Tuesday 24 July 2012

காதலும் சிகரெட் போலே

கண்ணில் தோன்றி
கன்னம் வழியோடி
நிலத்தில் வீழ்ந்து
மறைந்து போவதால்
காதலும் கண்ணீர் போலே

தீ எனத் தோன்றி
உதட்டில் உரசி
நெஞ்சில் புகைத்து
சாம்பலாய் போவதால்
காதலும் சிகரெட் போலே


அப்பா கேட்டார்
அப்படி என்னாடா
கண்டாய் அவளிடம்
யாரும் அறியார்
யாருக்கும் உன்னில் தெரியாதது
எனக்குத் தெரிந்தது என்பதை

வாரி வாரிக் கொடுத்தது
வற்றாது எஞ்சியிருக்கிறது
அன்பு

மழையடிக்குது குடை வேண்டாம்
குளிரடிக்குது போர்வை வேண்டாம்
தாகத்திற்கு தண்ணீரும் வேண்டாம்
அவள் என்னருகே

அவளில்லாவிடில்
ஒன்றுமே இல்லாத வெறுமை
அவளருகிருந்தால்
ஒன்றுமே தெரியாத நிலைமை
காதல்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உருக வைக்குது வரிகள்...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...