Monday, 14 May 2012

மஹிந்த வளைந்து நழுவுவாரா? நிமிர்ந்து விழுவாரா?

குரங்கிற்கு முடிவு காலம் வந்துவிட்டால் அது பாயும் கொப்பு எல்லாம் வழுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. அண்மைக் காலமாக பல நிகழ்வுகள் அவருக்கு சாதகமாக இல்லை. நாட்டில் உச்ச நிலையில் அவரின் இருப்பிற்கு பல சவாலகள் ஏற்படுகின்றன. அவரது உத்திகள் அவருக்கு எதிராகவே கிளம்புகின்றன.

தங்க வேட்டை
இலங்கையின் தங்கக் கையிருப்புக்களை இலங்கை மத்திய வங்கி இரகசியமாக விற்றமையை ஊடகங்கள் அம்பலப்படுத்திவிட்டன. இலங்கை அரசின் அந்நியச் செலவாணிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய இலங்கை தன்னிடமுள்ள தங்கக் கையிருப்புக்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம். இலங்கை ரூபாவின் மதிப்பை அதள பாதாளம் செல்ல விடாமல் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது அந்நியச் செலவாணிக் கையிருப்பை செலவு செய்து விட்டது. தங்கக் கையிருப்பில் இருந்து 9.3தொன் தங்கம் விற்றமை மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பிரச்சாரமாக இனிவரும் காலங்களில் இடம்பெறும். அது மட்டுமல்ல பிரதம் நீதியரசரின் கணவரும் அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவருமான பிரதீப் காரியவாசம்  47 ரூபாக்கள் பெறுமதியான பங்குகளை முப்பது ரூபாக்களுக்கு வாங்க முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை இரத்துச் செய்த மஹிந்த ராஜபக்ச  பிரதீப் காரியவாசம் மீது எந்த சட்ட நடவைக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதையல் வேட்டை
அநுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் பிடிபட்டபோது அவர்கள் இலங்கைக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலப்படுத்தப்படுத்தப்பட்டது. இது மஹிந்த ராஜபக்சமீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 மோசமான பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் இரு இரத்தப் பிழிவுகளில் தங்கியுள்ளது. ஒன்று மலையகத் தொழிலாளர்களின் இரத்தப் பிழிவு. மற்றது மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் முக்கியமாக பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களின் இரத்தப் பிழிவு. மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தேயிலை ஏற்றுமதியைப் பாதித்தது. மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள் தொகை இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் அந்நியச் செலவாணி வருவாய் குறைந்துவிட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியாமல் இலங்கை அரசு தடுமாறுகிறது. இலங்கைப் பங்குச் சந்தையில் ஒரு வெளிநாட்டவர் செய்த 2011 செய்த முதலீடு இலங்கை நாணய மதிப்பிறக்கத்தாலும் பங்கு விலை வீழ்ச்சியாலும் தனது முதலீட்டுக்கு 30% மேற்பட்ட இழப்பைக் கண்டுள்ளார். விலைவாசி அதிகரிப்பு 10%இலும் அதிகரித்து விட்டது. இது பணியாளர்களை சம்பள அதிகரிப்பு வேண்டி பெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வைக்கலாம். இனி வரும் காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகலாம்.

மஹிந்த குடும்பத்திலும் சகோதரப் போர்
மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துக்குள்ளும் சகோதர போர் உக்கிரமாக நடை பெறுகிறது. கோத்த பாய ராஜபக்சவிற்கு பசில் ராஜபக்சவைப் பிடிக்காது.  பசில் ராஜபகசவிற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவைப் பிடிக்காது. மஹிந்தவின் மனைவிக்கு கோத்தபாய ராஜபக்சவைப் பிடிக்காது.

யாழில் புலிக் கொடி
யாழ்ப்பாணம் செல்லும் சிங்கள எதிர்க்கட்சியினருக்கு எதிராக கடந்த காலங்களில் பல ஆளும் கட்சிய்கள் பல சதிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது உண்டு. ஜே ஆர் ஜயவர்த்தன அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர் யாழ் சென்றார் அவரது கூட்டதில் பெரும் குழப்பம் விளைவித்து மேடையை சிதைத்து அவர் விரட்டியடிக்கப்பட்டார். ரோஹண விஜயவீர மீது கல்வீசிக் காய்பப்டுத்தப்பட்டு மயங்கி விழச்செய்யப்பட்டார். ஆனால் தற்போதைய  ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பணத்திற்கு மேதினம் கொண்டாடச் சென்றபோது அவருக்கு எதிராக ஒரு புலிக்கொடியை அவரது ஊரவலத்தில் பிடித்து அவர் புலியுடன் இணைந்து விட்டார் என்று பிரச்சாரம் செய்ய முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்ச்சியை ரணில் அரச படைகளின் சதி அது என்று வெற்றிகரமாக அம்பலப்படுத்தி விட்டார்.

கட்டுக்கு அடங்காத வளர்த்த கடாக்கள்
மஹிந்த ஊட்டி வளர்த்த சிங்கள பௌத்த வெறியர்கள் இப்போது போடும் ஆட்டம் கட்டுக்கு அடங்காமல் போகிறது. இசுலாமிய இந்து ஆலயங்கள் மீது அவர்கள் நடாத்தும் தாக்குதல்கள்களும் அவர்கள் விடும் அறிக்கைகளும் இதைத் தெளிவாகச் சுட்டிக்க்காட்டுகிறது. அடிதடி அமைச்சர் என விமர்சிக்கப்படும் மேர்வின் டீ சில்வா விவகாரம் மஹிந்தவிற்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.


படையினர் இடையிலான குழப்பம்
இலங்கை அரச படையினர் இடையிலான குழப்பங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வடக்குக் கிழக்கில் இருந்து கணிசமான தொகை படையினரை மஹிந்த தெற்கு நோக்கி நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் இனி  வரும் காலங்களில் ஏற்படும். இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று  வடக்குக் கிழக்கில் அதிக அளவில் படையினர் இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருதுகிறது. இரண்டாவது மஹிந்தவிற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்து எழுவதை அடக்க மஹிந்தவிற்கு அதிக படையினர் தெற்கில் தேவைப்படலாம். தெற்கிற்கு வரும் படையினர் தமிழர்களுக்கு எதிராக செய்த அடக்கு முறைகளை சிங்களவர்களுக்கு எதிராகச் செய்வாரக்ள். இது மஹிந்தவிற்கு எதிராக மக்களை மேலும் மோசமகக் கிளர்ந்து எழச் செய்யும்.

பொன்சேக்கா நேர வெடி குண்டு
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்கா இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ எல பீரிஸ் ஐக்கிய அமெரிக்காவின் அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனைச் சந்திக்க முன்னர் சிறையில் இருந்து விடுதலை செய்தே ஆக வேண்டும். அல்லாவிடில் ஹிலரியைச் சந்திக்க வெறும் கையுடன் சென்றவர் ஆவார். (இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்.)சரத் பொன்சேக்க்கா விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்கு என்று சொல்லி வெளிநாடு செல்வார். அதை மஹிந்த தடுத்தால் அவர் உச்ச நீதி மன்றம் வரை செல்வார். சரத் பொன்சேக்கா வெளிநாடு சென்றால் அவர் மஹிந்தவைப் பற்றிய மேலும் பல போர்க்குற்ற உண்மைகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவார் அல்லது இரகசியமாக  அம்பலப்படுத்த உதவுவார்.


2016இன் பின்னர் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
இலங்கையிலும் பங்களாதேசத்திலும் மியன்மாரிலும் சீன ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முழுமுனைப்புடன் செயற்படுகிறது ஐக்கிய அமெரிக்கா.இப்போது அமெரிக்கா இந்தியாவை வலுக்கட்டாயமாகத் தன்பக்கம் இழுத்து மஹிந்த ஆட்சிக்கு எதிராக இணைந்து செயற்பட செய்துள்ளது. இவர்களுடன் இணங்கி இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தும் தமிழர்களுக்கு எதிரான போரில் உதவியமைக்காக அமெரிக்காவிற்கு உரிய பங்கிலாபத்தை வழங்கியும் மஹிந்த ராஜபக்ச வளைந்து கொடுப்பாரா? அப்படி வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்று முரண்டு பிடித்து சீனாவின் பக்கம் மேலும் சாய்வார் ஆனால் அவருக்கு ஐக்கிய அமெரிக்கா பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும். 2014இல் சோனியா காந்தியின் காங்கிரசுக் கட்சி இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் பிறகு வரும் இந்திய அரசை இலங்கையில்  நடந்த போர்க்குற்றத்திற்கு உனக்கும் பங்கு உண்டு உனது போரையே நான் நடத்தினேன் என்று சொல்லி மஹிந்த ராஜபகசவால் மிரட்டி தனக்கு பணிய வைக்க முடியாது. தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் போன்றோர்கள் இந்திய அரசின் செயற்பாடுகளில் செல்வாக்கு வகிக்க மாட்டார்கள். தமிழின விரோத கதர் வேட்டிகளும் மஹிந்தவிடம் தட்சணை வாங்கிக் கொண்டு செயற்படும் பூனூல்களும் காணாமல் போய்விடுவார்கள். இப்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் பான் கீ மூனும் வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியாரும் 2015இன் பின்னர் இருக்க மாட்டார்கள். 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமெரிக்க சார்புடைய ஒரு கிழக்கு ஐரோப்பியரே வரும் சாத்தியம் உண்டு. இப்போது அமெரிக்கவுடன் இசைந்து நடக்காவிடில் 2016இன் பின்னர் மஹிந்த பன்னாட்டு நீதிமன்றில் தண்டிக்கப்படலாம்.

Friday, 11 May 2012

துணிவோம் எழுவோம்

துரோகங்கள் சூழ வஞ்சனைகள் எழ
பாதகர் திரள பாவியர் கூட
தாழ்ந்தோம் வீழ்ந்தோம் - ஆனால்
தளரோம் துவளோம்
துணிவோம் எழுவோம்

நெஞ்சகம் தட்டுவோம் 

வஞ்சகம் வெல்வோம்
உண்மைகள் வெளிக்கொணர்வோம்
பாவியரைத் தண்டிப்போம்
பணியோம் குனியோம்
துணிவோம் எழுவோம்

தளைகள் உடைப்போம்
களைகள் அழிப்போம்
களமது புகுவோம்
நிலமது மீட்போம்
சலியோம் தணியோம்
துணிவோம் எழுவோம்


வீறது கொள்வோம்
வேங்கைகள் நாமென்போம்
துயரங்கள் துடைப்போம்
வித்துக்களைப் பயிராக்குவோம்
ஆரியம் தொலைப்போம்
சிங்களம் விரட்டுவோம்
தாயகம் காண்போம்
துணிவோம் எழுவோம்

Thursday, 10 May 2012

அல் கெய்தா - சிஐஏ இடையிலான சதிப்போட்டி

குண்டு நிபுணர் இப்ராஹிம் அல் அசிரி
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவில் அல் கெய்தா ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு பலத்த பதிலடி கொடுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையும் உள்ளகப் பாதுகாப்புத் துறையும் மிகுந்த கண்காணிப்புடன் இருந்தனர். தற்போது அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களில் மிகவும் பயங்கரமானதாகக் கருதப்படும் அரபுக் குடாநாட்டிற்கான அல்கெய்தா (AQAP) நடத்த இருந்த தாக்குதலை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ தனது இரட்டை உளவாளியால் முறியடித்தது.

2011மே மாதம் 2-ம் திகதி பின் லாடன் கொல்லப்பட்டார். அதற்கு அல் கெய்தா இயக்கம் பழிவாங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமெரிக்க அரசு உலகெங்கும் பல எதிர் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்த பிரபல சினிமா நடிகர்கள் கூட அவர்கள் பெயர்கள் கான் என்றும் ஹாசன் என்றும் இருந்த படியால் பல மணித்தியாலங்கள் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


சிஐஏயின் படுபயங்கரவாதம்
அமெரிக்க உளவுத் துறைக்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து திரைமறைவிலும் உளவு நிறுவனமாக இருந்த அமெரிக்காவின் சிஐஏ தனக்கு என்று ஒரு படை அணியையும் உருவாக்கி விட்டது. தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல. சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திகளை மாற்றும் அல் கெய்தா
விமான நிலையங்களில் இருக்கும் தீவிர கண்காணிப்புக் கருவிகளில் இருந்து தப்பக் கூடிய குண்டுகளை அல் கெய்தா தயாரித்தது. எந்த வித உலோகங்களும் இல்லாத குண்டை உருவாக்கி அதை உள்ளாடைக்குள் மறைத்து வைத்துத் தைத்து வைக்கக் கூடியாதாக அமைத்தது. பின்னர் அதற்க்குள் ஊசி மூலம் இன்னொரு திரவத்தைச் செலுத்துவதால் அது வெடிக்கும். இந்தக் குண்டுகளுகள் PETN எனப்படும் Pentaerythritol tetranitrate இரசாயனப் பதார்த்தங்களால் உருவாக்கப்பட்டன. இவை மிக வலிமை மிக்க குண்டுகளாகும் 2009 டிசம்பரில் உமர் ஃபருக் அப்துல்ல என நைஜீரிய நாட்டுக் குடிமகன் Flight 253 என்னும் விமானத்தில் ஏறி அதை வெடிக்க வைக்க முயற்சித்த போது அண்மையில் இருந்த பயணிகளால் அவரது நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.  PETN மூலம் தயாரிக்கப்படும் குண்டுகள் குண்டுகள் கண்டுபிடிக்கும் நாய்களாலும் கண்டுபிடிக்க முடியாதவை. விமான நிலையங்களில் இருக்கும் இரசாயன உணர்கருவிகளாலும் இனங்காணப்பட முடியாதவை. அத்துடன் மலிவாக formaldehyde and calcium hydroxide ஆகியவற்றை கலந்து தயாரிக்கக் கூடியவை.


இரட்டை உளவாளி
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சவுதி அரேபிய உளவுத் துறையின் உதவியுடன் தனது உளவாளிகளை அல் கெய்தா இயக்கத்தில் இணையச் செய்துள்ளது. இவர்களில் ஒருவரை அல் கெய்தாவின் குண்டுத் தயாரிப்பு நிபுணர் ஃப்ஹ்ட் அல் குசோ அமெரிக்க விமானம் ஒன்றைத் பின் லாடனின் ஓராண்டு நினைவாகத் தகர்க்க தேர்ந்தெடுத்தார். அவரிடம் உள்ளாடையில் வைத்துத் தைக்கப்பட்ட PETN குண்டு வழங்கப்பட்டது. அவர் அக்குண்டை அமெரிக்க உளவுத் துறையிடம் கொடுத்ததுடன் ஃப்ஹ்ட் அல் குசோவின் இருப்பிடத்தையும் அறிவித்தார். உடனே சிஐஏயின் ஆளில்லா விமானம் அவர் வாகனம் ஒன்றில் இருந்து இறங்கும் போது குண்டுவீசிக் கொன்றது.
ஃப்ஹ்ட் அல் குசோ
அல் கெய்தாவிற்கு நெருக்கடி
சிஐஏயின் உளவாளிகள் தனது அமைப்புக்குள் இணைந்திருக்கிறார்கள் என்பது அல் கெய்தாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். தமது இயக்கத்தில் இருப்பவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டும். இது பெரும் உள்ளகப் பிரச்சினையை ஏற்படுத்தும். அவர்களின் கண்டுபிடிபான உள்ளாடை  PETN குண்டு இப்போது சிஐஏயின் கையில். அவர்கள் இவற்றைக் கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தை உடன் உருவாக்குவாரகள். அல் கெய்தாவின் குண்டு நிபுணர் இப்ராஹிம் அல் அசிரி இனி வேறு குண்டு உருவாக்குவாரா?

Wednesday, 9 May 2012

நகைச்சுவை: தப்பித்துவங்கள்

அரசியல்வாதி: உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லிப் பதவிக்கு வந்து பின்னர் தான் பதவியில் நிலைக்க உங்கள் உயிரையும் எடுப்பவன்.

தீர்மானம்: சிந்தனை களைப்படையும் போது ஓய்வெடுக்கும் இடம்.

அமைதி: மூடிய வாய்க்குள் அழுக்குச் சேராது.


தேசிய ஒருமைப்பாடு: தனிப்பட்டவர்களின் சுதந்திரங்களின் பலிபீடம்.

தேர்தல் வெற்றி: முட்டாளும் பணமும் இணைவது.

சேமிப்பு: சரியாகப் பயன்படுத்தப்படாத பணம்.


கண்டுபிடிப்பு: தவறுகளின் விளைவு. ( Mrs Newton ஆப்பிள் பிடுங்க மறந்ததால்....புவியீர்ப்பு விசை)

சமத்துவம்: எல்லோரும் சமமாக இருந்தால் வராதது.

சிறந்த பேச்சாளி: மற்றவர்கள் கேட்பதை நிறுத்தமுன் தன் பேச்சை நிறுத்தத் தெரிந்தவன்.


திறமை: திறமை என்பது கையில் இருக்கும் காசோலை போன்றது. உரிய முறையில் மாற்றினால்தான் பயனுண்டு.

செயல்: இயலாதது என்று ஒன்றில்லை. இலகுவானது என்றும் ஒன்றும் இல்லை.

Tuesday, 8 May 2012

மோதிரத்தில் அழிந்தது இதயத்தில் அழியவில்லை.

உன் உதட்டுச் சாயம்
படிந்த கன்னங்கள்
உன் நினைவால் உதிரும்
கண்னீரில் நனைகின்றன

நாட்கள் பாய்ந்து செல்கின்றன
மாதங்கள் நகர்ந்து செல்கின்றன
ஆண்டுகளும் அசைகின்றன
நினைவுகள் நிலைத்திருகின்றன
நெஞ்சின் வலிகள் தொடர்கின்றன

நீ கொடுத்த மோதிரத்தில் இருந்து
அழிந்து விட்டது உன் பெயர்
என் இதயத்தில் இருந்து மட்டும்
அழியாமல் வதைக்கிறது.

இறுகிய அணைப்புக்கள்
குறுகிய கணங்களாயின
நெருங்கிய உடல்கள்
நொருங்கிய கனவுகளாயின

Monday, 7 May 2012

நகைச்சுவை: IT கணவனும் மனைவியும்


வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.
மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.
மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?
கணவன்: Bad command or file name
மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....
கணவன்: erroneous syntext
மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied
மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password
மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch
மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default
மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted
மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters
மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del
மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down
மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot
மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்
கணவன்: change user

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...