
சவுதி அரேபியா பல நாடுகளுடன் நல்லுறவைப் பேணுகின்றது. அதன் அரசுறவு(இராசதந்திரம்) காசோலை அரசுறவு என விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா தனது பணத்தின் மூலம் பன்னாட்டரங்கில் நட்பை வாங்குகின்றது என்பதற்காக இப்படி விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் பொறுப்பைக் கூட எடுக்க முயற்ச்சித்தது. எகிப்து, பாக்கிஸ்த்தான், ஜோர்தான், பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளின் நட்பு சவுதியின் பணத்தால் பெற்ற நட்புக்களே. சவுதியின் பணத்திற்கு ஐக்கிய அமெரிக்காவின் அரசுறவியலாளர்களே விலை போவதுண்டு.
சவுதியின் பொருளாதாரம்
சவுதி அரேபிய மன்னர் குடும்பம் வெறுக்கும் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனத்தைச் சேர்ந்தவரான பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற சவுதி பெரிதும் விரும்புகின்றது. அதற்கு இரசியா தடையாக இருக்கின்றது. இதனால் இரசியாவிற்குப் பாடம் போதிக்க சவுதி முயல்கின்றது. சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையை விழச் செய்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியப் பொருளாதாரம் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது சவுதியின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதியின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு இன்னும் ஒரு நோக்கத்தைக் கொண்டது. எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதால் புதிய எரிபொருள் அகழ்வு முயற்ச்சிகள் பல இடை நிறுத்தப்படுகின்றன. எரிபொருள் வீழ்ச்சி சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதி இப்போது 27பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. சவுதி நீண்ட கால எரிபொருள் விலை ஆகக்க் குறைந்தது 85 டொலர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றது ஆனால் தற்போது 50 டொலர்களுக்கும் குறைவாக இருக்கின்றது. இது சவுதியின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. ஈரான் தனது நிதி நிலைமையைச் சமாளிக்க எரிபொருள் விலை 130 டொலர்களுக்கு மேலும் இரசியாவிற்கு 105 டொலர்களுக்கு மேலும் இருக்க வேண்டும்.
உறுதியான மன்னர் ஆட்சி தொடருமா
சவுதி அரேபியாவின் மன்னராக தற்போது இருக்கும் சல்மன் பின் அப்துலஸீஸ் அல் சவுத் அவர்களுக்குப் பின்னர் ஓர் வாரிசுப் போட்டி உருவாகலாம். முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயீஃபிற்கும் துணை இளவரசர் மொஹமட் பின் சல்மனுக்கும் இடையில் வாரிசுப் போட்டி உருவாக வாய்ப்புண்டு என அரசியல் நோக்குனர்கள் கருதுகின்றனர். மன்னர் ஓய்வு பெறும் போது அவருக்குப் பிடித்தவரும் அவரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் துணை இளவரசரை அரசராக முடி சூட்டலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒரு வழமைக்கு மாறான செயலாகும். இதனால் சவுதியில் ஒரு வாரிசுப் போட்டியும் உள்நாட்டுக் குழப்பமும் உருவாகலாம்.
அரபு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் போல் ஆசியான் போல் தமக்குள்ளே வலுவான ஒரு நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். வளைகுடா ஒத்துழைப்பு ஒன்றியம் தற்போது உள்ளதிலும் பார்க்க சிறந்த ஓர் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே இது பற்றிய முன்மொழிவுகள் மற்ற நாடுகளால் முன்வைக்கப்பட்ட போது சவுதி அரேபியா அதை எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போல் ஒரே மாதிரியான மனித உரிமை நிலைப்பாடு, எல்லைப் பிரச்சனை இன்மை, ஒருவருக்கு ஒருவர் பொருளாதாரக் கைகொடுப்பு , பொதுவான கலாச்சாரம் ஆகியவற்றை அரபு நாட்டில் உருவாக்க முடியும்.
Monday, 24 August 2015
வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் ஒலி பெருக்கிப் போர்
நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பல காரணங்களுக்காக மோதல் நடப்பதுண்டு. ஆனால் வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் விசித்திரமன ஒரு காரணத்திற்காக மோதலும் அது தொடர்பான உயர்மட்டப் பேச்சு வார்த்தையும் நடந்தது. தென் கொரிய தனது பகை நாடான வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகள் மூலம் வட கொரியாவின் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா தென் கொரியாவின் ஒலிபெருக்கிகள் மீது எறிகணைகள் வீசியது. பதிலுக்கு தென் கொரியாவும் எறிகணைகள் வீசியது. இதைத் தொடர்ந்து வட கொரியா தனது படைகளை ஒரு போருக்குத் தயாராகும் படி உத்தரவிட்டு நாட்டில் ஓர் அரைப் போர் நிலைப் பிரகடனம் செய்தது. இத்தனையும் தென் கொரியாவும் அதன் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஒரு போர் ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது நடந்தது. ஒத்திகையின் குறியீட்டுப் பெயர் வடகொரியத் தலைநகர் "பியாங்யாங்கை ஆக்கிரமித்தல்"
கண்ணி வெடியில் இருந்து ஒலிபெருக்கி
2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி ஆரம்பமான ஒலிபெருக்கிகளூடான பரப்புரை இருநாடுகளுக்கும் இடையில் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. 11 நிலைகளில் இருந்து தென் கொரியா ஒலிபெருக்கி மூலமான பரப்புரையைச் செய்தது. பரப்புரை பெரும்பாலும் மக்களாட்சியைப் பற்றியதாக இருந்ததுடன். உலகச் செய்திகள் கால நிலை அறிக்கை ஆகியவற்றையும் உள்ளடக்கி இருந்தது. இரு நாடுகளும் எல்லையில் மற்ற நாட்டுக்கு எதிராக ஒலிபெருக்கி மூலம் பரப்புரைகள் செய்து ஒன்றை ஒன்று ஆத்திரபப்டுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு உடன்பாட்டுக்கு வந்தன. ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப் படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.
+
இரு கொரியாக்களின் வலிமை
உலகிலேயே இரு மோசமான அயல் நாடுகளாக தென் கொரியாவும் வட கொரியாவும் இருக்கின்றன. ஓர் இனம். இரு நாடு. பிளவுபட்டு அறுபது ஆண்டுகள் ஆகியும் அமைதியற்ற அயலவர்களாக வாழ்கின்றனர். உலகிலேயே அதிக அளவு படையினர் குவிக்கப்பட்ட எல்லையாக வட மற்றும் தென் கொரிய எல்லைகள் இருக்கின்றன. 28,500 ஐக்கிய அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருக்கின்றன. வட கொரியாவின் மக்கள் தொகை 24 மில்லியன்கள் தென் கொரியாவின் மக்கள் தொகை 49 மில்லியன்கள். நாடுகளின் படைவலுவை மதிப்பீடு செய்து தரப்படுத்தும் Global Fire Power Ranking இன் கணிப்பின் படி படைவலுவில் வட கொரியா 36-ம் இடத்திலும் தென் கொரியா 7-ம் இடத்திலும் இருக்கின்றன.
தென் கொரியாவிடம் 23 நீர்மூழ்கிக் கப்பல்களும் வட கொரியாவிடம் 72 நீர்முழ்கிக் கப்பல்களும் இருக்கின்றன. Frigates வகைக் கப்பல்கல் தென் கொரியாவிடம்14 வட கொரியாவிடம் 3. நாசகாரிகள் எனப்படும் Destroyers போர்க்கப்பல்கள் தென் கொரியாவிடம் ஆறு வட கொரியாவிடம் ஏதுமில்லை
இரு நாடுப் படைகளையும் 80 கிலோ மீட்டர் தூர படையற்ற பிரதேசம் பிரிக்கின்றது. வட கொரியாவின் படைக்கலன்கள் பழையவை எனச் சில படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கொரியாவில் அமெரிக்க பாணி மக்களாட்சி முறைமையும் வட கொரியாவில் ஸ்டாலின் பாணி ஆட்சியும் நடக்கின்றன. உலகிலேயே ஊடக சுதந்திரம் குறைந்த நாடாக வட கொரியா கருதப்படுகின்றது. வட கொரியாவில் ஒரு இலட்சம் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கின்றனர்.
Transparency International என்னும் அமைப்பின் 2014 ஆண்டிற்கான பட்டியலின்படி corruption perception index இல் உலகிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி வட கொரியாவில் நடக்கின்றது. மக்களின் சராசரி ஆயுள் வட கொரியாவில் 69ஆகவும் தென் கொரியாவில் 79ஆகவும் இருக்கின்றது. அதே வேளை வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட தென் கொரியாவில் தற்கொலைகள் மிக அதிகமானதாகும். உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது.
உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது. வட கொரியாவின் மொதத் தேசியப் பொருளாதார உற்பத்தியிலும் பார்க்க தென் கொரியாவின் பொருளாதாரம் 36 மடங்கு பெரியதாகும்.
ஒன்றாக இருந்த கொரியத் தீபகற்பத்தை சீனாவும் ஜப்பானும் மாறிமாறி ஆக்கிரமித்து தமது அட்டூழியம் மிக்க ஆட்சியின் கீழ் வைத்திருந்தன. ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கொரியாவை இரண்டாம் உலகப் போரின் பின்னர் வட கொரியாவை சோவியத் இரசியாவும் தென் கொரியாவை அமெரிக்காவும் ஜப்பானிடமிருந்து பிடுங்கிக் கொண்டன. ஈர் அரசுகள் உருவாக்கப் பட்டன. 1950-ம் ஆண்டு சீனாவினதும் சோவியத்தினதும் ஆதரவுடன் வட கொரியா தென் கொரியா மீது படை எடுத்தது. கொரியப் போரில் முதல் முறையாக விமானங்கள் வானில் ஒன்றின் மீது ஒன்று ஏவுகணைகள் வீசுவது நடந்தது. மூன்று ஆண்டுகளின் பின்னர் போர் முடிவிற்கு வந்தது. இரு நாடுகளும் போரின் பின்னர் மோசமான எதிர்களாகின. வட கொரியா அணுக்குண்டு உற்பத்தி செய்தது. தென் கொரியாவில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்தது.
2015 ஓகஸ்ட் மாதம் ஒலிபெருக்கியால் உருவான முறுகலில் தென் கொரியா முன்பு எப்போதும் இல்லாத அளவு கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது. தென் கொரியா செய்யும் ஒலிபெருக்குப் பரப்புரை எல்லையில் உள்ள வட கொரியாவின் படையினரின் மன உறுதியைக் குலைப்பதாக அமையும் என வட கொரியா கருதுகின்றது. ஏற்கனவே தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக் கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரப்புரைப் போட்டி ஒலிபெருக்கிகளால் மட்டுமல்ல தென் இந்திய சினிமா பாணிக் கட் அவுட்டுகளிலும் நடக்கின்றன. வட கொரியாவில் சோஸ்லிச சொர்க்கத்து வாருங்கள் என எழுதப் பட்டுள்ளது. தென் கொரியா இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிட்டு எழுதிக் கட் அவுட் வைத்திருக்கின்றது. பலூன்கள் மூலம் ஒரு நாடு மற்ற நாட்டுக்கு பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை வீசுவதும் உண்டு. தென் கொரியாவின் பரப்புரைகளால் பல வட கொரியர்கள் தென் கொரியாவிற்கு இரகசியமாகப் போய்க் குடியேறுவதும் உண்டு.
2015 ஓகஸ்ட் 20-ம் திகதி பிற்பகல் நான்கு மணியளவில் வட கொரியா 76.2மில்லி மீட்டர் எறிகணைகளை தென் கொரியாவை நோக்கி வீசியது. பின்னர் இருபது மணித்துளிகள் கழித்து மேலும் எறிகணைகள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து தென் கொரியா தனது பீராங்கிகளில் இருந்து 120 மில்லி மீட்டர் எறிகணைகளை வட கொரியா மீது வீசியது. தென் கொரியாதான் முதலில் எறிகணைகளை வீசியது எனச் சொல்லிய வட கொரியா எறிகணை வீசியதற்கான தண்டனையில் இருந்து தென் கொரியா தப்பாது எனச் சூளுரைத்தது.
ஐக்கிய அமெரிக்காவின் நான்கு F-16 தாக்குதல் போர் விமானங்களும் F15K போர் விமானங்களும் வானில் பறந்து தமது வலுவைக் காட்டின.
அமெரிக்கா வரை பாயக்கூடிய அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகணைகளைத் தன்னிடம் வைத்திருக்கும் வட கொரியா ஈரானை அடிபணிய வைத்தது போல் தன்னை அடிபணிய வைக்க முடியாது என்றது.
இப்படிப்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள படைகளற்ற பிரதேசத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடாத்தின. வட கொரியாவின் சார்பில் அதிபர் கிம் ஜோங்கின் வலது கையாகக் கருதப் படும் குவாங் பியோங் சோ (Hwang Pyong So) கலந்து கொள்வது இரு நாடுகளிடையான் நோக்குனர்களை ஆச்சரியமும் ஆறுதலும் அளிக்க வைத்துள்ளது. இவர் பேச்சு வார்தையில் பங்கு பற்றுவதால் அங்கு எடுக்கும் முடிவு காத்திரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் வட கொரியா எல்லையில் செய்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மன்னிப்புக் கோராவிடில் ஒலிபெருக்கி மூலமான பரப்புரை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. இது பேச்சு வார்த்தைகளைச் சிக்கலாக்கியுள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தி
இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன. கண்ணிவெடிகள் வைத்தமைக்கும் ஆத்திரமூட்டக் கூடிய வகையில் படைகளை நகர்த்தியமைக்கும் வட கொரியா வருத்தம் தெரிவித்துள்ளது. தென் கொரியா தனது ஒலிபெருக்கிகள் மூலமான பரப்புரைகளை நிறுத்த ஒத்துக் கொண்டுள்ளது.
இரு கொரியாக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலைக்குப் போய் பின்னர் சுமூக நிலைக்குபோவதும் அடிக்கடி நடக்கின்ற ஒன்று. ஓநாய் ஓநாய் என மிரட்டப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு நாள் உண்மை ஓநாயில் முடியும்.
Friday, 21 August 2015
உக்ரேனில் அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியில் இரசியா
உக்ரேனியப் படைகளுக்கு பயிற்ச்சி அளிக்க அங்கு சென்றுள்ள ஐக்கிய அமெரிக்கப்படைகளால் இரசியா அதிர்ச்சியடைந்துள்ளது. உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்த இரசியா உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியுள்ளது. அவர்கள் தமக்கு தனிநாடு கோரிப் போராடுகின்றார்கள். உக்ரேனுக்குள் இரசியா தனது படையினர் பலரை இரகசியமாக அனுப்பி உக்ரேனியப் படைகளுடன் சண்டை செய்ய வைத்துள்ளது.
மூலம் சிரியா
சிரிய விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன்இரசியா ஒத்துழைக்காததால் அமெரிக்கா உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உக்ரேனை இரசியாவிற்கு எதிராகத் திருப்பியது. அதனால் உக்ரேன் இரசியாவின் யூரோ ஏசியன் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முனைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. முன்பு இரசியாவின் ஒரு பகுதியாக இருததும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளத்தைக் கொண்டதுமான கிறிமியாவில் குழப்பம் உருவானது. கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி அது இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இரசியாவின் தளரும் பொருளாதாரம்
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகச் சந்தையில் வீழ்ச்சியுறும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த படியால் இரசியப் பொருளாதாரம் கோட்பாட்டு ரீதியாக மந்த நிலையை அடைந்துள்ளது என்பது உறுதியாகிவிட்டது. 2015-ம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் 2.2விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டிருந்தது. இரண்டாம் காலாண்டில் இரசியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்ததுடன் அங்குவிலைவாசி 15.6விழுக்காடாக இருக்கின்றது. இரண்டாம் காலாண்டிற்கான வீழ்ச்சி எதிர்பார்த்த 4.5 விழுக்காட்டிலும் அதிகமாகும். 2015 ஜூலை வரையிலான 12 மாதங்களில் இரசிய நாணயம் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 43 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
இரசியாவின் படை இரகசியம் கை மாறுமா?
உக்ரேனில் கிளர்ச்சி செய்பவர்களுக்கும் உக்ரேனுக்குள் இரகசியமாக நுழைந்த இரசியப் படையினருக்கும் எதிராகப் போர் புரிய உக்ரேனியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் போர்ப்பயிற்ச்சிகள் வழங்குகின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஓரு உறுப்பு நாடாக இருந்த படியால் உக்ரேனியப் படையினர் இரசியாவின் போர் முறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அத்துடன் இரசியப் படைகள் எப்படிப் போர் புரிகின்றன என்பது பற்றி தற்போது உக்ரேனியப்படைகள் அறிந்து கொள்கின்றன. உக்ரேனியப் படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகள் இத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றி இரசியா கலவரமடைந்துள்ளது.
ஆளாளுக்கு போர் ஒத்திகை
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலாந்து ஆகிய நாட்டுப் படைகள் உட்படப் பல நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் போர்ப் பயிற்ச்சிகளில் ஈடுபட்டதும் இரசியாவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்தப் போர்ப்பயிற்ச்சி தேவை ஏற்படின் அவர்கள் இரசியாவுடன் மோதலுக்குத் தயார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இப்பயிற்ச்சியில் 19 நாடுகளில் இருந்து 15,000 படையினர் ஈடுபட்டனர். ஒரு பயிற்ச்சியில் ஈரூடகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இன்னும் ஒரு பயிற்ச்சியில் போல்ரிக் நாடுகளிலும் போலாந்திலும் தாங்கிகள் தாழப் பறக்கும் விமானங்களுடன் பயிற்ச்சிகள் நடந்தன. மூன்றவது பயிற்ச்சியில் நேட்டோ புதிதாக உருவாக்கிய ஏநசல ர்iபா சுநயனiநௌள துழiவெ வுயளம குழசஉந எனப்படும் அதி துரித தயார் நிலை அதிரடிப் படையினர் போலாந்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டனர். பதிலுக்கு இரசியப் படையினர் லத்வியாவை ஆக்கிரமிப்பது போன்ற ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டனர். இரசியாவின் பயிற்ச்சியில் எண்பதினாயிரம் படையினர் ஈடுபட்டனர். நேட்டோப் படைகள் தேவை ஏற்படின் உக்ரேனின் படை நிலைகளையும் படைத்துறைக் களஞ்சியங்களையும் பாவிக்க உக்ரேன் அனுமதி வழங்கியுள்ளது.
இரசியப் பாதுகாப்புச்சபையில் தனித்த புட்டீன்
2015 ஜுலை மாதம் 3-ம் திகதி இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை பெற்றது. பத்துப் பேரைக் கொண்ட இரசியப் பாதுகாப்புச் சபையில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டின் மட்டுமே தனது நாட்டுப் படைகள் தனது ஆணையை ஏற்றுப் நேட்டோப் படைகளுடன் போர் புரியும் என நம்புகின்றனர். ஐக்கிய அமெரிக்கா இரசியாவை ஆக்கிரமிக்க முயல்கின்றது என புட்டீன் உறுதியாக நம்புகின்றார். நேட்ட்ப்படைகளுடன் ஒரு போருக்கு அவர் தாயார் என்கின்றார். இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் மாஸ்க்கோவின் எதிரொலி என்ற வானொலி எடுத்த கருத்துக் கணிப்பில் இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேரடி மோதல் நடக்கும் என 43 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர். இதுவரை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எமது மேற்கத்தையப் பங்காளிகள் என குறிப்பிட்டு வந்த புட்டீன் இப்போது அவர்களை எமது புவிசார் அரசியல் எதிரிகள் எனக் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றார் என்பதை அரசிய நோக்குனர்கள் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்.
பெருகும் போர் அபாயம்
இரசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கேஜீபி அதிகாரியுமான கென்னடி குட்கோவ் உக்ரேனில் நிலைமைகள் மோசமடைந்து இரசியப் படைகளுக்கும் நேட்டோ ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் சாத்தியமான ஒன்று என்றார். பிரித்தானியாவில் உள்ள நுரசழிநயn டுநயனநசளாip நேவறழசம என அழைக்கப்படும் போர் தொடர்பான சிந்தனையாளர் குழு நடக்கும் ஒத்திகைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்கின்றது.
மூலம் சிரியா
சிரிய விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன்இரசியா ஒத்துழைக்காததால் அமெரிக்கா உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உக்ரேனை இரசியாவிற்கு எதிராகத் திருப்பியது. அதனால் உக்ரேன் இரசியாவின் யூரோ ஏசியன் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முனைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. முன்பு இரசியாவின் ஒரு பகுதியாக இருததும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளத்தைக் கொண்டதுமான கிறிமியாவில் குழப்பம் உருவானது. கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி அது இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இரசியாவின் தளரும் பொருளாதாரம்
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகச் சந்தையில் வீழ்ச்சியுறும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த படியால் இரசியப் பொருளாதாரம் கோட்பாட்டு ரீதியாக மந்த நிலையை அடைந்துள்ளது என்பது உறுதியாகிவிட்டது. 2015-ம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் 2.2விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டிருந்தது. இரண்டாம் காலாண்டில் இரசியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்ததுடன் அங்குவிலைவாசி 15.6விழுக்காடாக இருக்கின்றது. இரண்டாம் காலாண்டிற்கான வீழ்ச்சி எதிர்பார்த்த 4.5 விழுக்காட்டிலும் அதிகமாகும். 2015 ஜூலை வரையிலான 12 மாதங்களில் இரசிய நாணயம் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 43 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
இரசியாவின் படை இரகசியம் கை மாறுமா?
உக்ரேனில் கிளர்ச்சி செய்பவர்களுக்கும் உக்ரேனுக்குள் இரகசியமாக நுழைந்த இரசியப் படையினருக்கும் எதிராகப் போர் புரிய உக்ரேனியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் போர்ப்பயிற்ச்சிகள் வழங்குகின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஓரு உறுப்பு நாடாக இருந்த படியால் உக்ரேனியப் படையினர் இரசியாவின் போர் முறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அத்துடன் இரசியப் படைகள் எப்படிப் போர் புரிகின்றன என்பது பற்றி தற்போது உக்ரேனியப்படைகள் அறிந்து கொள்கின்றன. உக்ரேனியப் படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகள் இத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றி இரசியா கலவரமடைந்துள்ளது.
ஆளாளுக்கு போர் ஒத்திகை
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலாந்து ஆகிய நாட்டுப் படைகள் உட்படப் பல நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் போர்ப் பயிற்ச்சிகளில் ஈடுபட்டதும் இரசியாவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்தப் போர்ப்பயிற்ச்சி தேவை ஏற்படின் அவர்கள் இரசியாவுடன் மோதலுக்குத் தயார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இப்பயிற்ச்சியில் 19 நாடுகளில் இருந்து 15,000 படையினர் ஈடுபட்டனர். ஒரு பயிற்ச்சியில் ஈரூடகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இன்னும் ஒரு பயிற்ச்சியில் போல்ரிக் நாடுகளிலும் போலாந்திலும் தாங்கிகள் தாழப் பறக்கும் விமானங்களுடன் பயிற்ச்சிகள் நடந்தன. மூன்றவது பயிற்ச்சியில் நேட்டோ புதிதாக உருவாக்கிய ஏநசல ர்iபா சுநயனiநௌள துழiவெ வுயளம குழசஉந எனப்படும் அதி துரித தயார் நிலை அதிரடிப் படையினர் போலாந்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டனர். பதிலுக்கு இரசியப் படையினர் லத்வியாவை ஆக்கிரமிப்பது போன்ற ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டனர். இரசியாவின் பயிற்ச்சியில் எண்பதினாயிரம் படையினர் ஈடுபட்டனர். நேட்டோப் படைகள் தேவை ஏற்படின் உக்ரேனின் படை நிலைகளையும் படைத்துறைக் களஞ்சியங்களையும் பாவிக்க உக்ரேன் அனுமதி வழங்கியுள்ளது.
இரசியப் பாதுகாப்புச்சபையில் தனித்த புட்டீன்
2015 ஜுலை மாதம் 3-ம் திகதி இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை பெற்றது. பத்துப் பேரைக் கொண்ட இரசியப் பாதுகாப்புச் சபையில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டின் மட்டுமே தனது நாட்டுப் படைகள் தனது ஆணையை ஏற்றுப் நேட்டோப் படைகளுடன் போர் புரியும் என நம்புகின்றனர். ஐக்கிய அமெரிக்கா இரசியாவை ஆக்கிரமிக்க முயல்கின்றது என புட்டீன் உறுதியாக நம்புகின்றார். நேட்ட்ப்படைகளுடன் ஒரு போருக்கு அவர் தாயார் என்கின்றார். இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் மாஸ்க்கோவின் எதிரொலி என்ற வானொலி எடுத்த கருத்துக் கணிப்பில் இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேரடி மோதல் நடக்கும் என 43 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர். இதுவரை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எமது மேற்கத்தையப் பங்காளிகள் என குறிப்பிட்டு வந்த புட்டீன் இப்போது அவர்களை எமது புவிசார் அரசியல் எதிரிகள் எனக் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றார் என்பதை அரசிய நோக்குனர்கள் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்.
பெருகும் போர் அபாயம்
இரசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கேஜீபி அதிகாரியுமான கென்னடி குட்கோவ் உக்ரேனில் நிலைமைகள் மோசமடைந்து இரசியப் படைகளுக்கும் நேட்டோ ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் சாத்தியமான ஒன்று என்றார். பிரித்தானியாவில் உள்ள நுரசழிநயn டுநயனநசளாip நேவறழசம என அழைக்கப்படும் போர் தொடர்பான சிந்தனையாளர் குழு நடக்கும் ஒத்திகைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்கின்றது.
Wednesday, 19 August 2015
அரபு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்
இதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த ஈரான் இனி மேல் ஸ்தாயில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் உடன் படிக்கையின் பின்னர் அமெரிக்கா தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்ற மில்லை என்றார். ஈராக்கில் சதாம் ஹுசேயினின் ஆட்சியை ஒழித்ததன் மூலம் அமெரிக்கா ஈரானை வலுவடையச் செய்து விட்டது என்பது சுனி முஸ்லிம்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
வரலாற்றில் ஒரு வல்லரசு
ஈரானுக்கு என்று உயரிய வரலாற்றுப் பெருமை இருக்கின்றது. பாரசீகம் (Persia) என அதை ரோமர்கள் அழைத்தனர். எகிப்து முதல் துருக்கி, மெசப்பட்டோமியா ஆகியவை உள்ளிட்ட அதனது பேரரசு சிந்து நதிவரை வியாபித்திருந்தது. பின்பு அவர்கள் கிரேக்கர், ரோமர், அரபுக்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப் பட்டனர். மீண்டும் எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஈராக், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு வல்லரசாக தாம் உருவாக வேண்டும் என தற்போதைய ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பிரதேசங்களைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து அங்கு சியா முறைமையிலான இஸ்லாமைப் பரப்ப வேண்டும் என்பது அவர்களது கனவு.
ஹோமஸ் நீரிணை
ஈரானின் பூகோள இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அடிக்கடி மிரட்டுவதுண்டு. அமெரிக்கா இந்த நீரிணையை தனது கடற்படையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்காசிய நகர்வுகளுக்கு என்றும் பிரச்சனையாகவும் சவாலாகவும் இருப்பது ஈரானே.
ஈரானின் பிராந்திய ஆதிக்கக் கனவு
2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹானியின் ஆலோசகர் அலி யூனிசி ஈரான் ஒரு பேரரசு, ஈராக் அந்தப் பேரரசின் ஒரு பகுதி என்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானிய புரட்சிப் படையான கட்ஸ் படையின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதி காசிம் சுலைமான் இன்று ஈரான் தனது மதப் புரட்சியை பாஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்ளிட்ட வட ஆபிரிக்காவரைக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார். இவை மட்டுமல்ல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய உச்சத் தலைவர் அலி கொமெய்னிக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினர் அல் ரெஜா ஜக்கானி தற்போது பாக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலைநகரங்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். இன்னும் சற்றுப் பின் சென்றால் 2013-ம் ஆண்டு அஜர்பைஜானை ஈரானுடன் மீளிணைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஈரானியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அஜர்பைஜானை சோவியத் ஒன்றியம் ஓர் உடன்படிக்கை மூலம் ஈரானிடமிருந்து 1828-ம் ஆண்டு பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அரபுக்கள் வேறு ஈரானியர்கள் வேறு.
ஈரானியர்களும் அரபுக்களும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் இனத்தால் மொழியால் வேறுபட்டவர்கள். மதத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று அழுத்திச் சொல்ல முடியாத அளவிற்கு சியா முஸ்லிம்களான ஈரானியர்களுக்கும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல அரபு நாடுகளும் முரண்பட்டுக் கொள்கின்றன. சுனி முஸ்லிம்களைக் கொண்ட துருக்கி ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தாலும் சிரியா விவகாரத்தில் இரண்டும் முரண்படுகின்றன. குர்திஷ் மக்களை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன.
ஈராக் சியா ஆனால் அரபு
ஈராக்கில் சுனி இஸ்லாமிய அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் ஐ எஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஈரானே முன்னணியில் நின்று செயற்படுகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி முஸ்லிம் ஆன சதாம் ஹுசேய்ன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தார். அவர் ஈரானுக்கு எதிராக நீண்ட போரையும் 1980இல் இருந்து 1988 வரை நடாத்தினார். அவரது பிராந்திய ஆதிக்கக் கனவால் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க ஆதரவுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் சியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்ளின் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா ஐ எஸ் என்னும் போராளி அமைப்பாக மாறியது. சுனிப் போராளிகளும், சதாமின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்களும் ஐ எஸ்ஸுடன் இணைந்து கொண்டனர். ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினரின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லி சவுதி அரேபியா, காடார் ஆகிய நாட்டுச் செல்வந்தர்களிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் முதலாம் எதிரியாக ஐ எஸ் அமைப்பு வளர்ந்து வருகின்றது. இந்த ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் விரும்புகின்றது ஈரானும் விரும்புகின்றது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்து செயற்படுகின்றன.
சவுதி அரேபியா
ஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதியில் சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தன்னுடைன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கருதுகின்றது. ஈரானின் நிகராளிகளில்(Proxies) ஒன்றான ஹமாஸ் அமைப்பை சவுதி அரேபியா தனது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றது. ஹாமாஸ் அரசியற் துறைப் பொறுப்பாளர் கலீட் மேஷாலும் மற்றும் பல உயர் மட்டத்தினரும் 2015 ஜூலை மாதம் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது ஈரானை உலுப்பியதுடன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது வரைகாலமும் ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தே கிடைத்தன. சவுதி அரேபியாவுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்திய அரசு மூடி வைத்திருக்கும் ரஃபாக் கடவையைத் திறக்க வைக்கலாம் எனக் கமாஸ் அமைப்பு நம்புகின்றது. ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் பாக்கிஸ்த்தனிடமிருந்து அணுக்குண்டை வாங்கும் திட்டத்துடன் சவுதி அரேபியா இருக்கின்றது.
லெபனான்
முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்காசியாவில் ஒரு கிறிஸ்த்தவ நாடு தேவை என லெபனான் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அங்கு இஸ்லாமியரே பெரும்பான்மையாகிவிட்டனர். பலஸ்த்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்தோராலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்கின்றது. லெபனானில் இருந்து யஸீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை சிரியா படையெடுத்து விரட்டியதன் பின்னர் அங்குள்ள எஞ்சிய பலஸ்த்தீனியர்களால் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு மத்திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம் தாங்கிக் கப்பல் என விமர்சிக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு படைக்கலன்களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மூலம் முன்னெடுத்து வருகின்றது.
சிரியா
சிரியாவில் சுனி ஐ எஸ் அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்திற்கு எதிரான சுனிக் கிளர்ச்சிக்காரர்களும் ஒரு தரப்பினருடன் மற்றத் தரப்பினர் போராடி அழிந்து கொள்வது ஈரானிற்கு மகிழ்ச்சியூட்டும் ஒன்று. லெபனானின் செயற்படும் சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான் ஹிஸ்புல்லாவிற்கான விநியோகம் ஈரானில் இருந்து சிரிய விமான நிலையங்களூடாக நடை பெறுகின்றது. இதனால் சிரியா ஈரானைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு நாடாகும். அதிபர் பஷாத்தைப் பாதுகாக்க ஈரான் பணம், படைக்கலன் ஆகியவற்றை வழங்குவதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாப் போராளிகளை அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட வைக்கின்றது. ஈராக்கும் சிரியாவும் ஈரானின் ஆதிக்கத்திற்குள் வந்தால் அடுத்ததாக் லெபனான் இலகுவாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஈரானும் சிரியாவும் லெபனானுடனான எல்லையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன.
ஐக்கிய அமீரகம்
ஈரானுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையில் ஹோமஸ் நீரிணையில் உள்ள Greater Tunb, Lesser Tunb, Abu Musa ஆகிய மூன்று தீவுகளும் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக முறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள் ஐக்கிய அமீரகம் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு எனக் கருதுகின்றனர்.
ஈரானின் நிகராளிப் போர்கள்(Proxy Wars)
ஈரான் தற்போது சிரிய அரசினூடாகவும் ஹிஸ்புல்லாவின் உதவியுடனும் சிரிய அரசுக்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், ஈராக்கில் அதன் அரசினூடாக ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், யேமனில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவான அரசுக்கு எதிராக ஹூதி இனக்குழுமப் போராளிகளூடாக ஒரு நிகராளிப் பேரையும் நடாத்தி வருகின்றது. நிகராளிப் போர் நேரடிப் போரிலும் பாக்கச் செலவு மிக்கது. அரபு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்றுவது இயலாத ஒன்று. அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்கியையும் சவுதி அரேபியாவையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும். அமெரிக்கா சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை விரும்புகின்றது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பு ஈரான், ஈராக்கிய அரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் தக்குதலை எதிர் கொள்கின்றது. ஐ எஸ் அமைப்பை அங்கு ஒழித்துக் கட்டினாலும் மொழியாலும் இனத்தாலும் வேறுபட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் கடினம். யேமனைப் பொறுத்தவரை அது சவுதி அரேபியாவின் கொல்லைப் புறம். ஈரானுக்கு ஆதரவான ஹூதி இனக்குழுமம் எண்ணிக்கை அளவின் குறைவானது.
ஈரானிற்கு "சூழ்"நிலை சரியில்லை
ஈரானைச் சுற்றவர சுனி முஸ்லிம்களின் நாடுகளே இருக்கின்றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்லையுடன் சவுத் அரேபியாவும் வடகிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியும் கிழக்கில் உறுதியற்ற ஆட்சியையும் பெரும்பானமை சுனி முஸ்லிம்களையும் கொண்ட சவுதியின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள் போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு சீனாவும் இரசியாவும் அவ்வப்போது அரசுறவியலில்(இராசதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்ப்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து(வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்தது இல்லை. உலக அரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.
ஈரானின் பாது காப்புச் செலவீனத்திலும் பார்க்க சவுதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்கலன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காசா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், காட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. ஈரானின் பிராந்திய ஆதிகக் கனவை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா அதைச் சுற்றி தனது பல படைத்தளங்களை வைத்துள்ளது.
வரலாற்றில் ஒரு வல்லரசு
ஈரானுக்கு என்று உயரிய வரலாற்றுப் பெருமை இருக்கின்றது. பாரசீகம் (Persia) என அதை ரோமர்கள் அழைத்தனர். எகிப்து முதல் துருக்கி, மெசப்பட்டோமியா ஆகியவை உள்ளிட்ட அதனது பேரரசு சிந்து நதிவரை வியாபித்திருந்தது. பின்பு அவர்கள் கிரேக்கர், ரோமர், அரபுக்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப் பட்டனர். மீண்டும் எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஈராக், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு வல்லரசாக தாம் உருவாக வேண்டும் என தற்போதைய ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பிரதேசங்களைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து அங்கு சியா முறைமையிலான இஸ்லாமைப் பரப்ப வேண்டும் என்பது அவர்களது கனவு.
ஹோமஸ் நீரிணை
ஈரானின் பூகோள இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அடிக்கடி மிரட்டுவதுண்டு. அமெரிக்கா இந்த நீரிணையை தனது கடற்படையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்காசிய நகர்வுகளுக்கு என்றும் பிரச்சனையாகவும் சவாலாகவும் இருப்பது ஈரானே.
ஈரானின் பிராந்திய ஆதிக்கக் கனவு
2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹானியின் ஆலோசகர் அலி யூனிசி ஈரான் ஒரு பேரரசு, ஈராக் அந்தப் பேரரசின் ஒரு பகுதி என்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானிய புரட்சிப் படையான கட்ஸ் படையின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதி காசிம் சுலைமான் இன்று ஈரான் தனது மதப் புரட்சியை பாஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்ளிட்ட வட ஆபிரிக்காவரைக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார். இவை மட்டுமல்ல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய உச்சத் தலைவர் அலி கொமெய்னிக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினர் அல் ரெஜா ஜக்கானி தற்போது பாக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலைநகரங்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். இன்னும் சற்றுப் பின் சென்றால் 2013-ம் ஆண்டு அஜர்பைஜானை ஈரானுடன் மீளிணைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஈரானியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அஜர்பைஜானை சோவியத் ஒன்றியம் ஓர் உடன்படிக்கை மூலம் ஈரானிடமிருந்து 1828-ம் ஆண்டு பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அரபுக்கள் வேறு ஈரானியர்கள் வேறு.
ஈரானியர்களும் அரபுக்களும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் இனத்தால் மொழியால் வேறுபட்டவர்கள். மதத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று அழுத்திச் சொல்ல முடியாத அளவிற்கு சியா முஸ்லிம்களான ஈரானியர்களுக்கும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல அரபு நாடுகளும் முரண்பட்டுக் கொள்கின்றன. சுனி முஸ்லிம்களைக் கொண்ட துருக்கி ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தாலும் சிரியா விவகாரத்தில் இரண்டும் முரண்படுகின்றன. குர்திஷ் மக்களை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன.
ஈராக் சியா ஆனால் அரபு
ஈராக்கில் சுனி இஸ்லாமிய அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் ஐ எஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஈரானே முன்னணியில் நின்று செயற்படுகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி முஸ்லிம் ஆன சதாம் ஹுசேய்ன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தார். அவர் ஈரானுக்கு எதிராக நீண்ட போரையும் 1980இல் இருந்து 1988 வரை நடாத்தினார். அவரது பிராந்திய ஆதிக்கக் கனவால் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க ஆதரவுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் சியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்ளின் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா ஐ எஸ் என்னும் போராளி அமைப்பாக மாறியது. சுனிப் போராளிகளும், சதாமின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்களும் ஐ எஸ்ஸுடன் இணைந்து கொண்டனர். ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினரின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லி சவுதி அரேபியா, காடார் ஆகிய நாட்டுச் செல்வந்தர்களிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் முதலாம் எதிரியாக ஐ எஸ் அமைப்பு வளர்ந்து வருகின்றது. இந்த ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் விரும்புகின்றது ஈரானும் விரும்புகின்றது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்து செயற்படுகின்றன.
சவுதி அரேபியா
ஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதியில் சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தன்னுடைன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கருதுகின்றது. ஈரானின் நிகராளிகளில்(Proxies) ஒன்றான ஹமாஸ் அமைப்பை சவுதி அரேபியா தனது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றது. ஹாமாஸ் அரசியற் துறைப் பொறுப்பாளர் கலீட் மேஷாலும் மற்றும் பல உயர் மட்டத்தினரும் 2015 ஜூலை மாதம் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது ஈரானை உலுப்பியதுடன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது வரைகாலமும் ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தே கிடைத்தன. சவுதி அரேபியாவுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்திய அரசு மூடி வைத்திருக்கும் ரஃபாக் கடவையைத் திறக்க வைக்கலாம் எனக் கமாஸ் அமைப்பு நம்புகின்றது. ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் பாக்கிஸ்த்தனிடமிருந்து அணுக்குண்டை வாங்கும் திட்டத்துடன் சவுதி அரேபியா இருக்கின்றது.
லெபனான்
முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்காசியாவில் ஒரு கிறிஸ்த்தவ நாடு தேவை என லெபனான் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அங்கு இஸ்லாமியரே பெரும்பான்மையாகிவிட்டனர். பலஸ்த்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்தோராலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்கின்றது. லெபனானில் இருந்து யஸீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை சிரியா படையெடுத்து விரட்டியதன் பின்னர் அங்குள்ள எஞ்சிய பலஸ்த்தீனியர்களால் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு மத்திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம் தாங்கிக் கப்பல் என விமர்சிக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு படைக்கலன்களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மூலம் முன்னெடுத்து வருகின்றது.
சிரியா
சிரியாவில் சுனி ஐ எஸ் அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்திற்கு எதிரான சுனிக் கிளர்ச்சிக்காரர்களும் ஒரு தரப்பினருடன் மற்றத் தரப்பினர் போராடி அழிந்து கொள்வது ஈரானிற்கு மகிழ்ச்சியூட்டும் ஒன்று. லெபனானின் செயற்படும் சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான் ஹிஸ்புல்லாவிற்கான விநியோகம் ஈரானில் இருந்து சிரிய விமான நிலையங்களூடாக நடை பெறுகின்றது. இதனால் சிரியா ஈரானைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு நாடாகும். அதிபர் பஷாத்தைப் பாதுகாக்க ஈரான் பணம், படைக்கலன் ஆகியவற்றை வழங்குவதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாப் போராளிகளை அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட வைக்கின்றது. ஈராக்கும் சிரியாவும் ஈரானின் ஆதிக்கத்திற்குள் வந்தால் அடுத்ததாக் லெபனான் இலகுவாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஈரானும் சிரியாவும் லெபனானுடனான எல்லையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன.
ஐக்கிய அமீரகம்
ஈரானுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையில் ஹோமஸ் நீரிணையில் உள்ள Greater Tunb, Lesser Tunb, Abu Musa ஆகிய மூன்று தீவுகளும் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக முறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள் ஐக்கிய அமீரகம் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு எனக் கருதுகின்றனர்.
ஈரானின் நிகராளிப் போர்கள்(Proxy Wars)
ஈரான் தற்போது சிரிய அரசினூடாகவும் ஹிஸ்புல்லாவின் உதவியுடனும் சிரிய அரசுக்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், ஈராக்கில் அதன் அரசினூடாக ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், யேமனில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவான அரசுக்கு எதிராக ஹூதி இனக்குழுமப் போராளிகளூடாக ஒரு நிகராளிப் பேரையும் நடாத்தி வருகின்றது. நிகராளிப் போர் நேரடிப் போரிலும் பாக்கச் செலவு மிக்கது. அரபு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்றுவது இயலாத ஒன்று. அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்கியையும் சவுதி அரேபியாவையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும். அமெரிக்கா சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை விரும்புகின்றது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பு ஈரான், ஈராக்கிய அரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் தக்குதலை எதிர் கொள்கின்றது. ஐ எஸ் அமைப்பை அங்கு ஒழித்துக் கட்டினாலும் மொழியாலும் இனத்தாலும் வேறுபட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் கடினம். யேமனைப் பொறுத்தவரை அது சவுதி அரேபியாவின் கொல்லைப் புறம். ஈரானுக்கு ஆதரவான ஹூதி இனக்குழுமம் எண்ணிக்கை அளவின் குறைவானது.
ஈரானிற்கு "சூழ்"நிலை சரியில்லை
ஈரானைச் சுற்றவர சுனி முஸ்லிம்களின் நாடுகளே இருக்கின்றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்லையுடன் சவுத் அரேபியாவும் வடகிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியும் கிழக்கில் உறுதியற்ற ஆட்சியையும் பெரும்பானமை சுனி முஸ்லிம்களையும் கொண்ட சவுதியின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள் போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு சீனாவும் இரசியாவும் அவ்வப்போது அரசுறவியலில்(இராசதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்ப்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து(வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்தது இல்லை. உலக அரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.
ஈரானின் பாது காப்புச் செலவீனத்திலும் பார்க்க சவுதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்கலன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காசா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், காட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. ஈரானின் பிராந்திய ஆதிகக் கனவை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா அதைச் சுற்றி தனது பல படைத்தளங்களை வைத்துள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...





