உன் நினைவிலாவது
நான் இருக்க வேண்டும்
என்பதே என் நினைவு
என் கனவிலாவது
உன்னைக் காணவேண்டும்
என்பதே என் கனவு
இந்தப் பிறவியிலாவது
உன்னுடன் வாழவே
நான் எடுத்தது இப்பிறவி
உன் ஓர விழிப்பார்வை
சொல்லும் மொழியறியாமல்
தவிக்கும் என் இதயம்
அந்திச் சாரலில் கைகோர்த்து
உடல்கள் இதமாய் உரச
நடக்கும் நாள் என்னாளோ
காதோரக் குழலாடும் ஆடும்
அழகு பார்க்கும்
நாள் என்னாளோ
கலையும் நாழிகையில்
கலையாவண்ணம்
இதமாய் நினைவுகள்
கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
படிந்தது உன் அழகு முகம்
பஞ்சணையில் நெஞ்சிணைக்க
நெருங்கியணைக்க
மிஞ்சும் சுகம் கோடி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

1 comment:
Very nice....
Post a Comment