Monday, 30 July 2012

இலங்கை இந்திய ஒப்பந்தம்: கேணல் ஹரிகரனின் கோணல் கதை

அரசியல் அரைவேக்காடு ராஜிவ் காந்தியும் முதுபெரும் குள்ள நரி ஜே ஆர் ஜயவர்த்தனவும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பது என்ற போர்வையில் ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியான கேர்ணல் ஹரிஹரன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதைப் பல பார்ப்பன ஊடகங்களும் சிங்கள் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன. கேர்ணல் ஹரிகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கடி கொச்சைப் படுத்தி எழுதி வரும் ஒருவர். 2009 மே மாதம் இலங்கையில் போர் "முடிந்தவுடன்" இனித் தமிழர்களுக்கு உள்ள ஒரு தெரிவு Hobson Choice தான் என்று எழுதியவர். Hobson Choice என்பது ஆங்கிலத்தில் வழக்கொழிந்து போன வார்த்தைத் தொடர். அதன் பொருள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். தமிழர்கள் ஒரு பிச்சைக்கார நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்ற பொருள்பட எழுதியவர்தான் இந்த கேர்ணல் ஹரிகரன்.

ஹரிகரனின் பேய்க்கதை: பிரிக்கப் போனதும் பிரிவதைத் தடுக்கப் போனதும்
A Tale Of Two Interventions (இரு தலையீடுகளின் கதை)  என்னும் தலைப்பில் கேர்ணல் ஹரிகரன் கதை விட்டுள்ளார். இதில் அவர் 1971இல் இந்திரா காந்தி கிழக்குப் பாக்கிஸ்த்தான் பிரச்சனையில் தலையிட்டதையும் 1987இல் அரசியல் கற்றுக் குட்டி ராஜிவ் காந்தி இலங்கையில் தலையிட்டதையும் ஒப்பிடுகிறார். இரண்டு தலையீடுகளிலும் ஹரிகரன் ஒரு படை வீரனாகப் பங்குபற்றினாரம் இரண்டு தலையீட்டுக்களுக்கும் அடிப்படையில் பெரும் முரண்பாடு இருந்தது. 1971இல் இந்தியா செய்த தலையீடு பாக்கிஸ்தானைத் பிரித்து புது நாடு உருவாக்கச் செய்யப்பட்ட தலையீடு. 1987இல் இலங்கையில் செய்த தலையீடு பிளவு பட இருந்த இலங்கையை பிளவுபடாமல் பாதுகாக்கச் செய்யப்பட்ட தலையீடு. சிங்கள் அமைச்சர்களே இந்திய "அமைதிப்படை" வந்திருந்திருக்காவிடில் இலங்கை இரு நாடுகளாகப் பிளவு பட்டிருக்கும் என்றனர். பாக்கிஸ்த்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்ற அடை மொழியுடன் தான் இந்தியாவின் சகல அரசதந்திர அறிக்கைகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் 1983இல் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன. 1987இல் இந்தியப் படைகள் இலங்கை வரமுன்னர் இலங்கையில் பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டாலும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ததும் உண்டு இணைந்து தாக்குதல்கள் நடாத்தியதும் உண்டு. இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியேற அஞ்சிக் கொண்டிருந்தனர். இலங்கையின் எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறனை தமிழ் போராளிக் குழுக்கள் கொண்டிருந்தன. பல பிரதேசங்கள் தமிழ் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. `இந்த நிலையை வளரவிட்டால் இலங்கையில் தமிழர்கள் தமக்கு என ஒரு நாட்டை அமைத்து விடுவார்கள் என்று அஞ்சியே இந்தியா இலங்கையில் தலையிட்டதை ஹரிகரன் மறைத்து விட்டார். இலங்கையில் சண்டை நடந்து நாடு பிரிவடைவதையோ அல்லது ஒரு சமாதானத்தின் மூலம் இந்தியாவில் உள்ளதிலும் பார்க்க அதிக அளவு அதிகாரம் கொடுக்கும் ஒரு அரசியல் தீர்வு அடைவதையோ இந்தியா விரும்பவில்லை.



ஹரிகரனின் விசர்க்கதை:இந்தியா அயலவர் நலன் கருதியது            இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைத் துண்டாடி அதைப் பலவீனப் படுத்தும் நோக்கத்துடன் கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு தன் படையினரை அனுப்பினார். 1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் திருகோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை இந்தியச் சுயநலம் என்பதை ஹரிகரன் உணராமல் விட்டு விட்டார்.

 ஹரிகரனின் பொய்க்கதை: புலிகளுடன் எதிர்பாராத மோதல்
 இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையினர் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மோத வேண்டி ஏற்பட்டது என்று பொய் சொல்லுகிறார் தனது கட்டுரையில். இந்திய அமைதிப்படை இலங்கை வரமுன்னரே அப்போதைய இந்தியப் படைத் தளபதி சுந்தர்ஜீ சரம் கட்டிய இரண்டாயிரம் பையன்களை தன்னால் ஒரு வாரத்தில் ஒழித்துக் கட்ட முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் கணக்குக் காட்டியிருந்தார். டெலோ அமைப்பின் மூலம் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட முயன்று தோற்ற இந்தியா அதை நேரில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து செய்ய முயன்றும் தோற்றது.



ஹரிகரனின் மோட்டுக்கதை: தலைமைத்துவப் பண்பு       இந்திராகாந்தியின் தலைமைத்துவம் சிறந்தது என்ற படியால் 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானில் செய்த தலையீடு வெற்றியளித்தது ராஜீவ் காந்தியின் தலையீடு அவரின் தலைமைத்துவப் பண்புகள் சரியில்லாததால் வெற்றியளிக்கவில்லை என்கிறார் ஹரிகரன். 1971இல் இந்திரா காந்தியின் தலையீடு வெற்றியளித்தமைக்கு அவருக்கு காரணம் அவருக்கு சிறந்த ஆலோகர்கள் அதிகாரிகள் இருந்தமையும் அப்போதைய தளபதி சாம் மனெக்ஸாவும் பெரும் பங்காற்றினர் என்பதையும் ராஜிவ் காந்தியின் தோல்விக்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய ரொமேஷ் பண்டாரி போன்றவர்களும் ஹரிகரன் போன்ற கோணல் புத்தி உளவுத்துறைத் தலைமையும்தான் என்பதை ஹரிகரன் சொல்ல மாட்டார்.  ரொமேஸ் பண்டாரி வீட்டுத் திருமணம் ஜே ஆர் கொடுத்த பணத்தில் நடந்தது என்று பரவிய வதந்திகளை ஹரிகரன் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார். தனது கட்டுரையில் ஒரு இடத்தில் இலங்கைக்கு தான் அமைதிப்படையின் உளவுத் துறை தலைவனாக சென்று இறங்கிய போது ஜே ஆர் ஜயவர்த்தன இந்தியப்படையை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோத வைப்பார் என்று இலங்கையில் சிலர் தெரிவித்த கருத்துக்களை தான் நம்பவில்லை என்று தனது கட்டுரையில் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இதில் ஹரிகரன் ஒன்றில் பொய் சொல்கிறார் அல்லது தன் திறமையின்மையை அமபலப்படுத்துகிறார். அதாவது தாம் இலங்கை சென்றது புலிகளை அழித்தொழிக்கவே என்ற உண்மையை மறைக்கிறார். அல்லது இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாத ஒரு உளவுத் துறைத் தலைவனாக அவர் இருந்திருக்கிறார். அதுவும் சாதாரண குடிமக்களுக்குத் தெரிந்தவை களம் பல கண்ட ஹரிகரனுக்குத் தெரியவில்லை. பாக்கிஸ்த்தான் போரில் இறந்த இந்தியப்படையினர்களின் எண்ணிக்கை பாக்கிஸ்த்தானியப் படையினரின் எண்ணிக்கை பற்றி விலாவாரிய எழுதிய ஹரிகரனுக்கு இலங்கையில் எத்தனை அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படை கொன்றது என்பது பற்றி எழுதத் தெரியவில்லை.



ஹரிகரனின் புளுகுக்கதை: 13வது திருத்தமும் சுயாட்சியும்                   ராஜிவ் ஜேஆர் ஒப்பந்தத்தைப் பற்றி ஹரிகரன் இப்படிப் புளுகுகிறார்:
  • The most significant achievement of the Accord was the introduction of the 13th Amendment to the Sri Lankan Constitution which provided a degree of autonomy to the newly created provinces. And it still exists as the only constitutional tool available to redress Tamils. இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி வழங்கிய இலங்கை அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட 13வது திருத்தம் ஒப்பந்தம் செய்த மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை. அத்துடன் இன்றுவரை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறது.
ஐயோ பாவம். ஹரிகரனுக்கு தன்னாட்சி என்பது என்ன என்றும் தெரியவில்லை. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் என்ன என்பது பற்றியும் தெரியவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா அது ஒரு உப்புச் சப்பில்லாத திருத்தம். அதில் அதிகாரப் பரவலாக்கம் என்பதே இல்லை என்று மிக விளக்கமாக எழுதியிருந்தார். அது வயது போன ஹரிகரனுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சட்ட விரிவுரையாளர்  குமரகுருபரன் 13வது திருத்ததில் உள்ள குறைபாடுகளை பிட்டு பிட்டு வைத்ததைக் கூட மறக்கும் அளவிற்கு ஹரிகரனுக்கு வயது போய்விட்டதா? இதை ஹரிகரன் சாதனை என்கிறார். அது இன்றுவரை ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறதாம். ஆம் பிள்ளையாருக்கு நாளைக்குத் திருமணம் என்று கைலாய மலையில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.



 ஹரிகரன் மறைத்த கதை: அமைதிப்படையின் அட்டூழியங்கள்
ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம் செய்த போது தமிழர்களுக்கும் ராஜிவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் போராளிகள் தம் படைக்கலன்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தமிழர்களுக்கும் போராளிகளுக்குமான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். அந்தக் கனவான் ஒப்பந்தத்தை அயோக்கிய இந்தியா ஒரு சில மாதங்களுக்குள் மறந்துவிட்டு அப்பாவித் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததையோ அப்பாவிப் பெண்களைக் கற்பழித்ததையோ ஹரிகரன் மறைத்துவிட்டார். அந்தக் கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அயோக்கிய இந்தியா உதவியது. இன்றும் இலங்கைப் படையினருக்கு உதவுகிறது.


ஹரிகரனின் புரட்டுக் கதை: கேந்திரோபாய வெற்றியா? இந்தியா சிறுபான்மையினர் போராட்டத்திற்கு உதவுமா?
ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தம் இந்தியாவை அண்டியுள்ள பிரதேசங்களில் உருவாகும் கேந்திரோபாய தோற்றங்களை இந்தியா உதாசீனம் செய்யாது என்ற செய்தியையும் சிறுபானமை இனங்களின் சம உரிமைக் கோரிக்கைக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற செய்தியையும் உலகிற்கு அனுப்பியது என்கிறார் ஹரிகரன் அவர்கள். The Accord sent home a strong message to all stakeholders: India would not ignore strategic developments in its close proximity in Sri Lanka, and would support the minority demand for an equitable deal. ஐயா சாமி நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைத்தது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பல படைத்துறை ஆய்வாளர்கள் நிறைய எழுதி விட்டனர். இந்த strategic development இற்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பரிதாபகரத்தை ஹரிகரன் அறிய மாட்டாரா? இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர் வழங்குவதைத் தடுத்து இலங்கைப் படையினர் மருத்துவ மனைகள் உட்பட எல்லா குடிமக்கள் நிலைகள் மீதும் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசிக் கொன்றபோது இந்தியா என்ன செய்தது? அந்தப் போர்க்குற்றங்களுக்கு தானும் உடந்தையாக இருந்தது. அதைத் தடுக்க முயன்ற மற்ற நாடுகளையும் தடுத்தது. இப்படி இருக்க ஏன் ஹரிகரன் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கிறார்?


ஹரிகரனுக்குத் தெரியாத கதை
ஹரிகரன் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தை புகழோ புகழ் என்று புகழ்ந்து விட்டு கட்டுரையை முடிக்கத் தெரியாமல் முடித்திருக்கிறார். கடைசியில் The Accord failed to achieve its strategic goals in full என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஒப்பந்தம் நல்லதுதானாம். இந்தியாவிற்கு சிறந்த தலைமை தேவையாம். The Accord failed to achieve its strategic goals in full என்பது தமிழர்களைப் பொறுத்தவரை பாதிக் கிணறு தாண்டிய கதைதான். 25 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் தராத ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்குச் சாதகமாக ஒன்றையும் செய்யவில்லை. கொழும்பில் இந்த ஒப்பந்தத்தைப்பற்றி அடிபடும் கதையின் படி ஒப்பந்தம் செய்யப்படும் போது தமிழின விரோதிகளாக இருந்த இந்திய அதிகாரிகள் ராஜீவிற்குத் தெரியாமல் ஜே ஆர் ஜயவர்த்தனேயிற்கு இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள. இதனால்தான் இன்றுவரை இந்தியா சும்மா உதட்டளவில் மட்டும் 13-வது திருத்தத்தின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. 13-வது திருத்தத்தின் முக்கிய அம்சமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கை இரத்துச் செய்த போது இந்தியா ஒருவார்த்தை கூட த் தெரிவிக்கவில்லை. இது கேணல் ஹரிகரனின் கோணல் கதையில் இடம்பெறவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்குமே உதவாததுதான் 13வது திருத்தம். இது தான் சகல பிரச்சனைக்கும் தீர்வு என இந்திய உளவாளிகளும் கைக்கூலிகளும் தொடந்து பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

Sunday, 29 July 2012

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

இலண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவையினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் பிரித்தானியக் காவற்துறையான ஸ்கொட்லண்ட் யார்ட்டின் பணிமனைக்குச் சென்றபோது. நீங்கள் வருவீர்கள் என்று எமக்குத் தெரியும் எமது முன்னேற்பாடுகளில் அதுவும் ஒன்று என்று பதில் கூறப்பட்டது. இலண்டன் ஒலிம்பிக்கை அப்படி முன்னேற்பாடுகளுடன் செய்திருந்தனர்.
 திருத்தம்: இதில் பிரித்தானியத் தமிழர் பேரவை என்று குறிப்பிட்டது தவறு தமிழர் ஒருக்கிணைப்புக் குழு என்று  இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்

இலண்டனுக்குள் உலகம்
மேற்கு நாடுகளில் இலண்டன் நகரில்தான் அதிக அளவு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இலண்டனில் அதிக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இடமாக ஓர் இந்துக் கோவில் இருக்கிறது. சீனாவிலும் பார்க்க சிறந்த சீன உணவுகளை இலண்டன் உண்வகங்களில் உண்ணலாம். கடைசியாக ஒலிம்பிக் போட்டி இலண்டனில் 1948இல் நடந்தது. அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிநடாத்த முன்வராததால் பிரித்தானியா முன்வந்து நடாத்தியது. 2012இல் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலண்டலின் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இலண்டனில் 2012 ஒலிம்பிக் நடக்கும் என்று அறிவித்தவுடன் இலண்டன் நகரில் குண்டு வெடித்தது.

தேசப்பிரச்சனை

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் சேர்த்து பெரிய பிரித்தானியா என்பர். இம்மூன்று தேசங்களும் ஒன்றாக இணைந்துதான் ஒலிம்பிக்கில் போட்டியிடும். உலக கால்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி போன்ற போட்டிகளில் இவை தனித் தனியாகப் போட்டியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க முன்னரே ஒலிம்பிக்கிற்கான கால் பாந்தட்டப் போட்டி ஆரம்பித்துவிடும். அதன் படி ஆரம்பித்த போட்டியில் பெரியபிரித்தானிய கால்பந்தாட்ட அணி விளையாடத் தொடங்கிய போது அதன் தேசிய கீதம் இசைத்த போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் வீரர்கள் தேசிய கீதத்தை சேர்ந்து பாடாதது பிரச்சனையைக் கிளப்பியது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது கோபி சிவங்தனின் தொடர் உண்ணாவிரதம்
சீன ஆடைகளைக் கொழுத்திய அமெரிக்கர்
அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் சீனவில் இருந்து தருவிக்கப்பட்டன. சீனா இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் அந்த ஆடைகளைக் கொழுத்திவிட்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிகின்றனர்.

பாதுகாப்புப் பிரச்சனை
மேற்கு நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் இப்போது பெரும் பிரச்சனை. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுபேற்ற ஜீ-4 நிறுவனம் தேவையான அளவு பாதுகாப்பு ஊழியர்கள் கிடைக்காததால் பிரச்சனை உருவானது. இதனால் பிரித்தானியப் படைத்துறையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக கையில் துப்பாக்கி இன்றிப் பெரும் கிளர்ச்சிகளையே கையாளும் பிரித்தானியக் காவற்துறையினர் ஒலிம்பிக்கில் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.

திரைப்பட இயக்குனர் காட்டிய திரைப்படம்
27/07/2012 வெள்ளிக்கிழமை இலண்டனில் ஒலிம்பிக் தொடக்க விழா 27 பில்லியன் பவுண்கள் செலவிட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பிரபல திரைப்பட இயக்குனர் டனி பொயிலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இயக்குனர் டனி பொயில் ஸிலம்டோக் மில்லியனார் படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர். அவர் ஜேம்ஸ் போண்ட் பாத்திரத்துடன் பிரித்தானிய மகராணியையும் அவரது இரு நாய்களையும் நடிக்க வைத்த ஒரு குறும்படத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். குறும்படம் இலண்டனில் பிரபல இடங்களான பாராளமன்றம், பிக் பென், வின்ஸ்டன் சேர்ச்சில் சிலை, கோபுரப் பாலம், போன்றவற்றையும் ஹரி பொட்டர் கதாசிரியர் புத்தகம் வாசிப்பதையும் உள்ளடக்கி இருந்தது. பிரித்தானிய மகராணி உலங்கு வானூர்தியில் வந்து ஆகாயக் குடை மூலம் ஒலிம்பிக் மைதானத்தில் இறகுங்குவது போல் நிகழ்வை டனி பொயில் அமைத்திருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கான மொத்தச் செலவு 9பில்லியன் பவுண்கள். பிரித்தானியப் பொருளாதரத்திற்கு மொத்தம் 13 பில்லியன் பவுண்கள் பெறுமதியான நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் இரு ஒரு இலாபம் தரும் வியாபாரம். இதற்குத்தான் ஒலிம்பிக் போட்டிகள் தமது நாட்டில் நடக்க வேண்டும் என்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன.

பிரித்தானியா சொல்ல முயல்வது
உலகின் பெரும் பகுதியை ஆண்டவர்கள். கொடுமைகள் செய்தவர்கள் என்ற தமது விம்பத்தை மாற்றி பிரித்தானியா ஒரு பல்லின மக்களையும் கொண்ட ஒரு நாடு என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்த பிரித்தானிய ஒலிம்பிக் விழாவைப் பயன்படுத்திக் கொண்டது. பிரித்தானியா என்றவுடன் பலரின் நினைவில் வரும் கைத்தொழிற்புரட்சி, பசுமையான விவசாய நிலங்கள், ஆடு வளர்ப்பு  செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவற்றை விழா பிரதிபலித்தது. பிரித்தானியர்களிடம் எனக்குப் பிடித்தவை அவர்களின் நகைச்சுவை உணர்வும் வீட்டின் பின்புறத்தில் வைத்திருக்கும் அழகிய பூந்தோட்டமும்தான். பிரித்தானியர்களின் நகைச்சுவை உணர்வை மிஸ்டர் பீன் என்னும் பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவான் அட்கின்ஸன் ஒலிம்பிக் விழாவில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்.  நூற்றுக் கணக்கான மருத்துவமனைப் படுக்கைக்களை இளம் நோயாளர்கள் மருத்துவத் தாதியர்களுடன் நடுவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிரித்தானிய பெரிதும் சிரமப்பட்டு தனது மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை செய்து வருகிறது என்பதை உணர்த்த இதைச் செய்திருக்கலாம். பழம் பெரும் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒலிம்பிக் சுடரை ஏற்றாமல் ஏழு இளம் வீரர்களை வைத்து இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்களை ஏற்ற வைத்தனர். பின்னர் அந்த இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்கள் ஒன்றாகி ஒரு சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சுடர்களுக்கு மத்தியில் காணொளிப்பதிவுக் கருவியை பிபிசி எப்படி வைத்துக்காட்டியதோ? ஆர்டிக் மங்கீஸ், போல் மக்காட்னி போன்றோர் மூலம் தனது இசைத் துறைப் பாரம்பரியத்தையும் பிரித்தானியா வெளிப்படுத்தத் தவறவில்லை. பிரித்தானியாவிற்கு பெருமை சேர்க்கும் பல்கலைக் கழகங்கள், ஷேக்ஸ்பியர் நாட்கங்கள், ஐசாக் நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த போன்றவை எப்படி மறக்கப்பட்டன?

மழை குளப்பவில்லை
இலண்டனில் ஒரு நிகழ்ச்சியின் போது மழை பொழியாவிட்டால் அதுவே அந்த நிகழ்ச்சிக்கு 25% வெற்றியைக் கொடுக்கும். போக்கு வரத்து நெரிசல் இல்லாவிடில் மேலும் 10% வெற்றி. அந்த வகையில் இலண்டன் ஒலிம்பிக் பெரும் வெற்றியே.

பத்திரிகை விமர்சனங்கள்
The Times of India called the ceremony "dazzling", adding that London had "presented a vibrant picture of Great Britain's rich heritage and culture".

LA Times reporter said: "The Queen acting, JK Rowling reading in public, can you top this?"

Chicago Tribune and Los Angeles Times journalist Philip Hersh tweeted: "Did MTV produce this?"

New York Times: "visually stunning". .......  "hilariously quirky" celebration as a "noisy, busy, witty, dizzying production".

Huffington Post: London 2012: World's Press Heaps Praise On The Olympic Opening Ceremony

Washington Post: They rolled out dancing nurses and smokestacks, poked fun at their weather and gave us Mr. Bean. Amid green and pleasant pastures, they read from the storybook that is Britain, not just Shakespeare but Peter Pan and Harry Potter. And if the Opening Ceremonies of the London Games sometimes seemed like the world’s biggest inside joke, the message from Britain resonated loud and clear: We may not always be your cup of tea, but you know — and so often love — our culture nonetheless.

அமெரிக்க வேட்பாளர்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பாளர் மிட் ரொம்னி பிரித்தானிய ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இல்லை என போட்டி தொடங்கமுன்னர் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அமெரிக்க வேட்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் திறமை மிக்க ஆலோசகர்களின் ஆலோசனைகளுடன் தான் வெளிவிடுவார்கள். அவர் பிரித்தானியாவைத் தாக்கி தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறார்.ஆனால் ஒலிம்பிக் அதிகாரிகள் பிரித்தானியாவின் தயார் நிலமை அண்மைக்காலங்களில் மற்ற நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான தாயார் நிலைகளிலும் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

வலது சாரி அரசியல்வாதியின் தாக்குதல்
இலண்டன் ஒலிம்பிக் வெள்ளை இனத்தவருக்கு மட்டும் இந்த நாடு உரிமையானது அல்ல இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற செய்தியுடன் ஆரம்பித்தது பல வலது சாரி அரசியல் வாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஐடன் பேர்லி என்னும் பழமைவாதக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் டுவிட்டரில்: "The most leftie opening ceremony I have ever seen - more than Beijing, the capital of a communist state! Welfare tribute next?" "Thank God the athletes have arrived! Now we can move on from leftie multi-cultural crap. Bring back red arrows (sic), Shakespeare and the Stones!" ஆரம்ப விழாவில் இடது சாரித்தன்மை நிறைந்திருந்தது. பொதுவுடமை நாடான சீனத் தலைநகரில் நடந்ததிலும் பார்க்க இலண்டன் விழா அதிக இடதுசாரித்தனமும் பல்லினக் குப்பையும் நிறைந்திருந்தது என்றார் அவர். இவரது டுவிட்டர் பதிவு பல சர்ச்சையைகளைக் கிளப்ப உள்ளது.

வட கொரியா தென் "கொடியாப்" பிரச்சனை
பெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஓர் இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். தடையை மீறி தீபெத்தியர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்யதனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போது அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.


இனக்கொலையாளிகள் இலங்கையும் இந்தியாவும்
ஒலிம்பிக் போட்டிக்கு மஹிந்த ராஜபக்ச வருவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இம்முறையும் அவரின் வருகைக்கு  எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கொட்லண்ட் யார்ட் மஹிந்த வரவில்லை இலங்கைப் பிரதம மந்திரிதான் வருகிறார் என்று பிரித்தானியத் தமிழர் பேரவையிடமும் தமிழ் இளையோர் அமைப்பிடமும் தெரிவித்திருந்தது. ஆனால் இண்டிப்பெண்டன்ற் பத்திரிகை மஹிந்த வருகிறார் என்றும் அவருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் வரலட்சுமி விரதத்திற்காக இலண்டனில் உள்ள ஆலயங்களில் தமிழர்கள் நிரம்பி வழிந்தனர். சில செயற்ப்பாட்டாளர்கள் கூட ஆலயங்களில்தான் நின்றனர். இதனால் வழமையிலும் பார்க்க குறைந்த அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். ஒலிம்பிக் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வரும் போது அந்த நாட்டு தலைவர்களைக் காட்டுவார்கள். மஹிந்த ராஜபக்ச வந்தாரா என்பதை அறிய பலரும் காத்திருந்தனர். ஆனால் இலங்கை வீரர்களின் பவனியின் போது ஓரிரு கணங்கள் தான் காட்டினார்கள் அவர்களின் அரசத் தலைவர் இருந்த பக்கம் ஒளிப்பதிவுக் கருவிகள் திரும்பவில்லை. இந்திய வீரர்கள் வரும்போது  பிரித்தானிய மகாராணியின் முகம் காட்டப்பட்டது. இந்திய வீரர்கள் தலையில் காவி நிறத் தலைப்பாகை அணிந்து வருவதைப் பார்த்த தெரிந்த ஒரு குஜராத்தி சிறுமி They look like clowns என்றாள். இந்திய ஒலிம்பிக் சபையின் தலைவரை இலண்டன் சென்று ஒலிம்பிக் விழாவில் கலந்து கொள்வதை இந்திய நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இந்தியாவின் விளையாட்டுத் துறையின் ஊழல் நிலைமை அப்படி.

அத்து மீறி நுழைந்த ராகுல் மொக்கை காந்தியின் காதலி?
இந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் போது அவர்களுடன்  ஒரு மர்மமான பெண் நடந்து சென்றார். இவரிடம் ஒலிம்பிக்கின் அதிகாரபூர்வ அடையாள அட்டை இருக்கவில்லை. இந்திய மற் போர் வீரருடன் முன்னணியில் நடந்து சென்னார். இவர் ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்ய முடியவில்லை. இவர் ஜாகீர் ஷாவின் என்பவரின் பேத்தியாம். இன்னொரு செய்தி இவர் பெயர் மதுரா ஹனி என்றும் சொல்கிறதுஇவர் அத்து மீறி நுழந்து நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியினரை பத்து நொடிகள் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இவரை அனுமதித்தமை தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்திய அணியினருக்குத் தெரியாமல் இப்பெண் அவர்களுடன் கதைத்த படி இந்திய வீராங்கனைகளின் சீருடையான மஞ்சள் சேலை இன்றி எப்படி நடக்க முடியும்? டெல்லியில் சோனியாவின் அடுப்பங்கரையிலும் மந்திரி சபையிலுமாக இரு அதிகார மையங்கள் இருப்பது போல் இந்திய ஒலிம்பிக்கிலும் இரு அதிகார மையங்கள் இருக்கிறதா?


Friday, 27 July 2012

கலையும் நாழிகையில் கலையாவண்ணம்

உன் நினைவிலாவது
நான் இருக்க வேண்டும்
என்பதே என் நினைவு

என் கனவிலாவது
உன்னைக் காணவேண்டும்
என்பதே என் கனவு

இந்தப் பிறவியிலாவது
உன்னுடன் வாழவே
நான் எடுத்தது இப்பிறவி

உன் ஓர விழிப்பார்வை
சொல்லும் மொழியறியாமல்
தவிக்கும் என் இதயம்

அந்திச் சாரலில் கைகோர்த்து
 உடல்கள் இதமாய் உரச
நடக்கும் நாள் என்னாளோ

காதோரக் குழலாடும் ஆடும்
அழகு பார்க்கும்
நாள் என்னாளோ

கலையும் நாழிகையில்
கலையாவண்ணம்
இதமாய் நினைவுகள்

 கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
படிந்தது உன் அழகு முகம்

பஞ்சணையில் நெஞ்சிணைக்க
நெருங்கியணைக்க
மிஞ்சும் சுகம் கோடி

Thursday, 26 July 2012

பாதுகாப்பை உடைத்த 11 வயதுச் சிறுவன்:பிரித்தானியாவின் முகத்தில் கரிக்கு மேல் கரி

வீட்டில் பிரச்சனை, படிப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் விரக்தியடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுவதுண்டு. பிரித்தானியாவில் ஒரு சிறுவன நாட்டை விட்டே ஓடி விட்டான். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் நடக்கும் வலயத்தில் 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதலை எதிர் கொள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப் பட்டுள்ளன. இலண்டன் ஒலிம்பிக் இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிக படைத்துறை மயப்படுத்தப்பட்ட ஒலிம்பிக் என்று சொல்லப்படுகிறது.

Home Alone திரைப்படம் மாதிரி Rome Alone
பலத்த பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படும் வேளையில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு லியாம் கொர்கோரன் என்னும் பெயருடைய ஒரு 11 வயதுச் சிறுவன் கடைத்தெருவில் இருந்து தாயாருக்குத் தெரியாமல் ஒரு பேருந்தில் ஏறி மன்செஸ்டர் விமான நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளோடு பயணியாக ரோமாபுரி செல்லும் விமானத்தில் பயணச் சீட்டும் கடவுச்சீட்டும் இன்றி ஏறிவிட்டான். விமானம் பிரிதானியா கடந்து பிரான்ஸ் மேல் பறந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் பயணி விமான ஊழியர்களிடம் தனியாக ஒரு பையன் பயணம் செய்கிறான் என்ற சந்தேகத்தை தெரிவித்தார். பையனை விசாரித்து அவர்கள் உண்மையை அறிந்து மன்செஸ்டர் விமான நிலையத்திற்கும் ரோம் விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மகனைக் காண்வில்லை என்று காவற்துறையிடம் முறையிட்ட 29 வயது தாயார் மேரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த விமானத்தில் பையன் திருப்பி அனுப்பப்பட்டான்.

வீட்டுக் கணக்கிலும் பார்க்க இலகு
தனது பயணத்தைப் பற்றி பத்திரிகையாளிரடம் கூறிய லியாம் விமானத்தில் ஏறுவது பாடசாலை தரும் வீட்டுக்கணக்கிலும் இலகுவானது என்றான். தான் விமான நிலையத்தில் கண்டபடி நடந்து திரிந்து கொண்டிருக்கையில் பார்த்தால் ஒரு கட்டத்தில் ஜெட்-2 விமானத்துக்குள் தான் இருப்பதை உணர்ந்தானாம். கழிப்பறை செல்ல வேண்டும் போல்  இருந்ததால் கழிப்பறையில் தான் இருக்கையில் விமான பறக்கத் தொடங்கி விட்டதாம். ஆனால் பையனின் செயல் விமானநிலையப் பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டது. லியாம் சகல பாதுகாப்பு கண்காணிப்பு நிலைகளிலும் ஆபத்தற்றவன் எனக் காணப்பட்டதால் அவன் இலகுவாக போகக் கூடியதாக இருந்தது என்கின்றனர். அவன் ஒரு குடும்பத்துடன் இணைந்து சென்றிருக்க வேண்டும் ஆட்களை எண்ணும் போதுதவறு நடந்திருக்கலாம் என்கின்றனர் மன்செஸ்டன் விமான நிலையப் பாதுகாப்புத் துறையினர். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பலத்த பாது காப்பு ஏற்படுகள் செய்யப் பட்டிருக்கும் வேளையில் இது நடந்தது பிரித்தானியாவையே அதிர வைத்துள்ளது.

வட கொரியா தென் "கொடியாப்" பிரச்சனை
பெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஒரு இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்ய விருக்கின்றனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போது அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.


Wednesday, 25 July 2012

இலங்கையில் பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு வைக்கும் ஆப்பு.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திருகோணமலை. இலங்கையில் ஒரு வல்லரசுப் போட்டி உருவானதற்கும் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் படும் மிகப் பெரும் துயரத்திற்கும் இதுவே காரணமாக இருந்தது.  1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். திருக்கோணமலைத் துறைமுகத்தில் ஒரு சிங்கப்பூர் எண்ணெய் நிறுவனத்திற்கு எரிபொருள் பதனிடவும் இருப்பிலிடவும் அனுமதி வழங்கினார். ஆனால் இந்த சிங்கப்பூர் நிறுவனம் அமெரிக்கர்களிற்குச் சொந்தமானது. அதன் மூலம் அமெரிக்கா தேவை ஏற்படும் கட்டத்தில் திருக்கோணமலையில் இருந்து தனது கடற்படைக் கப்பல்களுக்கு எரிப் பொருள் நிரப்பலாம்.

இலங்கையின் பூகோள அமைப்பு நீர் மூழ்கிக்கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ் அலைவரிசை (Ultra law wave) தொடர்பாடல்களுக்கு மிகவும் உகந்தது. இதனால் இலங்கையின் மேற்குக் கடலோரப் பிரதேசமான சிலாபத்தில் அமெரிக்க வானொலியின் அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் அமெரிக்கா தனது நீர் மூழ்கிக் கப்பல்களிடையான ஒரு தொடர்பாடல் நிலையத்தை ஏற்படுத்தத் தயாரானது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார். கைக்குண்டுகளுடனும் கைத் துப்பாக்கிகளுடனும் ஐம்பது பேருடன் இயங்கி வந்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை தன் வசமாக்கி அவர்களுக்கு படைப் பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கியதுடன் அவர்களிடை பல பிளவுகளை உருவாக்கி அவர்களைக் கூறு போட்டார். இந்தியாவின் வஞ்சகத்தை உணராத பல தமிழர்கள் தமக்கு என்று ஒரு தனிநாட்டை இந்தியா உருவாக்கப் போகிறது என்று உறுதியாக நம்பினர். இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஒரு பெரும் படைக்கல மோதல் உருவானது. இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது.

பின்னர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பனிப் போர் முடிய இலங்கையில் அமெரிக்க இந்திய வல்லாதிக்கப் போட்டி முடிந்து சீன இந்திய வல்லாதிக்கப்போட்டி உருவானது.  ஆனால் இந்திய ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் மட்டுமே அதிக அக்கறை காட்டினர். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் இலங்கையில் சீன ஆதிக்கம் வளர்வதை அவர்கள் எதிர்க்கவில்லை. விளைவு அம்பாந்தோட்டையில் சீனா பாரிய துறை முகத்தை உருவாக்கியது. அது ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட துறைமுகமாக இருந்தாலும் அது தேவை ஏற்படுமிடத்து படைத்துறை நடவடிக்களுக்கு பயன்படுத்தக் கூடியது. அதற்கு அருகில் ஒரு பெரிய படைக்கலன்கள் சேமித்து வைக்கும் நிலையத்தை சீனா உருவாக்கியுள்ளது. அத்துடன் அம்பாந்தோட்டை துறை முகத்தின் அளவு அப்பிராந்திய வர்த்தக தேவைகளிலும் மிகப் பெரியது. அம்பாந்தோட்டை துறை முகம் படைத்துறை நோக்கங்கள் கொண்டதே.

தொ(ல்)லை நோக்குடன் தொலைத் தொடர்புக் கோபுரம்
இலங்கையில் சீனா அமைக்க விருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரம் தொடர்பான திட்டங்கள் யாவும் இதுவரை மறைத்து வைக்கப்பட்டு திடீரென்று இன்று வேலைகள் இன்று ஆரம்பமாகின்றது என்று அறிவித்தது ஏன்? இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்தின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு? 50 ஒளிபரப்புச் சேவைகள், 50 ஒலிபரப்புச் சேவைகள், 10 தொலைபேசிச் சேவைகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், உணவகம், பணிமனைகள், மாநாட்டு மண்டபங்கள், பொருட்காட்சி நிலையங்கள், ஆடம்பரத் தங்ககங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 350 மீட்டர் உயரமான கட்டிடத்தை சீனா 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இலங்கையில் அமைக்க விருக்கிறது. கோபுரத்தின் பெயர் தமரைக் கோபுரம். இக் கோபுரம் இந்தியாவிற்குச் சீனா இலங்கையில் வைக்கும் இன்னொரு ஆப்பு.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.

சிங்களவர்கள் போரில் வெல்ல இந்தியா சகல உதவிகளும் செய்தது. ஆனால் சீனா இலங்கையில் பாரிய திட்டங்களை நிறைவேற்ற மஹிந்த ராஜபக்சே அரசு அனுமதி அளித்துள்ளது. ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கான செலவை சீன வங்கி இலங்கைக்குக் கடனாக வழங்கும். அதை வைத்து சீன நிறுவனங்கள் இலங்கையில் அத்திட்டங்களை நிறைவேற்றும். அத்திட்டங்கள்:
  • புத்தளத்தில் அனல் மின்நிலைய இரண்டாம் கட்டம்.
  • அம்பாந்தோட்டையில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டம்.
  • அம்பாந்தோட்டை விமான நிலையத் திட்டம்.
  • மாத்தறை கதிர்காமம் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
  • பிந்துவர மாத்தறை இடையிலான் விரைவுப் பாதை அமைப்பு.
  • மதவாச்சி தலைமன்னார் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
  • யாழ்ப்பாணத்தில் பல பெருந்தெருக்கள் அமைப்பு.
  • யாழ்-மன்னார்-புத்தள இணைப்பு தெருக்கள்
  • பலாலி காங்கேசன் துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
இதில் பலாலி காங்கேசந்துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு இந்தியாவைற்கு வைக்கப்படும் ஆப்பு. இத்திட்டம் இந்தியாவில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இடம் பெறவிருக்கிறது. இலங்கை இந்திய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இழுத்தடித்து  வருகிறது இலங்கை. இலங்கையில் போர் நடக்கும் போது போர் முடிவடைந்த பின்னர் ஒப்பந்தமிடுவதாக இலங்கை இந்தியாவிற்கு வாக்குறுதி வழங்கி

இந்தியாவை ஓரம் கட்டி விட்டு பாக்கிஸ்தானை அழைக்கும் இலங்கை
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் இணங்கியிருந்தன. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது. இத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. இப்போது பாக்கிஸ்த்தான் சம்பூரில் ஒரு அணு மின் நிலையத்தை உருவாக்குவற்கான பேச்சு வார்த்தைகளை இலங்கையுடன் ஆரம்பித்திருக்கிறது. மேலுள்ள சீனாவின் ஒன்பது திட்டங்களில் ஒன்று கூட திருகோணமலையில் இல்லை. இப்போது சீனா பாக்கிஸ்த்தானின் துணையுடன் திருகோணமலையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் மேத்தா கொழும்பில் இருந்து புதுடில்லி சென்று இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன கலந்துரையாடியுள்ளார் என இந்திய ருடே தெரிவிக்கிறது.  அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு தனது படைக்கலன்கள் விற்பனையையும் அதிகரிக்க விருக்கிறது. இச்செய்திகள் புதுடில்லியை நிச்சயம் உலுக்கி இருக்கும். ஜூன் 29-ம் திகதி இலங்கைக்குச் சென்ற இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்ப்பாக மீளாய்வு செய்யும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார். அவர் கொழும்பு சென்ற சில தினங்களில் இலங்கையில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என சீன தெரிவித்தது. இனி வரும் காலங்களில் புதுடில்லியை உலுக்கும் பல நடவடிக்கைகளை இலங்கை எடுக்கலாம்.

Tuesday, 24 July 2012

காதலும் சிகரெட் போலே

கண்ணில் தோன்றி
கன்னம் வழியோடி
நிலத்தில் வீழ்ந்து
மறைந்து போவதால்
காதலும் கண்ணீர் போலே

தீ எனத் தோன்றி
உதட்டில் உரசி
நெஞ்சில் புகைத்து
சாம்பலாய் போவதால்
காதலும் சிகரெட் போலே


அப்பா கேட்டார்
அப்படி என்னாடா
கண்டாய் அவளிடம்
யாரும் அறியார்
யாருக்கும் உன்னில் தெரியாதது
எனக்குத் தெரிந்தது என்பதை

வாரி வாரிக் கொடுத்தது
வற்றாது எஞ்சியிருக்கிறது
அன்பு

மழையடிக்குது குடை வேண்டாம்
குளிரடிக்குது போர்வை வேண்டாம்
தாகத்திற்கு தண்ணீரும் வேண்டாம்
அவள் என்னருகே

அவளில்லாவிடில்
ஒன்றுமே இல்லாத வெறுமை
அவளருகிருந்தால்
ஒன்றுமே தெரியாத நிலைமை
காதல்

Monday, 23 July 2012

83 ஜூலை இலங்கை இனக் கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது

1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் நாள் இலங்கையில் இனக் கலவரம் என்ற போர்வையில் இடம்பெற்ற இனக் கொலையைப் பற்றி ஆராய்ந்த பலரும் ஒரு கருத்தை தெளிவாகக் கூறினர்: இது திட்டமிட்டு நடத்தப் பட்டது. இதில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், முன்னூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்படுத்தப்பட்டது. இலட்சக்கனக்கானோர் இடப்பெயர்வுக்குள்ளானார்கள்.

இக்கலவரம் தொடர்பான கதைகள் 1980இல் இருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பீக்க வேண்டும். இலங்கையில் தென் பகுதியில் அவர்கள் சொத்துக்களை அழித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து 1980இல் இருந்து பரவி வந்தது.

திட்டமிட்டவர்கள்: சிங்களப் பேரின வாதிகள்.
சம்பந்தப் பட்டவரகள்: அரசியல் கட்சிகள், காவல்துறையினர், அரச படையினர், காடையர்கள்.

ஜேவிபியின் பங்கு
அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டது என்றும் கூறப்பட்டத்து. அதேவேளை தமது போராட்டத்தை நசுக்கிய இந்தியாவைப் பழிவாங்க ஜேவிபி திட்டமிட்டதாம். அத்துடன் தமிழ் முதலாளிகளுகு எதிரான தனது நடவடிக்கையையும் எடுக்கத் திட்டமிட்டதாம். விளைவு கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத வட இந்தியரும் அவர்களது சொத்துக்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப் பட்டன. ஹைட்ராமணி, குண்டன்மால்ஸ், ஜஃப்ர்ஜீஸ் போன்ற தமிழர் அல்லாதவர்களின் நிறுவனங்கள் தாக்கியழிக்கப் பட்டன. இந்த இனக் கொலை ஒருவாரமாக நடை பெற்றது.

இந்தியாவிற்கு தெரியாதா?
இந்தியாவின் உளவுத்துறை இலங்கையில் நன்கு செயற்பட்டு வந்தது. இதற்கான சான்று:
இலங்கையில் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த ஆயுதப் புரட்சியைஅடக்கியவிதம். இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன. ஜேவிபியின் புரட்சி அடக்கப் பட்டது.

இப்படிப்பட்ட இந்தியாவிற்கு இலங்கையில் பாரிய இனக்கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டது தெரியாமல் இருந்திருக்குமா?

அப்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் பலம் என்ன?
பங்களாதேசப் போரின் போது இலங்கையூடாக பாக்கிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்காவிமன நிலையத்தைப் பாவித்து பறப்புக்களின் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்தபாது அப்போதைய பாதுகாபபு அமைச்சர் ஜெகஜீவன் ராம் கூறியது: இலங்கை எமக்கு எதிராக செயற்படுமானால் ஒன்பது நிமிடங்களில் எம்மால் இலங்கையை எமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட இந்தியா ஒருவாரமாக நடந்த இனக் கொலையை தடுக்க முடியாமற் போனது ஏன்?

எங்க ஏரியா உள்ளே வராதே! This is my backyard.
1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தான் செல்லும் நாடுகளில் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனையப் பற்றி கதைத்து வந்தார். கதைத்து அவர் வலியுறுத்தியது: இலங்கையின் இனப்பிரச்சனை எனது நாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எனது நாட்டின் பாது காப்புடனும் பிராந்திய ஒருமைப் பாட்டுடனும் சம்பந்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை வலியுறுத்தி அதைப்பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். இலங்கையை தனது பிடிக்குள் இறுக்கினார் இந்திரா அம்மையார். இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்று இனக் கொலை அனுமதிக்கப் பட்டதா?

 இந்திய சந்தர்ப்ப வாதம்
1983-ல் இலங்கையில் நடந்த கலவரத்தை ஒரு இனக்கொலை என இந்திரா காந்திய கூறியிருந்தார். இந்திய சட்டாவாளர்கள் சபையும் அதையே தெரிவித்திருந்தது. மூன்று இலட்சம் பேருக்கு மேல் 2008-09இல் கொல்லப்பட்டதை இந்தியப் பாராளமன்றத்தில் ஒரு இனக்கொலை என இந்தியப் பொதுவுடமைக் (கம்யூனிச) கட்சியின் திரு ராஜா பேசியபோது அது இந்தியப் பாரளமன்றத்தின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. 2008-09இல் நடந்தது ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையே என இந்தியாவின் பிரதிந்தி 2009இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் தெரிவித்து இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை பாராட்டும் தீர்மானமாக திரித்தார். தனது தேவைக்கேற்ப இந்தியா தனது கருத்தை மாற்றி இலங்கைத் தமிழர்களை அழிப்பதை ஊக்குவித்தும் உடந்தையாகவும் இருந்து வருகிறது. இன்றும் இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகின்றது. இதைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் நடாத்தும் கல்கிப் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:
  • பல காலமாகத் தரப்பட்டு வரும் பயிற்சி இது. இந்நாள் ஜெயலலிதா, கருணாநிதி பிற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டு இலங்கை பயிற்சி விமானிகள் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவில் எங்குமே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று ஜெ. குரல் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற எதிர்ப்புகளால் இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படாது; அந்த இலக்கை அடைவது மேலும் கடினமாகும். தேவை சாணக்கியம் ஆத்திரமல்ல.
இலங்கைப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்ச்சி அளித்தால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா? அவாள் பதில் சொல்லுவாளா?

தமிழின விரோதியான சோ என்னும் சொறி நாய் இப்படிக் குரைக்கிறது:
  • என்னைப் பொறுத்தவரையில் சொல்கிறேன். இலங்கையும், இந்தியாவும் நட்பு நாடுகள்தான் அதுவுமின்றி இரண்டு நாடுகளும் சார்க் அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அமைப்பில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு இந்த மாதிரி பயிற்சிகளில் உதவுவது என்பது வழக்கம் என்று தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது ஆட்சேபத்துக்குரிய விஷயமல்ல என்பது என் கருத்து.
பாக்கிஸ்த்தானும் சார்க் அமைப்பில் இருக்கிறது. பாக்கிஸ்தான் படையினரை இந்தியாவிற்கு அழைத்து பயிற்ச்சி கொடுக்க வேண்டியதுதானே. இந்தியாவின் நட்பு நாடான இலங்கை தனது நட்பு நாட்டு மீனவர்களைக் கண்டவுடன் சுடுகின்றனர். மீனவர்கள் சூத்திரர்கள் என்றபடியால் அவர்களை இந்தியர் என்ற கணக்கில் இந்தப் பார்ப்பனக் கும்பச் சேர்ப்பதில்லை. எல்லாம் ராஜபக்ச கொடுக்கிற தட்சணை செய்கிற வேலை.

இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை பாக்கு நீரிணையின் இரு புறத்திலும் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...