உன் நினைவிலாவது
நான் இருக்க வேண்டும்
என்பதே என் நினைவு
என் கனவிலாவது
உன்னைக் காணவேண்டும்
என்பதே என் கனவு
இந்தப் பிறவியிலாவது
உன்னுடன் வாழவே
நான் எடுத்தது இப்பிறவி
உன் ஓர விழிப்பார்வை
சொல்லும் மொழியறியாமல்
தவிக்கும் என் இதயம்
அந்திச் சாரலில் கைகோர்த்து
உடல்கள் இதமாய் உரச
நடக்கும் நாள் என்னாளோ
காதோரக் குழலாடும் ஆடும்
அழகு பார்க்கும்
நாள் என்னாளோ
கலையும் நாழிகையில்
கலையாவண்ணம்
இதமாய் நினைவுகள்
கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
படிந்தது உன் அழகு முகம்
பஞ்சணையில் நெஞ்சிணைக்க
நெருங்கியணைக்க
மிஞ்சும் சுகம் கோடி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

1 comment:
Very nice....
Post a Comment