Tuesday 30 November 2021

அப்பாவிகள் பாதிக்கப்படும் ஈரான் – இஸ்ரேல் இணையவெளிப் போர்

  


போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி (Archbishop of Canterbury) இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாக இருந்தவர். 2007ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007. அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை. இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North-East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North-East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”.

இது இங்கிலாந்து திருச்சபையும் தமிழர்களின் முதுகில் குத்தியது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பலவகைப் போர்கள்

விடுதலைப் போர், சுதர்ந்திரப் போர், அறப்போர், ஆக்கிரமிப்பு போர், பயணப் போர், தாக்குதல் போர், தற்பாதுகாப்புப் போர், கரந்தடிப் போர், விடுவிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈடற்ற போர், தரைப்போர், வான் போர், கடற்போர், விண்வெளிப்போர், நிலகீழ்ப்போர், சாம்பல் வலயப் போர், மதப்போர், நிகராளிப்போர், இணையவெளிப்போர் எனப் போரில் பல வகைகளுண்டு.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போரில் நிகராளிப் போரும் இணையவெளிப்போரும் முக்கியமானவை. ஒரு தரப்பு மற்றத் தரப்பிற்கு எதிராக முன்றாம் தரப்புகளுடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றினூடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும்.

ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இவையிரண்டையும் இணையவெளிப் போருக்குள் அடங்கும்.

ஈரான் மீது பலவகையான இணையவெளித் தாக்குதல்களை இஸ்ரேல் செய்து வருகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமானது Stuxnet என்னும் வைரஸ் மூலம் ஈரானிய யூரேனியம் பதப்படுத்தல் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செய்த தாக்குதலாகும். அது பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.veltharma.com/2012/06/blog-post_05.html

கமெய்னி எரிபொருள் எங்கே?

2021 ஒக்டோபர் மாத இறுதியில் ஈரானின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள கொடுப்பனவு முறைமைகள் (payment systems) மீது இஸ்ரேல் செய்ததாகக் கருதப்படும் இணையவெளித் தாக்குதலில் மூலம் சேதப்படுத்தப் பட்டது என்ற செய்தியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 27-ம் திகதி அம்பலப்படுத்தினர்.. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல ஈரானில் உள்ள இலத்திரனியல் அறிவிப்புப் பதாகைகளில் கமெய்னி எரிபொருள் எங்கே எனக் கேட்கும் வாசகங்கள் இலத்திரனியல் ஊடுருவல் மூலம் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட 4,300 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கொடுப்பனவு முறைமையை மீளச் செயற்பட வைக்க 12 நாட்கள் எடுத்தன. இந்தத் தாக்குதல் ஈரானில் உள்ளவர்களின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய கணினித்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாகச் செய்யப்பட்டது. ஈரானில் இருந்து இஸ்ரேலின் தன்னினச் சேர்க்கையாளர்களின் இணையத்தை ஊடுருவி பெற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பலரது பாலியல் தொடர்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல இஸ்ரேலியப் பிரபலங்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

இஸ்ரேலின் தாக்குதலால் விரக்தியடைந்த ஈரானியர்கள் சிரியாவின் Homs மாகாணத்தில் உள்ள Al Tanf இல் இருக்கும் 200 படையினரைக் கொண்ட அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தினர் என அமெரிக்கா அறிவித்தது

2021 ஏப்ரல் மாதம் ஈரானின் தொடருந்து சேவை நிலையங்களில் தொடருந்துகள் வரும் நேரம் அறிவிக்கும் இலத்திரனியல் பதாகைகளில் தாமதம், இரத்து, போன்ற வாசகங்களை பதிவேற்றி பயணிகளையும் தொடருந்து சேவைகளையும் குழப்பி ஈரானிய மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. சில அறிவிப்புக்களில் கமெய்னிக்கு அழைப்பு விடுக்கவும் எனவும் பதிவுகள் மாற்றப்பட்டன.

2021-ம் ஆண்டு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தலில் மின்வெட்டு, ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து எனவும் இணைய வெளித்தாக்குதல் மூலம் நடந்தன.

இஸ்ரேலிலி இருந்து செய்யப்படுவதாக கருதப்படும் இணையவெளித் தாக்குதல்கள் ஈரானிய சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள கணினித் தொகுதிகளில் செய்யப் பட்ட ஊடுருவல்களால் பல சிறைக்கைதிகளின் தகவல்கள் மாற்றப்பட்டதால் கைதிகள் மீது அட்டூழியங்கள் நடந்தன.

2019-ம் ஆண்டு ஈரானில் இருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினித் தொகுதிகளில் செய்யப்பட்ட தாக்குதல்களால் பல நூறு மில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தக் கூடிய இணைய வெளித்தாக்குதல்கள் தாற்போது அதிகரித்துச் செல்கின்றன என்பதை இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின் மீது ஒன்று செய்யும் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...