Monday 28 October 2013

சீனாவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தயார் என்கிறது ஜப்பான்


ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே சீனாவின் கிழக்குச் சீனக் கடற்கரையில் சீனாவின் வாலாட்டலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை ஜப்பான் எடுக்குன் எனக் கூறியுள்ளார். The Wall Street Journalஇற்கு வழங்கிய பேட்டியிலேயே ஜப்பானியப் பிரதமர் இப்படி முழங்கியுள்ளார்.

கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின. அது மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகள் ஏற்பட்டுள்ளது. கிழக்குச் சீன கடலில் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விரட்டிய பின்னர் சன் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி அமெரிக்கா கிழக்குச் சீனக் கடல் தீவுகளைத் தனதாக்கிக் கொண்டது. பின்னர் 1972இல் இத் தீவுகளை அமெரிக்கா ஜப்பானிடம் கையளித்தது. கிழக்குச் சீனக் கடற்படுக்கையில் அறுபது முதல் நூறு பில்லியன் பீப்பாய் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 1894-95இல் நடந்த போரில் சீனா ஜப்பானிடம் படு தோல்வியடைந்தது. இதன் போது சீனாவிடமிருந்து கொரியாவையும் தாய்வானையும் ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் தாய்வானை சீனாவிடம் திருப்பிக் கொடுத்தது. சீனப் புரட்சியின் பின்னர் தாய்வான் தனி நாடாக இருக்கிறது. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு தனித்தனி நாடுகளானது.  

சீனா சட்டப்படி தனது எல்லைகளைத் தீர்மானிப்பதிலும் பார்க்க படைபலத்தின் மூலம் தீர்மானிக்க முயல்கிறது எனச் சொல்லிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே அந்தச் சவாலை உறுதியுடன் எதிர்கொள்ள ஜப்பான் எல்லாவிதத்திலும் தயார் எனச் சொல்லியுள்ளார். ஆசியப் பிராந்திய நாடுகள் ஜப்பான் தலைமையில் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை எதிர் கொள்ளும் தமது விருப்பத்தை ஜப்பானிடம் தெரிவித்துள்ளன என்றார் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே. அத்துடன் அபே தனது பிராந்தியத்திற்குள் வரும் ஆளில்லா விமானங்களை ஜப்பான் சுட்டு வீழ்த்தும் என்றார். கடந்த சில தினங்களாக ஜப்பான் தனது என உரிமை கொண்டாடும் ஒகினாவா தீவுப்பகுதியில் சீன வேவு பார்க்கும் விமானங்களின் நடமாட்டைத்தை அவதானித்த ஜப்பானியப் படையினர் அந்த விமாங்களின் அலைவரிசைகளைக் குழப்பி அவற்றைப் பின்வாங்கச் செய்தனர்.இரு நாட்டுக் ரோந்துக் கப்பல்களும் பிரச்சனைக்குரிய தீவுகளில் ஒன்றை ஒன்று நிழல் போல் தொடர்கின்றன. இதனால் பட தடவை போர் மூளும் ஆபாயங்களும் உருவாகின.

ஜப்பானியத் தலைமை அமைச்சர் அபேயின் கூற்றுக்குப் பதிலளித்த சீனாவின் முன்னாள் இராசதந்திரி ஜப்பான் சீனாவின் பலத்தை குறைத்து எடை போடக் கூடாது என்றார். சீனா தன்னைப் பாதுகாக்க தேவையானவை எவற்றையும் செய்யும் என்றார் அவர்.சீனாவின் வெளி நாட்டமைச்சர் ஹுவா சன் ஜிங் ஜப்பானியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டக் கூடியவகையில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் குற்ற உணர்வுகளால் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும் சொன்னார் சீன வெளிநாட்டமைச்சர். 1931இற்கும் 1945இற்கும் இடையில் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் சீனர்களுக்கு செய்த அட்டூழியங்கள் பாலியல் அடிமைத்தனங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டே குற்ற உணர்வு என்ற பததத்தை சீன வெளிநாட்டமைச்சர் பாவித்திருக்க வேண்டும்.

தற்போது உலகத்திலேயே பெரும் போர் ஒன்று மூழக்கூடிய ஒரு பிரதேசமாக கிழக்குச் சீனக் கடல் இருக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...